ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
ஒரு இனத்தை மையப்படுத்தி அதனை அடக்க முற்படவேண்டாம் - ரிஷாத் பதியுதீன் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஒரு இனத்தை மாத்திரம் இலக்குவைத்து அடக்க முற்படக்கூடாது. இஸ்லாத்துக்கு எதிராக ஒருசில மதகுருமார்கள் செயற்படுகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அதுவே நாட்டில் இடம்பெறும் பேரழிவுகளுக்கு காரணமாக அமையலாம் என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டிலே ஒரு இனத்தை மையப்படு…
-
- 0 replies
- 480 views
-
-
“கூட்டு சமஷ்டி முறைமையே தீர்வாக அமையும்”: புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல் இலங்கையின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவினரை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஒற்றை ஆட்சியின் கீழ் பெரும்பான்…
-
- 1 reply
- 246 views
-
-
புதிய சட்டமூலம் நிறைவேறியதும் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானம் SayanolipavanApril 8, 2021 மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர் மானித்துள்ளதாகவும் அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாகத் தேர்தலை நடத்தும் நிலைப் பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதெனவும் அமைச்சரவை பேச்சாளர் கெெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கமைய விருப்பு வாக்கு முறைமையை நீக்கி, 70வீதம் தொகுதிவாரி முறைமையின் அடிப்படையிலும் 30வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரி…
-
- 0 replies
- 224 views
-
-
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது – இரா.சாணக்கியன் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.இவ்வாறான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது. அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை.ஏனெனில், இவர்கள்தான் கடந்த காலங்களில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியவர்கள். அவரைப் போன்ற ஒருவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன…
-
- 0 replies
- 384 views
-
-
புலிகளின் தலைவரின் படத்தை அலைபேசியில் வைத்திருந்தவர் விளக்கமறியலில்! April 8, 2021 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். வழக்கை வி…
-
- 0 replies
- 382 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தாவிடின் வீதிக்கிறங்கி போராடுவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். கத்தோலிக்க மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. குற்றவாளிகளை சட்டத்தில் முன்னிலைப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொ…
-
- 1 reply
- 432 views
-
-
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது 65 என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் . அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மகனைத்தேடிய தந்தை மரணம் ! தொடரும் துயரம் ! | Virakesari.lk
-
- 0 replies
- 471 views
-
-
(எம்.மனோசித்ரா) அமைச்சரொருவர் முன்வைக்கும் எந்தவொரு யோசனையும் உடனடியாக சட்டமாக்கப்பட மாட்டாது. அமைச்சரவையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளில் காலத்திற்கு உகந்தவை தொடர்பில் மாத்திரமே துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்டப்பட்ட கேள்விக்குக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கேள்வி : புர்கா தடை மற்றும் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் , நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்காகவா? அந்த யோச…
-
- 0 replies
- 301 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுங்கள் – பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல் 25 Views இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் கடற்றொழில் அமைச்சர் கூறியிருந்தார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உரிமை இதன் மூலம் மீறப்படும் . கடற்றொழில் அமைச்சர் அவரின் கூற்றை மீளப்…
-
- 0 replies
- 187 views
-
-
’ஏப்ரல் 10இல் கிடைக்கும்’ அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளிலிருந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமெனத் தெரிவித்த பெருந்தோட்டத் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, இதுவொரு பாரிய வெற்றியெனவும் தெரிவித்தார். ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காத கம்பனிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கான எந்தவிதமான யோசனைகளும் இல்லை எனவும் அனைத்துப் பெருந்தோட்ட நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குமெனத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். சபாநாயகர் தலைமையில் நேற்று (06) கூடிய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, வாய்மூல…
-
- 0 replies
- 261 views
-
-
கடந்த அரசாங்கத்தின் போது பாரிய நிதி முறைகேடு - CID யில் முறைப்பாடு! கடந்த அரசாங்கத்தின் போது, வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அரசாங்கம் வழங்குவதில் பாரிய நிதி முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மதுர விதானகே, “குறிப்பாக ஜனவரி 2015 முதல் 2019 இறுதி வரை, வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் வாங்குவதில் இலங்கை பொது சுகாதாரத் துறை பாரிய முறைகேடுகளை செய்திருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தோம். பல நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டது. அதன்படி, 2015-2019 காலகட்டத்தில், அரசு வைத்த…
-
- 0 replies
- 315 views
-
-
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும் வலிகளையும், வேதனைகளையும் சுமந்திருந்தால், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்க்ப்பட்டவர்களின் சங்க தலைவி கனகரஞ்சினி கரு்தது தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சாட்சியங்கள் போதாது என சுமந்திரன் தெரிவித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது அவர்…
-
- 1 reply
- 326 views
-
-
பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சபை அமர்வில் பங்கேற்காவிட்டால் அவரின் எம்.பி. பதவி பறிபோய்விடும்.எனினும், 3 மாதங்களுக்கு ஒரு தடவை விடுமுறை பெறலாம். அவ்வாறானதொரு அனுமதியை ரஞ்சனுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார் .ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தால் நான்கரை வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பாக இன…
-
- 0 replies
- 374 views
-
-
தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு இந்தியாவில் கொரோனா நோய்த்தொறின் பாதிப்பு அதிகரித்தால் தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என சீரம் நிறுவனம் எச்சரித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, நாட்டில் புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் குறைந்துவிட்டால், ஜூன் மாதத்திற்குள் அஸ்ட்ராசெனகா அளவுகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க முடியும் என கூறியுள்ளார். இருப்பினும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரிப்பதால் அதிக தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார். ஏனெனில் இந்திய சீரம் நிறுவனம் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இலங்கைக…
-
- 0 replies
- 217 views
-
-
நமது அரசியல் நிருபர் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக இணைந்து பயணிப்பதற்கான சாத்தியம் அதிகரித்திருக்கின்றது. முக்கியமாக இரண்டு தரப்பினரும் இணைந்து பயணிப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் விருப்பத்துடன் இருப்பதாகவும் அதற்கான பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளதாகவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்வது என்பது தொடர்பான ஒரு பொறிமுறையை உருவாக்க முடியாமையே தாமதத்துக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உ…
-
- 3 replies
- 693 views
-
-
தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றும் ஸ்…
-
- 1 reply
- 373 views
-
-
மலையக மக்கள் மொழியுரிமைக்கு வலுச்சேர்க்க வேண்டும் – துரைசாமி நடராஜா 112 Views ஒரு மனிதனின் உரிமைகளுள் மொழியுரிமை முக்கிய இடம் பெறுகின்றது. இவ்வுரிமையை உரியவாறு பாதுகாத்து முன் செல்வதால் சாதக விளைவுகள் பலவும் ஏற்படுகின்றன. எனினும் மலையகத்தைப் பொறுத்தவரையில், மொழியுரிமை பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்பட்டு வருகின்றது என்பதோடு, மக்களும் இது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருந்து வருகின்றமை வருந்தத்தக்க விடயமாக உள்ளது. மனிதனின் கண்டுபிடிப்புக்களுள் மொழி என்பது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக விளங்குகின்றது. ஆதிகாலத்தில் சைகைகளின் மூலமாக கருத்துக்களை வெளிப்படுத்திய மனிதர்கள், இக்கட்டான நிலைமைகள் பலவற்றையும் எதிர்கொள்ள வேண்ட…
-
- 1 reply
- 386 views
-
-
இலங்கையில் 154 வருட பழைமையான Finlays தோட்டத்தில் உச்ச வரம்புகளை தகர்த்து முன்னோக்கி வந்த இரு பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புக்களை மேம்படுத்துவதில் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, நிர்வாகத்தின் இடத்தில் உள்ளது. பெண்கள் இத்தகைய முக்கியமான பங்கினை வகிக்கும் பல துறைகளில், விவசாயம் மற்றும் தோட்டத் துறை ஆகியன அடங்கும், இருப்பினும், பொதுவாக, இங்கு கூட அவை பெரும்பாலும் கள நடவடிக்கைகளில் மட்டுமே உள்ளன, நிர்வாகப…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோகப்பூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியின் ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும், குறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்ததாகவும் கு.சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் ரெலொ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்…
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல’ – க.வி.விக்னேஸ்வரன் 97 Views இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை” என வாரத்துக்கொரு கேள்வி என்ற பதிவில் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் வழங்கியுள்ள கேள்வி பதிலில், கேள்வி: இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச பகிரங்கமாகக் கூறியுள்ளாரே. அது பற்றிய உங்கள் பார்வை என்ன? பதில்: மேன்மைதகு ஜனாதிபதி அவர்களின் தப்பான சிந்தனையின் வ…
-
- 4 replies
- 908 views
-
-
மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார். நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார். இறுதிக் கிரியைககள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து இன்று வெள்ளிவிழாக் காண்கிறார். இவர் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக 1992ஆம் ஆண்டு முதல் …
-
- 58 replies
- 5.3k views
-
-
மட்டக்களப்பிற்கு ஒதுக்கப்பட்டதை எப்படி களுத்துறைக்கு மாற்ற முடியும் - நாடாளுமன்றத்தில் சீறினார் சாணக்கியன்! By கிருசாயிதன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கான (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம் கருவியினை களுத்துறை மாவட்டத்திற்கு எப்படி ஒதுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வியில் எழுப்பியுள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுகாதார அமைச்சரினை சில காலங்களுக்கு முன் ச…
-
- 0 replies
- 541 views
-
-
இலங்கைக்காக இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறும் தீவிர முயற்சியில் யுனிசெப் நிறுவனம்! இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) இந்தியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான துணை பிரதிநிதி எம்மா ப்ரிகாம், கோவாக்ஸ் வசதி மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் பங்காளிகள் இந்த விவகாரத்தில் மிக தீவிரமாக செயற்படுகின்றனர் எனத் தெரிவித்தார். இலங்கைக்கான அடுத்தக்கட்ட தடுப்பூசிகளைப் பெறுவதற்கு முடிந்தவரை விரைவுபடுத்தும் முயற்சியாக, இந்திய அரசாங்கத்துடனும் சீரம் இன்ஸ்ட்டியூட்…
-
- 0 replies
- 252 views
-
-
கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர். நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் கொள்ளையிடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்ப…
-
- 0 replies
- 429 views
-
-
நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின! ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவர் அண்மையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குறித்த இருவரும் தீவிரவாத போதனைகளை முன்னெடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை குடும்பங்களுக்கே இவர்களால் தீவிரவாத சித்தாந்தங்கள் குறித்த போதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிக்கையில், “தீவிரவாதத்தைப் பிரசாரம் செய்ததற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் மாவனெல்…
-
- 0 replies
- 493 views
-