Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்ப் பகுதிகளில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 300 views
  2. காணிவிடுவிப்பு தொடர்பில் முல்லை படைத்தளபதியுடன் பேசினாரா பிரிட்டன் தூதுவர்? இலங்கைக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்து ரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்,முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன்போது, பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கல…

  3. (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புத…

  4. அவுஸ்திரெலியா வானொலிக்கு விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/interviews20080213.html

  5. பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜெனீவாவில் அறிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளையொட்டி நடைபெறும் இணைக் கூட்டமொன்றில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு எதிராக பின்னர் ; …

  6. மாகாண சபையை பாதுகாக்க தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ரெலோ கோரிக்கை “குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும், விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்” என வலியுறுத்தியுள்ள ரெலோ, “தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும் , தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” எனவும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “தற்போதைய அரசியல் சூழலில் மாகாண…

  7. செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிப் பட்டியலில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்தார். புலிகளின் சர்வதேச நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான கே.பி. என்ற குமரன் பத்மநாதனோ அல்லது புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியோ இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தயா மாஸ்டர் தெரிவித்தார். இதேவேளை வடமாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து ஈ.பி.டி.பி இவ்வார இறுதிக்குள் தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?new…

  8. 20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது சூட்சுமமான முறையில் பணம் மறைத்துவைக்கப்பட்டமை அம்பலம் மூன்று வாகனங்கள் மீட்பு;ஜப்பான் சூடியை தேடி வேட்டை (எம்.எப்.எம்.பஸீர்) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட மஹா­வத்த பகு­தியில் மீட்­கப்­பட்ட 20 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்­பொருள் மற்றும் 80 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பிர­பல போதைப்­பொருள் வலை­ய­மைப்பின் பிர­தான சந்­தேக நபர் உட்­பட ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மன்­னார் ஊடாக நாட்­டிற்குள் கடல் மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­படும் ஹெரோயின் போதைப்­பொ­ருளை நாட­ளா­விய ரீதியில் விநி­யோகம் செய்யும் முக்­கிய வலை­ய…

  9. பந்துல குணவர்த்தனவின் 1000 ரூபா பொதி சர்ச்சையின் பின்னணியில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பை காரணமாக்கி கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டு 19ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றூண்டிச்சாலைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், சிறையில் வைத்து சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டுள்ளார். இதனை அவரது மகள் ஆக்ரா தினேந்திரி, மக்கள் சக்தி அமைப்பின் சுதேஷ் நந்திம சில்வா ஆகியோர் வெளிப்படுத்தியதுடன், சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவும் அறிக்கையிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. சம்பவம் தொடர்ப…

    • 1 reply
    • 637 views
  10. மங்கள சமரவீர விடுதலைப் புலிகளுக்காக செயற்படுகின்றார் – கெஹலிய 19 ஜூலை 2013 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்க மங்கள முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மங்கள சமரவீர செயற்பட்டு வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் மூலம் நாட்டுக்குக் கிடைக்கப்பெறும் நன்மைகளை மக்கள்…

  11. காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 18ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் May 7, 2021 காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்.மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டமையினால் , நாடாளுமன்ற ஆசனம் உள்ளிட்ட பலவேறு விடயங்களில் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் இறுதி செய்யப்பட்டு கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதன் போது , கடந்த 2019ஆம் ஆண்டு பட்டியலில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 823 ஆக குறைவடைந்துள்ளது. …

  12. சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தோ அல்லது விமர்சித்தோ செய்திவெளியிடும் சிறிலங்கா செய்தியாளர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகக் கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரமே குறைந்தது 11 சிறிலங்காச் செய்தியாளர்களாவது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் என்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (சி.பி.ஜெ) கூறியுள்ளது. உலகம் முழுவதும் நடந்த இது போன்ற சம்பவங்களில் இது 25 விகிதமாகவுள்ளது என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்து செய்திவெளியிடும் நிருபர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் கடுமையான பழிவாங்குதலையும் மற்றும் வ…

  13. 13ஆவது அரசமைப்பை ஆதரித்து, கிழக்கு மாகாண சபையில் இன்று பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாணசபை குழுத்தலைவரான ஜெமில் கூறியுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23947

    • 0 replies
    • 424 views
  14. நாடாளுமன்றம் நாளை கூடும் போது கறுப்பு ஆடையுடன் தமிழ் எம்.பி.க்கள் வருவர் May 17, 2021 நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கறுப்பு ஆடையுடன் செல்ல தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இந்த முடிவை எடுத்தனர். கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்குள் கறுப்பு ஆடை அணிந்து வந்த சமயத்தில், அதை பார்த்த தமிழ் எம்.பிக்கள், அன்றைய தினமே இந்த முடிவை எடுத்தனர். அன்றைய தினமே கூட்டமைப்பு எம்.பி சிறிதரன், மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த யோசனையை சொல்ல, ஏனையவர்கள் அதை ஆமோதித்தனர். அண்மையில்…

    • 1 reply
    • 504 views
  15. ஒட்டுக்குழுக்களை முன்னிலைப்படுத்துகின்றதா ஊடகங்கள்? புலிகளது கதை முடிந்தது போலவும் இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப்படாத "ஈ.பி.டி.பி" கட்சிக்கு எமது ஊடகங்கள் திடீரென்று முக்கியத்துவம் கொடுப்பது போல் தோன்றுகின்றது. இதன் பின்னனி புரியவில்லை. பல தமிழ் இணையத்தளங்கள், யாழ்ப்பாண உதயன் பத்திரிகை, தமிழ் நெட், இன்னும் பல ஊடகங்களில் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்லஸ் தேவானந்தாவின் புகைப்படங்களுடன் செய்திகைளையும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தோன்றுகின்றது. தயவுசெய்து ஊடக நண்பர்களே உங்கள் ஊடகங்களிலாவது அதனை முக்கியப்படுத்தாமல் விடுவது நன்று, காரணம் தலமை அற்று தவிக்கும் தமிழரின் உள்ளத்தில் இடம்பிடிக்க ஈபிடிபி முற்படுவது நன்கு தெரிகின்றது(சரணடைந்த புலிகளுக்கு மன்னிப்பு, மீன்பிடி தடை ந…

  16. யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நான்கு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை புள்ளிவிபரம் தெரிலித்துள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய்,காங்கேசன்துறை,அச்சுவேலி பகுதிகளில் குறித்த சிறுமிகள் பாலியல் துஸ்பிரயேகத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரும்புராய் கிழக்கு பகுதியில் 15அகவை சிறுமியும்,காங்கேசன் துறைப்பகுதியில் 13,14 அகவை சிறுமிகள் தொடராக ஆசிரியரினால் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல் அச்சுவேலி பகுதியில் 8அகவை சிறுமிமீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த முறைப்பாடுகள் காவல்துறையின் பதிவுக்குட்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/31833/64//d…

  17. பல தசாப்தகாலப் போருக்குப் பின்பாகவும் கூட, வெகு விரைவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்க்கப்படவோ தளர்த்தப்படவோ போவதில்லை ‐ சார்ள்ஸ் ஹாலான்ட் BBC: http://www.globaltamilnews.net/tamil_news....11351&cat=1

    • 0 replies
    • 721 views
  18. யுத்தக் குற்றங்களைப் புரிந்த பெரும்பாலானோர் பிரிட்டனில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமானோர் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அநேகர் நீண்டகாலமாக பிரிட்டனில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவான்டா மற்றும் சேர்பியா ஆகிய நாடுகளைச் சேரந்த யுத்தக் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுவோர் பிரிட்டனில் தங்கியிருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் யுத்தக் குற்றவாளிகளுக்கு தஞ்சம் வழங்கும் நாடில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களில் நூற்றுக்கும; அதிகமானோர் யுத்தக் …

  19. எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு (adaderana.lk)

    • 0 replies
    • 179 views
  20. வடமாகாண சபைத் தேர்தல் - நவிப்பிள்ளையின் விஜயம் காரணமாகவே மக்களின் காணிகள் விடுவிப்பு 04 ஆகஸ்ட் 2013 டக்ளஸின் அழுத்தம் அல்ல - அவ்வாறாயின் வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் நிலத்தை விடுவிக்க ஏன் அவரால் முடியாதுள்ளது சுரேஸ் கேள்வி நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் விஜயத்தினை கருத்தில்கொண்டுமே இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் வாழும் மக்களுக்கு ஜனநாயக உரிமை கிடைக்கவேண்…

    • 5 replies
    • 536 views
  21. மதியபோசன இடைவேளை இன்றி சபையமர்வு நடக்கும் கொவிட்-19 தொற்றுநோய் சூழல் காரணமாக இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (ஜூன் 08ஆம் திகதி) மாத்திரம் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ‘இதற்கமைய நாளை (08) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படும்” என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார். நாளை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நிதி முகாமைத்துவப் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, 2020ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் …

  22. சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) கடன் உதவியை வழங்குவது தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவந்த அமெரிக்க நிர்வாகம் தற்போது அதனைத் தளர்த்தி மென்போக்கை இப்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சிறிலங்காவுக்கான கடன் உதவி கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. கடன் உதவி வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் தீவிர ஆதரவு நிலைப்பாடும், சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைச் சமப்படுத்த வேண்டும் என்ற தேவையுமே அமெரிக்காவின் இந்த மென்போக்குக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் வரையிலான கடன் உதவியை வழங்குவதற்கு முன்னர் தெரிவித்த எதிர்ப்பை அ…

    • 4 replies
    • 817 views
  23. பழைய பள்ளிவாசலை உடைக்கும் நகர அபிவிருத்தி சபையின் திட்டம் கைவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது ( படம்: தாக்குதலுக்கு உள்ளான புதிய பள்ளிவாசல்) இலங்கையின் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் அதனருகில் உள்ள பழைய பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பௌத்த சாசனம் மற்றும் மதவிவகார அமைச்சில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பழைய பள்ளிவாசலை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே …

  24. வீரகேசரி இணையம் - வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த திருவிழா உற்சவம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் நன்மை கருதி நான்கு வீதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊள்ளூர் தொண்டர் அமைப்புகளும் கடமையில் ஈடுபடவுள்ளன.

    • 22 replies
    • 2k views
  25. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அல்லலுறும் அப்பாவி வடக்கு இடம்பெயர்ந்த மக்களை காட்டி அரசாங்கம் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முகாம் மக்களை தொடர்ச்சியாக முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் நன்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் மீது பலவந்தமாக வரிகளை சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அதிக மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்திப் பணிகளைவிடவும் அகத…

    • 0 replies
    • 376 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.