ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சிறையில் வாடும் போராளிகளை செஞ்சிலுவைச்சங்கம் பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் :- இலங்கைக்கு கனடா வலியுறுத்தல். [sunday, 2010-11-14 08:15:47] சிறையில் வாடும் போராளிகளை செஞ்சிலுவைச்சங்கம் பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான கனடா அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி கனட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுபினர் புருஸ் ஸ்ரான்ரொன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ச பக்ச, இனங்களுக்கிடையே நல்லுணர்வை ஏற்படுத்தல், மீள்கட்டுமானம் என்பவற்றை விரைந்து முன்னெடுக்கவேண்டிய நிலையில் உள்ளார். மொழி, மதம் அல்லது இனவேறுபாட்டுக்கப்பால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகளை, சகல …
-
- 3 replies
- 563 views
-
-
ராஜபக்ஷவினரின் பெருந்தொகைப் பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் மூலம் வெளிநாட்டில் முதலீடு? - சர்வதேச விசாரணைக்குழு கண்டறிந்துள்ளதாம். [Wednesday 2014-07-23 18:00] விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகுப் பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று விசாரணை நடத்தும் குழுவின் பெயரை தற்போது வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது. மேற்படி பாகிஸ்தான் செல்வந்தர்களில் ஒருவர் சில காலம் பாகிஸ்தான் அமைச்சராக இருந்த சலீம் மெண்டிவிவாலா ஆவார், இவர் பாகிஸ்…
-
- 0 replies
- 422 views
-
-
மஹிந்த - சுசில் முக்கிய சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்தவுக்கும் இடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. இச் சந்திப்பு தற்போது கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்தில் இடம்பெற்று வருகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழுப்ப நிலையில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30671
-
- 0 replies
- 192 views
-
-
திருமலையில் தொடர்கிறது விமானக் குண்டுவீச்சு [சனிக்கிழமை, 29 யூலை 2006, 16:02 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலை இன்று நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வெருகல் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் மக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர் விமானங்கள் தொடர் தாக்குதலாக நான்கு முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் திருகோணமலை துறைமுக முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களை மக்கள் குடியிப்புக்களை நோக்கி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாரிய படை நகர்வையும் மேற்கொள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கனரக ஆயுதங்கள் மற்…
-
- 4 replies
- 1.5k views
-
-
கண்டியில் கிளைமோர் தாக்குதல் - சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரி உபுல் செனிவிரத்தின பலி சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் உபுல் செனிவிரத்தின இன்று அதிகாலை 4.00 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பணிக்காக அவர் சென்று கொண்டிந்தவேளை அவரது ஊர்தி கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. நன்றி : சங்கதி
-
- 6 replies
- 2.2k views
-
-
‘மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினுடையவை’ “முன்னாள் புளொட் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினருக்கு 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தன. எனினும் அவை காணாமற்போயிருந்ததாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது” என யாழ்.பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். முன்னாள் புளொட் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு இன்று (26) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பொலிஸார் குறித்த விடயத்தை நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீட…
-
- 0 replies
- 483 views
-
-
"வடமாகாண தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்"... இந்திய துணை தூதுவரை, சந்தித்தனர்! வடக்கு மாகாண கடற்தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்றது. தற்போதைய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக குறித்த கருத்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம் பெற்றது. இந்திய இழுவை மடித் தொழிலினால் வடக்கு பகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்று தருமா…
-
- 0 replies
- 456 views
-
-
இஸ்ரேலின் பாணியில் இலங்கை தாக்குதல்! [13 - August - 2006] [Font Size - A - A - A] * `சென்னை' புலனாய்வு இதழ் நக்கீரனின் பார்வை இது "ஸ்ரீலங்கா அரசு இனி ஒருமுறை எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாக அதனை நாங்கள் கருதாமல், பரந்த அளவிலான ஒரு யுத்தத்தை எங்கள் மீது திணிப்பதாகவே கருதுவோம்" என்று எச்சரிக்கை கொடுத்திருந்தார் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன். இவர் இப்படி கூறிய சிலமணி நேரங்களிலேயே பிரச்சினைக்குரிய, மாவிலாறு மதகை திறப்பதற்காகச் சென்ற யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மீதும், புலிகள் தரப்பினர் மீதும் வெடிகுண்டுகளை வீசியது இராணுவம். அதிர்ஷ்டவசமாக இவர்கள் உயிர்தப்ப, மேலும் பதற்றமாகியி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா குழு முன் சாட்சியமளிப்பதை தடுக்கவே அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது கெடுபிடி! [Thursday 2014-08-07 09:00] இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் சிக்குண்டு உயிர்பிழைத்தவர்கள் ஐ.நா விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதை தடுப்பதற்காகவே அரசாங்கம் தமது செயற்பாடுகளை குழப்புவதாக அரச சார்பற்ற அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த கும்பல்களுக்கு அரச ஆதரவுள்ளது. யுத்தக் குற்றங்களுக்கு சார்பாக சாட்சியம் அளிக்கப்படுவதை தவிர்ப்பதே முதல் நோக்கம் என மாற்றுக்கொள்கை நிலையத்தின் குசால் பெரேரா தெரிவித்தார். மே மாதத்தில் டிரான்பரன்சி இன்ரநசனல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு இதே போன்று ஆர்ப்பாட்டக் காரர்களால் குழப்பப்பட்டது. …
-
- 0 replies
- 288 views
-
-
மைத்திரி - ரணில் அதிகாரப் போட்டி : மஹிந்த தரப்பு பலமடையும் - ஜே.வி.பி ஆர்.யசி மைத்திரி -ரணில் ஆகியோரின் அதிகாரப் போட்டியின் விளைவாக மீண்டும் மஹிந்த தரப்பு அரசியல் பலமடையும் நிலைமை ஏற்படும். இந்த அரசாங்கம் கள்வர்களைத் தண்டிக்காது கள்வர்களை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம் சாட்டுகின்றார். தேசிய அரசாங்கத்தின் நிகழ்கால சர்ச்சைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த 2015 ஆம் ஆண…
-
- 0 replies
- 169 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்-தமிழ்மதி எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் விமானக்குண்டு வீச்சுக்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களது தாக்குதல்களை முறியடி த்த நிலையில் தமிழீழ விடுதலைப்பு லிகளின் வான்படையினர் முப்படை களின் பெரும் படையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. இவ் வாறு மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி தெரிவித்தார். மட்.முனைக்காடு விவேகனந்தா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற லெப்டினன் புயலவன் அவர்களது வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்க உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில்:- …
-
- 0 replies
- 1.4k views
-
-
பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php
-
- 10 replies
- 2.6k views
-
-
கருணா, கேபி. ரங்கா ஆகியோருடன் இணைந்து செயற்படுபவர்கள் யார்? - தமிழ்மக்களே உசார் - ( அதிர்ச்சி தகவல்-1) தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டதோடு தமிழர்களின் உரிமைக்குரலை முழுமையாக நசுக்கிவிடலாம் என சிங்களதேசம் கனவுகண்டிருந்தது. அவர்களின் கனவுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டது. இதனால் சீற்றமடைந்த இலங்கை அரசு அவர்களை இலக்குவைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான போரைத் தான் முன்னெடுக்கப் போவதாக அண்மையில் இலங்கை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இலங்கை அரசு இலண்டனுக்கு வந்து அவமானப்பட்டுத் திரும்பிய கையோட…
-
- 4 replies
- 2.8k views
-
-
மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார். மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில் பறந்ததாக தகவல்கள் வெளியாகின. இரைச்சலுடன் வானில் பறந்துகொண்டிருந்த இந்த விமானத்தில் ஆட்கள் எவரும் இருக்கவில்லை எனவும் திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின்னர் விமானம் அந்த இடத்திலிருந்து நக…
-
- 2 replies
- 465 views
-
-
இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் - இலங்கை ஜனாதிபதி உறுதி இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சிப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான சுகாதார சேவை ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்தார். ஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையில…
-
- 0 replies
- 219 views
-
-
திரவியங்கள் நிறைந்த மெலிஞ்சிமுனை கடலுக்கு ஆபத்து - நேரடி ரிப்போர்ட் By NANTHINI 19 OCT, 2022 | 01:31 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மெலிஞ்சிமுனை கடல், அங்கு வாழும் மீனவர்களினதும், அவரது குடும்பங்களினதும் பசியாற்றும் தாயாகவே உள்ளது. இயற்கையின் சீற்றங்கள் எந்தளவு காணப்பட்டாலும், எந்தவொரு மீனவரையும் வெறுங்கையுடன் கரைக்கு அனுப்பாத கருணை நிறைந்த சிறு கடலாகவே மெலிஞ்சிமுனை கடலை அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல்லின மீன் இனங்கள், நண்டு மற்றும் இறால் என பல கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கான கருக்களை சுமக்கும் அரிய வகை பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் நிறைந்…
-
- 2 replies
- 566 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சம்ப்ந்தப்பட்ட விடயங்களில் கனடா பேசாமடந்தையாக உள்ளது என கனேடிய ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான த ஸ்ரார் பத்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது. இப்பத்தியை Wilfrid Laurier பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழ் தேசியவாதிகளில் ஒருவரான அமர்நாத் அமரசிங்கம் என்பவர் எழுதி உள்ளார். இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஏனைய உலக நாடுகளுடன் சேர்ந்து கனடாவும் குரல் கொடுக்க வேண்டும் என இவர் இப்பத்தியில் கோரி உள்ளார் http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15849:2010-12-17-09-38-24&catid=54:2009-12-16-09-39-33&am…
-
- 3 replies
- 867 views
-
-
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாகவும் இதனை இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். குறித்த காணியின் ஒரு பகுதியை இராணுவத்திற்கு சுபீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமது உறவுகளை நினைத்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் வி…
-
- 0 replies
- 324 views
-
-
யாழில் 24 மணிநேரத்தில் ஆறு பேர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறு பேர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள மதுபானக் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் மூவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலக்கத்தகடு அல்லாத வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வலிகாமம் கிழக்கு ஆவரங்கால் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்றை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட இந்த இளைஞரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…
-
- 1 reply
- 1.1k views
-
-
3 திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை! By T. SARANYA 08 NOV, 2022 | 04:28 PM சுங்கம், இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களங்களில் காணப்படும் 1,538 வெற்றிடங்களுக்கு தற்போது அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். தற்போது சுங்கத் திணைக்களத்தில் 773 வெற்றிடங்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 434 வெற்றிடங்களும் உள்ளன. கலால் திணைக்களத்தில் 331 வெற்றிடங்கள் காணப்படுகினறன. ஓய்வுபெறும் வயது 65ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று துறைகளிலும் பணி புரியும் அனுபவம…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனதில் யுத்த மனோபாவம் நீங்கி அமைதி ஏற்படட்டும் என்பதற்காகவே விசேட ஹெலிகொப்டரை வழங்கி ஸ்ரீஸ்ரீ ரவி ரவிசங்கர் குருஜியை வன்னிக்கு அனுப்பி வைத்தோம் எனத் தெரிவிக்கும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல பேச்சுக்கான பிரபாகரனின் நேரடி உறுதிமொழியை பெற்றுக் கொள்வதற்காகவே நோர்வே தூதுவருக்கு வன்னி செல்ல வசதி செய்து கொடுத்தோமென்று தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கருத்து தெரிவிக்கையில்; உலகில், சாந்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வரும் ரவிசங்கர் குருஜி வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து ஆசீர்வாதம் வழங்க அனுமதியை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தார். கேட்டவுடன் அவருக்கு …
-
- 1 reply
- 2.3k views
-
-
பதவி விலகினார் கபீர் காசிம் – சிறிகொத்தாவில் கொண்டாட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, விலகுவதற்கு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கபீர் காசிம் அறிவித்துள்ளார். ஐதேகவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் இன்று பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐதேகவில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே தாம் பதவி விலகியிருப்பதாகவும் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு இன்று தேக தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது…
-
- 0 replies
- 445 views
-
-
ஆட்கடத்தல் அராஜகங்களின் பின்னால் அரங்கேறும் நாடகங்கள் கொழும்பில் தமிழ் வர்த்தகர்களும், ஏனையோரும் கடத்தப்படுதல், அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கப்பம் அறவிடல் போன்ற அராஜகங்கள் கடந்த சில மாதங்களாக சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றன. அரச பாதுகாப்புத் தரப்பின் "ஆசீர்வாதத்துடனேயே' இந்தச் சட்டவிரோத அராஜகம் தொடர்ந்து அரங்கேறு கின்றது என்பதே தமிழர் தரப்பின் ஒரே முடிவு. அதனை மறுத்த அரசுத் தரப்பு, ஆட்கடத்தல் அராஜ கத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்ப்பந்தல் போட்டு, இந்த அராஜகங்களுக்கு எதிராகத் தலைநகரில் தமிழர்கள் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கும் தடுப்புப் போட்டுக் கொண்டது. அரசின் உறுதிமொழியை அடுத்து ஆட்கடத்தல்…
-
- 0 replies
- 727 views
-
-
ஆதரவாக வாக்களித்த சு.கவைச் சேர்ந்த 16 பேரும் இராஜினாமா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டனரென தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த 16 பேருக்கும் இடையில், நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளனரென அந்தத் தகவல் தெரிவித்தது. நேற்றிரவு நடைபெற்ற சுதந்தி…
-
- 0 replies
- 326 views
-
-
கிபீர் விமானம் விழுந்து நொறுங்கியது [திங்கட்கிழமை, 16 ஒக்ரொபர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானம் கொழும்பு புறநகர் பகுதியில் இன்று விழுந்து நொறுங்கியது. "நீர்கொழும்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. இது தாக்குதலினால் வீழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம்" என்று விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது. http://www.eelampage.com/?cn=29335
-
- 15 replies
- 3.9k views
-