ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன், க. அகரன் நாடாளுமன்றத் தேர்தலில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசியல் ரீதியாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போதிருந்த தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார். “கூட்டமைப்புக்குள் பல்வேறு இழுபறி நில…
-
- 0 replies
- 267 views
-
-
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து மீண்டும் இயல்பான வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அரசியல் தலைமைத்துவத்தின் அக்கறையின்மை, அதிகாரத்துவப் போட்டி, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் முன்னாள் போராளிகளை சந்தேகக் கண்ணோடு நோக்குதல் போன்ற பல்வேறு காரணிகள் இவர்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்புவதற்குத் தடையாக உள்ளன. உள்நாட்டு யுத்தமானது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த போதிலும் இன்றும் யுத்த நினைவுகள் முன்னாள் போராளிகளின் மனங்களை விட்டு அகலாதிருப்பதற்கு சிறிலங்கா அரசின் செயற்…
-
- 1 reply
- 297 views
-
-
‘தொடர்பற்ற கல்வி முறைமை, நடுத்தெருவுக்கு கொண்டுசெல்லும்’ ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்ற நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி முறைமை, மாணவ - மாணவியரை நடுத்தெருவுக்குக் கொண்டு செல்வதுடன், அரசாங்கத்தின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஜெற்விங் ஹொட்டலில், இன்று (27) காலை நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள், எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தடை…
-
- 0 replies
- 258 views
-
-
‘தொல்லைகள் அதிகரித்துவிட்டன’ வடக்கு மாகாணத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும், குரங்குகளின் தொல்லைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன் காரணமாக, தங்களது வாழ்வாதாரமான பயிர்ச் செய்கைகளையும், தங்களது இருப்பிடங்களையும், உயிர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்றாடம் போராடி வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களையும், அவர்களது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களையும் காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக மேற்கொள்ளப் படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறியத் தர முடியுமா? என்று, நாடாள…
-
- 0 replies
- 387 views
-
-
‘தோல்வியுற்ற முதலமைச்சர் சி.வி’ வட மாகாணசபை, ஒரு குழப்பகரமான நிறுவனமாக காணப்படுமாயின், அதன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை வரலாற்றில், மிகவும் தோல்வியுற்ற நிலையில் காணப்படும் ஒரேயொரு முதலமைச்சர் என்றால், அது சி.வி.யே ஆவார் என்றும் குறிப்பிட்டது. இது தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தொடர்ந்து கூறியதாவது, “சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள முதலமைச்சர், இலங்கையில் இனவாதத்த…
-
- 1 reply
- 318 views
-
-
‘நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு’ “நாம் இருவேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்சி நலம் கருதி சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பு. ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு. கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது வாஸ்தவமே” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, செவ்வாய்க்கிழமை (22) அனுப்பியிருந்த கடித்துக்கு, முதலமைச்சர் சி.வி. விக்னேஸவரன் நேற்று (23) அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 282 views
-
-
‘நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை’ - க.அகரன் “நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று (05) யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, காணாமலாக்கபட்டோர் என எவரும் இல்லை. எனவே காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஒரு வருட காலமாக உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்வோம் என தெரிவித்த ஜனாதிபதி, இப்போது கா…
-
- 1 reply
- 240 views
-
-
‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு! adminJuly 22, 2025 யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் (21.07.25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “ஜூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒரு நாள். 1983ஆம் ஆண்டு இலங்…
-
- 0 replies
- 103 views
-
-
‘நல்லாட்சி வெளிவேடம்’ “நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில், “இந்த வரவு - செலவுத் திட்டத்தில் சலுகைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்ற போதிலும், அரசம…
-
- 0 replies
- 208 views
-
-
‘நல்லாட்சியின் எதிர்க்கட்சி சாதித்தது என்ன’? க. அகரன் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டு இணக்க அரசியல்செய்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுத்துள்ளதா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, நல்லாட்சியின் எதிர்க்கட்சி சாதித்தது என்னவென வினவியுள்ளார். இதுவரை அரசியல் கைதிகள் விடயத்தில் என்ன முன்னேற்றத்தைக் கண்டார்கள்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வ…
-
- 0 replies
- 221 views
-
-
‘நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது’ -எஸ்.நிதர்ஷன் நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கமானது இன, மத பேதமின்றிச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வல்வை ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் காரணமாக எமது இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாத நிலைமை நிலவியது. தற்போது நல்லாட்சி அரசாங்கக் காலத்த…
-
- 2 replies
- 586 views
-
-
‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர், டான் பிரியசாத் கைது! ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு எதிரே நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக சாட்சியங்கள் ஏதும் இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நாடாளுமன்ற உறு…
-
- 0 replies
- 158 views
-
-
‘நாடகங்களைத் தவிர்த்து காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’ “அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் அம்மக்களது பாவனைக்கு வழங்கப்படாதுள்ள நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். கேப்பாப்புலவு மக…
-
- 1 reply
- 198 views
-
-
‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயருக்கு சிறைதண்டனை’ Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:52 Comments - 0 புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவருக்கு பிரதமர் ஆசனத்தை வழங்கப்போவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய விடுத்தி…
-
- 0 replies
- 379 views
-
-
‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கம் உலகத் தமிழினத்துக்கு வலிமை சேர்க்கும் – விடுதலை இராசேந்திரன் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் ‘ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு’ என்ற தலைப்பிலும், தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் பங்கேற்ற தமிழகத்திலுள்ள இதழியலாளரும் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆகிய விடுதலை இராசேந்திரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக் குறித்து ஆற்றிய உரையிலிருந்து: உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தில் புதிய அத்தியாயங்களை எழுதிய இயக்கம் – விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளின் பல்வேறு விடுதலைப் போராளிகள் இயக்கங்களே பெருமையுடன் கூறுகின்றன. உலகத்தின் எந்த ஒரு நாட்டின் ஆதரவுமின்ற…
-
- 0 replies
- 805 views
-
-
கொரோனா வைரஸ் வியாபித்திருக்கும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலைமையை கவனத்தில் எடுத்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற கொவிட-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. எனினும், நாட்டை மூடிவதற்கான இயலுமை இல்லை” என்றார். ஏற்பட்டிருக்கும் நிலைமை தொடர்பில் ஆகக் கூடுதலான அவதானத்தை செலுத்தி, தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். Tamilmirror Online || …
-
- 0 replies
- 248 views
-
-
‘நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்”- முன்னாள் போராளி December 6, 2021 நடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் நாளில் விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரம் பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அது எமது பாரம்பரிய கலாசார முறை என்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்…
-
- 4 replies
- 614 views
-
-
‘நான் சொல்வதை செய்’ என்று அச்சுறுத்தும் தொனியில் அர்ஜுன மகேந்திரன் நடந்துகொண்டார் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் சாட்சியம் (பா.ருத்ரகுமார்) முன்னாள் மத்திய வங்கி ஆளு நர் அர்ஜுன மகேந்திரன் வாய்வார் த்தைகளின் மூலமாக என்னை அச்சுறுத்தினார், கத்தினார். எனது நேர்மையான செயற்பாடுகளுக்கு ஆளுநர் இடையூறு விளைவித்த மையினாலேயே அவர் என்னை அச்சுறுத்தினாரென சாட்சிய மளித் தேன் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் தெரிவித் தார். மத்திய வங்கியின் ஊழியர் சேம லாப நிதியத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதான இரு இட மாற்றங்கள் மிகவும் அநீதியானவை. அவர்களை இடமாற்றும் தேவை இருக்கவில்லை. இவை அனை…
-
- 0 replies
- 284 views
-
-
‘நான் நன்கறிவேன்’ அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன பதிலளித்தார். கேள்வி: 2008ஆம் ஆண்டு இளைஞர்கள், காணாமல் போன விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு குற்றம் சுமத்த முடியுமா? பதில்: சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞன் ஒருவர், மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு, செல்லவிருந்த முதல்நாள், நண்பர்களுடன் விருந்துபசாரத்தில், கலந்துகொண்டார். அதில், கலந்துகொண்டவர்களையே கடத்தி, கப்பம் கோரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 396 views
-
-
‘நான்தான் உண்மையான இலங்கைப் பற்றாளன்’ 1 ‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது. ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒர…
-
- 0 replies
- 327 views
-
-
மகேஸ்வரி விஜயனந்தன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தயாராகவுள்ளதாக வெளிவரும் செய்திகளை நிராகரித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அந்தத் தகவல்கள் வெறும் "அரசியல் வாசகங்கள் "என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (8) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இது போன்ற தகவல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென தெரிவித்த அமைச்சர், பரப்பப்படும் கதைகளைப் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவார் என்ற கதைகளும் பரவலாம்…
-
- 3 replies
- 800 views
-
-
‘நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் ஆர்ப்பாட்டம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வை கண்டித்து, யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து, யாழ். வீரசிங்கம் மண்டப வாயிலில் உறவுகள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களின் பங்கேற்புடன் யாழ். மாவட்டத்திற்கான அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, தமது அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் …
-
- 4 replies
- 1.2k views
-
-
‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து August 23, 2024 நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்.தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்கெடுப்பு இடம் பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். ஜனாதிபதித் தேர்தலை ப…
-
-
- 3 replies
- 460 views
- 1 follower
-
-
‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் Apr 19, 2015 | 11:22 by கி.தவசீலன் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. “நாம் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல. நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம். நாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பது அனைவருக்கும்…
-
- 11 replies
- 707 views
-
-
‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ திகதி: 03.08.2010, ‘உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்…
-
- 0 replies
- 1.2k views
-