Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள நிலையிலேயே அவரது கட்சிப் பதவிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடன் விலகிச் சென்றுள்ள ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன ஆகியோரையும் கட்சி அங்கத்துவங்களிலிருந்தும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு நேற்றிரவு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதனிடையே, நீக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் சுகாதார அமைச்சுப் பதவிக்கு துணை ச…

  2. நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும், நேற்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போ…

  3. *ஆராய 5 சட்டத்தரணிகளை கொண்ட குழு - ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகளுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 5 சிரேஷ்ட சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க பேரவையின் கூட்டம், சங்கத்தின் அலுவலகத்தில் அதன் தலைவர் நிஹால் ஜயமான தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்க முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் சட்டக் கல்லூரிக்கு தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்படுவது குறித்து மூத்த சட்டத் தரணி நீலகண்டன் சட்டத் தரணிகள் சங்க பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். …

  4. அடுத்த கட்டம் குறித்த முடிவுகள் சில தினங்களில் – பான் கீ மூன் அறிவிப்பு! Posted by admin On April 14th, 2011 at 10:39 am / No Comments இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அடுத்து என்னசெய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை செப்டம…

  5. -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாவதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளதற்கோ ஒருபோதும் இடமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம். சர்வதேச ரீதியில் சில அமைப்பினர் இணைந்து இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகவோ அல்லது செயற்படவோ முயற்சி செய்தால் நாட்டின் சட்டம் மற்றும் நீதி மு…

  6. பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:08 PM (எம்.மனோசித்ரா) இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் மீதே முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே தான் அதிக இலாபமீட்டக் கூடிய வகையிலும், பாரிய கடன்களை மீள் செலுத்தக் கூடிய வகையிலும் சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளயர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்…

  7. கேணல் சங்கரைக் கொன்றவரின் மனைவிக்கு வழங்கப்பட்ட வாகனம் பறிப்பு! புதன், 20 ஏப்ரல் 2011 09:55 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நேரடிச் சமரின்போது கொல்லப்பட்ட லெப்டினன்ட் கேணல் லலித் ஜெயசிங்கவின் மனைவிக்கு வழங்கப்பட்டிருந்த வாகனம் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புக்கு அமையப் பறிக்கப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவில் மேஜர் நிலை அதிகாரியாகச் செயற்பட்ட லெப். கேர்ணல் லலித் ஜெயசிங்கவை விடுதலைப் புலிகளின் முதல்நிலைத் தளபதிகளைக் கொல்லும் நோக்கில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவிச் செல்லுமாறும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இவருக்கு பணித்துள்ளத…

  8. முன்னாள் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் அவரது நண்பர்களும் அடங்குவரென பொலிஸார் கூறுகின்றனர். கடந்த புதன்கிழமை காலை இவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டலில் இரண்டு அழைப்புகள் அவரது நண்பர்களிடமிருந்து விடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். இவ்விரு தொலைபேசி அழைப்புக்குரியவர்களை கண்டுபிடித்திருப்பதாகவும் ஏனைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் லுகொட தெரிவித்துள்ளார். ஏனைய அழைப்புகள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிப்பதற்காக தாம் தொலைத் தொடர்பு அதிகாரிகளை அணுகியிருப்பதாகவும…

  9. நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது – 25 ஏப்ரல் 2011 ஐநா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது. ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல்…

  10. அண்மையில் வன்னியிலிர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு தொகுதியை வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்வு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். அங்கு நடந்த சில விடயங்களை குளோபல் தமிழ் செய்தியாளர் ஒருவர் இந்த விடயங்களை பகிர விரும்புகின்றேன். இராணுவம் எங்களை அதிகாலையிலேயே வரச் சொன்னது. நாங்கள் போனோம். இன்று நாங்கள் உள்ள நிலமையில் 16பவுண் தங்கம் எங்களுக்கு கிடைத்தால் பேருதவி என்று அப்பா சொன்னார். அப்பாவும் நானும் போனோம். வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து வரும்படி இராணுவத்தினர் சொன்னார்கள். எங்களை அறிவியல் நகரில் முதலில் கொண்டு சென்றார்கள். எங்களை முள்வேலி முகாங்களுக்குள் கொண்டு …

    • 3 replies
    • 992 views
  11. Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 01:04 PM இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்துள்ளது. இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது, எனவே கர்ப்பிணித் தாய்மார்கள், இளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் பாதிப்பதாகவும் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமான நபர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு இயற்கையாகவே குணமடைவார் என்று பணியகம் தெரிவித்துள்ளது. அதிக காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்று…

  12. உலகில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆளில்லாத உளவு விமானங்கள் இன்று நவீன தோற்றங்களையும், அதிகூடிய தொழில்நுட்பத்தையும் கொண்டவையாக மாற்றமடைந்துள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் பறப்பதுடன் தரமான படங்களை எடுக்கக்கூடிய உயரத்திலும் பறக்க வல்லன. அமெரிக்காவிடம் உள்ளவற்றில் புறப்லர் இயந்திரம் (Pசழிநடடநச- னசiஎநn Pசநனயவழச) கொண்ட சிறிய உளவு விமானங்கள் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெற் இயந்திரமுடைய (துநவ-Pழறநசநன புடழடியட ர்யறம) பெரிய உளவு விமானங்கள் 50 மில்லியன் டொலரும் பெறுமதியானவை. தற்போது பாவனையில் முன்னனியில் நிற்பதுவும் இந்த விமானங்களே. உளவு விமானங்கள் செய்மதிகளை விட அதிக அனுகூலங்களை கொண்டவை. அதாவது ஒரு பிரதேசத்தின் மேல் பலமணிநேரம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியவ…

    • 14 replies
    • 3.4k views
  13. குடாநாட்டு நிலைமைகள் குறித்து துருவித் துருவி கேட்டறிந்தனர் நேபாள நாடாளுமன்றக் குழுவினர்;முகமாலை பகுதி இன்னும் பயங்கர சூனியப் பிரதேசமாக இருப்பது ஏன்? முகமாலை தற்போதும் கூட சூனியப் பிரதேசமாக பார்ப்பதற்கே பயங்கரமான இடமாக வெறிச்சோடிய நிலையில் காட்சியளிக்கிறது. ஏன் இந்த நிலை? இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகைதந்த நேபாள நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. யாழ்.மாவட்டத்துக்கு 11 பேரடங்கிய நோபாள நாடாளுமன்றக் குழு நேற்று விஜயம் செய்தது. இவர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினிவரதலிங்கத்தை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். இந்தக் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: ய…

  14. “முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால் சாதாரண பெண்களின் நிலை எப்படி” றோசி:- “சந்திரிக்கா என்பவர், கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி, வீதியில் ஓட வைக்க வேண்டியவர்” – மகிந்தவின் உயர் கல்லி அமைச்சர்- “முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால் சாதாரண பெண்களின் நிலை எப்படி” உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது நாட்டு பெண்களுக்கு செய்த பாரிய குற்றம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தாது குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் இழிவுப்படுத்தும் குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க என்பவர் கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஓடவைக்க வேண்டியவர் என எஸ்.பி. …

  15. May 7, 2011 / பகுதி: செய்தி / யாழ்.மாவட்ட செயலகத்தில் சிங்களத்திற்கு முன்னுரிமை! யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் "அறிவகம்" சேவைப் பகுதியின் பெயர்ப் பலகையில், அங்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விபரங்கள் மும்மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களில் பிழைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் கலாசாரத்தைப் பேணும் விதமாக உடைகள் பற்றிக் குறிப்பிடும் மாவட்டச் செயலர் இப்பெயர்ப் பலகையினை ஒரு ஆண்டாக கவனத்தில் கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உரியவர்கள் இதனைக் கவனத்தில் எடுப்பார்களா? பதிவு

  16. அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள அதேவேளை, தேர்தல் நடைமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கெபே தேர்தல் கண்காணிப்பு குழு கூறியுள்ளது. குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் அரசியல்வாதிகள் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது தொடர்பாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இந்த கண்காணிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அவர் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார் ‘வவுனியாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குச் சென்றிருந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் பிரதேச அரசியல்வாதிகளுடன் கலந…

  17. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும் - ஜப்பான் 13 மே 2011 ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டுமென ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதிலை தமது நாடு உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி ஊடகச் செயலாளர் ஹைட்னோபு சோபஷிமா தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு ரீதியில் தேசிய நல்லிணக…

    • 1 reply
    • 915 views
  18. நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக நவநீதம்பிள்ளை தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்! Published on May 19, 2011-8:19 am · No Comments ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என ஐ.நா.மனித உரிமை சிரேஷ்ட அதிகாரி சரீப் செயிட் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் நேற்று இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக மகஜர் ஒன்றை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோருக்கு சமர்ப்பிப்பதற்காக இந்த மகஜரை நாடு கடந்த தமிழீழ அரசு கையளித்துள்ளது. இந்த மகஜரை பெற்றுக்கொண்ட சரீப் செயிட் இந்த விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடு…

  19. யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து, காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/…

  20. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம் – இடைக்­கால அறிக்கை வெளி­யீடு!! காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் வெளி­நா­டு­க­ளில் இருப்­ப­தாக எவ்­வி­த­மான தக­வல்­க­ளும் எமக்­குக் கிடைக்­க­வில்லை என்று காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் தலை­வர் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தெரி­வித்­தார். இதே­வேளை பல­வந்­த­மாக காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பன்­னாட்­டுத் தினம் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு அன்­றைய தினம் இடைக்­கால அறிக்­கை­யொன்­றும் அர­சி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரில் பலர் வெளி­நா­டு­க­ளில் பெயர் மாற்­றங்­கள் செய்து வாழ்ந்து வரு­வ­தாக …

  21. வவுனியா மாவட்டத்தில், கந்தன்குளம் கிராம மக்கள் குடிப்பதற்கு 2 கி.மீ தூரம் நடந்து சென்று பூவரசங்குளத்திலிருந்தே தண்ணீர் எடுத்துவர வேண்டியுள்ளது. இன்று காலை வழக்கம்போல் கிணற்றுக்கு நீர் எடுக்கச் சென்ற 10 வயது சிறுமி தடுமாறி கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணித்துள்ளார். இதுபற்றி தெரியவருவதாவது: பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமம் கந்தன்குளம். இந்த கிராமத்தில் இப்பொழுது 45குடும்பத்தினர் சுமார் 20வருடங்களின் பின்னர் கடந்த மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மீள்குடியேற்றங்களைப் போன்றே இவர்களுக்கும் 12 தகரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அத்துன் இந்த மக்களின் பாவனைக்காக ஒரு கிணற்றைக்கூட சுத்தம் செய்துகொடுக்காமல் விட்டுள்ளனர். ஆகவே…

    • 0 replies
    • 4.2k views
  22. னாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை பகல் ஆரம்பமாகின. இந்த விநியோக பிரசார நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், ஆர்.துரைரெட்ணம், கோ.கருணாகரம்(ஜனா), இ.நித்தியானந்தம், ஞா.கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்கள் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், பஸ்நிலையம், பொதுச் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விளக்கங்களையும் வழங்கினர். http://www.malarum.com/article/tam/2015/01/01/7828/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%A…

  23. கடல்ப் பயணம் குறித்து பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம் : அரச சமாதானச் செலயகம் திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் பயணத்தில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமென தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் எச்சரிக்கையானது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதுடன், போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் மீது கடல்வழியாகத் தாக்குதல்களை ஆரம்பிக்க இருப்பதால் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமென விடுதலைப் புலிகள் அண்மையில் எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கை தொடர்பாக அரசாங்…

  24. தெரு நாய்களுக்காகவும், கொண்டாட்டங்களுக்கும் செலவு செய்யும் அரசு மீள் குடியேற்றப்பட்டவர்கள் பற்றி பாரா முகம் FRIDAY, 27 MAY 2011 06:13 SYDNEY HITS: 3 அதிகரிக்கும் விசர்நாய் கடியினை தடுப்பதற்காக தெரு நாய்கள் புகலிடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் வருடம் ஒன்றுக்கு விசர்நாய் கடி மருத்துவத்துக்காக 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகையால் தெருநாய் புகலிடம் ஒன்றை அமைப்பதன் மூலம் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் முதலாவது திறந்த வெளிப்…

  25. காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ மற்றும் பிரசங்கவின் வீடுகளுக்கு முன் நாய்த்தலைகள் இனம் தெரியாத நபர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிடோ பெர்ணான்டோ, தாம் உட்பட தமது குழுவினர் நாடு முழுவதும் நடத்தி வரும் வீதியின் எதிர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பாக இது இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். வடக்கிலும் இவ்வாறு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான முனைப்புகளை மேற்கொள்ளும் நபர்களின் வீடுகளுக்கு எதிரில் நாய் தலைகள் வைக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/36644/57//d,arti…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.