ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
கதிரேசன் வீதி விடுதியிலிருந்து சிங்கப்பூர் பிரஜை கடத்தல் வெள்ளை வானில் வந்தோர் கைவரிசை 2/25/2008 6:56:56 PM வீரகேசரி இணையம் - கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தற்காலிக விடுதி ஒன்றிலிருந்து சிங்கப்பூர் பிரஜையொருவர் இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் இன்று கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்த சிலரே இவரை கடத்திச்சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் சீருடைக்கு சமனான ஆடையணிந்த மூவர் மற்றும் சிவில் ஆடையுடன் கூடிய மூவர் அடங்கிய குழுவினாலேயே இவர் கடத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 2k views
-
-
நாட்டின் பல இடங்களில் மீண்டும் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலையில் நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். திருகோணமலை அன்புவெளிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ரகுமாறன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். தனியார் வைத்திய சாலை ஒன்றுக்கு மருந்து எடுப்பதற்காகச் சென்ற போதே இவர் கடத்தப்பட்டுள்ளதாக இளைஞனின் தயார் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இளைஞன் கடத்தப்பட்டுள்ளதை திருகோணமலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார். இளைஞனின் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை பொல…
-
- 3 replies
- 577 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசிடம் சுமந்திரன் எம்.பி வேண்டுகோள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியபோது, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக முதலாவது குழு புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளித்திருந்தது. கட…
-
- 0 replies
- 389 views
-
-
உயிர் அச்சுறுத்தல் காரணமாக இடமாற்றம் கோரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உடனடியாக வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிக் கோரி அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில், மகப்பேற்று விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று வைத்தியசாலையின் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தமது கடிதத்தில் சுட்டிக்…
-
- 0 replies
- 163 views
-
-
மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று முற்பகல் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட திருமுறிகண்டிப் பகுதியில் உள்ள மக்களின் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன மக்கள் கூறுகின்றனர்.இந்தப் பகுதியைச் சேர்ந்தா சுமார் 119 குடும்பங்கள் இதுவரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதில் 46 குடும்பங்கள் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் உள்ளன. இந்தக் குடும்பங்களின் காணிகளே இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 வீதியின் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்புறத்தில் அமைந்துள்ள திருமுறிகண்டிக்குளம், அதன் கீழ் உள்ள 80 ஏக்கர் வயல் காணி, திருமுறிகண்டித் தபாலகம், பொது மயானம், இரண்டு இந்து ஆலயங்கள், சுகாதார நிலையக் கட்டடம், கிரா…
-
- 0 replies
- 367 views
-
-
29 NOV, 2024 | 03:14 PM (நா.தனுஜா) கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீது மட்டுமீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு ஏதுவாக அமையக்கூடிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பல்துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன், மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு திருத்தியமைப்பதற்குரிய வலுவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான அணுகுமுறையைப் புதிய பாராளுமன்றம் பின்பற்றவேண்டியது அவசியம் என உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் (குளோபல் நெட்வேர்க் இனிசியேட்டிவ்) வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அற…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
“உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்போம்” வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசா ரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் சனிக் கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட் டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட் டது. அவ்வறிக்கையில், "நாம் ஒரு தேசிய இனம். ஆனால் தொன்று தொட்டு சிறுபான்மையினம் என்ற பதத் துக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது எம். தமிழினம். இன்றும் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பரம்பரையில் முதல…
-
- 0 replies
- 165 views
-
-
அச்சமும் நம்பிக்கையீனமுமே உலகிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி [14 - March - 2008] 2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தனது பொருளாதார, இராணுவ நலன்சார் ந்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தீவிரமாக உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக முன்னர் பணியாற்றிய ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றின் போது, `9/11 இற்குப் பிறகு எமது அச்சத்தையும் ஆத்திர உணர்வையுமே நாங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி …
-
- 0 replies
- 972 views
-
-
வடக்கில் இருந்து சிறிலங்காப் படைகளை வெளியேற்றக் கோருவது நியாயமற்றது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியக் குழுவினரிடம் கூறியுள்ளார். சிறிலங்காவில் தமிழர்களின் நிலை குறித்து ஆராய வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்றுக்காலை சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசியது. இதன்போது வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் எடுத்துக் கூறினர். அதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார். "நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம். வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாக இருக்கப் போவதில்லை. …
-
- 0 replies
- 558 views
-
-
இரு முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் - கோத்தபாய அரசாங்கம் விரைவில் விடுதலைசெய்யவுள்ள விடுதலைப்புலி உறுப்;பினர்களில் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திய இரு முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ்,விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே,முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகாவா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
-எஸ்.நிதர்ஷன் இலங்கை ஆட்சியாளர்களதும் ஆட்சிக்கு வர நினைக்கின்றவர்களதும் முகவர்களாகச் செயற்படுகின்ற ஞானசார தேரர் போன்ற பிக்குகள், தமிழர்களை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறார்களெனத் தெரிவித்த டெலோ அமைப்பின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமா சபா குகதாஸ், சிங்கள - பௌத்த மேலாதிக்கச் சிந்தனைகளை தமிழர் தாயகப் பகுதிகளில் அனுமதிக்காது, தமிழர் தேசத்தைப் பாதுகாப்போமெனவும் கூறினார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சில பௌத்த பீடங்களின் தேரர்களும் தமிழர்களை மிரட்டும் வகையில் கருத்துகளைக் கூறியுள்ளதாகவும் இதன் பின்னணியில், ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் உள்ளதாகவும் கூறினார். ஐனநாயகம் பேசும் ஆட்சியாளர், வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் …
-
- 0 replies
- 303 views
-
-
சிறிலங்காவில் நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணமல் போதலும் பயங்கரமான நிகழ்வுகளாகி விட்ட போதும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையை பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.2k views
-
-
சோதிடத்தை நம்பியே தோல்வியுற்றார் மகிந்த சோதிடத்தில் நம்பிக்கை வைத்துத் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டார். அதனை மறந்து விட வேண்டாம். கடவுளை மட் டுமே நம்புங்கள் என்று காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு அறிவுரை கூறினார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பரணகம. பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று 3 ஆவது நாளாகவும் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்காக வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு முத்தையன் கட்டுப்பகுதியினைச் சேர்ந்த தாயயாருவர் தனது மகன் காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளித்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு, 17 வயதில் எனது மகன் கிருஸ்னன் காண…
-
- 0 replies
- 587 views
-
-
மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024 09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு 25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக போராட்டத்தில் …
-
- 1 reply
- 319 views
-
-
மகிந்த ராஜபக்ஷவிற்கு தத்தமது ஆளுமையை வெளிப்படுத்துவதற்காக பல அமைச்சர்கள் இம்முறை மே தினத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் ஜனாதிபதியினால் புறந்தள்ளப்பட்ட கட்சியின் அமைச்சர்களே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய தமக்கான அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அவர்களது ஆதரவாளர்களுடன் குறித்த அமைச்சர்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், தமது பலத்தைக் காண்பிக்க பெருமளவிலான கூட்டத்தை ஒன்றுதிரட்டவும் இவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஜனாதிபதி மீது அதிருப்தி கொண்டுள்ள அமைச்சர்கள் இவ்வாறு செயற்படும் நிலையில், மக்கள் தற்போது சந்தித்துள்ள பார…
-
- 0 replies
- 475 views
-
-
சுமார் ஆயிரம் பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது அரச தொழிலிலுள்ள பட்டதாரிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வரவு செலவுத்திட்டத்தில் தடை செய்யப்பட்ட மோட்டார் வாகன சலுகை ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்றுள்ளதுடன், அவர்களில் சுமார் 10 பேர் வரை ஜனாதிபதி செயலகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். …
-
- 1 reply
- 922 views
-
-
நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மீறியமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா, இந்த மனுவினை இன்று (14) தாக்கல் செய்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நரவயட-வவகரம-மனமறயடட-நதமனறல-மன/175-239981
-
- 1 reply
- 627 views
-
-
போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வற்புறுத்துங்கள்: பிரதமருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் சென்னை, மார்ச்.30&: போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:& வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இலங்கை தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறா…
-
- 2 replies
- 1.2k views
-
-
எம்.பிக்களுக்கான 1 நாள் கொடுப்பனவு 20ஆயிரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நாள் வருகைக்கான கொடுப்பனவாக வழங்கப்படும் தொகையை 500 ரூபாவிலிருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அரசாங்க தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வருகைக்காக தற்பொழுது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது 500 ரூபா மாத்திரமே. இது 19500.00 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் நாடாளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 160000.00 (ஒரு லட்சத்து 60 ஆயிரம்) ரூபா கிடைக்கப் பெறுகின்றது. ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின்…
-
- 4 replies
- 557 views
-
-
நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) ஏ.எம். ஜெமீலின் இல்லத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மரைக்காயர் சபை உறுப்பினர்களை ஒன்றுகூட்டி தீர்மானம் மேற்கொள்ளாமல், பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்த தீர்மானமானமானது பள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது என்பதை க…
-
- 0 replies
- 319 views
-
-
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள் மீது கல்வியமைச்சு பாரபட்சம் காட்டுவதாக விரிவுரையாளர்கள் அதிருப்பி வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை 9 அணி ஆசிரியர்களை பணிகளுக்கு அனுப்பியுள்ளது. இங்கு 10 பாடநெறிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தநிலையில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை 26 இணைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் தமது கடமையை நிறைவேற்றியுள்ள போதும் இவர்களை நிரந்தரமாக்க கல்வியமைச்சுப் பின்னடித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குதல் தொடர்பாக கல்வியமைச்சு 2006ம் ஆண்டு இரண்டு தடவைகளும் 2007ம் ஆண்டு ஒரு தடவையுமாக 3 முறை நேர்முகப் பரீட்சைகளை நடத்தியது. என…
-
- 0 replies
- 589 views
-
-
29 தமிழக மீனவர்கள் கைது எல்லை தாண்டி மீன் பிடித்தத தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் என இந்திய செய்திகள் கூறுகின்றன. மேலும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் திருகோணமலை ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி குறிப்பிடுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=75630
-
- 1 reply
- 514 views
-
-
ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தை அலங்கரிக்கும் வலசைப் பறவைகள் 28 Jan, 2025 | 01:49 PM மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன. அதில் Australian White Ibis என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பறவை இனம் வருடத்தில் டிசம்பர் ஜனவரி, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் மக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திற…
-
- 0 replies
- 259 views
-
-
ஜே.வி.பி. கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவின் கட்சி விரோத நடவடிக்கைகள் என்ன? என்று அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 959 views
-