Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில் காலிக்கடலில பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலிகடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

    • 4 replies
    • 803 views
  2. மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவம் வவுனியா நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, வவுனியா நகரின் பிரதான வீதிகளில், புதிய சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். மேலும் வவுனியா நகரிற்கு செல்லும் பிரதான நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கையில், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் வவுனியா ஹொரவப்பொத்தனை வீதி, மன்னார் வீதி, குருமன்காடு, ஏ9 வீதி தாண்டிக்குளம், ஈரட்டை, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை ரோன் கமரா ஊடாகவும் வவுனியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில்…

    • 0 replies
    • 367 views
  3. கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் பிராந்திய சுகாதார சேவையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரஜைகள் குழு சார்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சின்னராசா ஜீவநாயகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் …

  4. சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…! சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். ஒரு தடுப்பூசி 15 டொலர் என்ற அடிப்படையில் 210 மில்லியன் டொலர் செலவில் 14 மில்லியன் டோஸ் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், பங்களாதேஷினால் ஒரு தடுப்பூசி 10 டொலர் அல்லது 5 டொலர் குறைவாக இதேபோன்ற அளவை அதாவது 14 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்க முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு ஏன் வ…

  5. நாட்டின் மொழி கொள்கையை... பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகைகள் காரணமாக கொழும்பு துறைமுக நகர நிறுவனம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது. கொழும்பு துறைமுக நகரம் கட்டுமானத்தில் உள்ளது என்றும் தள ஊழியர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களின் நலனுக்காக அடையாள பெயர் பலகைகளும் ஒப்பந்தக்…

  6. தோட்ட தொழிலார்களுக்கு உடன் தடுப்பூசியை வழங்குங்கள் அந்நிய செலவாணியை பெற்றுத் தருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுங்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலுமே தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்படுகின்றார்கள். தொற்றாளர்கள் பலர் தங்களுடைய வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் தொற்றாளர்களை அனுமதிப்பதற்க…

    • 0 replies
    • 212 views
  7. கொரோனா காலத்தில் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு 34 Views மஹியங்கனை பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் அடிப்படை உணவு வசதிகளின்றி சிரமத்தினை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆதிவாசிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஆதிவாசிகளிடம் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மஹியங்கனை பகுதியில் 400 குடும்பங்களை சேர்ந்த 2500 ஆதிவாசி அங்கத்தவர்ள் வாழ்ந்து வருகின்றோம். நாட்டில் தற்போது ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் எமக்கு இல்லை. ஆனால் ஆதிவாசிகள் வாழும் குறித்த பகுதிக்கு, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் அவ் இடங்களுக்கு வருவதில்லை. …

  8. கோப்பாய் காவல்துறையினருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 32 Views சகோதரர்களான அக்கா தம்பியை கட்டி வைத்து கடுமையான சித்தரவதை செய்ததாக கோப்பாய் காவல்துறையினருக்கு எதிராக, பாதிக்கப் பட்டவர்களால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகநபரான புத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இருபாலை பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தலைமறைவாகி இருப்பதாக, கோப்பாய் காவல்துறையினர் கடந்த 21 ஆம் திகதி குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு அந்த நபர் இல்லை என்றதும் திரும்பி சென்றுவிட்டு அன்றைய தினம் இ…

  9. பெயர் பலகையில் சிங்களத்தை நீக்கியது இந்தியா 99 Views இலங்கையின் தென்பகுதியை ஆக்கிரமித்துவரும் சீனா அதன் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழை நீக்கி சீன மொழியை புகுத்தி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது. இது தற்செயலாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை காப்பாற்ற இந்தியா முயன்று வருகின்றதா என கொழும்ப…

  10. நடைப்பயிற்சிக்காக வீதிக்கு வந்த அதிகாரியின் மனைவி; தடுத்த பொலிஸாருக்கு இடமாற்றம் 22 Views பயணத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி வீதியில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் கொழும்பில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றுள்ளது. மருதானையில் உள்ள பொலிஸ்சோதனைசாவடியில் பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் மேலதிகாரியின் மனைவி நடைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிமறுத்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. மருதானை ஆனந்தா கல்லூரி சந்தியில் பொரளை மருதானை வீத…

  11. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம் 2 Views மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் …

  12. மட்டு. ஏறாவூரில் அரச காணியில் மக்களை குடியேற விடாமல் தடுத்து நிறுதிய அதிகாரிகள் 30 Views மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரச காணியில், நீண்ட காலமாகவே யுத்தப்பாதிப்புளால் நிர்க்கதியாக உள்ள மக்கள் குடியேற முயற்சித்தபோது மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், செல்வந்தர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கும் போது யுத்ததினால் பாதிக்கப்பட்டு இருக்க இடமின்றி பெருமளவான தமிழ் மக்கள் வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் தெரிவித்தார். மட்…

  13. பயணத்தடையில் ஜூன் 7 வரை எவ்வித தளர்வுமில்லை – விசேட குழுவின் கூட்டத்தில் முடிவு 31 Views தற்போது நடைமுறையில் இருக்கும் பயணத்தடையை ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தளர்த்தாதிருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு விசேட குழு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பயணத்தடையின் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணத்தடையை தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கடந்த 25ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில் ப…

  14. வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் அடைக்கலநாதன் 50 Views வடக்கு- கிழக்கு மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க தவறிவிட்டது. அதாவது அரசாங்கத்தின் முறையான திட…

  15. தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் ; ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் (சி.எல்.சிசில்) கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் நேற்று(28.05.2021) தொலைபேசியில் உரையாடிய போதே கடற்றொழில் அமைச்சரால் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப…

    • 12 replies
    • 578 views
  16. யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை May 29, 2021 யாழ் மாவட்டத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அரசினால் நாடு பூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அரசின் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள…

  17. வெடிபொருட்களுடன் முன்னாள் போராளி யாழில் கைது! May 28, 2021 வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருள்களுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாய் ஒருவரை தாக்கி விட்டு தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றில் சரணடைந்து அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியே அவரது மீன்வாடியில் வைத்து இன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினா் தெரிவித்தனர். …

    • 4 replies
    • 822 views
  18. இலங்கை துறைமுக நகர பொருளாதர ஆணைய சட்டம் நிறைவேற்றம்: சீன ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 மே 2021, 09:03 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொழும்பு ஆழ்கடல் துறைமுகம். கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (2021 மே 27) கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவை அமைக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்…

  19. (எம்.மனோசித்ரா) கொழும்பு துறைமுகத்திற்கு 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் அதிகரிக்குமாயின் அதிலுள்ள எரிபொருள் கடலில் கலப்பதை தடுக்க முடியாது. தற்போது நிலவும் காலநிலை காரணமாக உபகரணங்களைப் பயன்படுத்தி எரிபொருள் கடற்பரப்பில் பரவுவதை தடுப்பதும் சிரமமாகும். எனவே எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தூய்மைப்டுத்துவதே தற்போதுள்ள ஒரே மாற்று வழி என்று தேசிய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹன்டாபுர தெரிவித்தார். இதேவேளை தீப்பரவலால் நைதரசன் வாயு வெளியேறியுள்ளமையால் அமில மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு கப்பலிலிருந்து விழுந்து கரையொ…

  20. இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள், முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம் -மனோ 12 Views முன்னணியில் இருந்த எமது நாட்டின் வீழ்ச்சிக்கு அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்து வருகின்றமைதான் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார். அவரது ஊடக அறிக்கையிலேயே் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியு…

    • 1 reply
    • 392 views
  21. நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் திட்டம் நாட்டில் நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இம்முறை இந்த கொடுப்பனவு எவ்வளவு மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அமைச்சரவை மற்றும் உரிய பிரிவுகள் ஒன்றுக்கூடி இது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளும்.இந்த கொடுப்பனவினை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழ…

  22. “பி.சி.ஆர் விவகாரம்” – யாழ்.பல்கலை மருத்துவபீடத்தின் குற்றச்சாட்டுக்கு ஆ.கேதீஸ்வரன் பதில் 78 Views கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கோவிட்-19 தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்திகள் வெளிவந்துள்ளதை அவதானித்து கவலையடைவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவிட் பெரும் தொற்று இலங்கையில் ஆரம்பித்த காலத்தில் வடமாகாணத்தில் கோவிட் தொற்றுக்குரிய பிசிஆர் பரிசோதனை வசத…

  23. இந்திய உயர்ஸ்தானிகரிற்கு க.வி.விக்னேஸ்வரனின் அவசர கடிதம் 77 Views கோவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது என பிரதி யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அவசரக் கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வகையில் அதிகளவிலான கோவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கோவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக எமது வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது. இவ் ஆபத்தான நிலமைபற்றி யாழ் இந்தியத் துண…

  24. கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள இரு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும் எனினும், குறித்த இரண்டு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க இக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் புது தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போது, இதனைத் தெரிவித்த அவர், இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1,4…

  25. தீ பரவியுள்ள ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலிலிருந்து வௌியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளது என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தர்ஷனி லஹதபுர தெரிவித்தார். தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வௌியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாகவும், கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் அமில மழை பெய்யக்கூடும் என அவர் கூறினார். இதனால், வீடுகளுக்கு வௌியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் சாத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.