ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
-
By: அருள் Courtesy: விடுதலைப் புலிகள் 11.08.2006 - வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணி. முகமாலையிலும், அதனை அண்டிய இடங்களிலும் உள்ள சிறிலங்கா இராணுவ முன்னரங்கக் காவலரண் பகுதிகளில் இருந்து இராணுவம் வன்னிப்பகுதியை நோக்கி வலிந்தவொரு தாக்குதலைத் தொடுத்தது. ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள படையினருடன் மேலதிக படையினரையும் இணைத்து, இப்பகுதிக்கு நகர்த்தி, வழமையான பாணியில் இத் தாக்குதலை இராணுவம் ஆரம்பித்து, வழிநடாத்திக்கொண்டிருந்த போது வலிந்தெடுத்த களமுனைக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அல்லைப்பிட்டிக் குக்கிராமத்தினை ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினரும் தம்பாட்டிற்கு வன்னிப்பகுதியை நோக்கி எறிகணைகளை கண்டபடி ஏவிய வண்ணம் இருந்தனர். நேரஞ…
-
- 0 replies
- 756 views
-
-
சட்டவிரோதமாக ஆயுத பாகங்களை அமெரிக்கா கொண்டு செல்ல முயன்ற இரு அமெரிக்கரை கட்டு நாயக்கா விமானநிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு 10.40 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் கட்டார் விமானத்தில் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்வதற்காக முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%…
-
- 0 replies
- 704 views
-
-
தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி கட்டுரைகள் | DECEMBER 27, 2014 5:53 AM மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள் தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. பொது எதிரணி தரப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கா, சந்திரிகா பண்டாரநாயகா குமாரணதுங்க, மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, ஜெயம்பதி விக்ரமரட்ன முதலானோர் பங்கேற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பிலிருந்து தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் ச…
-
- 5 replies
- 803 views
-
-
”மீனவர்களின் கறுப்பு கொடி போராட்டம்” யாழ் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். போராட்டமானது ஐனாதிபதி வருகையின் போது கறுப்பு கொடி போராட்டம் நடத்த வடமராட்சி கிழக்கு மக்கள் தீர்மானித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டத்தை மீறி கடலட்டை பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தொடர்ந்தும் அமைதியாக இருப்பதுடன் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஆதரவாக நடந்து வருகிறது. குறித்த அப் பகுதி மீனவர்களின் சந்திப்பை அடுத்து தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடாத்…
-
- 2 replies
- 418 views
-
-
ஸ்ரீபதி சூரியாராச்சியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் ஆதரவளர்கள் மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர் . நேற்று இரவு கிரிபத்கொட பாத்திமா மகாவித்தியாலயத்துக்கருகில் இத் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது ஸ்ரீபதி சூரியராச்சி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வொன்றிற்கான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டுடிருந்தவர்கள் மீதே இத் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது . எனினும் இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயமோ உயிராபத்தோ ஏற்படவில்லை இது தொடர்பாக கிரிபத்கொட பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . சம்பவத்தின் போது ஸ்தலத்தில் இருந்தவர்கள் துப்பாக்கி தாரிகளை இனங்க…
-
- 0 replies
- 843 views
-
-
தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவான்வெல்ல பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் குறித்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படவுள்ளது. குறித்த வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்க…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் 1,27,707 பேர் இடம்பெயர்வு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் தாக்குதலையடுத்து நேற்று மாலை வரை 35,001 குடும்பங்களைச் சேர்ந்த 1,27,707 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது. மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்துள்ளமையினால் படுவான்கரையில் அனைத்து சிவில் நிர்வாக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.. போரதீவு, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான் ஆகிய பிரதேச செயலகங்கள் எதுவும் இயங்கவில்லை. போரதீவு, பட்டிப்பளை, வவுணதீவு கோட்டக்கல்வி அலுவலகங்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் மண்டபத்தடி, படுகாமம், பக்கி எல்ல, உன…
-
- 0 replies
- 617 views
-
-
1,புலம் பெயர் தமிழர்களகியநாம் எமது கடமைகளை சரிவர செய்கின்றோமா? 2,ஈழத்தில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களின் கருத்துடன் ஒருமித்து நிக்கின்றார்கள்.
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரசாரங்களை மேற்கொள்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை கடத்தும் முயற்சியில் சிறிலங்காவின் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதேச வாசிகள் இதனைத் தெரிவிக்கின்றன. வெள்ளை நிற வேனில் வருகின்ற இராணுவத்தினர் இந்த கடத்தல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து பேர் கொண்ட கூட்டமைப்பின் குழு ஒன்றை இராணுவத்தினர் கடத்த முயற்சித்துள்ளனர். எனினும் அவர்கள் கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மைத்திரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. http://ww…
-
- 1 reply
- 402 views
-
-
எந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – மைத்திரிக்கு மோடி உறுதி சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். காத்மண்டுவில் நேற்று இந்தியப் பிரதமரும், சிறிலங்கா அதிபரும் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தினர். இதன்போது, இரு நாடுகளின் தலைவர்களும், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கும், அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்தனர் என்று இந்திய வெளிவிவகார செயலர் விஜய் கோஹலே தெரிவித்தார். “சிறிலங்காவில் இந்தியா முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த திட்டங்களை முன்னெடுத்து…
-
- 0 replies
- 268 views
-
-
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து ? இன்று தீர்ப்பு டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாக்கிழமை அறிவிக்கவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த மனு தொடர்பான வாதங்களை முன்னர் கேட்டறிந்த நிலையில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2022 நவம்பர் 15 ஆம் திகதி அகற்றுமாறு செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குடிவரவ…
-
- 0 replies
- 203 views
-
-
-யா.வித்தியா தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை தெரியப்படுத்தியுள்ளார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதன் மூலம் எதையோ எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் இந்த அரசில் சாத்தியமாகவும் இருக்கும். சாத்தியமற்றதாகவும் இருக்கும். இராணுவத்தை அகற்ற மாட்டோம், நாட்டை பிரிக்க மாட்டோம் என்றுதான் இவ…
-
- 1 reply
- 783 views
-
-
மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் மட்டு நகரே இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்தவகையில் சற்று முன்னர் வாகனங்கள் போக்குவரத்து செய்யப்பட்ட பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. http://www.newsuthanthiran.com/2018/09/07/மட்டக்களப்பில்-பூரண-ஹர்த/
-
- 20 replies
- 1.7k views
-
-
[Thursday March 22 2007 06:28:04 AM GMT] [uthayan.com] சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது. "சிறுபான்மையினரின் உரிமைக் குழுமம் சர்வதேசம் என்ற அமைப்பு உலகின் சிறுபான்மையினர் நிலைமை குறித்து வெளியிட்ட அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விவரம் அம்பலமாகியிருக்கின்றது. இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கு முதல்நாள் மார்ச் 20 ஆம் திகதி நியூயோர்க்கில் ஐ. நாவில் வைத்து இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தச் சர்வதேச மதிப்பாய்வு பற்றிய அறிக்கைக்கு இலங்கை ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமே, இந்த நா…
-
- 3 replies
- 1.1k views
-
-
மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009ம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ‘ஆபதன்போஸ்தன்’ வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழகத்தினை இங்கே முழுமையாகத் தருகின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது அனைத்துலகின் கண்டனங்களுக்கும் போர் மீறல்கள் தொடர்பான க…
-
- 0 replies
- 705 views
-
-
ஆட்சி மாறியது எப்படி? இறுதி நேரத்தில் அலரிமாளிகையின் திக் திக் நிமிடங்கள்! ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெற்றதும், எந்த சந்தடியுமின்றி எப்படி அவர் ஜனாதிபதியானார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிகாலையிலேயே, முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறியிருந்தார். இது அவரது பெருந்தன்மையை காண்பிப்பதாக பலரும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இவற்றின் பின்னணியில் பெரும் அதிர்ச்சிக்கதைகள் புதைந்துள்ளன என்பதை இப்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன. முதலில் ஒன்றை நினைவூட்டலாம். மகிந்த அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நேரம் காலை 6.30. அந்த சம…
-
- 1 reply
- 906 views
-
-
கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் விசாரணை… கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நேற்றுக் காலை மனித உரிமைகள் ஆணைக்குழு சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி காவல் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் சிவில் உடையில் சென்று தாக்குதல் நடத்தியுள்ளர்.இதனால் தாக்குதலுக்குள்ளாகிய தந்தை மற்றும் இரு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து தாக்குதலுக்குள்ளானவரின் மனைவி இலங்கை மனித உரிமைகள்…
-
- 0 replies
- 275 views
-
-
லண்டனில் பிரபல இலவச தினசரி பத்திரிகையான லண்டன் லைட் (london lite) தனது 26/03/2007 மாலைப்பதிப்பிலே கட்டுநாயக்கா தாக்குதலை படத்துடன் பிரசுரித்திருந்தது முக்கிய இடத்தை பெறுகிறது. அதுவும் லண்டன் சிட்டி (london city) க்குள்ளே இலவசமாக விநயோகிக்கப்படும் இப்பத்திரிகை பல ஆயிரக்கணக்கான மக்களாலே வாசிக்கப்படுவது. நான் நினைக்கிறன் கனபேர் தங்கட இலங்கை விமானச்சீட்டை இரத்துச்செய்திருப்பினம். மேலும் ஒருசில தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிகைகளிலும் இச்செய்தி வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர். வான்புலிகள் வானேற கப்பலேறியது மகிந்தவின் மானம்!!!!!!! செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது
-
- 17 replies
- 5.6k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா வியாழன், 9 ஜூன், 2011 தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். source:vannionline.
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
VideoVideo அல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்யவில்லை: அம்பலப்படுத்தும் வேல்முருகு [ சனிக்கிழமை, 17 சனவரி 2015, 11:50.17 AM GMT ] யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யவில்லை. அவருடைய கொலைக்கு யோகேஸ்வரன் காரணமாக இருந்தார். துரையப்பாவை வேறு சிலரே கொலை செய்தனர் என புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த புதிய அமைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துரையப்பா சுடப்பட்டபோது நான் அவருடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் …
-
- 9 replies
- 1k views
-
-
சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் புதுப்பிப்பு: செப். 19 14:29 இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட �அடிப்படைச் சட்டம்� (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு முன்னுரிமையும் …
-
- 0 replies
- 466 views
-
-
யாழ். குடாநாட்டில் பொதுமக்களையும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளையும் படம் பிடித்து பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றன .இந்த நடவடிக்கைகளில் சில இடங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். வேறு சில இடங்களில் இராணுவத்தினர் என்று தெரிவித்து சிவில் உடையில் வந்தவர்களும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மனக்கிலேசம் ஏற்பட்டுள்ளது. . வீடுகளுக்கு வந்தவர்கள் குடும்ப பதிவு அட்டையிலுள்ள விவரங்களை தாம் கொண்டு வந்த படிவங்களில் நிரப்பி யுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களைத் தனித் தனியாக படமும் எடுத்துள்ளனர்.வீட்டில் எத்தனைபேர் இருக்கின்றீர்கள்? எல்லோரும் என்ன செய்கின்றனர். எத்தனைபேர் வேலை செய்கின்றனர். வீட் டில் எத்தனை அறைகள் உள…
-
- 0 replies
- 536 views
-
-
"மைத்திரி அரசாங்கம் தடைகளை நீக்கும் என நம்புகிறோம்" தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- மகிந்தராஜபக்ச அரசாங்கம் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு வேண்டுமென்றே முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள புதுடில்லி வட்டாரங்கள் புதிய அரசாங்கம் அந்த தடைகளை நீக்குவதையே சிறந்த நட்பிற்கான அறிகுறியாக கருதப்போவதாக தெரிவித்துள்ளன. இந்திய செய்தித்தாளொன்று இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது இலங்கையின் புதியவெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர தனது முதலாவது விஜயத்தை மேற்கொள்வதற்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததை வரவேற்றுள்ள புதுடில்லி வட்டாரங்கள் எனினும் இந்தியாவின் திட்டங்களுக்கு மகிந்தராஜபக்ச அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடைகளை சிறிசேன அரசாங்கம் நீக்குவதையே ந…
-
- 0 replies
- 211 views
-
-
எதிர்க்கட்சிக்கு மீண்டும் திரும்பிய எட்வினுக்கு கொலை மிரட்டலாம்! பிரதிஅமைச்சராகவிருந்து அப்பதவியை துறந்துவிட்டு மீண்டும் ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்துகொண்ட எட்வின் குணசேகரவிற்கு அரச தரப்பிலிருந்து தொலைபேசிமூலம் தொடர்ச்சியாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். தனது உயிருக்கும் தனது குடும்பத்தினரது உயிர்களுக்கும் ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும் என்றும் அவர் கூறினார். எட்வோர்ட் குணசேகர நேற்று நாடாளு மன்றில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பி உரையாற்றினார். நாட்டுமக்களுக்குச் சேவையாற்றவேண்டும். அந்த நோக்கிலேயே நான் அரசு டன் இணைந்து பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டேன். ஆனால் சேவ…
-
- 0 replies
- 681 views
-