Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளை வானில் இளைஞரை ஏற்றிச் சென்ற பொலிஸ்! – யாழ்.நகரில் சம்பவம்!! யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கட்டாயப்படுத்தி இழுத்து வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரைப் பிடித்து இழுந…

    • 8 replies
    • 702 views
  2. இன்று முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவை ஆரம்பம்! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று(புதன்கிழமை) முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ரயில் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தினமும் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து குறித்த ரயில் புறப்படவுள்ளது. இந்த ரயில் காலை 8.14 அளவில் கண்டியை சென்றடையவுள்ளது. குறித்த ரயில் மாலை 4.50 அளவில் கண்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது. அதேபோன்று களனி வெளி …

  3. முள்­ளி­ய­வளை மாவீர் துயி­லு­மில்­லத்­தில் மாவீ­ரர் பசீ­ல­னின் தாயார் சுட­ரேற்­று­வார் முள்­ளி­ய­வளை மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் மாவீ­ரர் ஒரு­வ­ரு­டைய தாயார் நாளை ஈகைச் சுட­ரேற்­று­வார் என துயி­லும் இல்­லப் பணிக்­குழு தெரி­வித்­தது. முள்­ளி­ய­வளை மாவீ­ரர் துயி­லும் இல்­லம் அமைந்­தி­ருந்த பகு­தியில் தற்­போ­தும் இரா­ணு­வத்­தி­னர் நிலை கொண்­டுள்­ள­னர். அந்த இடத்­தின் ஒரு பகுதி படை­யி­ன­ரால் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த இடத்­தில், படை­யி­ன­ரு­டைய முகா­முக்கு அரு­கில் மாவீ­ரர் நாளை எழுச்­சி­யாக நினைவு கூறு­வது என அந்­தப் பகுதி மக்­கள் முடிவு செய்­த­னர். குறித்த இடம் சிர­ம­தா­னம் செய்­யப்­பட…

  4. 21 குறித்து... அரசாங்கத்தின் நிலைப்பாடு – பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... ஜனாதிபதியுடன் சந்திப்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேநேரம், 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் இன்று வினவுவதற்கு அரசாங்கக் குழுவொன்று தயாராகி வ…

  5. சிங்களம் வெறியாடிய மூதூர் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு நாள் திகதி: 04.08.2010, 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் பாரிசைத் தலைமையகமாகக்கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் மரண தண்டனைவிதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் . மூதூர் பகுதியில் சிறிலங்கா தரை ப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன .2004 ஆம் ஆண்டில் இடம்பெற்றஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக…

    • 4 replies
    • 1.1k views
  6. இரணைமடு திட்டத்தை கைவிட்ட பின் யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு என்ன ? இங்கு அரசியல் ரீதியான பிரச்சினையே உள்ளது − ஹக்கீம் பல வருடங்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீர் பிரச்சினையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்லும் முயற்சி தடைப்பட்டுள்ளதால் இது தொடர்பில் வேறு திட்டங்களினூடாக நீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். யாழ். நக…

  7. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், திறைசேரியை பிரதிநிதித்தும் 4 பிரதிநிதிகள்... நாட்டை வந்தடைந்தனர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து அவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர். இந்தக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை (29) வரை இலங்கையில் தங்கியிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொருளியலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இந்த விஜயமானது இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன தொடர்பாக அமெரிக்கா கொண்டி…

  8. முகாம் வாழ்க்கைக்கு முடிவு எப்போது? ச மீப காலமாக, இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொடர்பான செய்திகளில்தான் ஊடகங்களின் கவனம் இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இங்கு இருந்துவரும் இலங்கை அகதிகளின் நிலை பொதுமக்களின் கவனத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது. இலங்கையில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடங்கியது முதல், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசித்துவருகிறார்கள். அவர்கள் வசிக்கும் முகாம்களின் மோசமான நிலை, முகாம்களை விட்டு வெளியில் சென்றுவருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான வாழ்வாதாரத்துக்கான வாய்…

  9. எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூலை 13 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் மற்றும் 29 முதல் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/ne…

    • 0 replies
    • 179 views
  10. முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு இலங்கை அமைதிப் பேச்சுகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். முஸ்லிம்களை தனித்தரப்பாக பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைத்தால் சிங்களவர்களும் தனித்தரப்பாக தங்களை இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை நிராகரிப்பதாக மகிந்த கூறியுள்ளார். இதனிடையே இதுவிடயத்தில் ஒருமித்த முடிவை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது தகவல்மூலம்;-…

  11. கருணாவின் அணி மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது! மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியது. கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன். இன்று நாம் சுக நேரத்தில் எமது கட்சியின் சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளர்கள் மூலம் இரண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணத்திணை செலுத்தியுள்ளோம்.அதில் கட்சி சுயேட்சையாக போட்டியிடுவதற்காக எமது மத்தியகுழுவின் தீர்மானங்களுக்கு அமைய போட்டியிடவுள…

  12. காங்கேசன்துறை வீதி - கொக்குவில், பூநாறி மரத்தடியில் இன்று செவ்வாய் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்களின் ஒருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரியவருகிறது. 6 மோட்டர் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினர், வீதியில் ஓட்டோவில் சென்றுகொண்டிருந்தவர்களை இழுத்து விழுத்தி தாறுமாறாக வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். கொக்குவில் - பெற்பதி வீதியைச் சேர்ந்த செந்தீசன் (வயது 24), பூநாறிமரத்தடியைச்; சேர்ந்த திலீப் ஆகியோரே வாள்வெட்டில் காயமடைந்தவர்களாவர். ஓட்டோவைச் செலுத்தி வந்த இளைஞர் வெட்டுக் காயத்துடன் தப்பியோடிய நிலையில் ஓட்டோவுக்குள் இருந்த இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவினர் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். பின்னர் அவர்கள் தப்ப…

  13. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய கால மாற்றத்தை கட்டாயம் உணர்ந்து சில விட்டுக் கொடுப்புகளுக்கு தயாராக வேண்டும் என்று இரு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் சம்பந்தப்படுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் ஒத்துழைப்பு வழங்க ஐ.தே.கட்சி தயாராக உள்ளது. நாம் தீர்வை வரவேற்கின்றோம். அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசு, இந்திய அரசு உட்பட சம்ப்ந்தப்படுகின்ற தரப்பினருக்கும் ஆதரவு வழங்கத் தயாராகவே இருக்கி…

  14. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - எம்.றொசாந்த்) tamilmirror

  15. ரணிலுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும்... இடையில் சந்திப்பு! பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக மெத்தனமான கொள்கையை கடைப்பிடிக்குமாறு பதில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். தடை செய்யப்பட்டுள்ள சில அமைப்புக்கள் இலங்கைக்கு முதலீடுகளை கொண்டு வந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக.. செயற்ப…

    • 10 replies
    • 891 views
  16. பி.பி.சி சிங்கள வானொலிச் சேவையின் செவ்வியை தவிர்த்த கே.பீ பின்னர் சிங்கள பத்திரிகை மற்றும் புலம்பெயர் ஆங்கில இணையம் ஆகியவற்றுக்கு செவ்வி வழங்கியமை குறித்து சர்ச்சை‐ 11 September 10 03:11 am (BST) பி.பி.சி சிங்கள வானொலிச் சேவை பல வாரங்களுக்கு முன்னர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் செவ்வியொன்றைப் பெறுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திய பின்னர் அந்த செவ்வியில் கேட்கப்படவிருந்த 23 கேள்விகள் அடங்கிய பட்டியலை பி.பி.சியின் கடிதத் தலைப்புடன் கே.பிக்கு கிடைக்கச் செய்திருந்தனர். பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியின்றி கே.பி நேர்காணல்களை வழங்க முடியாது என்பதை அறிந்துகொண்ட பி.பி.சி ஊடகம்இ அதன் கேள்விகளை பாதுகாப்புச் செயலாளருக்கும் அனுப்பி வைத்தது. புலம்பெயர் சமூகத்தில்…

  17. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு - சுஸ்மாவுடன் பேசினாராம் ஜோன் கெரி! [sunday, 2014-06-01 07:42:03] இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறிய போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் இந்தியா அவதானம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜோன் கெரி எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=110470&category=TamilNews&language=tam…

    • 1 reply
    • 984 views
  18. முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி. முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி. முக­நூல் ஊடாக கட்­சி­யை­யும், தலை­மை­யை­யும் சிலர் விமர்­சிக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்­குப் பதி­லடி கொடுப்­ப­தற்­கான நேரம் வந்­து­விட்­டது. இவ்­வாறு யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் வேட்­பா­ளர்­க­ளுக்­…

  19. யாழில் பனம் பொருள் விவசாய உற்பத்தி விலைகள் அதிகரிப்பு யாழ்.குடா நாட்டின் உள்ளுர் உற்பத்திப்பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.குடநாட்டின் முக்கியமான உற்பத்திப்பொருளாக காணப்படும் பனம் பொருள் உற்பத்திகள் மற்றும் விவசாய உற்பத்திகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் யாழ்.குடாநாட்டில் செய்கை பண்ணப்பட்ட திராட்டை உள்ளுர் சந்தைகளில் ஒரு கிலோ 60 ரூபாவுக்கும் குறைவான விலைகளில் வாங்கமுடிந்ததாகவும் தற்போது இது 250 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மற்றை உற்பத்திப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த காலங்களில் போக்குவரத்தில் ஏற்பட்ட பல பிரச…

  20. அனைத்து... உப தபால் அலுவலகங்களும், இன்று மூடப்படுகின்றன! நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று(வியாழக்கிழமை) மூடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை திறக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையங்கள் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறக்…

  21. 14 கோடி ரூபாய் செலவில் நியூயோர்க்கில் கும்மாளம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்ற சிறீலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சா தனது மகன் நமால் ராஜபக்சா உட்பட 130 பேருடன் சென்று மக்களின் வரிப்பணத்தில் 14 கோடிகளை ஏப்பம் விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அங்கு சென்றவர்கள் போட்ட கும்மாளங்களும் வெளிவந்துள்ளன. மகிந்தாவுடன் சென்றவர்கள் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பரவிடுதிகளில் தங்கியிருந்ததுடன், விலை உயர்ந்த பொருட்களையும் அரச செலவில் வாங்கி குவித்துள்ளனர். மகிந்தாவின் புதல்வர் நமால் ராஜபக்சாவும், அவரின் நண்பர்களும் இரவு கேளிக்கை விடுதிகளிலேயே பெண்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மிகவும் வ…

  22. முப்படையினரால் அடையா ளப்படுத்தப்பட்டு, கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 25 காணிகளை, படையினருக்கு வழங்க வேண்டாம் என்று காணி ஆணையாளர் நாயகத்தினால் வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகத்தினால், வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 27 ஆவது விதியின் கீழ் முப்படையினருக்கும் காணிகளை கையளிப்பது தொடர்பான, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக என்னால் பிரதேச செயலாளரிடமிருந்து பரிந்துரை அறிக்கைகள் பெறப்பட்டிருந்த கீழ் காணப்படும் காணி கையளிப்பு நடவடிக்கைகள் அவசியமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். புத…

  23. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை யப்பான் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி நேர்காணல் பின்வருமாறு:- கேள்வி:- இன்றைய சந்திப்பு தொடர்பாக? பதில்:- இன்றைய சந்திப்பில் யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அக்காசி அடங்கிய தூதுக்குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினோம். இன்றைய சந்திப்பில் முக்கியமாக இலங்கை அரசின் இரட்டைத் தன்மைபற்றி விளக்கப்பட்டது. அரசு பேச்சுவார்த்தைக்கு தயாரென்று கூறிக்கொண்டு போலித்தனமான அறிவுப்புக்களை விடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் தமிழர் தாயக பிரதேசத…

    • 0 replies
    • 777 views
  24. சரத்பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையின் சிறைக்கூடத்தைச் சுற்றிலும் தகரத்தினாலான தடுப்பு போடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற கைதிகளுடன் தொடர்புகொள்ள முடியாத வகையில் அந்த சிறையைச்சுற்றி ஏற்கனவே கம்பி வேலி வைக்கப்பட்டுள்ளது என்பது செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த கம்பி வேலியை இணைத்துதான் தற்போது தகரத்தினால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் சரத்பொன்சேகா மற்ற கைதிகளை பார்க்கக்கூட முடியாது. இதனால் மற்ற கைதிகளுடன் பேசமுடியாத நிலை இருப்பதால் பொன்சேகா அவதிப்பட்டுவருவதாக என்று செய்திகள் தெரிவிக்கின்றன.tharavu.com

    • 0 replies
    • 913 views
  25. யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2018 - பிரம்மாண்டமான ஏற்பாடு! யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2018 ஆனது, எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த வருடம் ஒன்பதாவது தடவையாகவும் ஏற்பாடாகியுள்ள இந்த கண்காட்சியானது, உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் சந்திக்கும் களமாக அமைந்துள்ளதால் வடக்கிற்கான நுழைவாயில் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. யாழ் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் தனியார் நிறுவனம், யாழ் மாநகர சபை போன்றவற்றின் துணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில், 350 காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.