ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
காணாமல் போனோரில் அதிகமானோர் வெளிநாடுகளிலாம் – மன்னாரில் கதை சொன்னார் மஹிந்தவின் பிரதிநிதி! காணாமல் போனோரில் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். வெளிநாட்டு அமைச்சுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை தரும் பட்சத்தில் வெளிநாடுகளில் சட்டமுறைப்படி விபரங்களை பெற முயற்சிக்கலாம் என்று காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழு என்ற பெயரில் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின்தலைவர் மெக்ஷ்வல் பரணகம மன்னாரில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும் வெளிநாடுகளுக்கு இந்த விவகாரம் தொடர்பில் அவர்களுக்கென ஒரு சட்டம் உள்ளது. அவர்களின் சட்டங்களுக்கமைய அங்கு அகதி…
-
- 0 replies
- 411 views
-
-
தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்து விட்டால் எந்தப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல் நடத்த முடியும்: சரத் பொன்சேகாவுக்கு எழிலன் எச்சரிக்கை [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 20:59 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானிப்பவர்களாக இருந்தால் அது எந்த பிரதேசத்துக்குள்ளும் இருந்தாலும் அந்த இலக்கை அழிக்கக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளும் தாக்குதல் திறன் எப்போதும் விடுதலைப் புலிகளிடம் இருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார். திருகோணமலை கடற்படைத் தளத்தைப் பாதுகாக்கவே சம்பூரைக் கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து இலண்டனில் மாபெரும் போராட்டம்! [Thursday 2014-08-21 20:00] இனவழிப்பின் ஓர் ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டித்தும் செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதன் 08ஆம் ஆண்டை நினைவுகூருவதற்காகவும் நாளைமறுதினம் 23.08.2014 சனிக்கிழமை இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் இனவழிப்பின் நீண்ட வரலாற்றில், 14.08.2014 செஞ்சோலை மாணவச் செல்வங்கள் சிறிலங்கா வான்படையால் திட்டமிட்டு இலக்குவைத்துத் தாக்கப்பட்டதில் 53 மாணவிகளும் 03 ஆசிரியர்களும் கோரப் படுகொலை செய்யப்பட்டதுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமுற்றிருந்தனர். செஞ்சோலைப் படுகொ…
-
- 0 replies
- 258 views
-
-
சுவிஸில் கொலை; இலங்கையர் கைது செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014 09:29 சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 42 வயதுடைய இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நியூஸிலாந்துக்கு வந்திருந்httpதார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/123978-2014-08-26-04-06-42.html
-
- 2 replies
- 630 views
-
-
பௌத்த உறவுகளை மேம்படுத்த 15 மில்லியன் டொலர் – இந்தியாவுடன் பேச்சு 15 மில்லியன் டொலர் இந்திய கடனுதவியின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன. இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் கலந்துரையாடியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் யாழ் கலாசார நிலையத்தின் செயற்பாடு உள்ளிட்ட முன்னுரிமை திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. குறித்த நிதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள துறவிகளை பயிற்றுவிக்கும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிரிவேனாக்களில் சூரிய சக்தி வசதிகளை நிறுவுவது …
-
- 4 replies
- 360 views
- 1 follower
-
-
இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது, இந்தியாவின் ஒரு பாகமாக இலங்கை மாறப்போகிறது என்று ஓலமிட்டபடியே திரிந்த அரசியல் அனாதை வேறுயாரும் அல்ல மகிந்தரே தான் (manithan.com)
-
- 0 replies
- 980 views
-
-
லண்டன் பொருளியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்கவில் கைது! [sunday 2014-08-31 08:00] லண்டன் பொருளியல் கல்லூரியில் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசர மனிதாபிமான நலன்புரி பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை முற்பகல் 11.35 அளவில் இலங்கைக்கு வந்தபோது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்த விளக்கங்களையும் தெரிவிக்காத பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி வரை அவரிடம் விரிவாக விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து கலாநிதி வேணுகோபால் மிரிஹானவில் உள்ள குடிவரவு, குடியகல்வு ம…
-
- 1 reply
- 561 views
-
-
பொத்துவில் படுகொலை நடந்தது என்ன? -(தேசியன்) அம்பாறையில் பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்ற 10 முஸ்லிம் இளைஞர்களது கோரப் படுகொலை அப்பகுதி சிறுபான்மை இன மக்களை பதற வைத்துள்ளது. பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற்ற பசிக்கு இரையாகிப் போயுள்ள இந்த பத்து இளைஞர்களது குடும்பத்தினர் அழுது புலம்பி வாடிப்போயுள்ளதுடன் தமது எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்ற கேள்வியுடன் துவண்டு போயுள்ளனர். அன்றாடம் உடலை வருத்தி உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த இவ்விளைஞர்களின் இழப்பால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தப் பயங்கரச் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட பீதியும் பதற்றமும் பல நாட்களாக தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு வெளிநாடும் இச் சம்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
உரிமையுடன் வாசகர்களுக்கு, மூன்று தசாப்தங்கள் கடந்து சென்றுவிட்டன. தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பயம் மேலிடுகிறது. ஏதோ நடக்கப்போவதற்கான அறிகுறிகளும் முன்னறிவுப்புகளும் தென்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டுத் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தவர்கள் கொல்லப்பட்டும் மிரட்டப்பட்டும் மயான அமைதிக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள். எப்படி எதிப்புக்கள் எழுகின்றன யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் என்று நாடிபிடித்துப் பார்ப்பதற்காகவே தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டதும் அதனைப் பின் தொடர்ந்த மிரட்டல்களும் கொலைகளும். யாழ்ப்பாணத்தில் திருட்டுக்களும் கொள்ளைச் சம்பவங்களும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துள்ளன. இதனை நடத்துபவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சலுகையா உரிமையா? எதைக் கேட்கிறது கூட்டமைப்பு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 நிபந்தனைகள் என்று சொல்லப்படும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி அந்தப் பத்துக் கோரிக்கைகளும் வருமாறு 1.தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, – அரசமைப்பு மறுசீரமைப்பு (கவனிக்க, புதிய அரசமைப்பு அல்ல) தொடரவேண்டும்் விரைவாக முடிவுறுத்தப்படவேண்டும். 2.தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். 3.காணாமற்போ…
-
- 0 replies
- 236 views
-
-
புலிகளின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளராக செயற்படுகிறார் ஜோன் ஹன்சன் பௌயர்: ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு பொறுப்பாளராக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் செயற்படுகிறார் என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. ஜே.வி.பி.யினரால் அண்மையில் உருவாக்கப்பட்ட தாயகப் பாதுகாப்புக்கான ஐக்கிய முன்னணி என்ற அமைப்பின் சார்பில் நோர்வே தூதுவரகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் அதனையொட்டி பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பெருந்தொகையானார் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை. இதனால் நேற்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு கம்பெல் பூங்காவில் தொடங்க வேண்டிய பேரணி மிகத் தாமதமாகத் தொடங்கி இரவு 6 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தத…
-
- 1 reply
- 904 views
-
-
திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011 விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த எனது கணவர் என் கண் முன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை என அவரின் மனைவி ஆர்.வெரோணியா (வயது-40) மன்னார் மடு பிரதேசத்தில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று ஞாயிறு சாட்சியமளித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ள விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதி யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்பு அவரின் மனைவி வெரோனியா ராயப்பு என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில், என் கணவனின் வயது 40. கடந்த 18.05.2009 இல் முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தத…
-
- 0 replies
- 1k views
-
-
இராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களிடம் கோரினார்? தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்களிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாகாணத்தில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து தகவல்களை திரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வவுனியாவில் ஆற்றிய உரையொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு வாழ் மக்களின் அன்றாட நடவடிக்கைகள், ஏனைய செயற்பாடுகளை இராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் பிராந…
-
- 0 replies
- 323 views
-
-
தென்கிழக்கு கடற்பிராந்திய பாதுகாப்பு பலப்படுத்தப்படும் இந்திய கடற்படை தெரிவிப்பு இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களையடுத்து தென்கிழக்குக் கரையோரம் பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாக இந்தியக் கடற்படை தெரிவித்திருக்கிறது. தென்கிழக்குக் கரையோரப் பாதுகாப்பை நாங்கள் வலுப்படுத்துவோம் என இந்தியாவின் கிழக்குப் பிராந்திய கடற்படை பிரதம அதிகாரி எஸ்.வி.தோஹரே நேற்று நிருபர்களிடம் தெரிவித்ததாக இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவரொருவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இந்தியக் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியான தோஹரே இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் கொல்லப்பட்ட விடய…
-
- 1 reply
- 919 views
-
-
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யுத்தக் குற்றங்களை புரிந்த சிறிலங்காவின் இராணுவத்தினர், மத்திய ஆபிரிக்க ராஜ்சியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். தற்போது சிறிலங்காவின் படைத்தரப்புக்கு எதிராகவும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராகவும் யுத்தக் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறிலங்காவின் படையினரை அமைதிகாக்கும் படையில் இணைக்கக்கூடாது என்று சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இது தொடர்பில் இன்னர்சிட்டிபிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த போதும், அந்த கேள்விகள் தணிக்கை செய்யப்பட்டதுடன், பதில்கள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்றையதினம் முதல் அமைதி காக்கும் படையினர் தங்களின் பணிகளை மத்த…
-
- 0 replies
- 329 views
-
-
வவுனியா சென்றார் கதரின்! வியாழன், 20 ஜனவரி 2011 16:35 .மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும், அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளருமான கதரின் பிராக் இன்று வவுனியா சென்றுள்ளார். வவுனியா இராணுவ விமான நிலையத்தினை வந்தடைந்த நிலையில் அவர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து வவுனியா தொடர்பான நிலவரங்களை அதிகாரிகளினுடாக கேட்டறிந்து கொண்டுள்ளார். இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐ.நா.வின் அதிகாரிகள் குழுவொன்று வவுனியா பெரிய தம்பனை கிராமத்திற்கு சென்றுள்ளது. …
-
- 0 replies
- 464 views
-
-
ஐதேகவில் மீண்டும் குழப்பம் – பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். ஐதேகவில் எழுந்த உள்முரண்பாடுகளை அடுத்து, கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். அதற்கமைய, ருவான் விஜேவர்த்தன தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதையடுத்து, அண்மையில் ஐதேகவின் தலைமைப் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. எனினும், இந்த மாற்றங்களினால் ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருப்தியடையவி…
-
- 0 replies
- 486 views
-
-
-
தஞ்சையில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட மாவீரன் முத்துக்குமார் சிலை ஈழத்தமிழர் மீதான சிங்கள இந்திய கூட்டுப்படை நடத்திய இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரி தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமாருக்குஇ அவர் உயிர் துறந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29.01.2011 அன்று தஞ்சையில் மார்பளவு சிலை எழுச்சியுடன் திறக்கப்பட்டது. இதில் திரளான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். ஈகி முத்துக்குமாருக்கு முதன் முதலாக சிலை வைக்கும் பணியை, அவரது இறப்புக்குப் பின் உருவான இளந்தமிழர் இயக்கம் கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில் அறிவித்து அதற்காக, உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் பங்களிப்போடு மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை உருவாக்கியது. அச்சிலையை…
-
- 1 reply
- 544 views
-
-
"நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" : ரயில் ஊழியரின் தகாத நடவடிக்கையும், இனத்துவேசமும் இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த ரயிலில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயிலில் பணியாற்றுகின்ற சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இ…
-
- 24 replies
- 1.7k views
-
-
இலங்கை சென்ற நிருபாமா ராவ் அவர்களுக்கும் இலங்கை அதிபர் இராஜபக்ஷவிற்கும் இடையே நடந்த மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தனக்கு திருப்தியாக இருந்ததாக கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் பேச்சுவார்த்தை முடித்துக்கொண்டு நிருபாமா ராவ் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கருணா நிதியினை சந்தித்து பேசினர் இதன் போதே கலைஞர் மேற்கண்டவாரு கூறியுள்ளார். ஈழ நாதம்
-
- 5 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் 180 தற்கொலை சம்பவங்கள் பதிவு – திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் Posted on January 1, 2023 by தென்னவள் 12 0 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்திலும் நடைபெறாமை குறித்து உண்மையில் கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர், படித்தவர்கள், பாமரர்கள் என்ற…
-
- 2 replies
- 754 views
-
-
பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டித்தார் ஜனாதிபதி ரணில் ! பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து தாம் மிகவும் கவலையடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்புக்கு முரணான ஜனநாயகக் கட்டமைப்புகளை கவிழ்க்கும் முயற்சியை இலங்கையும் அனுபவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய விரோதப் போக்குக்கு மத்தியில் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் இலங்கை ஒன்றிணைந்து நிற்பதாக தெரிவித்தார். உலகளவில் ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் எ…
-
- 1 reply
- 258 views
-
-
ஈழப் பிரச்சனை மத்திய அரசுக்குப் புரிகிறதா? - சோலை சிங்கள இனவாதம் நரவேட்டை ஆடுவதற்கு, ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்ல என்பதனை முதல்வர் கலைஞர் ஐக்கிய முன்னணித் தலைவி சோனியா காந்தியிடம் பக்குவமாக எடுத்துக்கூறி வந்திருக்கிறார். தமிழ் மக்களின் உணர்வை எங்கே எடுத்துக் கூறினால் பரிகாரம் கிடைக்குமோ, அங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். சோனியாவிடம் வேறு எந்தப் பிரச்னை பற்றியும் அவ்வளவு விரிவாக அவர் விவாதித்ததாகத் தெரியவில்லை! முல்லைத்தீவு செஞ்சோலை குழந்தைகள் காப்பகம் மீது சிங்கள விமானங்கள் குண்டுகள் போட்டன. பச்சிளம் குழந்தைகள் பலியாகின. சட்டமன்றத்தில் அதற்குக் கலைஞர் கண்டனம் தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது பற்றிச் சிந்திக்கவேண்டிய ந…
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கை போன்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பெரிய நிகழ்வுகளின்போது தாக்குதல்களை நடத்துவது பயங்கரவாதிகளுக்கு இலகுவானதாக இருக்கும். இதன் காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானத்துடன் இருக்குமாறு அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் என்பது பற்றிய குறிப்பான தகவல்கள் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை. இருந்த…
-
- 1 reply
- 1.2k views
-