ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை [ பிரசுரித்த திகதி : 2011-01-20 07:49:50 AM GMT ] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில்,…
-
- 2 replies
- 1.3k views
-
-
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யுடன் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 11ம் திகதி மாலை பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடன் கோரியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கான பிரசாரப் பணிகளுக்கு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தினால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியு…
-
- 0 replies
- 1.3k views
-
-
திரியாய் மக்கள் வெளியேறுகின்றனர் [ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2007, 17:52 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராம மக்கள் அச்சம் காரணமாக தமது கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் திரியாய் கிராமத்தில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதை தொடர்ந்து மக்கள் அங்கு வசிக்க அச்சமடைந்துள்ளனர். 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் இக்கிராமத்தில் வசித்த 1,200 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டில் மீளக்குடியமர்ந்ததில் 850 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். தற்போது பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் வல்லரசாக முடியாது - இந்திய அமைச்சர் ஜெய்ராம் 2/11/2008 10:17:46 PM வீரகேசரி இணையம் - இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் பொருளாதார வல்லரசாக முடியாது. தற்போது இலங்கையில் இந்தியாவின் முதலீடு 220 மில்லியன் டொலராக உள்ளது. இதனை 2 பில்லியன் டொலராக அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை க் கைத்தொழில் துறைகளில், இருநாடுகளின் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசு கைவிட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் றைட்ஸ் வோட்ச்) வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்தமிழ் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அத்துடன் ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அத்துடன் வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்மை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=554091931729228023
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது நெடுமாறன் பேட்டி உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வருமாறு; கேள்வி: இந்தியா…
-
- 4 replies
- 1.3k views
-
-
புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றனவெனவும் அவர் கூறி…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாட்டிற்கு வந்த இந்திய அமைதி காக்கும் படையினரில் உயிரிழந்தோருக்காக கட்டப்படும் நினைவுத் தூபி திறப்பு விழாவில் பங்கேற்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய அமைதி காக்கும் படையினருக்கான நினைவு தூபி பாராளுமன்றத்திற்கு முன்னால் நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும்இ சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கைக் கொண்டு இந்தத் திறப்பு விழாவை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினர் வான்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் குறித்த நினைவுத் தூபி நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் இந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கின்றது: கோட்டாபய ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடானது ஆச்சரியமளிக்கும் அதேவேளை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த பிரேரணைகளை இந்தியா ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61274-2013-03-22-03-47-59.html
-
- 9 replies
- 1.3k views
-
-
மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரத்தில் சந்திரிக்கா. Written by Pandaravanniyan - Aug 13, 2007 at 08:35 AM முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு திரும்பியுள்ள நிலையில், மங்கள - ரணில் அணியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று கொழும்பு திரும்பிய உடனடியாகவே மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் பேசிய சந்திரிகா இன்று திங்கட்கிழமை அவரை நேரில்சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். ரணில் - மங்கள அணியினரின் அடுத்த கட்ட 'மக்கள் அலை' ஆர்ப்பாடட்டப் பேரணி அத்தனகலையில் நடைபெறும் எனவும், அதில் சந்திரிகா குமாரதுங்க கலந்துகொள்ளலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெதிவித்தன. தன்னுடைய மகளான யசோதாவின்…
-
- 2 replies
- 1.3k views
-
-
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்வது தடைவிதித்திருக்கும் இடங்களில் ஒன்றான இராணுவத்தினர் அதிகம் இருக்கும் வெற்றிலைக்கேணியில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் காலை கேட்ட துப்பாக்கிச் சூட்டுச்சத்தத்தின் பின்பே இறந்த நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விடயம் இன்னும் தெரியவில்லை. SLN soldier found dead in Vadamaraadchi East [A soldier of Sri Lanka Navy (SLN) was found dead with gunshot wounds Tuesday morning in Vettilaikkea’ni area in Vadamaraadchi East. People who heard gunshots from Vettilaikea’ni sea area later found the above body, sources in Vadam…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கல்லறையில் கருத்துரிமை -புதிய நூல் திகதி: 21.09.2010, ’தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் தாக்கப்பட்டால் ஒரு சிங்களன் இனி தமிழ்நாட்டில் உயிருடன் நடமாட முடியாது’,இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் மக்களை துன்புறுத்தியது’ என்ற எழுச்சி உரையினை அடிப்படையாக வைத்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு வேலூர் சிறைச்சாலையில் அடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சீமானின் விடுதலையை வலியுறுத்தி ஒரு நூல் பரபரப்பாக வெளிவந்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் இதுகாறும் வரை கருத்துரிமை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கும் கட்டுரைகளும்,சீமானின் கைது சட்ட ரீதியாகவும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளதுடன், யார் இதனை எடுத்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 'நோ பயர் சோன்' புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார். அத்துடன், குறித்த புகைப்படங்களில் இராணுவ அடையாளங்களே இல்லை எனவும் அவ்வாறான படங்களை பார்த்துவிட்டு, அச்சிறுவன் இராணுவத்தின் பதுங்கு குழியில் உள்ளார் என சனல் 4 தொலைக்காட்சி எவ்வாறு கூற முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். புகைப்படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிர…
-
- 12 replies
- 1.3k views
-
-
இருண்ட வீட்டுக்குள் கறுப்பு பூனையை தேட முடியாது என்பதை சம்பந்தன் உணர வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தமிழ் மக்கள் சார்பாக உண்மையை பேசவேண்டும் என்பதற்காக தமது பக்கம் வருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் என்னையும் அழைத்திருப்பது வேடிக்கையானதொரு கூற்றாகும். இது இருண்ட வீட்டிற்குள் இருந்து கொண்டு கறுப்பு பூனையை தேடிக் கண்டுபிடிக்க என்னையும் வருமாறு கேட்பது போல் இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எது உண்மை?... சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போகின்றார்கள் என்று நீங்கள் கூறியது உண்மையா? அல்லது, இடிந்து சிதைந்து போன சங்கிலியன் சில…
-
- 9 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 20-11-2007 22:11 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்: கடற்பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் ஆராய்வு பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்கள், கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன. சாஜஹான், நாசார் ஆகிய இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும், எரிபொருள் நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக, சிறீலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா கடற்படை தளபதி, இரு நாட்டுக் கடற்படையினருக்கும் மத்தியில் நல்லெண்ணத்தையும், உறவையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும் வருகை தந்ததாகவும், ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் 13 அகவையுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் துணைப்படை ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஆயுதம் தரித்த நால்வர் அடங்கிய குழுவினர் சிறுமியைக் கடத்திச் சென்றிருப்பதாக அவருடன் கூடச்சென்ற ஏனைய சிறுமிகள் தெரிவித்தனர். கொழும்பு புனித மரியாள் பாடசாலையில் கல்வி கற்கும் இவரை, கப்பம் பெறும் நோக்குடன் துணைப்படை ஆயுதக் குழு உறுப்பினர்கள் கடத்தியிருப்பதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. E.P.D.P என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தகரான இவரது தந்தையிடம் பலமுறை கப்பம் கேட்டு மிரட்டியதாகவும், பல இலட்சம் ரூபாய்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் கப்பம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
விமானதாக்குலுக்கு உள்ளான படகுத்துறை கிராமத்திற்கு மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வையிட்டார். · விடுதலைப்புலிகளின் தளங்கள் எதுவும் அங்கு இல்லை ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் விமானத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட படகுத்துறை கடற்கரையோரகிராமத்திற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். படகுத்துறை கிராமத்தில் விடுதலைப்புலிகளின் எந்த தளங்களும் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இல்லை என தெரிவித்த ஆயர் மீனவர்களின் குடிசைகளே தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிந்திருப்பதாக தெரிவித்தார். விமானப்படையின் கோரத்தாக்குதலில் 3பிள்ளைகள் கற்பிணிதாய் தந்தை என ஒரேகுடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் குண்டுவீச்சினால் உடல்சிதறி பலியாகியிருப்பதாக ஆயர் ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது என்பது மத ரீதியாக அரசியலுக்காக பாவிக்கப்படும் விடயம் எனத் தான் நான் பார்க்கின்றேன். வெளிப்படையாக தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த விகாரை பொது மக்களின் இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். மாங்குளத்தில் ஒன்று உண்டு. அதுவும் முகாம்களின் உள்ளே …
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
கட்டுநாயக்காவில் விமானப்படையினது உத்தரவை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கி பிரயோகம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு கட்டு நாயக்க நீர் கொழும்பு பிரதான வீதியிலுள்ள விமானப்படையினரது சோதனைச்சாவடியில் அனுமதியை மீறிச் சென்ற வேன்னொன்றினை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இன்று அதிகாலை இடம் பெற்ற இத் துப்பாக்கி சூட்டுப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். விமானப்படையினரது உத்தரவினை மீறி அவ் வேன் கடக்க முற்பட்ட வேளை பாதுகாப்பு படையின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார் இது தொடர்பா விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழின் அதிசயம்!! தாயின் பூதவுடலை சுமந்து, சுடலை சென்ற பெண் பிள்ளைகள்! February 09, 2015, 8:51 pm யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது.திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த நிலையில் நான்கு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இவருக்கு உள்ளனர். இவரது மூத்த பெண் பிள்ளை தனது தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களாக பராமரித்து வந்துள்…
-
- 15 replies
- 1.3k views
-
-
வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள். கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது. தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூற…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 29.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....d33c36b1b5fc2cb 22.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....3afe57c2e008bc8 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....8ef4c628eba0259 நிலவரம் - ஆய்வு நிகழ்வு 27.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....9bbe3554a4fdf6f 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....b2374f342be9ed4 காலக்கணிப்பு 23.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....25f8597834fa83a
-
- 0 replies
- 1.3k views
-
-
. இலங்கை கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களை காக்க முடியாது-எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி: சர்வதேச எல்லையாத் தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் போகக் கூடாது. அப்படி போனால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். எனவே தமிழக மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் நேற்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்ப…
-
- 5 replies
- 1.3k views
-