ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் 16 Mar, 2026 | 07:56 PM அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இந்த விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241136
-
-
- 13 replies
- 717 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்கும் நொவம்பர் மாதம் 27 ம் திகதி நள்ளிரவுக்கும் வரையான காலப்பகுதியில் 22 சிவிலயன்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு காவற்துறை உத்தியோகத்தரும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒரு காவற்துறை உத்தியோகத்தரும் காமயடைந்துள்ளார். மேலும் 3 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 96 மணி நேரத்திற்குள் மட்டும் மட்டக்களப்பில 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 3 பேர் கடத்தப்பட்டும் உள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 3 replies
- 942 views
-
-
யாழ். பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்காதது ஏன் என்று சிங்கள பேரினவாத அமைப்பான ராவணா பலய கேள்வி எழுப்பியுள்ளது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள அப்பாவி மாணவர்களை தாக்கி காயப்படுத்திய தமிழ் மாணவர்களை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் நடவடிக்கை எடுக்காதிருக்க என்ன காரணம் என்றும் ராவணா பலய என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்ததிஸ்ஸ தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். அது மாத்திரமன்றி யாழ் பல்கலைக்கழக மோதல் சம்பவம…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்;தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கக்க கோரி, எதிர்வரும் 8ம் திகதி, அரவாணிகள் உண்ணாவிரத, ஒப்பாரி போராட்டம் நடத்தவுள்ளனர். இது குறித்து, அரவாணிகள் அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது : இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருக்கின்றன. குடும்பத்தை விட்டு, சமூதாயத்தை விட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு அகதிகளுடைய கண்ணீரின் வலி தெரியும். அரவாணிகள் அமைப்பின் சார்பில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு, மேற்படி போரட்டம் நடைபெறவுள்ளது. உண்ணாவிரதத்தை கணிமொழி எம்.பி. ஆரம்பித்து வைப்பார். எமது ஒரு நாள் வருமானத்தை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணமாக வழங்க …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர்கள் கடத்தல் – 14 கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தடை! தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த ப்ளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) சற்றுமுன் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. கரன்னகொட உட்பட முன்னாள் கடற்படை தளபதி டி.கே.பி.தஸாநாயக்க, கடற்படை அதிகாரிகள் சம்பத் முனசிங்க, சுமித் ரணசிங்க, திலங்க சேனாரத்ன, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, அன்ரன் பெர்னாண்டோ, ராஜபக்ச பத்திரன்னஹெலக கித்சிறி, அருன துஷார மொன்டிஸ், அம்பாறை காமினி எனும் கத்ரிராச்சிலகே காமினி, நேவி சம்பத் எனும் சந்தன பிரசாத் ஹ…
-
- 3 replies
- 546 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்படுமானால் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்…
-
- 1 reply
- 685 views
-
-
வாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வககணணம-நடவடகக-கல-8-மணகக-ஆரமபம/150-252574
-
- 0 replies
- 488 views
-
-
கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும் எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. எனவே, இந்த கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று மாலை (05) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார்…
-
- 0 replies
- 269 views
-
-
ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களை எதிர்கொண்ட புலிகளின் படையணிகள் வீரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப…
-
- 0 replies
- 2k views
-
-
பெட்டியுடன் சிக்கிய 17 கைக்குண்டுகள் கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டு, நீதிமன்றின் உத்தரவில் சிறப்பு அதிரடிப் படையினரால் கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டது. கொழும்புத்துறையில் நேற்று (16) காலை வீடொன்றை சுத்தம் செய்த போது, அந்த வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. அதற்குள் வெடிபொருள்கள் இருப்பதை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டனர். …
-
- 0 replies
- 392 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சந்திப் பகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று மோதல்கள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்களின் விடுவிக்கப்படாது இருக்கின்ற 13 ஏக்கர் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இன்று 18-08-2016 கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் மாவட்டச் செயலகத்தில் பரவிபாஞ்சான் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பரவிபாஞ்சான் காணி விடயம் தொடர்பில் கடந்த இரண்டு மாதங்கள் முன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தேன் அதற்கமைவாக நான்கு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. இன்னும் 13 ஏக்கர் காணிகள் விடுவிக்க வேண்டும் அது தொடர்பிலும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனவே விரைவில் அவற்றை மீளப்பெற்றுத் தருவேன். ஆனால் என்னால் உறுதியாக கால வரையறை க…
-
- 0 replies
- 218 views
-
-
முல்லைத்தீவிலும் படையினர் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்குவர்: இக்பால் அத்தாஸ் [ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 10:48.59 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் முல்லைத்தீவை கைப்பற்ற படையினர் முயலும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்பை படையினர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார். கிளிநொச்சியை இழந்தமையானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் ஆயுத கடத்தல்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 12.30 க்கு பின்னர் வன்னி கட்டளைத் தளபதி ஜகத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி போய் விட்டது , ஏன் எல்லமே பொகுது என்று கவலயுலன் இருக்கும் எம் உரவுகலுக்கு இது நல்ல பதில் தரும் என்று நினைகிறேன் இந்த வருடம் எமக்காகும் http://www.tamilkathir.com/news/803/58/04-...view_audio.aspx
-
- 8 replies
- 2.6k views
-
-
வன்னி களமுனைகளில் கடந்த மூன்று மாதங்களில் சிறிலங்கா படையினர் 3 ஆயிரம் போ் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தார் நாமல் விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை உடனடியாக திருத்தி தமிழ் மொழிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர்களாக இருந்த எவரும், பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை சரிசெய்ய முன்வராத நிலையில் நாமல் ராஜபக்ஷ இதனை செய்துள்ளமையை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். மேலும் நாட்டில் மும்மொழி கொள்கை நடைமுறையில் இருக்கின்றது என்பதை நாமலின் செயற்பாடு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ கடந்த 18ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 424 views
-
-
மஹிந்தானந்த அளுத்கமகே கைதும் பின்னணியும் முழு விபரம் இதோ..! எவ்வாறு கிடைத்தது அல்லது சம்பாதிக்கப்பட்டது என்பதை சரியாக தெளிவுபடுத்த முடியாத, குறுகிய காலத்துக்குள் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தார் எனும் குற்றச் சாட்டின் கீழ் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு–7, கறுவாத்தோட்டம், கிங்ஸி வீதியில் இலக்கம் 70 -–3/1 எனும் இலக்கத்தில் அமைந்துள்ள அதிசொகுசு வீடொன்றை 2 கோடியே 70 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பிலேயே நேற்று முன் தினம் அதாவது வியாழக்கிழமை அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாற…
-
- 0 replies
- 352 views
-
-
பிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்காமையினாலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என சஹ்ரான் கூறியதாக கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலையாகியபோதே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் 2017ஆம் ஆண்டு நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலை…
-
- 0 replies
- 452 views
-
-
தாயகத்தில் இடம்பெறும் மனித பேரவலங்களின் காணொளிதொகுப்பு: தயவு செய்து இந்த காணொளிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மற்றும் English subtitle போட்டு Edit பண்ண முடீயுமா? தமிழில் உள்ளதனால் வேற்றினத்தவர்களுக்கு தெளிவுபடுத்த முடியவில்லை.. தயவு செய்து யாராவது முடிந்தவர்கள் மொழி பெயர்க்கவும்..எமது தொலைக்காட்சி நிறுவனங்கள் இதைபற்றி சிந்தித்தால் நல்லது... நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது மட்டுமல்ல அவை அனைத்து தரப்பையும் சென்று சேர வேண்டும்..YOU TUBE இல் பதிவேற்றினால் நன்றாக இருக்கும் All videos must be in English and English subtitle to show our local media http://eurotvlive.com/download/20090121/20...hell_attack.wmv http://eurotvlive.com/download/20090120/20...a_nelava…
-
- 1 reply
- 1.2k views
-
-
தென்னாபிரிக்காவின் விஜயத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. முரண்பாடு தீர்த்தல், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய தமது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தென்னாபிரிக்க மற்…
-
- 4 replies
- 593 views
-
-
இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...
-
- 3 replies
- 4.3k views
-
-
அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ரணில் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன முரண்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.வதந்திகளின் அடிப்படையில் முரண்பாடுகள் வெடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துள்ளதாகவும், சிங்கள மக்கள் அழிவடைந்து வருவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.போர்த்தகேயர் காலத்தில் பின்னரே முஸ்லிம்கள் நாட்டுக்கள் பிரவேசித்ததாகக் குறிப்பிடப்படுவதாகவும், போர்த்துகேயரை நாட்டக்குள் அனுமதிக்க வேண்டாம் என 8ம் பராக்…
-
- 0 replies
- 318 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உலகத் தமிழர்களின் ஒருமித்த முடிவாக, இன்று முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இலங்கையில் நிலைமை மேலும் மோசமாகி வரும் பின்னணியில் நேற்று டாக்டர் ராமதாஸை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தி.நகர் பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, மாநில துணை செயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சோழன் நம்பியார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக…
-
- 0 replies
- 943 views
-
-
http://www.sankathi24.com/விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கொழும்பிலிருந்து வந்த விசேட சிறீலங்கா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் 7 திருமணமான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமையினால் அவர்களின் குடும்பங்கள் யாருமன்றவர்களாக அநாதரவாக வீதியில் விடப்படுகின்றனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதி கிளிவெட்டி, பட்டித்திடல், மல்லிகைத்தீவு, கட்டுபறிச்சான், போன்ற பகுதிகளைச் சேர்ந்த தற்காலிய இடைத்தங்கள் நிலையங்களில் வாழ்ந்துவருபவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள். போர் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னார் விடுதலைப் புலிகளின் அமைப்பலிருந்து விலகிய இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்ப…
-
- 0 replies
- 514 views
-
-
தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது. அந்நிகழ்வில் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்நிகழ்வில் முதலமைச்சர் தவிர்க்க முடியாத நிலையில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் , அவர் தனது உரையினை வாசிக்குமாறு எழுதி அனுப்பி இருந்தார் எனவும் தெரிவித்து அந்நிகழ்வுக்கு தலைமை தாங்…
-
- 0 replies
- 391 views
-