Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சரணடைந்த புலிகளின் தலைவர்கள் படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் குற்ற புலனாய்வுதுறையினரால் கைது! ..சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிக…

  2. வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக்கல்லூரி மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (16.02.2022 ) ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரும் கண்டுபிடிக்கப்பட்டு இது வரை தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அண்மையில் வவுனியா உயர் நீதிமன்றத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள வித்தியாவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் எனது மகளின் பாலியல் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்த ஹரிஸ்ணவியின் தந்தை கங்காதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வவுனியா உக்கிளாங்குளத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது 16 வயது பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி கட…

    • 2 replies
    • 379 views
  3. ஜி.எஸ்.பி சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ஆயினும் ஐரோபிய ஒன்றியத்துடன் சுமுக உறவுகளைப் பேணுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடுத்த முடிவின் படி ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடையை கொண்டு வருமானால் தமது முடிவு தவறானது என்பதைக் காலம் கடந்து உணர்ந்து கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். http://www.eelamweb.com/

  4. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு 44 சிங்கள, முஸ்லீம் முகாமைத்துவ உதவியாளர்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 44 முகாமைத்துவ உதவியாளர்களும் நேற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்களும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம்களும் யாழ். மாவட்டத்திற்கு முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ் செயலகத்தில் தற்போது தமிழரல்லாத அதிகாரிகளை அரசாங்கம் அதிகளவில் நியமித்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=100832&category=TamilNews&language=tamil

  5. இனி சிங்களத்தில் சீட்டு வழங்கப்படமாட்டாது -க. அகரன் போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு புரியாத சிங்கள மொழியில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தும், தனது மொழி உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்தும் வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த அன்று பிரசன்னோ என்ற இளைஞர்…

  6. தன், பிப்ரவரி 17, 2010 04:54 | மறைச்செல்வன், ஐரோப்பா “இலங்கையின் விவகாரங்களின் விசாரணைகளில் போதிய வளர்ச்சி இல்லை” – ஐ.நா உரிமைப் பற்றிய தலைமை சமீபத்தில் டப்ளின் நகரில் (U.N.H.C for Human Rights)> திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் , இலங்கையில் தேசிய மட்டத்தில் விசாரணைகள் (போர்க்குற்றம் பற்றிய) எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதை ஆமோதிப்பது போல, பி.பி.சி-க்கு அளித்தப் பேட்டியில், கோத்தபைய இராஜபக்சேவும், இலங்கையில் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் நடத்தத் தான் விடமாட்டேன் எனக் கூறினார். இந்த முக்கியமான இரு அறிக்கைகளையும் சேர்த்து நோக்குமிடத்து சர்வதேச “பூர்த்தி செய்கிற” (complimentary) சட்டங்களை அமுல் படுத்தப் போதிய அளவு சட்ட வலுவை அவை கொண்டிருக்கின்றன என வாஷி…

  7. ஹட்டனில் பழமை வாய்ந்த தேவாலயத்தில் விபத்து.! ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. குறித்த இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தேவாலயம் இந்த தோட்டத்தில் 31.05.1987ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இத் தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வ…

  8. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியில் போட் டியிடவுள்ள முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளு மன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் மற்றும் ஐந்து வேட்பாளர்களும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சிவநாதன் கிஷோரும் நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை இவர்கள் நேற்று முன் தினம் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது. நன்றி தமிழ்மிரர்

  9. ஆளும் தரப்பு எம்.பிக்­களை தேர்­த­லுக்கு தயாராகுமாறு பணிப்பு தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை விடுத்­துள்­ளது கூட்டு அர­சின் தலை­மைப்­பீ­டம். அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றின் விளக்­கம் சாத­க­மாக வராத பட்­சத்­தில் அதற்கு மாற்­றீ­டாக எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக் க­லாம் என்று உயர்­மட்­டத்­தி­னர் சுட்­டிக்­காட்­டி­ய­தை­ ய­டுத்தே அரச தலை­மைப்­பீ­டம் இந்­தப் பணிப்­பு­ரையை விடுத்­துள்­ளது. 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வைக் கைவி­ட­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மென சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தின் உயர்­மட்ட அதி­கா­ரி­கள் அரச தலை­ம…

  10. யாழ். நெடுந்தீவில் சிறுமியைக் கொலைசெய்த குற்றவாளியே ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண்ணையும் கொலை செய்துள்ளார் - விசாரணையில் அம்பலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24 ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பி…

  11. உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!! .ஜெனரல் சரத் பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவை தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேஜர் ஜெனரல் மானவடு ப…

  12. வடக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் செய்தி வெளியிட்டிருந்தது. இக்காரணங்களைக் குறிப்பிட்டு, இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, வடக்கு விவசாய அமைச்சரின் சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 30 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடா…

  13. மகிந்தவிற்கெதிரான போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவா் வைத்தியசாலையில் March 22, 2022 நேற்று முன்தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் வருகைக்கு எதிராக யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினாின் தாக்குதலுக்குள்ளான முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். காவல்துறையினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பேருந்தின் வாசல்படியிலிருந்து காவல்துறை…

  14. தெற்கு, மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், நாளை மறுநாள் (31) கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 2ம் திகதி வரை சிறிலங்காவிற்கு விஜயம் செய்வார். இவர், சிறிலங்காவில் அதிகாரிகளைச் சந்தித்து, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.…

  15. 4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இந்திய மீனவர்கள் கைது (adaderana.lk)

    • 0 replies
    • 287 views
  16. நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது. இங்கு யார் பிரிந்தார்கள்; பி…

  17. இலங்கை இராணுவப் படைவீரர்களுக்கு பிரேஸில் பயிற்சி அளிக்க உள்ளது. பிரேஸில் தேசிய யுத்தக் கல்லூரி, பிரித்தானிய இராணுவ உயர் கல்வியகம், பிரேஸி;ல் அமைதி காக்கும் செயற்பாட்டு நிறுவனம் மற்றும் வனயுத்த மத்திய நிலையம் ஆகியனவற்றில் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிரேஸிலின் பல்வேறு பயிற்சி நிலையங்களில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும், இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவும் பிரேஸிலுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த பயிற்சிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யுத்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் இணங்கியிர…

  18. அமைதிக்கான நோபல் பரிசுப் பட்டியலில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளநிலையில், இந்தப் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது. சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப…

  19. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர் – நாளை, பதவியேற்கின்றது... புதிய அமைச்சரவை? அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதங்கள் நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்…

  20. காரைநகரில் கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழப்பு காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 42 வயது மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/33615.html

  21. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின்போது முள்ளிவாய்க்காலில் அகற்றப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்கள் முள்ளி வாய்க்கால் கடற்கரையோரம்(பனையடி ) குவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இத்தகவலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் முள்ளிவாய்க்கால் மீனவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் இவ்வருட கரைவலை மீன்பிடியை(நாள் வலை ) தொடக்கி வைக்க சென்றிருந்த போதே, இப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்களை நேரில் அவதானித்துள்ளார். http://www.sankathi24.com/news/38743/64//d,fullart.aspx

  22. புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர், ”ஏகிய ராஜ்ய (Unitary State) என்ற சிங்களச் சொல், எக்சத் ராஜ்ய என்று புதிய அரசியலமைப்பில் மாற்றப்பட வேண்டும். சிறிலங்கா ஒருபோதும் ஒற்றையாட்சி நாடாக இருந்ததில்லை. தனித்தனியாக வாழ்ந்த பல மக்கள் குழுமங்கள் பிரித்தானியர்களால் ஒன்றாக கொண்டு வரப்பட்டனர். பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டது. எனவே, அனைத்து சமூகங்கள…

    • 0 replies
    • 227 views
  23. யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன் வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 Sampanthan நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததனை வரவேற்ற சம்பந்தன் யுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கூடவே யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் எடுத்துக்கூற தவறிவிட்டார். இதனால் போரிற்கு பிந்திய முதலாவது பாராளுமன்றில் தமிழர் சார்பாக தெரிவு செய…

    • 43 replies
    • 2.4k views
  24. ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு திடீர் விஜயம் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன் பிரகாரம் நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்…

  25. மக்கள் எழுச்சிப் போராட்டம், 18ஆவது நாளாகவும் தொடர்கிறது – அலரிமாளிகைக்கு முன்பாகவும்... இரவிரவாக போராட்டம்! ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 18ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர். அது மாத்திரமின்றி நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மாத்திரமின்றி மேலும் பல தொழிற்சங்கங்களும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.