Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் : தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை அநுராதபுரம் சிறைச்சாலையில் அண்மையில் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த அச்சுறுத்தல் சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ் அரசியல் கைதிகள் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார். இதேவேளை பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது சிறைச்சாலை வசதிகள் தொடர்பாகவோ எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற …

  2. ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை குறித்த தீர்மானம் – ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு வருகைத்தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிடட அரசாங்கத்தின் உயர் மட்டத்துடன் ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர். முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையினை தற்கா…

  3. சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். குறித்த 5 அம்ச கோரிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளதாவது, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலையை நிரூபித்தல். இனப் படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல். இனப் படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வத…

  4. இலங்கையில் பரவிவரும், டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வ பெயர்கள் இலங்கையில் பரவிவரும் டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தனது ருவிட்டர் கணக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவிட்டுள்ளார். இதன்படி, 701- S என்ற வைரஸ் திரிபின் உப பிறழ்வுக்கு AY28 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கையில் பரவலடைந்து வரும் டெல்டா உப பிறழ்வின் விஞ்ஞான பெயராக B.1 617 2.28 என பெயரிடப்பட்டுள்ளது.. அத்துடன் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்ட 95 சதவீதமான நோயாளர்களுக்…

  5. திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா என தவிசாளர் நிரோஷ் கேள்வி தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “தியாகி திலீபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேச…

  6. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று நாளை இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha), பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச(Basil Rajapaksha) உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இலங்கை அரசாங்கமானது 2017ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பபடும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன் ப…

  7. ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தயார் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அமைச்சரை கேளுங்கள்' எனும் வளம் சார்ந்த அபிவிருத்திக் கலந்துரையாடலில் நேற்று பங்குபற்றி கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு உள்ளகக்…

  8. பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்! தியாக தீபம் திலீபனுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூவி சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் சூழ்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.meenagam.com/பொலிஸாரின்-கெடுபிடிக…

  9. மாங்குளத்தில் கஞ்சாவுடன் கைதான காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 24 அன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக மாங்குளம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஏ9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட காவல்துறையினர் 6 கிலோ கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள். இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புத்தளத்தினை சேர்ந்த 34 அகவையுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நொச்சிகம பகுதியினை சேர்ந்த 25 அகவையுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியி…

  10. ஞானசார தேரருக்கு, எதிராக... நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ், சட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம் மற்றும் சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த ஞானசார தேரர், கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல…

  11. அமெரிக்க நிறுவனதுடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது. அமைச்சர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது. அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந…

  12. காணாமல் போனவர்கள்... படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார்- செல்வம் காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும். எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த …

  13. இரண்டு தடுப்பூசிகளையும்... வழங்கிய நாடுகளின், பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொத்மலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட சுகாதார அமைச்சினால், அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதில்லை. மக்களுக்கு முக்கியத்து…

  14. கடற்படையினரின்... அராஜகமானது, அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ் மன்னார்- வங்காலைபாடு கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர், அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது, 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது, முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை …

  15. ஹனா சிங்கர் மற்றும் சாரா ஹல்டனுடன்... கூட்டமைப்பு தனித்தனியே சந்திப்பு! ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருடன் தனித்தனியான கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் மார்ச் மாதத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை இடமபெற்ற ஹனா சிங்கருடனான சந்திப்பின்போது குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டிருந்தார். அத்துடன், நில அ…

  16. புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையினை, ஜனாதிபதி நீக்க வேண்டும்- துரைரெட்ணம் கோரிக்கை புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையினை முதலில் ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதங்கள் பேசி தாங்கள் நினைத்ததை செய்துவிடலாம் என்ற இறுமாப்போடு இருந்த நிலையில், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றமை பெரிய விடயமாகும். இராஜ…

  17. மன்னாரில்... பங்குதந்தைக்கும், விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்! மன்னார்-மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில், வயல் காணியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் விவசாயம் செய்து வருகின்றபோதும் அந்த பணியை தமக்கு வழங்குமாறு மடு ஆலய நிர்வாகம், விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இதன் விளைவாக தொடர்ச்சியாக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த விடயத்துக்காக போராடி வருகின்றனர். மேலும், மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் அவருடைய அனுமதியின் பெயரில் விவசாயிகள் குறித்த வயல் …

  18. இலங்கை மக்கள்... நவம்பர் மாதமளவில், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன இலங்கை மக்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு மகத்தான சாதனை என்று அவர் சுட்டிக்காட்டினார். சமூகத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருவதாகவும் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தற்போதிருக்கும் நில…

  19. உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு- மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக…

  20. இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தையால் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதை தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று விஜயம் செய்திருந்தினர்.

  21. எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்கு கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும், எரி­பொ­ ரு­ளைக் கட­னா­கப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும் இந்­தியா மற்­றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­து­டன் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது. இதன்­படி இந்­திய அர­சி­ட­மி­ருந்து 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பில் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது என ஜனா­தி­பதியின் செய­லா­ளர் பி.பி.ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார் என்று ‘எக­னமி நெக்ஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. நிலு­வை­யில் உள்ள எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்­கான தொகை­யைச் செலுத்­து­வ­தற்­கும் புதி­தாக எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வ­தற…

  22. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கெக்கரிக்காய் உற்பத்தி செய்த போது அவை நல்ல விளைச்சலை தந்ததாகவும், இந்த முடக்க காலத்திற்கு முன் கிலோ 50 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் முடக்க காலத்தில் 10 ரூபா 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த விற்பனையும் இடம்பெறாமையால் பெருமளவு கெக்கரிக்காய்கள் பழுத்தும், பழுதடைந்தும் இருப்பதா…

  23. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று (25) பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் பார்வையிட்டனர். இன்று காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்திருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சாணக்கியன் உட்பட முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த…

  24. மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பங்கு தந்தை ஒருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பண்டிவிரிச்சான் கோவில்மோட்டை பகுதியில் அமைந்துள்ள வயல் காணி தொடர்பிலேயே இந்த வாக்குவாம் இடம்பெற்றுள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் அப்பிரதேச விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்ற போதும் அந்த காணியை தமக்கு வழங்குமாறு மன்னார் மடு ஆலய நிர்வாகம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் மன்னார் மடு ஆலய நிர்வாகத்துக்கு எதிராக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். எனினும் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோரின் அனுமதியுடன் விவச…

  25. யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A By Shana நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். http://www.battinews.com/2021/09/56-9a.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.