Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு 12 Views மட்டக்களப்பு கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ம் திகதி சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 ம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை பயங்கரவாத …

  2. மட்டக்களப்பு தொழிலதிபர்களின் மனிதாபிமானத்தின் வெளிப்பாட்டில் 2 மில்லின் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு! By கிருசாயிதன் (சிவம்)மனிதாபிமானப் பணியை வெளிப்படுத்தும் நோக்கோடு கொவிட்-19 தாக்கத்தைக் கண்டறிவதற்கான மருத்துவ உபகரணங்கள் மட்டக்களப்பு தொழிலதிபர்களினால் போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (21) மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.கொரோனா வைரசின் 3 ஆவது அலை வீரியம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் மிகவும் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக தொற்றுக்குள்ளாவர்கள் மற்றும் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் தாக்கத்திற்குள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிட்சையளிப்பதற்காக சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்க…

  3. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.நேற்று ஜலனி பிரேமதாஸவின் தொற்று உறுதியாகியதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, தாமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டபோதே, தனக்கும் தொற்று உறுதியானதாக சற்றுமுன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.இதேவேளை இந்த நெருக்கடியான தருணத்தில் பொதுமக்களி…

  4. அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்! நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாம் இந்த நாட்டுக்கான அழிவின் பாதையாகவே நாம் பார்க்கிறோம். துறைமுக நகரத்திட்டமானது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எவ்வாறாயினும், …

  5. தமிழை தவிர்த்து, சீனர் மொழி: சட்டத்தை மீறுகிறார்கள்- மனோ கணேசன் 14 Views தமிழை தவிர்த்து, சீனர் மொழி,சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்து சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் இலங்கையில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் பல இடங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டு சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல் நடைபெற்று வருகின்றது. மேலும் சில பெயர் பலகைகளில் சிங்கள மொழியும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதை பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் எதிர்த்தும் வருகின்றனர். ஆனாலும் இந்த நிலை தொட…

    • 1 reply
    • 590 views
  6. கொரோனா அதிகரிப்பு -முற்றாக முடங்கியது மட்டக்களப்பு 15 Views கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளும் முடங்கியுள்ளன. பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று காலை முதல் முழுமையாக முடங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்து விற்பனை நிலையங்களை தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் அரச தனியார் போக்குவரத்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகருதிய செயற்பாடுகள் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுதுடன் ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் உள்ளன. க…

  7. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்பு – ஆவணப்படுத்துமாறு ஐ.நா. விடம் தமிழ்க் கட்சிகள் கோரிக்கை May 22, 2021 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐநா மனித உரிமை ஆணையாளரிடம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளார்கள். இது குறித்த கோரிக்கையை உள்ளடக்கிய கடிதம் ஒன்று 13 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்;க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டது. இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை வெளியிட்டனர். இந்த நிலையில்,…

  8. தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன் May 22, 2021 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

  9. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே உத்தியோகபூர்வமான முடிவுகள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே அரசின் இறுதியானதும் உத்தியோகபூர்வமானதும் முடிவுகளாகும் என்று தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.நாள்தோறும் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இறுதி முடிவை இரவு வேளைகளில் நாம் வெளியிடுகின்றோம். அந்த எண்ணிக்கையில் முரண்பாடு எதுவும் இல்லை. அதேவேளை, கொரோனாத் தடுப்புச் செயலணி மாவட்டம் தோறும் சேகரிக்கும் தரவுக…

  10. இலங்கையில்... பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் – அமெரிக்கா, கனடா வலியுறுத்து இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார குழு தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. அப்பதிவில், யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரை நினைவு கூருவதுடன், அர்த்தமுள்ள நீதியும், பொறுப்புக்கூறலும் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளன. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சட்டங்களில் இருந்து தப்பிக் கொள்கின்ற நிலைமை தொடர்கின்றமையானது, நல்லிணக்க முயற்சிகளை பெரிதும் பாதித்துள்ளது…

  11. இலங்கையை பொறுப்புக்கூறவைக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தல் அமெரிக்க காங்கிரசில் கட்சிசார்பற்றமுறையில் தீர்மான மொன் று ச மர்ப்பிப்பு * ஐ. நா . வின் 3 பிரதான அமைப்புகளுடன் செயற்படுமாறு வாஷிங்டனிடம் கோரிக்கை —————- இலங்கையில் யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட 12 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கையில் ‘பொறு ப்பு கூறலுக்கான செயற்பாட்டுத்திறன்வாய்ந்த சர்வதேசப்பொறிமுறை” மற்றும் ”நிரந்தரமான அரசியல் தீர்வு ”ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கும் கட்சிசார்பற்ற தீர் மானமொன்றை அமெரிக்க காங்கிரசில் பெண் உறுப்பினரான டெபோரா ரோஸ்அறிமுகப்படுத்தியுள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்…

  12. பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிகின்றது பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் அலட்சியம…

  13. மே18ல் கவனத்தைப்பெற்ற ஐ.நா பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் பேருரை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதியின் அடமா டியங்கின் முள்ளிவாய்க்கால் பேருரை பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. செனகல் நாட்டைச் சேர்ந்தவரான சட்டநிபுணர் அடமா டியங்க், 2012ம் ஆண்டுஐ. நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலை களைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தவர். செனகலில் நீதி மற்றும் சட்டத் துறைகளில் நீண்ட காலம் பொறுப்புக்களை வகித்து வந்த இவர், 2001 ஆம் ஆண்டு முதல் றுவாண்டாவுக்கான…

    • 0 replies
    • 283 views
  14. கொரோனா வைரஸ் தொற்றினை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக சி.யமுனாநந்தா வழங்கிய ஆலோசனை! 0 கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளமையால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சி.யமுனாநந்தா மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம…

    • 0 replies
    • 350 views
  15. கருப்பு பூஞ்சைக்குப் பின் வெள்ளை பூஞ்சை வருகிறது கொரோனா, கருப்பு பூஞ்சை நோய் பரவலை தொடர்ந்து தற்போது வெள்ளை பூஞ்சை நோய் பரவி வருவதாக மருத்துவத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவத் தொடங்கியது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக பட்டியலில…

    • 0 replies
    • 399 views
  16. நாட்டின்... அனைத்துப் பாகங்களையும், சீனா கைப்பற்றும் – சாணக்கியன் எச்சரிக்கை! நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உலகின் பல்வேறு நாடுகளுக்கு நுழைந்த சீனா, அந்தந்த நாடுகளிலுள்ள தொழிற்றுறைகளைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இலங்கைக்கு உள்ள அமைவிடத்தையே கைப்பற்றப் பார்க்கிறது. மாகாண சபைகளுக்கூடாக அதிகாரங்களைப் பிரித்துக் கேட்கும் தமிழர்களை புலிகள் என்கிறார். இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்கிறார்கள். …

  17. இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி தெரிவு: ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு! இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இளைஞர் வணிகக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கக் கூடிய குறித்த திட்டத்தின் முதலாவது கட்டத்திலேயே கிளிநொச்சியை தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் 25…

  18. அரசாங்கத்தின் உள்ளகப்பொறிமுறை தோல்வி - சர்வதேச மன்னிப்புச்சபை (நா.தனுஜா) போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/94523/amnesty_international_l_new.jpg இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாம் கடந்த 12 வருடகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். எனினும் இதற்காக முன்னெடுக்…

  19. வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் ஈழ அரசு உருவாக தேவையான சட்டங்களை அரசு இயற்றுகிறது – சம்பிக்க 10 Views எமது நாடு துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், வெளிநாட்ட வர்களுக்கு இந்நாட்டில் ஈழ அரசு உருவாவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்வதற் காக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்டி யுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அரசாங்கம் மீது குற்றஞ்சாடினார். யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ் வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை பொரளையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில் – “கொவிட் 19 அச்சுறுத்தலால் நாடு முடக…

  20. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் சற்றுமுன்னர் ஆரம்பமானது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தின் பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டமூலத்த…

  21. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை, இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி முன்வைத்த நிலையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச மருந்தாக்க கூட்டுத்தாபனமும் சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1217199

  22. இலங்கைக்குள் ஒரு சீன அரசு தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகி றது சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது – விக்னேஸ்வரன் பா.கிருபாகரன் – ந. ஜெயகாந்தன் இந்த அரசிடம் தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின் றது. சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது.அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவ…

  23. துறைமுக நகர் சட்டமூலம் மீதான விவாதத்தில் ஒலித்த தமிழர் தரப்பு குரல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்- திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்களிற்கு சிறிதளவேனும் தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட குறுகியஇனவாத நோக்கில் எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள். தமிழ் மக்கள் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு எம்மை அழிக்கக்கூடத் துணிந்தீர்கள் . அதற்கு எம்மினத்தின் மீது இனவழிப்புச் செய்வதனையே உங்கள் தெரிவாக எடுத்தீர்கள் . இவ்வாறு நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டுஉரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜ…

  24. யாழில் கொரோனா தொற்று வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார். தற்போதுள்ள யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன.…

  25. மேலும் 500,000 டோஸ் "சினோபோர்ம்" தடுப்பூசி நன்கொடை – சீனத் தூதரகம் உறுதி! மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இந்த மாதத்திற்குள் குறித்த பங்குகள் கிடைக்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸின் தற்போதைய அலைக்கு எதிராக போராடும் இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதே சீனாவின் நோக்கம் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2021/1217005

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.