Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் –அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நீதி விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெறுகின்றது என்பதனை உறுதி செய்ய சர்வதேச பங்களிப்பு அவசியமானது எனக் கருதினால் அதனை ஏற்றுக்கொள்ளத்தயார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டனில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறைமையின் போது சர்வதேச நீதவான்களாக இருக்கலாம், இரசாயன பகுப்பாய்வாளர்களாக இருக்கலாம், விசாரணையாளர்களாக இருக்கலாம் அல்லத…

  2. வெளியுறவு ஆணையாளர்: Benita.Ferrero-Waldner@ec.europa.eu துணை வெளியுறவு ஆணையாளார்: Joao-Luis.Aguiar-Machado@ec.europa.eu வெளியுறவுச் செயளாளர்: Helen-C- P.Campbell@ec.europa.eu சர்வதேச வர்த்தக ஆணையாளர்: Peter.Mandelson@ec.europa.eu ஏனைய உறுப்பினர்கள்: Julian.Wilson@ec.europa.eu Catriona.Carmody@ec.europa.eu, Peter.Power@ec.europa.eu, Michael.Jennings@ec.europa.eu, Peter.Hill@ec.europa.eu

    • 5 replies
    • 1.4k views
  3. இலங்கை: செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்? இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும் தராதரங்களுக்கும் உட்பட்டவகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

  4. கூட்டமைப்பின் தலைவருடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு! by : Jeyachandran Vithushan இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசினார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். http://athavannews.com/கூட்ட…

    • 2 replies
    • 605 views
  5. Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 02:14 PM கண்டி நகரில் அமைந்துள்ள மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெள்ளிக்கிழமை தனது (16) விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, மல்வத்து பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மஹாநாயக்க தேரரையும், அஸ்கிரிய பீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மஹாநாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது, அண்மைய இலங்கைக்கான இந்திய பிரதமரின் அரச விஜயம் குறித்து மஹாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் விளக்கமளித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பலதரப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புகளுக்காக ஆசீர்வாதங்களை தேரர்களிடம் கோரினார். இதனையடுத்து, மல்வத்து அ…

  6. போராட்டம், பயங்கரவாத எனும் போர்வையில் தமிழ் மக்கள் அடக்கபட்டு, அவர்களது உரிiமைகள் ஒடுக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இழந்த உரிiமைகளைப் பெற்று புதிய அரசியல் பாதையில் நாம் செல்ல வேண்டும்." இவ்வாறு த.ம.வி.பு. அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி சூளுரைத்துள்ளார்;. மேலும், நாம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர். தமிழீழம் கிடைத்தால் நாமும் சேர்ந்து ஆளுவோம். எனினும், தமிழர்களின் போரட்டம் பயங்கரவாதம் எனச் சித்தரிக்கபட்டு, அதைக் கொண்டு மாற்று இனத்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைக்கும் நிலையைத் தொடரவிடக்கூடாது. நாமும் அரசியல் ரீதியில் பலம் பெறவேண்டும்'. மேலும் தெரிவித்ததாவது : இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் நல்…

  7. மக்களின் கடும் எதிர்ப்பால் காணி அளவீடு இடைநிறுத்தம்! வலி. வடக்கு சேந்தான் குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை அளவீடு செய்யும் பணி மக்களின் கடும் எதிர்ப்பால் இன்றும் இடைநிறுத்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தின் போது குறித்த நிலத்தினை சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன. தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் குறித்த காணியினை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்தது. ஆனால் இம்முறையும் மக்களின் கடும் எதிர்ப…

  8. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல! [Tuesday 2020-01-21 08:00] “இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார். அத்துடன் தங்களது உரிமைசார்ந்த கோரிக்கைகளையே தாம் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். சர்வதேச அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வல்லரசு நாடுகளுகளை, தாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான கொள்கைகளை தாங்கள் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்…

  9. இலங்கை தொடர்பான புதுடில்லியின் நிபை;பாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய உயர் மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் அமைந்திருக்கவில்லையென சுட்டிக் காட்டிட்டியிருப்பதுடன் வழமையான பாணியிலான அறிக்கைகளையே மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் பாதுபாப்பு, நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்து ஒரு வார்த்தையைத்தானும உயர் அதிகாரிகள் குழு தெரிவித்திருக்க வில்லையென்றும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் இந்திய அமைதிப் படைநிலை கொண்டிருந்த காலத்தில் புலனாய்வத் துறைக்குத் தலைமைதாங்கியிருந்த ஹரிகரன் இந்திய உயர்மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் தொட…

    • 0 replies
    • 1.4k views
  10. [size=3][size=4]சென்னை: டெசோ மாநாட்டுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவை முறியடிக்க மிக நுணுக்கமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்து மிகத் திறமையாக வாதாடி தமிழக அரசின் வாதங்களை தவிடுபொடியாக்கியுள்ளனர் திமுக சார்பில் ஆஜரான வக்கீல்கள்.[/size][/size] [size=3][size=4]அதிமுக அரசுக்கு டெசோ மாநாட்டின் மூலம் மேலும் ஒரு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது. டெசோ மாநாட்டை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த மாநகர காவல்துறை ஆணையர் தடை விதித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது திமுக.[/size][/size] [size=3][size=4]இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 11 காரணங்களை முன்வைத்து தடை செய்யப்பட்டது நியாயமே என்று வாதாடியது அரசுத் தரப்பு. ஆனால் அதை மிக திறமைய…

  11. 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் விவகாரம்: கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் கைது! (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தும் வண்ணம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி செயற்பட்டமை தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர். 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிணையில் உள்ள 8, 9 ஆம் பிரதிவாதிகளான அனுர துஷார மெண்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகியோரே இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்…

  12. தேசவிரோதி கருணாவை பிரித்தானியா நாடு கடத்தியமை தொடர்பாகச் சர்வதேச மன்னிப்புச் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கருணாவின் மீது போர்க் குற்றத்தைச் சுமத்தக்கிடைத்த வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. கருணாவின் மீது சித்திரவதை, சட்டவிரோத நிதிசேகரிப்பு, சிறுவர்களைப் படைகளுக்கு சேர்த்தல், சித்திரவதை ஆகியவை தொடர்பாகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்படவேண்டும் எனத் தாம் கடந்த மேமாதம் 14 ஆம் திகதி மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில், பிரித்தானிய மெட்ரோபொலிட்டன் காவல்துறையினருக்கு கடிதம் எழுதிய போதும் அதற்கு பதில்கள் கிடைக்கவில்லை எனச் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கருணாவின் மீது குற்றங்களைச் சுமத்தத…

    • 0 replies
    • 751 views
  13. ஹைட் மைதானத்தில் சு.க உறுப்பினர்கள்; சோமவன்சவும் வந்தார் கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை, அறிவித்திருந்த நிலையிலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர், அதில் கலந்துகொண்டுள்ளனர். சு.க.வின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, டி.பீ.ரத்நாயக்க, …

    • 3 replies
    • 541 views
  14. காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோகப் பணி ஆரம்பம்! காங்சேன்துறையிலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள் யாவும் நிறைவுபெற்று, கடந்த 08ஆம் திகதி புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது. இதையடுத்து, குறித்த களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள்கள் பரீட்சார்த்தமாக யாழ். மாவட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப…

  15. இலங்கைத் தமிழர்கள் சொத்து வாங்குவது குறித்து தமிழ்கஅரசு விளக்கம்-ஓட்டுனர் அனுமதி பத்திரம் பெறூவதிலும் கெடுபிடி. ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் பிரஜைகள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதென்றால் "இந்தியன் றிசேர்வ்' வங்கியின் அனுமதியைப் பெற வேண் டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. இலங்கைக்கு மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் இந்த வரையறைக்குள் அடங் குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதற்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்திகளை அடுத்தே தமிழக அரசு தனது நிலைப்பாட்டை விளக்கும் விதத்தில் மேற்கண்ட தக…

    • 1 reply
    • 1.3k views
  16. அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இன்று (11) அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தாக்குதலினால் பாதிப்புக்குள்ளான இடத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை – என்றனர். இத்தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் சென்று பார்வையிட்டுள்ளார். இதேவேளை க…

  17. 28 JUN, 2025 | 06:47 PM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்றுதாக குறிப்பிடுவது முறையற்றது. நாட்டு மக்களுக்கு சிங்கள மொழியில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, சர்வதேசத்துக்கு ஆங்கில மொழியில் பிறிதொன்றை குறிப்பிட்டு காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்னேற்றகரமான எவ்வித நட…

  18. [size=4]விமானசேவை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் விமானி அறையில் பெண்கள் இருவர் பயணம் செய்துள்ளனர். கொழும்பில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற யுஎல்-172 விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.15 மணியளவில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அதில் பயணம் செய்த இரு பெண்கள் விமானியின் அறைக்குள் சென்றனர். பெங்களூர் வரை அவர்கள் விமானியின் அறையிலேயே இருந்துள்ளனர். இதனால் தமது பாதுகாப்புக் குறித்து கலக்கமடைந்த ஏனைய பயணிகள், அவர்களை வெளியே வரும்படி கோரிய போதும் அவர்கள் வெளியே வரவில்லை. கையில…

  19. தொலைபேசியில் கதைத்த அண்ணா எங்கே -சண்முகம் தவசீலன் 'இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, கடைக்கு சென்ற அண்ணா காணாமல் போயிருந்தார். நாங்கள் அவரை பல இடங்களில் தேடியும் இல்லை. இதன் பின்னர் ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் பம்பைமடுவில் இராணுவமுகமில் இருப்பதாக தொலைபேசியில் கதைத்தார்' என சகோதரி ஒருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வின் 3ஆம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் மக்ஸ்வல் பரணகம தலைமையில் இடம்பெற்றது. தனது அண்ணா ஐந்து வருடங்களின் பின்னர் 2014ஆம் ஆண்டு தொலைபேசியில் கதைத்ததாக கூறி அவரை கண்டுபிடித்து தருமாறு அந்த சகோதரி கோரிக்கை விடுத்தார்…

  20. Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 03:59 PM செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும், இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன், அதில் சர்ச்சைக்குரிய விடையங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும். செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் ந…

  21. இலங்கை தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? கருணாநிதி கேள்வி சென்னை:"இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு, யார் காரணம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை:அ.தி.மு.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக, தி.மு.க.,வையும், என்னையும் திட்டுவது தான் நோக்கம் என்ற அடிப்படையில், வார்த்தைகளைக் கொட்டியுள்ளனர்.இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், என் மீதான தாக்குதல் தான் முழுமையாக உள்ளது. கடந்த, 2009ம் ஆண்டில், இலங்கையில் இனக்கலவரம் உச்ச கட்டத்தில் இருந்த போது, மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையென்றும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு, நான் தான் கா…

    • 0 replies
    • 331 views
  22. சாவகச்சேரி வெடிபொருட்களுடன் இராணுவச் சிப்பாய்க்குத் தொடர்பா? சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை, சந்தேக நபரான ரமேஸ் எனப்படும், எட்வேர்ட் ஜூலியனுக்கு, பெற்றுக் கொடுத்தவர், சி்றிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரின் சகோதரரே, என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி வீட்டில், கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள், விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டவை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2001ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில், பல முறை தேடுதல்கள் நடத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு ஜனவரி மாதமே, சிவதர்சன் என்பவரின் உதவியுடன் ரமேஸ் இந்த வீட்டில் குடியேறியுள்ளார் என்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. …

  23. சிறிலங்காவின் வடக்கிலுள்ள நான்கு தீவுகளுக்கு உயிரியல் மின்சாரம் வழங்குவதென்ற போர்வையில் இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டு வருகின்ற இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் இங்கு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் காற்றாலைகளை அமைப்பதற்கென இங்கு கடற்படை முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. மின்சாரம் என்ற பெயரில் கடற்படை முகாம்களை அமைத்து இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை மேலும் இறுக்குவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்தத் தீவுகளை சிறிலங்கா அரசு கையகப்படுத்துமாயின் எதிர்காலத்தில் மேற்படித் தீவுகளில் தமிழ் மக்கள் வாழ முடியாத நெருக்கடி நிலை ஏற்படுமென்றும் சுட்…

  24. புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானித்து ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உட்பட அனைத்துச் சாவதேச முன்னணி நாடுகளின் அரசாங்கங்களும் அதனைச் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து விட்ட நிலையில் தற்போது உலகமெங்கும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இவ்வாறு அண்மைக்காலங்களில் பிரிட்டன் உற்பட ஐரோபிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டன் டவுனிஸ் வீதி 10ம் இலக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன் புலிகள் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி…

  25. கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பொலீஸ் நிலைய பிரிவுக்குட்ப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களில் நீதி மன்றில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் ஒரு கோடியே 87 இலட்சத்து 2000 ரூபா என கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்எல்ஜேடி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பிரஜைகள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 624 மொத்த வழக்குகளில் 382 வழக்குகள் நீதி மன்றினால் குற்றவாளிகளாக த…

    • 0 replies
    • 475 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.