ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143630 topics in this forum
-
ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழில் நுட்ப கூடம் கையளிப்பு September 17, 2021 யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் ( Jaffna Medical Faculty Overseas Alumini – USA) நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப கூடத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தகவல் தொழில் நுட்ப கூடத்தைத் திறந்து வைத்தார். முன்னாள் மருத்துவ …
-
- 1 reply
- 356 views
-
-
உலக தலைவர்களுடன், ஜனாதிபதி பேச்சுவார்த்தை! நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் உரையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தை தனித்தனியே சந்திப்பதற்கு சந்தர்ப்ப…
-
- 2 replies
- 536 views
-
-
ஐ.நா.வின் செயற்பாட்டுக்கு இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின் பாரிய விளைவுகளை சந்திக்கும்- இரா.துரைரெட்ணம் எச்சரிக்கை இனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் பட்சத்தில் அதற்கு இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வாரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்காக இராஜாங்க அமை…
-
- 1 reply
- 278 views
-
-
புனர்வாழ்வுக்கு பின் விடுவிக்கப்பட்டவர், 4 மாதங்களில் மீண்டும் கைது – 8 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் மீண்டும் நான்கு மாதங்களில் கைது செய்யப்பட்டு, 8 வருடங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு- உடையார் கட்டு பகுதியை சேர்ந்த நடேசு குகநாதன் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 24 ஆம் திகதி, பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, 21 மாதங்கள் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு…
-
- 1 reply
- 295 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய குழு, இலங்கைக்கு விஜயம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1239617
-
- 0 replies
- 224 views
-
-
21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் இன்று! நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு, தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. பெரும்பாலும் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படலாம் எனவும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239650
-
- 2 replies
- 260 views
-
-
யுத்தம் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை பாராட்டியவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசு கட்சி மட்டும்தான் மன்னிக்கப்பட்டு கூட்டமைப்பிற்குள் இணைக்கப்பட்டது. ஆனால், சுமந்திரன் மட்டும் இன்னும் மன்னிக்கப்படவில்லை. அவரை கொல்ல வந்ததாக கூறி, அவரது பெயரால் இன்றும் இளைஞர்கள் சிறையில் உள்ளனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தரப்புக்கள் 3 கடிதங்கள் அனுப்பியுள்ளன. தமிழ்த்…
-
- 3 replies
- 643 views
-
-
இலங்கை போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோர்: ஐ.நாவை நாடும் உறவினர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் (கோப்புப்படம்) இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்றைய தினம் (செப்டம்பர் 15) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பேச்சேலெட்டுக்கு கடிதமொன்றை அனுப்பி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. …
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
-செ.கீதாஞ்சன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அநுராரபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்ஈ கடந்த 12ஆம் திகதியன்று சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்டு பின்னர் அவர் பதவிவிலகியுள்ள நிலையில், இந்த செயற்பாடு தொடர்பில் பலர் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றார்கள். இந்நிலையில் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக சென்றவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 'கொரோ…
-
- 0 replies
- 208 views
-
-
வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப்பகுதியில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக தெரிவித்த பிரதேச மக்கள் அங்குள்ள சில விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/64083/thumb_vadukkunariu.JPG இவ் விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் அப்பகுதி மக்கள் செல்ல முடியாது என தொல்பொருள் திணைக்களம் தடை விதித்து வரும் நிலையில் வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் ஊர் மக்கள் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் அங்குள்ள பல விக்கிரகங்களை அழித்துள்…
-
- 0 replies
- 258 views
-
-
எம்.ஆர்.எம்.வசீம் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும்போது அவர்களின் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டுவரும் உபகரணங்களுக்கு புதிதாக வரையறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியினால் 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் வரையறை வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருபவர்கள் கொண்டுவரும் பொருட்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அத்தியாவசியமற்ற பொருட்கள் என தெரிவித்து 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி நிபந்தனை விதித்திருந…
-
- 0 replies
- 274 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய உளவுச் சேவை விஷேட அவதானம் செலுத்தி இரகசிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி தாக்குதல் குறித்த எச்சரிக்கை மின்னஞ்சலானது, பங்களாதேஷின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இணையத் தளத்தை ' ஹெக் ' செய்து, அதனூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டறிய்ப்பட்டுள்ளது. பயங்கரவா…
-
- 1 reply
- 451 views
-
-
நா.தனுஜா முன்னொரு காலத்தில் விடுதலைப்புலிகளின் பெயரைக்கேட்டாலே அஞ்சிப்பதுங்கிய லொஹான் ரத்வத்தே, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் தலையில் துப்பாக்கியைவைத்து மிரட்டுகின்றார். இது மிகவும் இழிவான செயலாகும். துணிச்சலற்ற, முதுகெலும்பற்ற நபர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் சட்டநடவடிக்கை என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்ப…
-
- 1 reply
- 389 views
-
-
மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானம் மூலம் ஆய்வு! மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் 2000 மில்லியன் பீப்பாய்கள் அளவிலான கனிய எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமை கனிய எண்ணெய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பில் புதிய வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 418 views
-
-
திலீபனின் நினைவேந்தலை நினைகூரத் தடை September 16, 2021 தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நினைகூருவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை மேஜர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய 4 பேருக்கு எதிராகவே நேற்று புதன்கிழமை (15) இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். குறித்த நால்வரும் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 15ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதிவரை மேற்கொள்ள உள்ளதாக காவல் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய…
-
- 0 replies
- 305 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையில்... CCTV காட்சிகளை, அழிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு! அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள இராஜாங்க அமைச்சர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 8 பேரை முழந்தாளிடவைத்து மிரட்டியுள்ளார். அவரின் இந்த நடவடிக்கை நீதிமன்ற தீர்ப்பையும…
-
- 0 replies
- 386 views
-
-
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது! வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239562
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
காணாமல் போன உறவுகளைத் தேடி அலைந்த... நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழந்துள்ளனர்! காணாமல்போன உறவுகளைத் தேடி அலைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழந்துள்ளனர். நாங்களும் எங்கள் உயிரை எப்போது மாய்ப்பது என தெரியாமல் வாழ்ந்து வருகின்றோமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சிவபாதம் இளங்கோதை தெரிவித்துள்ளார். நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இம்முறை நடைபெறும் ஜெனீவா கூட்டத்தொடரின் மூலமாக எமது காணாமல்போனவ உறவுகளின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்படவேண்டும். நேரடிய…
-
- 0 replies
- 271 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை... சந்தித்து பேசுகின்றார் நாமல்? அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசித்து குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சரொருவர், கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது பாதுகாவலர்கள் மற்றும் துப்பாக்கியுடன் உள்நுழைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், சிறைச்சாலைக்குள் உள்நுழைந்த சந்தர்ப்பத்தில் குறித்த இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. குறித்த இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்…
-
- 7 replies
- 554 views
-
-
அரசியல் கைதிகளுக்கு எதிராகச், சித்திரவதைகள் தொடர்ந்தால்... வடக்கு – கிழக்கு கிளர்ந்தெழும்: சுகாஸ் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கு, கிழக்கு கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சிறைச்சாலைக்குள் அடாத்தாகப் பிரவேசித்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி முட்டுக்காலில் வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்திய ஆளுங்கட்சி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிங்களக் கட்சிகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள். த…
-
- 0 replies
- 164 views
-
-
உணவுக்காக போராடும் மக்கள் வீதியில் இறக்கி போராடப் போகிறார்கள், அதனைக் கட்டுப்படுத்த இந்த அவசரகால சட்டம் தேவை.
-
- 3 replies
- 296 views
-
-
மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (15) ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.…
-
- 40 replies
- 2k views
- 1 follower
-
-
(ஆர்.யசி) போர் குற்றத்தை நடத்தியதில் முக்கியமான நபராகவும்,குற்றவாளியாகும் இருக்கின்றவரே ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்கின்ற காலகட்டத்தில் இலங்கை அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி இந்த தீர்மானத்தை முழுமையாக முடக்கப்படும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டு இருக்கின்ற வரையில் பொறுப்புக்கூறல் என்ற விடயமே தமிழ் மக்களுக்கு சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புவது ஆ…
-
- 0 replies
- 199 views
-
-
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளார். மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/நியமனக்-கடிதத்தை-பெற்றார்-கப்ரால்/175-280940 இடி அமீன் படத்தில் இருந்து ஒரு காட்சி, தற்போது இலங்கை நிலைமை…
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
‘அமெரிக்காவுக்கு அனுப்பிய விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும்’-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் September 15, 2021 பிளேக் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய, விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும். என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவித்த போது, ‘பிளேக் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய, விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும்.ஆகவே நீதி அமைச்சர் எந்த பொறுப்பற்ற அறிக்கையையும் கூற முடியாது. முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை ஆயுதக்குழுகள் (ஒட்டுக்குழு) தமிழ் பெண்கள் மற்றும் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அடிம…
-
- 0 replies
- 299 views
-