Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நானோ இந்த அரசாங்கமோ ஈஸ்டர் ஞாயிறை விற்று அதிகாரத்துக்கு வரவில்லை. ஈஸ்டர் தாக்குதலை எம் மீது சுமத்தி அரசியல் இலாபம் பெற சிலர் முயற்சிக்கின்றனர். இந்த தாக்குதல் 2019ம் ஆண்டு நடந்தது. இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (6) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் உள்ளிட்ட அரசே பொறுப்பு. சிலர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது இதனை சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். 19வது திருத்தத்தை கொண்டு வந்து அவரது அதிகாரத்தை குறைத்தோர் இப்போது மௌனமாக உள்ளனர். தாக்குதலுக்கு பொறுப்பானோர் யார் என்பது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெளிவா…

    • 2 replies
    • 1k views
  2. அம்பாறை – பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு, அதில் பங்கேற்ற ஆறு பேருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பமாகி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர தலைமையிலான பொலிஸ் குழு நீதிமன்றத் தடையுத்தரவை இன்று (6) மாலை வழங்கியுள்ளது. அத்துடன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை அவ்விடத்தில் பொலிஸார் வாசித்துக் காட்டினர். இதன்போது, அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட …

  3. 7வது நாளாக நல்லூர் பின் வீதியில் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 34 Views இன்றைய தினம் 7வது நாளாக நல்லூர் பின் வீதியிலே சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஆரம்பித்த இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம், தற்பொழுது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பங்களிப்போடு தற்பொழுது நல்லூரிலே சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. Video Player 00:00 00:18 …

  4. மியன்மார் நிலைமை நாளை இங்கேயும் வந்துவிடக்கூடாது – கரு ஜயசூரிய எச்சரிக்கை 28 Views மியன்மாரின் ஜனநாயக விரோதஇராணுவ அடக்கு முறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை இலங்கைக்கும் வந்து விடக்கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நிகழ்கால செயற்பாடுகள், மாகாணசபை தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். அவர் ம…

  5. கூட்டமைப்பை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்! - சந்திரநேரு சந்திரகாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுச் சென்றவர்கள் அந்தக் கட்டமைப்புக்குள்ளே மீண்டும் வந்து இணைந்து ஒற்றுமைப்பட வேண்டும். போராட வேண்டும். அதனை விடுத்து புதிய அமைப்பை, கட்சியை உருவாக்குவது ஒரு ஏமாற்று வேலைத்த திட்டமாகவே இருக்கும் என்று அம்பாரை மாவட்ட முன்னாள் எம்பி சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று (5) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “பல கட்சிகளாக நாங்கள் பிரிந்து போகப் போக பேரினவாத சக்திகளுக்கும் அரசுக்கும் எங்களைப் பிரிப்பதற்கு இலகுவாகிப் போய்விடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையி…

  6. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021 அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். இன்று (6) பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த போராட்டமானது 2 ஆவது நாள் இவ்விளைஞனின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகி உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை(5) காவல்துறையினா் குறித்த இடத்திற்கு சென்று நீதிமன்ற கட்டளையை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பெற்று கொள்ளுமாறு வற்புறுத்த…

  7. கட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே ! 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி! March 6, 2021 தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனையே என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் 10 உறுப்பினர்களை பதவி வறிதாக்கபட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனிடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் மாநகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பா…

  8. பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் -யாழ். ஊடக மன்றம் கண்டனம்! 25 Views யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவிற்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரால் இன்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு யாழ் ஊடக மன்றம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது. தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றினைச் சேர்ந்த உறுப்பினர் அருண் சித்தார்த் என்பவரால் ஒருங்கமைக்கப்பட்ட பேரணி ஒன்று இன்று 2020.03.05 யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அப்போது அப் பேரணி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசா தனது கடமையை செய்துள்ளார். அவரது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக குறித்த அருண் சித்தார…

  9. (ஆர்.யசி ) கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டி அறிக்கையை இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடவும் சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களில் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தேசிய அழுத்தங்கள் காரணமாக தற்போது உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனினும் நல்லடக்கம் செய்ய முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள…

    • 24 replies
    • 3.4k views
  10. இலங்கையில் டீன் ஏஜ் பெண்பிள்ளைகளை இலக்கு வைக்கும் கும்பல். டெய்லி மிரர் பத்திரிகையில் இந்த கட்டுரை வந்துள்ளது. 15, 16 வயது பெண்களை சந்திக்கும், அவரது ஆண் நண்பர்கள், புத்தம்புதிய போனை கொடுத்து, உனக்கு வேண்டுமா என்று கேட்ப்பார்களாம். ஆம் என்று ஆர்வத்துடன் சொல்லும் பெண்ணிடம், அவரது, அந்தரங்க படங்களை பிடித்து கொண்டு வந்து காட்டினால் போன் உனக்கு என்று சொல்லி, படங்களை, போர்ன் தளங்களில் அப்லோட் செய்து பணம் சம்பாதித்து, பெண்ணுக்கு கொடுத்த போனின் பணத்தினையும் எடுத்து விடுகிறார்களாம். ஆனால், பெண்ணுக்கு, அதன் பின்னர் தான் தலைவலிகள் ஆரம்பமாகும் என்கிறது கட்டுரை. ஒரு பெண், அது போன்ற தளங்களில் தனது படம் உள்ளது என அறிந்து, போலீசாரிடம் முறைப்பாடு செய்ய போக, அவரது…

  11. பாராளுமன்ற உறுப்பினர் திரு M.A. சுமந்திரன் அவர்களுடனான T tv யினரின் "பருவகால கலந்துரையாடல்

  12. "கொரோனா" தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணைதீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை இரணைதீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இரணைதீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். …

  13. கொரோனா தொற்றால் உயிரிழந்த மேலும் 7 பேரின் சடலங்கள் இன்று ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றினால் மரணமாவோரின் சடலங்களை நல்லடக்கம் செய்ய முடியும் சென்ற வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் முதலாவது சடலம் நல்லடக்கத்திற்காக அடக்கத்திற்கான இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஓட்டமாவடி மஜ்பா புரத்திற்கு இன்று மாலை எடுத்துச்செல்லப்பட்டது. மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணின் ஜனாசா கொவிட் தொற்றினால் மரணமடைந்து ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஜனாசாத் தொ…

  14. ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது – மனோ கணேசன் 39 Views உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது, எமது பல…

  15. மஹிந்த கொடுத்த வக்குறுதிதான் இப்போது கழுத்தை நெரிக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல 29 Views ஜெனீவா மனிதவுரிமைகள் பேரவைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த உறுதிமொழியே தற்பொழுது பாறாங்கல்லை போன்று எம்மடைய கழுத்தை நெரிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அதேவேளை, சர்வதேசம் வரை இந்த விவகாரத்தை கொண்டு சென்றது மஹிந்த தரப்பினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: “யுத்தம் நிறைவடைந்ததையடுத்து பன்கீன் மூன் இலங்கைக்…

  16. மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு ஒத்தி வைப்பு 21 Views மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பண்ணையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லாவினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பிரதிவாதிகளுக்கான தமது கருத்துகளை பதிவுசெய்வதற்கான தவணை வழங்கப்பட்டிருந்ததாகவும் இன்றைய தினம் 13வது 14வது பிரதிவாதிகள் தமது கருத்துகளை பதிவுசெய…

  17. சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் ஆரம்பம் 22 Views இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பொத்துவில…

  18. (இராஜதுரை ஹஷான்) தேசிய வெசாக் பண்டிகையை நிகழ்வுகளை இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி நயினாதீவு நாகவிகாரையில் முன்னெடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தசாசன , கலைகலாச்சார அலுவல்கள் அமைப்பின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை | Virakesari.lk அரச பொசன் பண்டிகை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 65 பௌத்த விகாரைகள்,35 பிரிவெனா பாடசாலைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து அரச பொசன் பண்டிகைக்கான நிகழ்வுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை அரச பொசன…

  19. தமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் இந்தியா இலங்கைக்கு சகல விடயங்களிலும் விட்டுக்கொடுத்தே செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்திலும் அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கும் தாம் விரும்பியபடி தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கும் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க. பிறேமச்சந்திரன் ஊடக அறிக்கையின் மூலம் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இந்தியா இலங்கை அரசாங்கத்திற்க…

  20. விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் தீர்மானம் By சயனொளிபவன் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட வரைவு …

  21. கிழக்கு மாகாணத்தில் குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்து அழித்து குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார். இந்நிலையில் குறித்த சமபவம் தொடர்பில் தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். …

  22. ஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன? March 4, 2021 ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்த நாட்களில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைபுத் தீர்மானம் குறித்து இந்த வாரம் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. பூச்சிய வரைபு என அழைக்கப்படும் இதற்கு மார்ச் 11 வரை திருத்தங்களை முன்வைக்க முடியும். இறுதி வரைபுக்கான வாக்கெடுப்பு மார்ச் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பெப்ரவரி 19ஆம் திகதி ஐக்கிய நாடுக…

  23. இலங்கையில் இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்! நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக BBC சிங்கள செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்தில், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பிரமுகர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவரின் தகவலை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வயதானவர்கள் மற்றும் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆப…

  24. பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது. இதன்படி, ஐ.நா. வெளியிட்டுள்ள பதிலில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைபு குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவில்லை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது. ந…

  25. எம்.மனோசித்ரா மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரம் , கலாசார திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது , இந்துக்களின் விஷேட தினமான மகா சிவராத்திரி இம்மாதம் 11 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான தயார்படுத்தல்களை சிறப்பாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்துக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்து மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கோவில்களுக்குச் சென்று கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்க தீர…

    • 4 replies
    • 495 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.