ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
கைதடியில் தொடரும் புதை குழிகள் மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு. யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வெளியில் அமைந்துள்ள வெளியில் மனித புதைகுழிகள் தோண்டும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது இன்றைய தினம் குறிப்பிட்ட இடத்திற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி அரியரெத்தினம் உட்பட மற்றும் யாழ்ப்பாணம் வையித்திய சாலை சட்ட வையித்திய அதிகாரி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழு பொறுப்பதிகாரி உட்பட மற்றும் பலர் சென்றுள்ளர்கள் ஏற்க்கனவே இந்தப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன இதனைத் தொடர்ந்து இன்று இடம் பெறும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது நேற்றைய தினம் கண்டு பிடிக்கப…
-
- 5 replies
- 1.7k views
-
-
நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம் இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப் புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது. புகைப்படங்கள் www.eeladhesam.com -
-
- 2 replies
- 2.7k views
-
-
இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உக்கிரமாக போர் இடம்பெற்ற பகுதி முல்லைத்தீவு மாவட்டம் என்ற அடிப்படையிலேயே தற்போது இராணுவம் இருப்பதனால் இங்கு வாழும் மக்கள் மன அமைதியுடன் வாழ்கின்றனரா என்று அறிந்து கொள்ளும் நோக்குடனேயே இராணுவம் நிலைகொண்டிருப்பது தொடர்பில் மக்களிடம் கேள்விகளை எழுப்பி இருந்தோமே தவிர வேறு எந்த விசேட நோக்கமும் அல்ல என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்ரம பரணகம தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக காணாமற் போனவர்கள் தொடர்பில் சாட்சியப் பதிவுகள் இடம்பெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளன. அதனையடுத்து 4நாள் அமர்வு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ முகாம் உள்ளதா? …
-
- 0 replies
- 253 views
-
-
தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன்பேச்சு-சாணக்கியன் By Rajeeban 26 Aug, 2022 பொதுநலவாய அமைப்பின் 65வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுட…
-
- 0 replies
- 194 views
-
-
நோர்வேயின் தூதுவர் விரைவில் வன்னிக்கு கொழும்புக்கான நோர்வேத் தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸனும் மிகவிரைவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களோடு விரிவான பேச்சுகளை நடத்துவர் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. தற்போதைய களநிலைவரங்கள் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர்களோடு விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவது அவர்களது நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது களத்தில் ஏற்பட்டுள்ள நெருக் கடியான நிலையில் பதற்றம் மற்றும் போர்ச் சூழலைத் தவிர்த்தல் அமைதி முயற்சிகளை ஆக்கபூர்வமான திசையில் நகர்த்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் விடுதலைப் புலிகளைத்தடை செய்த…
-
- 0 replies
- 934 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளையும் சிறிலங்கா அரசுக்கும், மஹிந்தவிற்கும் எதிரான செய்திகளையும் வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கமைவாக, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப் படாமலேயே அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான செய்தி களை வெளியிடும் இணையத் தளங்கள் பல சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த "லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடைசெய்திருந்தது. புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களையும் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு …
-
- 0 replies
- 469 views
-
-
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களிற்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் முதல் செயற்பாடாக கொரியாவில் தொழில் செய்யும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் கொரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சுமனா ஆரியதாஸ குறிப்பிட்டார். இந்த நிலையில் கொரியா மாத்திரமின்றி, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இலங்கைப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் முறையொன்று தயாரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார். http://www.onlineuthayan.com/News_More.p…
-
- 0 replies
- 316 views
-
-
இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பு குறைவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். குறித்த கூட்டத்தில் பாதுகாப்பு பலமடங்காக குறைக்கப்பட்டு இருந்தது. பத்துக்கும் குறைவான விசேட காவல்துறை அதிரடிப்படையினரும் மிக குறைந்தளவான காவல்துறையினருமே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு சில நாட்களுக்கு …
-
- 0 replies
- 352 views
-
-
தமிழக மக்கள் உரிமை கழகம் - இணையம் http://www.savukku.net/ முத்தமிழ் சென்னை
-
- 0 replies
- 825 views
-
-
கறுப்பு ஜூலை எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை இலண்டன் ஹைபார்க் மைதானத்தில் 12.30இலிருந்து 3.30வரை நடைபெற இருக்கின்றது. இதில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை பிரித்தானியா வாழ் மக்களுக்கு தெரியப்படுத்துவோம். உங்கள் வேலைத்தளங்களில் அன்றைய நாளை ஓய்வு நாளாக மாற்றி பேரணிக்கு வர முயற்சி செய்யுங்கள் நண்பர்களே
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரித்தானியா உல்லாசப்பயணிகளைக் கவர சிறீலங்கா திட்டம் நவ 14, 2010 மேற்குலக நாடுகளை சேர்ந்த உல்லாசப்பயணிகளை கவர்ந்திழுக்கும் திட்டம் ஒன்றை கடந்த வாரம் சிறீலங்கா அரசு பிரித்தானியாவில் மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தினால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் நிலையை அடைந்துள்ளது. இதனால் அங்கு செல்லும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் மேற்குலக நாட்டவரை கவரும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக பிரித்தானியா மக்களை வரவ…
-
- 2 replies
- 522 views
-
-
சீன உதவியுடன் அமையவுள்ள சர்ச்சைக்குரிய விமான பராமரிப்பு நிலையத்தை இராணுவத்தினரே கையாள்வர்- 24 ஜூலை 2014 திருகோணமலையில் சீனாவின் உதவியுடன் அமையவுள்ள சர்ச்சைக்குரிய விமான பராமரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரே முழுமையாக கையாள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவாண் வணிகசூர்ய இதனை தெரிவித்துள்ளார். இலங்கையால் பயன்படுத்தப்படும் சீனா தயாரிப்பு விமானங்களின் பராமரிப்பிற்காகவே சீனா உதவியுடன் இதனை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது குறிப்பிட்ட சீனா விமானங்களை பாக்கிஸ்தானிற்கு பராமரிப்பு பணிகளுக்காக அனுப்பவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு ஜப்பானின் உதவியுடன் அவ்வாறான பராமரிப்பு நில…
-
- 2 replies
- 339 views
-
-
திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவர் ; சந்திரிகா Weiterempfehlen அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஊடகவியலாளர்கள் உங்களது பேரனார் அரசியலில் ஈடுபடுவாரா என கேட்டதற்கு, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. மக்கள் எவ…
-
- 4 replies
- 597 views
-
-
யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார். இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்…
-
- 1 reply
- 474 views
-
-
வவுனியா வளாகத்தில் மோதல்; 18 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்! யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களுடன் தொடர்புடைய 18 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களே இந்த மோதல் சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் கதிரபிள்ளை கந்தசாமி அருள்வேல் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்டுள்ள 18 மாணவர்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் வளாக முதல்வர் குறிப்பிட்டார். இதேவேளை வவுனியா வளாகத்தில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற மாணவர் மோதலை அடுத்து வியாபார முகாமைத்துவ பீட…
-
- 0 replies
- 460 views
-
-
த.தே.கூ வே எதிர்க்கட்சி, மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது ; துமிந்த திசாநாயக்க (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நீடிக்கின்றதாக தீர்மானம் எடுத்துள்ளோம். ஆகவே எதிர்க்கட்சி அந்தஸ்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நீடிக்கும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் மஹிந்த தரப்பினர் அங்கம் வகிப்பது பொருத்தமில்லாததாகும். அவர்களை தொடர்ந்தும் கட்சியுடன் வைத்திருப்பதா என்பது குறித்து கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அழுத்தமாக கேள்வி எழுப்புவோம் எனவும் குறிப்பிட்டது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்ச…
-
- 0 replies
- 209 views
-
-
மக்கள் பட்டினியில் வாடும்போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெரும் பணத்தை செலவிட அரசாங்கம் தயாராகின்றது - கர்தினால் By RAJEEBAN 28 SEP, 2022 | 11:46 AM நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு பணத்தை செலவிட தயாராகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விசனம் வெளியிட்டுள்ளார். கிறிஸ்மஸ் வருகின்றது சுற்றுலாத்துறைக்குபொறுப்பான அமைச்சர் உட்பட சுற்றுலாத்துறையின் முக்கிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக கொழும்பை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
மீண்டும் மூண்ட போரும் சர்வதேச சமூகமும் [14 - August - 2006] [Font Size - A - A - A] மீண்டும் மூண்டுவிடக்கூடாதென்று கடந்த நான்கு வருடங்களுக்கும் அதிகமான காலமாக நாமெல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த முற்றுமுழுதான போர் ஆரம்பித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். வடக்கு, கிழக்கில் பலமுனைகளில் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. இரு தசாப்த கால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்கள் மீண்டும் அதைவிடக் கொடூரமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலநாள் சண்டைகளிலேயே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடு வாசல்களைவிட்டு இடம்பெயர்ந்திருக்கிறா…
-
- 0 replies
- 1k views
-
-
-
முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 10 பேர் கைது!! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட களிக்காடு என்ற கிராமத்தின் காட்டுப்பகுதியில் பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு புதையல் தோண்ட முற்பட்ட முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். விடுதலைப்புலிகள் காலத்தில் காணப்பட்ட புதையல்கள் இருப்பதாகக் கருதி, குறித்த நபர்கள் பூசை வழிபாடு மற்றும் வெடி வைத்து தகார்ப்பதற்கு ஏற்ற வகையில் பொருள்களுடன் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்குக…
-
- 2 replies
- 304 views
-
-
முக்கிய வழக்கிலிருந்து ரிசாட் பதியுதீன் விடுதலை! பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அவர் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு வாக்களிப்பதற்கு மக்களை அழைத்துச் சென்றமை மற்றும் 95 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணத்தை மோசடி ச…
-
- 5 replies
- 478 views
-
-
தமிழ் மாணவர்களின் மண்டையில் தொழில் பழகும் சிறிலங்காப் படையினர்! ஆக 12, 2014 மட்டக்களப்பு பெரியவெட்டுவான் பகுதியிலுள்ள பாடாசலைக்குச் சென்ற சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து முடிவெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த சிறார்கள் அழுது கொண்டே பாடசாலையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் கற்றல் செயல்பாடும் பாதிக்கப்பட்டது சிறிலங்காப் படைகளின் 23 வது டிவிசனின் 2 பிரிகேட் படையினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் குறித்த படைப்பிரிவினர் முடிவெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.http://www.sankathi24.com/news/45247/64//d,fullart.aspx
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கபடவுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகின்றது. இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவட…
-
- 0 replies
- 161 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 13:23 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு பாலைமீன்மடுப் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புதிய முகத்துவாரம் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. அப்பகுதியில் உள்ள ஜெகதீஸ் அரவை ஆலைக்கு சென்ற அதிரடிப்படையினர் வாகனம் ஒன்றைக் கேட்டுள்ளனர். ஆனால் வாகனம் கிடைக்காமல் வெளியேறிய அதிரடிப்படையினர் சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வேறு இரு வாகனங்களில் வந்து 5 தமிழ் இளஞைர்களை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் படுகொலை செய்யப்பட்டோரில் …
-
- 0 replies
- 882 views
-
-
சம்பூரில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடையினருக்கு இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்று வருகிறது திருகோணமலை மூதூர் கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடையினருக்கு இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்று வருகிறது . இருதரப்பினரும் பரஸ்பரம் ஷெல் தாக்குதல் மோட்டார் எறிகணை தாக்குதலில் ஈடுபட்டும் வருகின்றனர் . அரச படையினருக்கு ஆதரவாக திருமலை கடற்பரப்பில் பீரங்கிகள் பிரங்கி குண்டுகள் மற்றும் விமானப்படையினரின் விமான குண்டுவீச்சுகல் தொடந்தும் நடைபெற்று வருகிறது அம்பூரை சிலதினங்களுக்குள் கைப்பற்றியே தீருவேம் என்று நிலையில் அரச படையினரின் தாக்குதல் நடைபெற்றுகொண்டிருக்கும் அதேவேளை தமிழீழ விடுதலைப்புலி…
-
- 0 replies
- 993 views
-