Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில்; நான் வெற்றி பெற்ற பின்னர் என்னிடம் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்காகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக சிலர் மக்களிடம் காண்பிக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாட்டுக்கான எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதாகவே க…

  2. (இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பாராளுமன்றில் விடுத்த சவாலை வெற்றிக் கொண்டுள்ளோம். சவாலில் தோல்வியடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் நன்கு அறிவார். ஆகவே அதன்படி நடந்துக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படும் சிறை கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரத்திற்கான தீர்வு, காணி விடுவிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வு எதிர்வரும் மாதம் தொடக்கம் சாதகமான முறையில் வழங்கப்படும். ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடற்ற வகையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்வது எமது பிரதான இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தா…

    • 1 reply
    • 236 views
  3. 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக சுமந்திரன் அவர்கள். தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்படவிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதி இது. இலங்கையின் கடந்த கால செயற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று ம. உ. ஆணையாளர் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கின்றன. GSP+ வரிச்சலுகை கேள்விக்குள்ளாகி உள்ளது. முன்னதாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தந்தையிடமும் சித்தப்பாவிடமும் நேரடியாகப் பேச முடியாத நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார். அதற்குத் தானே காரணம் என்று அரச தரப்பு சுரேன் ராகவன் உரிமை கோருகிறார். அதனைத் தாங்க முடியாத ச…

    • 3 replies
    • 673 views
  4. (எம்.மனோசித்ரா) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்துவதாகக் கூறி பழைய கதைகளையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சீன இராணுவத்தின் உடையை ஒத்த ஆடையை அணிந்துள்ள சீன பிரஜைகள் யார்? என்றும், எரிபொருள் விலை குறைவடையுமா? இல்லையா? விவசாயிகளுக்கு எப்போது உரம் வழங்கப்படும்? இணையவழி கல்வியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எப்போது நிவாரணம் வழங்கப்படும்? என்பதை கூறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். மாத்தறை மாவட்டத்தில் கம்புறுபிபட்டி நகர பஸ் தரப்பிடத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இதனைத் தெரிவித்த அவ…

    • 2 replies
    • 458 views
  5. பலதரப்பு கடற்படை பயிற்சி நடவடிக்கை திருகோணமலையில் ஆரம்பம் Published by J Anojan on 2021-06-25 12:03:05 இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் நேற்று (24) ஆரம்பமானது. (Cooperation Afloat Readiness and Training Exercise-2021 (CARAT-21) “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது. பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அம…

    • 4 replies
    • 645 views
  6. வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு! தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பில் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் முற்றுமுழுதாக ஒரு கொலை. இது தொடர்பில் உரியவாறு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம். ஏனென்றால் மெயப்பா…

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம், வருத்தம் தெரிவித்த.. ஜனாதிபதி கோட்டா! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்று (புதன்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி உற…

  8. தெஹிவளை, மிருகக் காட்சிசாலையில்... மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா! தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224661

  9. யாழில்... சேதன குப்பைகளை, இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென கூறப்படுகின்றது. மேலும் இந்த தொழிற்சாலை ஊடாக குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இந்த தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிட…

    • 2 replies
    • 636 views
  10. எம்.றொசாந்த் “11 மாத காலத்தில் தண்டனைக் காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார்” என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேற்று (24) ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து முருகையா கோமகன் நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்றைய தினம் (நேற்று) விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் பலருக்கு தண்டனைக் காலங்க…

  11. இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மஹரவான வெளிச்சவீட்டுக்கு கிழக்கே 480 கடல்மைல் தூரத்தில் பயணித்த கப்பலின் இயந்திர அறையில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கொழும்பிலிருந்து - சிங்கப்பூர் நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.சி. மெஸ்சினா என்ற சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்…

  12. விடுதலையானோரின் வாழ்வாதாரத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்; தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 25 Views 16 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியையும் மனித உரிமைகளையும் நேசிக்கும் அனைத்துத் தரப்புகளுமே பங்களித்துள்ளன. இவ்வாறு பங்களித்தது போல விடுதலையான இந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் ஒன்றுபட்டுச் செயல்படுவோம். இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன் நேற்று அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு; …

  13. மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான் Share 5 Views வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள நிலையில், இன்று சிங்கள தேசம் எமது மண்ணை எந்தவித இழப்புகளுமின்றி சூறையாடி வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் பாரியளவில் வளங்கள் சுரண்டப்படும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப் படுகின்றன. யு…

  14. மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 இல் துமிந்தா சில்வாவிற்கு மரணதண்டனை விதித்தது. மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் வழக்கினை மீண்டும் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுதலை செய்ய பரிந்துரைத்தது. இந்நிலையில், இன்று (24.06.2021) துமிந்த சில்வாவா ஜனாத…

  15. தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு 22 Views கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 48பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் தொடர்ந்தும…

  16. ஐரோப்பிய ஒன்றிய தீர்மானமே தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு காரணம் – மனோ June 24, 2021 சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய “வாய்மொழி அறிக்கை” ஆகியவைதான், ராஜபக்ச அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நீண்டகாலம் “சிறையில் இருக்கும், தமிழ் கைதிகள் விடுதலை பற்றி நேற்று முதல் நாள் அமைச்சர் நாமல் சபையில் விசேட அறிவிப்பு செய்தார். கடத்த சில வாரங்களுக்கு முன், எம்பீக்கள் சார்ள்ஸ், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னெடுப்பில், த…

  17. சிறைச்சாலைகளில் உள்ள மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதைப் போன்று தங்களுக்கும் விடுதலை வழங்கவேண்டுமெனவும் அல்லது மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரி இவ்வாறு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துமிந்த விடுதலையின் எதிரொலி; மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில்…! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  18. (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றம் இன்று புதன் கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசன வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகாெண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க காலை 10.00 மணிக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண…

    • 7 replies
    • 4k views
  19. அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி (எம்.மனோசித்ரா) ஆளுங்கட்சியின் கூட்டணிக்குள் இருந்தாலும் பாரபட்சமான முறையிலேயே பங்காளி கட்சிகள் வழிநடத்தப்படுகின்றனர். எவ்வித கலந்துரையாடல்களுக்கோ தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலோ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து வினவிய போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வீரகேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா ப…

  20. (நா.தனுஜா) இலங்கையில் சீன இராணுவம் கால்பதித்து விட்டதா? என்று மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பதாக உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். இராணுவத்தினர் அணியும் ஆடையின் நிறத்தையொத்த ஆடைகளை அணிந்திருப்பவர்கள் சீனத்தொழிலாளர்களேயன்றி, அவர்கள் சீன இராணுவத்தினர் அல்ல என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்திருக்கிறது. திஸ்ஸமஹாராமய வாவி அபிவிருத்தி நடவடிக்கைகள் சீன - இலங்கைக் கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளமையையும் சீன இராணுவத்தின் சீருடையையொத்த சீருடை அணிந்த சீனப்பிரஜைகள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 'இலங்கையில் சீன இராணுவம் கால்பதிக்கின்றதா?' என்ற தலைப்…

  21. பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம்-அமைச்சர் அலி சப்ரி 18 Views இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அராப் செய்தி நிறுவனத்திற்கு (Arab News) அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கம் இல்லாமல் செய்வதாக வாக்குறுதியளித்த – ஆனால் நிறைவேற்றாத – 1979 ஆண்டு நடைமுறைக்கு வந்த வலுவான பயங்கரவாத தடைச்சட்டம், நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகம் உருவானால் அவரை நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதற்கும் சோதனையிடுவதற்கும் அனுமதிக்கின…

  22. LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசார…

  23. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லட்சுமன் பிரேமச்சந்திராவின் மனைவி சுமனா பிரேமசந்திர கண்டித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திராவின் கொலை தொடர்பாக 2016 ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, இன்று சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சுமனா பிரேமச்சந்திரா கூறுகையில், “கொலையாளி வெளியில் சுதந்திரமாக உள்ளார்... நீதியை மதிக்காத ஒரு நாட்டின் மீது சூரியன் பிரகாசிக்காது. ” மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் துமிந்த சில்வா மீது வழங்கப்பட்ட ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிக…

    • 0 replies
    • 290 views
  24. பசில் ராஜபக்ஷ... நாடு திரும்பினார் வெளிநாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224614

    • 2 replies
    • 2.4k views
  25. “என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது! June 23, 2021 தான் குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். நீதிமன்றத்தில் எனக்கு அரு…

    • 38 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.