Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா? - தாயும் ரி.ஐ.டியால் கைது! [Monday, 2014-03-24 21:30:17] பரந்தன் புகையிரதப் பாதையோரம் மீட்டெடுக்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அதனை விரைந்து அரச செலவில் அடக்கம் செய்ய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் அடையாளம் காணப்படாத சடலங்கள் இருவாரங்கள் கடந்தும் உரிமை கோரப்படாவிட்டால் அதன் பின்னரே உரிய நீதிமன்ற அனுமதி பெற்றப்பட்டு அரச செலவில் புதைக்கப்படுவது வழமையாகும். எனினும் குறித்த சடலத்தை அடையாளம் காட்டுவதில் காட்டப்பட்டுவரும் முனைப்பு சந்தேகத்தினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. குறித்த சடலம் புகையிரத விபத்தில் உயிரிழந்…

  2. சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.3k views
  3. [size=4]கொழும்பு – 07 வாட் பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டமைக்கு ஏதிராக விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர். இதன் காரணமாக உயர்ஸ்தானிகராலயத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/49876-2012-10-04-10-51-10.html

  4. தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளில் மோதல் யாழ். தென்மராட்சி போர் முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிற்குமிடையே ஒரு மணிநேரத்திற்கு மேலாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி வரணியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் படைத்தளத்திலிருந்து உக்கிரமான ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், சிறீலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானு}ர்திகளும் அப்பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.3k views
  5. Posted on : 2008-01-29 பாதாள உலகக் கும்பல்களுக்கு உயிர், உரமூட்டும் எத்தனங்கள் பட்டறிவிலிருந்து பாடங்களைப் பழுதறப் படித்துக் கொள்வதில் தென்னிலங்கை தொடர்ந்தும் தவறிழைத்தே வருகின்றது. தென்னிலங்கையின் மொனறாகலைப் பகுதியில் ஊடுருவியுள்ளனர் என்று கருதப்படும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு உள்ளூர் கிராமவாசிகளுக்கு ஆயிரக்கணக்கில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வழங்குவதற்கு கொழும்பு அதிகார வர்க்கம் எடுத்திருக்கும் தீர்மானம், பட்டறிவை சரிவரப் பிரயோகிக்கத் தவறியதால் எழுந்த தப்பு என்றே தோன்றுகின்றது. வடக்கு கிழக்குத் தமிழர்களின் இன உரிமைக்கான யுத்தத்தை ஒரு முனையில் எதிர்கொள்ளும் கொழும்பு அரசு மறுமுனையில் பாதாள உலகம் என்ற மிகப் பயங்கர கொடூர வன்முறைக் கும்பல்களின் அச…

  6. யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு! June 21, 2018 யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவிகளிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன. http://www.pagetamil.com/9054/

  7. வரும் ஆண்டு ஜனவரி மாதம் நாம் நிச்சயமாக ஜி.எச்.பி வரிசலுகையினை பெறுவோம் என இலங்கை வெளினாட்டமைச்சர் ரோகித போகொல்லாம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ரோகித பல்வேறு தடைகள் இருந்த போதும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எமது நிலைப்பாடு தொடர்பாகவும் அதே நேரம் இலங்கை அரசு எடுத்துவரும் மீழ் குடியமர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான திட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தினை ஈர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே நாம் நிச்சயமாக அந்த வரி சலுகையினை பெறுவோம் என தெரிவித்தார். நன்றி http://www.eelanatham.net/news/important

    • 3 replies
    • 1.3k views
  8. மாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம் வவுனியா ஓமந்தையில் பாடசாலை மாணவி ஒருவர் அதிபரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதென்றும், ஊடகங்களும், சமூக அமைப்புக்களும் தனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமெனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.…

  9. [ வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 08:56 GMT ] [ அ.எழிலரசன் ] இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் சீரமைக்கப்பட்டு, அவர்கள் கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழ்நாட அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் 14வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். அதன் தமிழ் பதிப்பை அவைத் தலைவர் ஜெயக்குமார் வாசித்தார். அதில் இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள உறுதிமொழி வருமாறு: “இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாட்டிலேயே கௌரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த முகாம்க…

    • 1 reply
    • 1.3k views
  10. கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களை சந்தித்த பசில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களை சந்தித்துள்ளார். இன்று மாலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் வரவேற் பளித்தனர். தொடர்ந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பசில்ராஜபக்ஸ தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார். http://globaltamilnews.net/archives/43185

  11. இலங்கை மனித உரிமை நிலை குறித்து சர்வதேசப் பங்களிப்புடன் கண்காணிப்பு! அமெ.வெளிவிவகாரக் குழுவில் வலியுறுத்தல் இலங்கையில் மனித உரிமை நிலை குறித்து சர்வதேச மட்டத்திலான பங்களிப்போடு நேரடியாகக் கண்காணிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இவ்வாறு அமெ. வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றக் குழுவின் சுட்டத்தில் அமெரிக்க மூத்த உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியிருக்கின்றார். நேற்ற முன் தினம் நடைபெற்ற அமெ. நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் நியூ ஜேர்ஸி மாநில காங். உறுப்பினர் பிராங் பலோன் இப்படி வலியுறுத்தினார். 'இலங்கையில் புதிதாகத் தீவிரப்படுத்தபட்டிருக்கும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் நூற்றுக் கணக்கானோர் தடுப்பு…

    • 2 replies
    • 1.3k views
  12. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வேலைத்திட்டம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இலங்கை தவறியுள்ளதால் அமெரிக்கா ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், அரசாங்கம் வடமாகாணசபைக்கான தேர்தலை நடத்தவில்லை என ஆசிய மற்றும் பசுபிக் உபகுழு முன் உரையாற்றுகையில் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இதுவரையில் மெதுவானதாகவே உள்ளது. யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்துவிட்டபோதும் அரசாங்கம் வடமாகாணசபை தேர்தலை நடத்தவில்லை என்பத…

    • 8 replies
    • 1.3k views
  13. தமிழர் போராட்டத்தை உலகுக்கு உணர்த்தும் வெல்கதமிழ் தமிழர்களது போரட்ட நியாயத்தையும் தயாகம், தன்னாட்சி, சுயநிர்ணயஉரிமை ஆகியவற்றை பெற்றுதர போராடும் தமிழர் போராட்டத்தை உலகுக்கு தெரியப்படுத்தவும் ஜெனிவாவில் வெல்க தமிழ் ஐநா வை நோக்கி அமைதிப்பேரணி நாளை நடைபெறவுள்ளது. புலம்பெயர்ந்து வாழ் உறவுகள் பெருமளவில் பலநாடுகளில் இருந்தும் ஜெனிவா நகரிற்கு தமிழர்களது ஐனநாயகம் பலத்தை தெரிவிக்குமுகமாக விமானங்களில் மூலமாகவும் புகையிரதமார்க்கமாகவும் சிறப்பு பேரூந்துகளிலும் சென்றடைவதை அறியமுடிகிறது. இவ் நிகழ்வு நேரடியாக உலகம் பூராகவும் பார்வையிடக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆசியாவில்: ஜெனிவா நேரம் (15.00 : 18.00) : இலங்கை இந்திய தாயக நேரம் மாலை (6.30 …

  14. வியாழக்கிழமை, பெப்ரவரி 24, 2011 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் தாம் பெரிதாக கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கவில்லை என ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜின் லெம்பர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வடக்கு பகுதிக்கு விஜயம் செய்தனர் நேற்று வவுனியாவிற்கு சென்றுள்ளனர்.. நேற்று வவுனியாவிற்கு விஜயம் செய்த இவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%…

  15. புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தா? [30 - December - 2007] -தாரகா- சமீப காலமாக விடுதலைப் புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்து என்னும் கருத்து மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்தியா, தனது மேலாதிக்க நலன்களுக்காக ஈழத்தின் விடுதலை போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக ஒருவிதமான தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதை நாமறிவோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த தலையிடாக் கொள்கை என்பது நேரடி அர்த்தத்திலேயே தவிர மறைமுக அர்த்தத்திலல்ல. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கிலும் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பிரித்தாளும் நோக்கிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது செய்தே வந்தி…

  16. ஐ.நா செயலாளர் நாயக்கத்திடம் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் பிரதி இதுவரை இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை என வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று பல சர்வதேச ஊடகங்களிலும் இலங்கைக்கு நிபுணர் குழுவின் அறிக்கை பிரதி கையளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாம் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை நேற்றைய தினம் குறித்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு கையளிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%…

  17. காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது! -நக்கீரன்- சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன். இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ் உண…

  18. முன்னை நாள் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஈழவேந்தன் அவர்கள் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரதத்தின் போது....

    • 0 replies
    • 1.3k views
  19. வவுனியா கோமரசங்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இன்று சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினுடாக விடுதலைப்புலிகளிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் நாள் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களில் 6பேரின் உடல்கள் இன்று விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புளியங்குளத்திலுள்ள அரசியல் துறைச் செயலகத்தில் வைத்து வவுனியா மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு ஞானம் அவர்கள் இவ் உடல்களைப் பெற்றுக்கொண்டார். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

    • 2 replies
    • 1.3k views
  20. கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி.மீ.இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அ…

  21. [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 20:19 ஈழம்] ஆழிப்பேரலைக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ், சட்டவிரோதமாக 9,700 வாகனங்களை இறக்குமதி செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய அவர், வாகன உதிரிப்பாகங்கள் என்று சுங்கத் திணைக்களத்தினரிடம் கூறிவிட்டு 9,700 வாகனங்களை ஜெயராஜ் இறக்குமதி செய்துள்ளார். அத்தகைய வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க ரூ. 2 இலட்சம் முதல் 1 மில்லியன் வரை பெறப்பட்டுள்ளது. ஜெயராஜின் இந்த நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு ரூ. 6 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். -புதினம்.

  22. அகலக்கால் பதிக்கும் இராணுவத்தை அழிக்க அனைவரும் ஒன்றுசேரவேண்டும். எமது நிலத்தில் அகலக்கால் பதித்துவரும் சிறிலங்காப் படைகளை அழிக்க தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றுசேரவேண்டும். இவ்வாறு முக்கொம்பன் வட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் ஈழவன் தெரிவித்துள்ளார். போர் எழுச்சிக்குழுக்களுக்கான சமகால அரசியல்கருத்தூட்டல் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணிக்கு முக்கொம்பன் மிதுசன் குடியிருப்பில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் கமக்கார அமைப்புத்தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரியானவன் எமது பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நோக்குடன் அகலக்கால் பதித்து எமது இனத்தை பலவழிகளில் அழ…

    • 0 replies
    • 1.3k views
  23. 88ஆம் 89ஆம் ஆண்டுகளில் ஜே.வீ.பீயின் சக உறுப்பினர்களை படையினரிடம் காட்டி கொடுத்த மற்றுமொரு தலைவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் ஜே.வீ.பீயின் மருத்துவ பிரிவின் தலைவர் தம்மிக்க பத்திரண என ஜே.வீ.பீயின் நடுநிலை அணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தம்மிக்க பத்திரண என்ற இந்த வைத்தியரை ........................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6366.html

    • 0 replies
    • 1.3k views
  24. தமிழகத் தேர்தற்களத்தின் பிரச்சாரக் களத்தில், இறுதிக்ட்டப்பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருகிறார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து. திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவுள்ளார். சென்னைத் தீவுத்திடலில் இன்று மாலை இப்பிரச்சாரக் கூட்டம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சோனியாந்தியின் வருகையை முன்னிட்டு இப்பிரதேசங்களிலெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆயிரக் கணக்கான பொலிசார் சென்னையின் பல பாகங்களிலும் குவிக்கபட்எருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஈழத்தமிழரர் பிரச்சனையில் அநீதியாக நடந்து கொண்டது மட்டுமல்லாது, அவர்களுக்காகக் குரல் கொட…

    • 0 replies
    • 1.3k views
  25. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் சிறிலங்கா படையினரின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக "லக்பிம" ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளனர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.