ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கிறது சீனா JAN 27, 2015 | 10:47by கார்வண்ணன்in செய்திகள் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஊடகங்களின் மூலம் சிறிலங்காவுக்கு சீனா அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 1.4 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவுக்கு அவசியமானது, சிறிலங்காவின் அபிவிருத்திக்கு தேவையானது என்ற கருத்தை, தமது ஊடகங்களின் மூலம் சீனா பரப்பத் தொடங்கியுள்ளது. சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திச் சேவை, கொழும்பிலுள்ள சிலரின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 618 views
-
-
வைத்தியசாலைக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன இந்த யோசனையை முன்வைத்துள்ளார். கெனியுலா(Cannula) எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் (வயது 31) ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெறமுடியுமென செயற்படுகிறது அரசாங்கம் [10 - April - 2007] * சொந்த மக்களையே கொல்லும் நிர்வாகம் என்று சாடுகிறார் ரணில் - பி.ரவிவர்மன், அருளானந்தம் அருண் - சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாமல் சொந்த மக்களையே கொல்வதற்கு வழி செய்யும் அரசு மகிந்த ராஜபக்ஷவின் அரசு என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடினார். தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்னும் ஒரு கருத்தை முன்னிறுத்தி அதற்கமைவாகவே மகிந்த அரசு செயற்படுகின்றது என்றும் குற்றம்சாட்டிய அவர், தமிழ் மக்களைக் கடத்துவதன் மூலம் புலிகளை இல்லாதொழிக்க முடியும் என யாரும் நினைத்தால் அது மிக…
-
- 1 reply
- 820 views
-
-
சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தேசிய தொலைக்காட்சிகளில் வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சில தினங்களில் சுதந்திர தினம் நடைபெறவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்…
-
- 8 replies
- 828 views
-
-
இலங்கை ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக போராட்டம்… October 10, 2018 1 Min Read இலங்கையின் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து, ஒலுவில் பிரதேச மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒலுவில் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் தங்கியிருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலுள்ள படகுகள் பயணிக்கும் வழியை மணல்…
-
- 0 replies
- 795 views
-
-
புதிய போரியல் பரிணாமங்களும் பாதுகாப்புச் செலவு ஈடு கொடுக்குமா? -அருஸ் தமிழ் மக்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டன. இந்த காலப்பகுதியில் போராட்ட வரலாறு பேச்சு போர் பேச்சு போர் என்ற சக்கரத்தில் சுழன்று நான்காவது கட்ட ஈழப்போரின் உக்கிரத்தில் வந்து தொங்கி நிற்கின்றது. அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்திய இராணுவத்துடனான போரும் உள்ளடங்கியிருந்தது. எனினும் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த நான்கு கட்ட ஈழப்போர்களையும் கருதினால் ஒவ்வொரு கட்டத்திலும் போரின் பரிணாமங்களும், களத்தின் தன்மையும் விரிவடைந்தே சென்றுள்ளன. முதலாவது ஈழப்போரில் இலங்கையின் காவல்துற…
-
- 0 replies
- 743 views
-
-
செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 09:07 | ஓரு பேப்பரின் 142 வது இதழில் 'ஒரு வருட நிறைவுகாணும் நாடு கடந்த அரசின் மீதான ஓர் பார்வை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்... தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களின் பின்னாலும் ஆயிரக்கணக்கில் அவர்களுக்கென வாக்களித்த மக்கள், இருப்பதை மறுத்துவிட முடியாது என குறிப்பிட்டிருந்தேன். அப்போது, நா.க. அரசாங்கமானது, தனிமனிதன் ஒருவருக்கு அதிகப்படியானதும், அளவிற்கு மீறியதுமான சக்தியை கொடுக்குமானால் அது ஜனநாயகத்தின் உயிர்ப்பை பாதிக்கும் எனக் காரணங்காட்டி அதனை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட உறுப்பினர்களில் கணிசமான தொகையினர் மறுத்தமை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். யாப்பில் மாற்றம் வேண்டி நின்ற மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்…
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு! லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. ‘பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் விரிவான பகுப்பாய்வு இல்லாமல் சம்பவம் குறித்து முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது நியாயமற்றது.’ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார். ‘எனவே, மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவம…
-
- 6 replies
- 950 views
- 1 follower
-
-
யுத்த காலத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்ற இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனக்கோரி சென்னை இளைஞர்கள் "யுத்தகுற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்" என்ற பதாகை தாங்கி போராட்டம் ஒன்றினை நேற்றைய தினம் நடத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழீழ ஆதரவாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான மணிவண்ணனும் மற்றும் தழிழர் ஆதரவான பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, குறித்த போராட்டத்தில் அரசி…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஊடக அறிக்கை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். கடந்த அரசிடமும் இதனை நாம் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் இலகுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இரட்டைக்குடியுரிமைப் பெற்றவர்களுக்கும் இந்நாட்டு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளர். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்…
-
- 0 replies
- 427 views
-
-
எமது கரங்களுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்தல்! நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் ஒரு தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இக் காரணத்தினாலேயே, தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலை கோருகிறார்கள். உண்மையில் மீன்பிடித்துறை அமைச்சரிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாக பல பிரச்சினைகளை முன்வைத்திருந்தாலும் இதுவரை வெற்றிற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பில் அதிகூடிய மீன்பிடித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவ…
-
- 0 replies
- 396 views
-
-
அடையாளம் காணப்படாத நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் 3 சடலங்கள் கோவில்குளம் வீதியில் சிவன்கோவிலுக்கு சற்று தொலைவில் கடந்த திங்கள் காலை கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம் சுமார் 25 இற்கும் 30 வயதிற்கும் உட்பட்டவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலத்திற்கு உரிமை கோரி எவரும் வரவில்லை என வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை வவுனியா முதலாம் குறுக்குத் தெருவிலும், கண்டி வீதியிலும் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களிற்கும் எவரும் உரிமைகோரி வரவில்லை. வயோதிபர்களான இவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளனர். ஆனால் சடலங்கள் அனாதவரான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்…
-
- 0 replies
- 837 views
-
-
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய பதில் பணிப்பாளர்கள் நியமிப்பு October 28, 2018 அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய பதில் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹவும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்த பிரியா ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/101086/
-
- 0 replies
- 359 views
-
-
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் EPDP பரிந்துரை ! தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின், நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்ப்பில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களம் , வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் சில முறையற்ற செயற்பாடுகள் தமி…
-
- 2 replies
- 385 views
-
-
ஐநா தீர்மானத்தை எரித்தவர்கள் எங்களுடைய மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை - சுமந்திரன் காணொளி நன்றி : கயீபன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116858/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 440 views
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 12:58 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை திங்கட்கிழமை (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள இயற்கையான குளங்கள் மற்றும் கேணிகளை தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான திணைக்களங்களால் உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட செயலாளரினால் அறி…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம் மே 07, 2007 கொழும்பு: புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை. அமை…
-
- 14 replies
- 3.3k views
-
-
தமிழ்நாடு போன்று வாக்காளரை விலைபேசும் 'தந்திர அரசியல்' யாழ்ப்பாணத் தேர்தலிலும் ! [ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 08:13 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்நாட்டில் தேர்தல் காலத்தில் வாக்காளர்களை விலைக்கு வாங்க கையாளப்பட்ட தந்திரங்கள் இப்போது யாழ்ப்பாணத் தேர்தல் களத்திலும் கையாளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக சிறிலங்கா அரசாங்கம் இலவசமாக புடவை மற்றும் சாரம் என்பனவற்றை வழங்கி வருகிறது. யாழ். மாவட்டத்தில் சமுர்த்தித் திட்டப் பயனாளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6000 பேருக்கு இலவசமாக புடவை மற்றும் சாரம் என்பன வழங்கப்படுகின்றன. இவை தவிர நீரிறைக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் கருவிகள், தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கான பாடசாலை கருவிகள் என்பன…
-
- 0 replies
- 474 views
-
-
யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு! யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ’30 வருடங்கள் துரதிஸ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடாத்தியது. அது தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. போர் காலத்திலும், போருக்கு பின்னரும் தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எந்தவொரு பிர…
-
- 11 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 07 SEP, 2023 | 04:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம், ஆனால் சுகாதார அமைச்சர் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மை தீவிரடைந்துள்ளது. வங்குரோத்து நிலையிலும் மருந்து கொள்வனவில் அரச நிதி மோசடி செய்யப்படுவதை முதலில் இல்லாதொழிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 576 views
- 1 follower
-
-
யாழ். பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் அதிபர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் சில மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறி துண்டுப்பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளோர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அதனைக் கைவிடாத நிலையில் அவர்கள் கொல்லப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது. இலங்கையைப் பாதுகாக்கும் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரினால் இந்தத் துண்டுப்பிரசுரம் வெள்ளிக்கிழமை விநிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே இலங்கை அதிபர் ராஜபக்சே, யாழ்ப்பாணம், கோப்பாய், நாவலர் மகா வித்யாலய மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றியுள்ள்ளார். அப்போது அவர், ‘’இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு. நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே. உங்கள் பிரதேசம் முக்கியமாக கல்வியில் மீண்டும் சிறப்பாக வருவதற்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். இனவாத அரசியல் இனி வேண்டாம்…
-
- 8 replies
- 775 views
-
-
17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி MAR 06, 2015 | 1:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது. சிறிலங்கா அதிபருடன் பிரித்தானியா செல்லும் குழுவில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஊடக குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோரே இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பயணத்தின் போது, கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில், சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மாவும் பங்கேற்பார். மேலும் அவர் லண்ட…
-
- 0 replies
- 435 views
-
-
மூத்த இராஜதந்திரியை கொழும்புக்கு அனுப்பும் டெல்லி 17 SEP, 2023 | 04:21 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள மூத்த அதிகாரி சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காயாற்றியுள்ள மூத்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதிப் போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய திட்டங்களுக்கும் தலைமைதாங்கியுள்ளார். இலங்கை - இந்திய புதிய …
-
- 2 replies
- 534 views
-
-
கிளி நொச்சி மாவட்டத்தில் அதிக மோசடிகள் இன்று இடம்பெறலாம் என பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முளிவாய்க்காலில் இறந்த மக்களின் வாக்காஉ அட்டைகளை இராணுவத்தின் கஜபாகு ரெஜிமெண்ட் சிப்பாய்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வாக்குகளை பல இடங்களிலும் சிவில் உடைகளில் சென்று போடுவார்கள். இவ்வாறு வாக்கு போடுவதற்காக 52 வாக்குகளை ஒரு சிப்பாய் தனக்கு காட்டியதாக குறித்த இராணுவ அலுவலர் கொழும்பு ஊடகவியலாலர் ஒருவருக்கு கூறியுள்ளார். கிளி நொச்சி மாவட்டத்தில் கூட்டமைப்பு வெல்லுவது கடினம் எனவும் அந்த அலுவலர் கூறியுள்ளார். மேலும் இராணுவம் அண்மையில் பெற்ற குடிசன மதிப்பீடு, புகைப்பட ஆதாரங்கள் எல்லாம் இந்த தேர்தல் மோசடிக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார் கஜபாகு ரெஜி…
-
- 0 replies
- 618 views
-