ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
‘நான் நன்கறிவேன்’ அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன பதிலளித்தார். கேள்வி: 2008ஆம் ஆண்டு இளைஞர்கள், காணாமல் போன விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு குற்றம் சுமத்த முடியுமா? பதில்: சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞன் ஒருவர், மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு, செல்லவிருந்த முதல்நாள், நண்பர்களுடன் விருந்துபசாரத்தில், கலந்துகொண்டார். அதில், கலந்துகொண்டவர்களையே கடத்தி, கப்பம் கோரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 399 views
-
-
‘நான்தான் உண்மையான இலங்கைப் பற்றாளன்’ 1 ‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது. ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒர…
-
- 0 replies
- 329 views
-
-
மகேஸ்வரி விஜயனந்தன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தயாராகவுள்ளதாக வெளிவரும் செய்திகளை நிராகரித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அந்தத் தகவல்கள் வெறும் "அரசியல் வாசகங்கள் "என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (8) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இது போன்ற தகவல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென தெரிவித்த அமைச்சர், பரப்பப்படும் கதைகளைப் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவார் என்ற கதைகளும் பரவலாம்…
-
- 3 replies
- 826 views
-
-
‘நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் ஆர்ப்பாட்டம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வை கண்டித்து, யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து, யாழ். வீரசிங்கம் மண்டப வாயிலில் உறவுகள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களின் பங்கேற்புடன் யாழ். மாவட்டத்திற்கான அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, தமது அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் …
-
- 4 replies
- 1.2k views
-
-
‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து August 23, 2024 நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்.தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்கெடுப்பு இடம் பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். ஜனாதிபதித் தேர்தலை ப…
-
-
- 3 replies
- 499 views
- 1 follower
-
-
‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் Apr 19, 2015 | 11:22 by கி.தவசீலன் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. “நாம் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல. நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம். நாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பது அனைவருக்கும்…
-
- 11 replies
- 712 views
-
-
‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ திகதி: 03.08.2010, ‘உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘நாய்’ என திட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர் : சபையில் சீறிய டயானா கமகே நாடாளுமன்ற சிறப்புரிமையை எழுப்பி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் கடும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு எனவும் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சபையில் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் என்றும் கூறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து தான் கேள்வி எழுப்பிய போது, ரஞ்சித் மத்தும பண்டார தன்னை ‘நாய்’ என திட்டியதாகவும் அது குறித்து சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம…
-
- 5 replies
- 664 views
-
-
-விஜயரத்தினம் சரவணன் சர்வதேச விசாரணைகளில் யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக முற்படுவதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா, அவ்வாறு அவர்கள் நினைத்தவுடன் விலகுவதற்கு இது ஒன்றும் அவர்கள் வீட்டுக் கல்யாணம் இல்லையெனவும் கூறினார். முல்லைத்தீவு - மாந்தைக் கிழக்குப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் காரியாலயத்தை, இன்று (24) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்றும் தாம் அபிவிருத்தி என்பதைத் தாண்டி, தமது தமிழர்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையோடும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே …
-
- 0 replies
- 891 views
-
-
அனைத்துலக ரீதியாக பிரபலம் வாய்ந்த ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ ஏடு வெளியிட்டுள்ள, 2012ம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களின் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறவில்லை. 2012ம் அண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களை ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ கடந்த 6ம் நாள் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்த சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது. தங்காலை விடுதியொன்றில் கடந்த நத்தார் நாளன்று பிரித்தானிய சுற்றுலாப் பயணி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது நண்பியான ரஸ்யப் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிறிலங்கா இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட ‘National Geographic Traveler‘ என்ற சஞ்சிகை, 2012ம் ஆண்டின் சுற்ற…
-
- 5 replies
- 1.7k views
-
-
‘நிரந்த அமைதிக்கு கனடா உதவும்’ “இலங்கையில் நிரந்த அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் கனடா தொடர்ந்து உதவும்” என, இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவர் டேவிட் மைண்ரோ தெரிவித்தார். மட்டக்களப்புக்கு இன்று (17) விஜயம் செய்த அவர், கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் உதவியுடன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் கணிணி பயிற்சி வகுப்பை பார்வையிட்டதன் பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “இலங்கையின் நிரந்த அமைதி, சமாதானம், நல்லிணக்கத்துக்காக, கனடா தொட…
-
- 0 replies
- 166 views
-
-
‘நிரந்தரப் பூட்டு திறக்கப்படாது’ -நடராசா கிருஸ்ணகுமார் “கிளிநொச்சி மாவட்டத்தில், நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குயின்ரஸ் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில், மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் நிலைவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பொன்னாவெளி பாடசாலை, குஞ்சுக்குளம் கணேசா வித்தியாலயம் என்பன நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. ஆனால் பல்லவராயன்கட்டுப் பாட…
-
- 0 replies
- 370 views
-
-
‘நிலத்தின் மீதான அதிகாரம் அரசியல் தீர்வின் அத்திபாரம்’ - சுமந்திரன் Editorial / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 05:26 Comments - 0 -செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் “நிலத்தைப் பாதுகாக்காவிட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு மாயையாகும். நிலம் இல்லாத பிரதேசத்தில் ஆட்சி செய்யமுடியாது. மக்கள் இல்லாத ஊரில் அரசாங்கம் இருக்கமுடியாது. நிலமும் ஆட்புலமும் ஒரு தேசத்துக்கு அத்தியாவசியமானது” எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், “நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்” என்றார். “நிலம், பறிபோய்க்கொண்டிருக்கின்றது, மக்களும் நாட்டை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். அரைவாசி மக்கள் போய்விட்டா…
-
- 0 replies
- 305 views
-
-
‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் December 1, 2021 காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந…
-
- 0 replies
- 162 views
-
-
‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை. அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது. …
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
‘நிஷா’ சூறாவளி வெள்ளத்தால் வன்னியில் பேரவலம் ஆனால் தொண்டுப்பணிக்குத் தொடர்ந்தும் தடை uthayan.com ‘நிஷா’ சூறாவளி வன்னியில் ஏற்படுத்திய பெரு வெள்ளத்தால் அங்கு பல நூறாயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றனர் என்ற தகவல் நெஞ்சை நெருடுகின்றது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ மாதிரி, யுத்த அனர்த்தங்களால் அல்லற்பட்ட வன்னி மக்களை இயற்கையும் சேர்ந்து வஞ்சித்து பேரவ லப்பட வைத்திருக்கின்றது என்ற செய்தி மனதை உலுப்புகின்றது. வன்னிப் பெரு நிலப்பரப்பு மீது கொழும்பு அரசு பெரும் எடுப்பில் தொடுத்துள்ள கொடூர யுத்தம் காரணமாகத் தமது வீடு, வாசல்கள், நிலபுலங்களை எல்லாம் விட்டு வெளியேறி, உடுத்த உடையோடு இடம்பெயர்ந்த பல நூறாயிரம் மக்கள், காடுகளில் மரங்களின் கீழும் புதர…
-
- 0 replies
- 644 views
-
-
தமிழ்லீடர் இணையக் குழுமத்தினரின் வெளியீடான அரவிந்த குமாரனின் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை, எக்மோர் சென். அன்ரனீஸ் அரங்கில் தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலர் வைகோ கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் செயலர் பொ. மணியரசசன், மே. பதினேழு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி, ம.திமுக . மல்லை சத்தியா, இமயம் தொலைக்காட்சியின் கட்டுப்பாட்டாளர் ஜெபராஜ், மற்றும் தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு மாணவர்கள், தோழமை மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரோடு ஈழ ஆதவாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்த…
-
- 0 replies
- 556 views
-
-
இந்த உலகில் வேறெங்கிலும் காணமுடியாத ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரனின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவை நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் பதிவாக்கியிருக்கின்றது. இது வெறும் நாவலாக மட்டும் நின்றுவிடவில்லை. இது ஈழ விடுதலைக்கான படைக்கருவி என்று மறுமலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்லீடர் இணையக் குழுமத்தின் வெளியீடான, நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல், சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலர் வைகோ அவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டது. தமிழக மக்கள், ஈழ உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் தொடர்பில், சிற…
-
- 0 replies
- 714 views
-
-
‘நீர்க்காகம் தாக்குதல் X’ – சிறிலங்காவின் பாரிய கூட்டுப் பயிற்சி ஆரம்பம் Sep 04, 2019by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும், பாரிய களப் பயிற்சி ஒத்திகையான, நீர்க்காகம் தாக்குதல் X -2019 நேற்று ஆரம்பமாகியுள்ளது. பத்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியில் இம்முறை 2400 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினர் என 3000 சிறிலங்கா படையினரும், 10 நாடுகளைச் சேர்ந்த 80க்கும் அதிகமான படையினர் மற்றும் பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர். நீர்க்காகம் தாக்குதல் X -2019 இற்கான மின்னேரியா நடவடிக்கை தலைமையகத்தில் நேற்றுக்காலை தொடக்க நிகழ்வு இடம்பெற்றது. இ…
-
- 0 replies
- 302 views
-
-
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, பி.ப. 02:25 நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. …
-
- 0 replies
- 250 views
-
-
‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013′ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் மாலைநேர இரவுநேர வகுப்புக்களை கிராமங்கள் தோறும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஒரு பிரதேசத்திற்கான மாலைநேர இரவுநேர வகுப்புகளை நடாத்துவதற்கு மாதாந்தம் 10555,00ரூபா (அண்ணளவாக 65€) தேவைப்படுகிறது. எமது முதல்கட்ட தெரிவில் 6வளாகங்களை தெரிவு செய்துள்ளோம். எமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்தையும் கருணையாளர்கள் பொறுப்பேற்று எங்கள் எதிர்…
-
- 0 replies
- 441 views
-
-
‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை. ‘நேசம் இலவச கல்வித் திட்டம் 2012″ புலமைப்பரிசில் தோற்றிய கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போரால் பாதிப்புற்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் 2500பேருக்கான மாதிரிப்பரீட்சையும் கருத்தரங்குகளும் சிறப்புக்கல்வி நெறியினையும் வழங்கியிருந்தோம். எமது இலவச கல்வித்திட்டத்திலிருந்து 123மாணவ மாணவியர் சிறப்புச் சித்தியடைந்திருந்தனர். இம்மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கௌரவிப்பினைச் செய்திருந்தோம். சூரியன்களாய் வரவிருக்கிற இம்மாணவர்களை கௌரவிக்க தங்கள் ஆதரவினை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறோம். உதவியவர்கள் :- 1) தெய்வேந்திரன் பிரித்தானியா – 56000,00ரூபா (112மாணவர்களுக்குமான சேமிப்புக்கண…
-
- 3 replies
- 697 views
-
-
‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம் “நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்கள் 2500பேருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். இம்மாணவர்கள் யாவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து பங்குபற்றியிருந்தனர். குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு குறித்த மாணவர்கள் சார்பாக நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பரிசளிப்பு வழங்குவதற்காக எமது…
-
- 4 replies
- 759 views
-
-
‘நேவி சம்பத்’தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு பகுதியில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலரைக் கைது செய்துள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக …
-
- 0 replies
- 245 views
-
-
‘பசில் பசில் பசில்’ என்ற, கோசம்தான்... இப்போது, எனது ரிங்டோன் – பசில்! நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு முன்னதாக வழங்கிய நேர்காணல் ஒன்றில், காகங்களை சிங்கள மொழியில் ‘கபுடாஸ்’ என்று குறிப்பிட்டதை அடுத்து இந்த கோஷம் உருவானது. காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்கள வார்த்தையையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் பெயரையும் இணைத்து கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் …
-
- 0 replies
- 285 views
-