ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
சிறிலங்காவின் பொது வானூர்தி சேவை அதிகார சபையின் தலைவர் லால் லியனாராய்ச்சி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை வானூர்தித்துறை அமைச்சின் செயலாளர் றஞ்சித் சில்வாவுக்கு இந்த வார தொடக்கத்தில் அவர் அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக பிரபல சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுவாயுதங்கள் மற்றும் அணு சக்தியைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச தீவிரவாதிகளின் உதவியைக் கோரியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேற்குலக நாடுகளுடன் இணைந்து உயிரி ஆயுதங்களை உற்பத்தி செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் நடைபெற்று வரும் விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெற்ற பாரியளவு சர்வதேச உதவிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்…
-
- 9 replies
- 2k views
-
-
கடுங்காற்றால் வீடுகள் சேதம் -ரொமேஸ் மதுசங்க கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேசத்தில் நேற்று மாலை நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலையால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசித்து வந்த தற்காலிக மற்றும் நிரந்தர வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/196411/கட-ங-க-ற-ற-ல-வ-ட-கள-ச-தம-#sthash.RsztCfUx.dpuf
-
- 1 reply
- 396 views
-
-
படுகொலையிலிருந்து தப்பித்த டக்ளஸ் கூட நினைவேந்தல் தடைக்கு துணை போகின்றார்! கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமாகிய இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பி…
-
- 0 replies
- 272 views
-
-
தன்மீதான குற்றச்சாட்டை மறைக்க பிறரை குற்றம்சாட்டும் ரிஷாத் பதியுதீன் நடிகர் ரஜனிகாந்த் நடித்த படம் உற்பட சில தமிழ் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நிதி உதவியளித்துள்ளதாகவும் அத்துடன் வைகோ, டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்டோருக்கும் புலிகள் நிறைய பணம் கொடுத்துள்ளார்கள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமீபகாலமாக சிறிலங்காயின் இயற்கை பேரிட துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அவர்களால் கூறப்பட்டு வருகிறது. அவர் இவ்வாறு கூறுவதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளதாக வைகோ கூறியிருக்கும் நிலையில் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தன்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை திசை திருப்புவதற்காக அவர் இவ்வாறு கூறிவருவதாக அறியப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே வன்னி அகதிமுகாம் நிவார…
-
- 0 replies
- 581 views
-
-
கறுப்புக் கொடிகளை ஏந்துவோமென்றனர் நள்ளிரவில் இந்திய பிரதமரை சந்தித்தனர் ஆட்சியை கைப்பற்ற நினைப்பது வேடிக்கை என்கிறார் ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வரும் போது கறுப்புக் கொடிகளை ஏந்துவோமென தெரிவித்த சிலர் நள்ளிரவில் சென்று அவரை சந்தித்தனர் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அரசாங்கம் பலவீனமாக காணப்படுகின்றதெனக் கூறி ஆட்சியை கைப்பற்ற நினைத்தால் அது வேடிககையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அரலகங்வில விலயாய மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு இலட்சம் மகாவலி காணி உறுதிகள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்…
-
- 0 replies
- 319 views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அடுத்துவரும் அரச தலைவர் தேர்தலில் எதிரணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்யவை பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதற்கான பணிகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எந்த ஒரு தேர்தலும் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பொது வேட்பாளராக கரு ஜெயசூர்யவை அறிவித்துவிடுவது ஐக்கியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குக் கவர்ந்து இழுப்பதற்கும் எதிரணியைப் பலப்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என மங்கள கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கரு ஜெயசூர்ய பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும்கூட ஐக்கிய தேசியக் கட்சியின் முழுப் ப…
-
- 1 reply
- 444 views
-
-
அரசியல் தீர்வு பின்போவதன் எதிர்வினையே பளைச் சூடு! போர் முடிந்து 8 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் வடக்கில் ஒலித்துள்ளன. சுற்றுக் காவல் அணியை இலக்கு வைத்து தாக்குதலாளிகள் பதுங்கியிருந்து சுட்டனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். அது உண்மையாயின், அரசியல் தீர்வு ஒன்று தாமதப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சம்பவம் கவலைக்குரியது. எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை ஏற்படுத்துவது. பளை நகருக்கு அண்மையில் கச்சார்வெளிப் பகுதியில் நடந்த சம்பவம் குறித்துப் பல கதைகள் நிலவினாலும், பாதுகாப்புத் தரப்பினர் அதனை அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொண்டதாகத்…
-
- 0 replies
- 435 views
-
-
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது என சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக இருந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதிலும் பார்க்க முதலமைச்சராக இருந்து அதிகம் சேவையாற்ற முடியும் என தான் நம்புவதால், அந்தப் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக தேவானந்தா தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல்களுக்குப் போவதற்கு முன்னதாக வடக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் நடத்துமாறு நாம் அரச தலைவரிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு முடிவதற்குள் ஏனை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்…
-
- 0 replies
- 656 views
-
-
யாழ். மாவட்ட உறுப்பினர்கள் பலர் சபையில் இருப்பதில்லை வடக்கு மாகாண சபை அமர்வில் குற்றச்சாட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சபை அமர்வுகளில் முழுமையாக இருப்பதில்லை என்று ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் குற்றஞ்சாட்டினார். வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. பிற்பகல் அமர்வில் வடக்கு மாகாணத்தில் அடகு பிடிப்போருக்கான நியதிச் சட்டவரைவு மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் சபையில் சில உறுப்பினர்கள் இல்லை. யாழ்ப்பாண மாவட்டத்…
-
- 0 replies
- 482 views
-
-
வெள்ளிக்கிழமை, 18, செப்டம்பர் 2009 (11:20 IST) இலங்கை அரசுக்கு கலைஞர் கண்டனம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது தொடர்கதையாகி விட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று முன் தின இரவு கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்களை பார்த்து பயந்த மீனவர்கள் படகை கரைக்கு திருப்பினர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் மீன்பிடி சாதனங்களை தூக்கி எறிந்து விட்டு 21 மீனவர்களை சிறைப் பிடித்து சென்றனர். அங்க…
-
- 18 replies
- 1.4k views
-
-
கதிர்காமத்தில் யாழ். யாத்திரிகர்களுக்கு தங்குமிடம் வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடலாயங்கள் அழிக்கப்பட்டமை காரணமாகவே, யாழ்ப்பாணத்துக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது” என, தெல்லிப்பழை துர்கா தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுகன் தெரிவித்துள்ளார். “அத்துடன், கதிர்காமத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாத்திரிகள் தங்குமிடம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான காணியை கதிர்காம ஆலய நிர்வாகம் வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே, நல்லூர் ஆலயத்துக்குச…
-
- 0 replies
- 441 views
-
-
மன்னாரில்... அந்தோனியார் சிலையை அகற்றி, பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை. மன்னார், மடு – பரப்புக்கடந்தான் வீதியில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரப்புக்கடந்தான் பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு, அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். அதன்பின்னர், குறித்த பகுதியில் வைக்கப்பட்ட அந்தோனியார் சிலையை அகற்றிய பொலிஸார், மடு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மடு – பரப்புக்கடந்தான் வீதியில்,…
-
- 14 replies
- 817 views
-
-
புலிகள் இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு தமிழர்களை கொல்ல, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இடமளித்ததாக தேவாலஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். ஆனால் இராணுவ வீரர்களை கொலை செய்த அந்த இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு அன்று அனைத்து பொலிஸாருக்கும் விடுமுறை கொடுத்து வேலை செய்ய விடாமல் ஜே.ஆர்.ஜெயவர்தன தடுத்தார். பின்னர் அனைத்து தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் உடைத்து அவர்களின் பொருட்களை திருடி, அவர்களுடைய அனைத்து சொத்துக்களுக்கும் தீ வைத்து கொளுத்தி, தமிழர்களை கொல்ல இடமளித்தார். இது மிக…
-
- 3 replies
- 336 views
-
-
சம்பந்தன் – விக்கி சமரசம் பிரேரணை மீளப்பெறப்படும்? முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து ஏற்பட்டிருந்த கடும் முறுகல் நிலைக்கு பேச்சுவார்த்தைமூலம் சமரசத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவ ருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியதையடுத்து இந்த முறுகல்நிலைக்கு சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புௌாட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 349 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர் தெரிவும் முடிவின்றித் முடியும் கூட்டங்களும் - 05 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இன்றிரவு கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் விரைவாக முடிவடைந்து உள்ளதாக தமிழத்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக பேசப்பட்டது ஆனால் அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் முடிடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். எனினும் மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக தமிழ்த் தேசி…
-
- 1 reply
- 546 views
-
-
யாழில் கொள்ளை குற்றசாட்டில் கணவன் மனைவி உட்பட நால்வர் கைது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் மஞ்சுள காந்தோல தலைமையிலான எட்டு போலிஸ் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்ன…
-
- 0 replies
- 332 views
-
-
பல மில்லியன்கள் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம் - மக்கள் விசனம் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு நான்கு வருடங்கள் முடியும் முன்னரே வீதி முற்றாக தேசமடைந்து சாதாரண துவிச்சக்கர வண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவது தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியானது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வீதியானது பொது மக்களின் நீண்டகால கோரிக்கை்கு அமைவாக முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்ய…
-
- 9 replies
- 585 views
- 1 follower
-
-
மீனவர் கைது விவகாரம்: இந்தியாவும் பதிலடி;தூத்துக்குடியில் 26 இலங்கையர்கள் நேற்று இந்தியக் கடற்படையால் கைது தமது மீனவர்கள் மீதான அத்துமீறல்களை நிறுத்துமாறு இலங்கையிடம் தொடர்ச்சியாக கோரி வந்த இந்தியா, தனது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததையடுத்து அதற்குப் பதிலடியான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக புதுடில்லி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை மீனவர்கள் 26பேரை தூத்துக்குடி கடலோரக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த நான்கு விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று இரவு …
-
- 5 replies
- 664 views
-
-
திவிநெகும நிதி மோசடி - மற்றுமொரு வழங்கில் இருந்து பெசில் விடுதலை 2015 திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூபா 36.5 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் GI குழாய் விநியோகித்த வழக்கில் இருந்தே குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்ற…
-
- 0 replies
- 276 views
-
-
-
அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டமானது மன்னார் – உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதாகவும் அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு…
-
- 0 replies
- 385 views
-
-
133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி 21 அக்டோபர் 2013 "மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்வது என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் தீர்மானித்து உள்ளதாகவும் ஆனால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு முன் தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். முதலமைச்சர் மாநாட்டுக்கு செல்வதாக இருந்தால் அதற்கு …
-
- 20 replies
- 1.9k views
-
-
யாழில் கூட்டுபாலியல் வன்புணர்வு முயற்சி : மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு.! யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். இருந்தபோதிலும் குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்ததையடுத்து கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் அம் மாணவியை வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தள்ளிவிடப்பட்டிருந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலு…
-
- 8 replies
- 784 views
- 1 follower
-
-
முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் – ஜி.எல் பீரிஸ் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். கூட்டணி அரசாங்கத்திற்குள் பிரிவுகள் எழுந்துள்ள நிலையில் புத்தமத போதனைக்கு அமைய பங்காளி கட்சியினர் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 2019 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது சர்வதேச மட்டத்தில் பெரும் சவாலையையும் தற்போதுவரை கொரோனாவையும் எதிர்கொள்வதை பங்காளிக் கட்சியினர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆகவே அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடனும் பொறுமையுடனும் செயற்படுவது அவசியம் என்…
-
- 0 replies
- 181 views
-