ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
யாரை திருப்திப்படுத்த ரிஷாட்டை கைது செய்தீர் மகேஸ்வரி விஜயனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கதென்றும் சாடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரான அமீர் அலி, யாரை திருப்திப்படுத்துவதற்கு ரிஷாட் கைதுசெய்யப்பட்டார் என வினவினார். வௌ்ளவத்தை சுப்புன் வர்த்தகக் கட்டடத்தில், நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இது யாரை திருப்திப்படுத்துவதற்காக செய்யப்பட்டது என்ற வினா எழும்புகின்றது என்றும் அதாவது இத்தாக்குதல் குறித்து 22ஆம் திகதி முக்கிய அறிவிப்பை விடுக்கவுள்ளதாக பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த போது, அவர் முக்…
-
- 0 replies
- 686 views
-
-
ஒரே வருடத்தில் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன் நான் வந்து ஒரு வருட காலம் தான் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் இன்னமும் உங்கள் வீட்டில் இருக்கும் நீங்கள் போய் எடுத்து பாருங்கள். ஆயிரம் ரூபா எடுத்து தருவதாக சொன்னேன் அதனையும் முடித்து காட்டியுள்ளேன் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12 தனி வீடுகளை கட்டி அமைக்க நேற்று (25) அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும்…
-
- 0 replies
- 349 views
-
-
மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை தற்போதைய வடிவத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் கறுப்பு பட்டியலில் இணையும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு சர்வதேச பண சுத்திகரிப்பு சமந்தமான விடயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்ட நிலையில் நல்லாட்சி அரசாங்கமே அந்த நிலைமையில் இருந்து மீட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்ட…
-
- 1 reply
- 292 views
-
-
தந்தை செல்வாவின் 44ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு (சி.எல்.சிசில்) யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன…
-
- 1 reply
- 490 views
-
-
தமிழர்கள் மத்தியில் பொய்த்துப் போன கருணா – வியாழேந்திரனின் வாக்குறுதிகள் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் தேர்தல் காலத்தில் பல அரசியல் முக்கியஸ்தர்கள் வழங்கிய வாக்குறுதிகள் பொய்துப் போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும், கல்முனை பிரதேச செயலகத்தை ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பெற்றுத்தருவோம் என்ற விடயத்தை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மாதங்கள் கடந்து எத்தனையோ வருடங்களும் கடந்து விட்டன. அதைப்பற்றி பேசுவதற்கு இவர்கள் பயப்படுகிறார்கள். அதேபோன்று தான் கருணாவும் கூட தான் வெற்ற…
-
- 1 reply
- 313 views
-
-
அதிகரிக்கும் கொரோனா தொற்று - இந்து ஆலயங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இந்து ஆலயங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆலயங்களில் வழமையான பூசை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவித கூட்டுச் செயற்பாடுகளையோ, ஒன்றுகூடல்களையோ அனுமதிக்கக் கூடாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயங்கள் மற்றும் அதன் வளாகங்களில் சமூக இடைவெளியைப் பேணி, ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கை 50ஆக வரை யறுக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/…
-
- 0 replies
- 236 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் அரங்கு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பை விமான நிலையம் வெளியிட்டுள்ளது.இன்று முதல் மீள அறிவிக்கும் வரை குறித்த பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் புத்தாண்டுக்குப்பின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் செல்கை முனையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) …
-
- 0 replies
- 216 views
-
-
யாழில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணியில் மீண்டும் அறிவித்தல் பலகை நாட்டிய இராணுவம் யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளது. பருத்தித்துறை பொன்னாலை வீதியில், காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர் பிரிவில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக 27 ஆண்டுகளாக இருந்து 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலத்திலேயே இவ்வாறு இரவோடு இரவாக இராணுவத்தினர் அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர். இவ்வாறு அறிவித்தல் பலகை நாட்டியுள்ள காணியானது, இருவருக்கு உரித்தான 8 பரப்புக் காணியென்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பகுதி விடுவிக்கப்பட்ட பின்னர், காணி உரிமைய…
-
- 1 reply
- 299 views
-
-
யாழ்ப்பாணத்தில் விபத்து: இராணுவத்தினர் 15 பேர் காயம் யாழ்ப்பாணம்- உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சேதமடைந்த கன்ரர் வாகனம்,இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2021/12…
-
- 0 replies
- 311 views
-
-
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்குள் மோதல்: உதவி செயலாளர் வைத்தியசாலையில் சிகிச்சை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற உட்கட்சி மோதலில், அக்கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கூமாங்குளம் பகுதியில் வைத்து, கட்சியின் இளைஞரணியினரை சேர்ந்த சிலருக்கும் உதவி மாவட்ட செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பில் நிறைவடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த உதவி மாவட்ட செயலாளர், வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 296 views
-
-
மே தினம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க அரசு திட்டம் – ஜே.வி.பி. 13 Views மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாங்கள் எந்தத் தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை அனுஷ்டிப்போம் என உறுதி பூண்டுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இம்முறை மே தினத்தை கொண்டாடு வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எனினும், இந்த அரசானது எமது மே தின நிகழ்வுகளைத் தடை செய்வதற்குப் பல்வே…
-
- 0 replies
- 225 views
-
-
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்! முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பபையடுத்து, 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். இதேவேளை, வெடிப்பு இடம்பெற்ற பகுதி அண்மையில் சுத்தம் …
-
- 0 replies
- 295 views
-
-
யாழில் 7 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் நீண்டகால கடத்தல் குழு கைது! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், குடு மற்றும் கஞ்சா கடத்தல் செய்துவந்த பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள், யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடல் வழியாக போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி நீண்ட காலமாக யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தக் கடத்தல்காரர்கள் இன்று (ஞாயிற்றுக…
-
- 0 replies
- 346 views
-
-
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கல் : ஆளும் தரப்புடன் கூட்டமைப்பு முக்கிய பேச்சு : சமலுடனான சந்திப்பில் இணக்கம் (ஆர்.ராம்) கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கியமை தொடர்பாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுடன் எதிர்வரும் மே 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளது. அதுவரையில், கல்முனை தமிழ் பிதேச செயலகத்திற்கான புதிய பெயர்ப்பலகை உள்ளிட்ட இதர செயற்பாடுகள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும்ரூபவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான செல்வம் அடைக்கலநாதன்ரூபவ் கோவிந்தன் கருணாகரம், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்…
-
- 2 replies
- 377 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாகும் சாத்தியமில்லை :கோட்டா அரசும் சந்தர்ப்பத்தினை நழுவிட்டுவிட்டது - விஜயதாஸ ராஜபக்ஷ (ஆர்.ராம்) தற்போதைய அரசியல் சூழமைவுகளின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கு சாத்தியமில்லை என்று ஆளும் தரப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்…
-
- 1 reply
- 542 views
-
-
மாகாணசபைத் தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை - திஸ்ஸ விதாரண உறுதி (இராஜதுரை ஹஷான்) மாகாணசபை தேர்தலை இவ்வருடம் நடத்தவதற்கான சாத்தியம் கிடையாது. தேர்தல் முறைமை குறித்து பிரதான கட்சிகளின் ஆலோசனைகளை மாத்திரம் கோராமல் சிறு கட்சிகளின் ஆலோசனைகளையும் கோருவது அவசியமானது. மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த லங்கா சமசமாஜ கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல சிக்கல் நிலை காணப்படுகிறது. . தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்…
-
- 2 replies
- 276 views
- 1 follower
-
-
முடக்கலுக்கு செல்வது பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் - ஜனாதிபதி கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு இறுதி தீர்வு தடுப்பூசி மாட்டுமே ஆகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரி…
-
- 0 replies
- 223 views
-
-
வடபகுதி மீனவர்களுக்கு இராணுவத் தளபதி பிரியந்த பெரேரா எச்சரிக்கை 34 Views இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் வடபகுதி மீனவர்களுக்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எசசரித்துள்ளார். இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேணிவரும் தொடரபுகள் காரணமாக வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எச்சரித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மாவட்டத்திலுள…
-
- 1 reply
- 363 views
-
-
கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை திட்டமிட்டு குறைத்த அரசாங்கம் -கோவிந்தன் கருணாகரம் 16 Views கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு தமிழர்களின் இனப்பரம்பலை கடந்த காலத்தில் குறைத்த அரசாங்கம், இன்று இறுதியாக 74வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைப்பதற்காக மிகவும் சாதுரியமாக தங்களது காரியங்களை எல்லைப்புறங்களில் அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குற்றம்சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு,கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழ…
-
- 0 replies
- 349 views
-
-
சர்வதேச நிபுணர்களின்... பிரத்யேக கண்காணிப்புக் குழுவில், இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு!!! ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது தீர்மானத்தின் விதிகளை விரைவாக அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமீபத்தில் கூறியது. அதன்படி போரின் போது மற்றும் அதற்குப் பிறகான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தக…
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள்... ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காலாவதியாகின்றன!! இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற கிட்டத்தட்ட அரை மில்லியன் இலங்கையர்களில் 350,000 பேருக்கு செலுத்தக்கூடிய பங்குகள் மட்டுமே தற்போது கையிருப்பில் காணப்படுகின்றது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தற்போது வரை மொத்தம் 925,242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் குறித்த தடுப்பூசியின் 356,000 அளவுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த பங்குகளில் …
-
- 0 replies
- 210 views
-
-
முல்லைத்தீவு: தனிச்சிங்களத்தில் வழங்கப்பட்ட சாரதி அனுமதி விண்ணப்ப படிவம் 15 Views முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக சென்ற வேளை தனிச் சிங்களத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளமையால் அதை நிரப்பமுடியாத நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்மக்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் எல்லை கிராமமான துணுக்காயில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் துரத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக சென்ற பெண் ஒருவருக்கு…
-
- 3 replies
- 615 views
-
-
கொழும்பு துறைமுக நகரம் என்பது முற்றுமுழுதாக சீனாவிற்காக இலங்கை தீவிற்குள்ளேய உருவாக்கப்பட்ட மற்றுமொரு தீவு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். எமது ஐ.பி.சி தமிழின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் விஜயதாஸ ராஜபக்ச யாரை காப்பாற்றியதாக பெருமைக் கொண்டாரோ தற்போது அவரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது விஜயதாஸ ராஜபக்ச ஜனாதிபதியை பற்றி கூறிய அனைத்து விடயங்களும் உண்மையானவையே என்றும் தெரிவ…
-
- 1 reply
- 598 views
-
-
நாடாளுமன்றின் குறைந்த செயற்திறன் கொண்டவர்களாக அடையாப்படுத்தப்பட்ட 10 எம்பிகள் பட்டயலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான இணைய தளம் வெளியிட்டுள்ளது. இதன்படி பொது ஜன பெரமுன சார்பில் கருணாதாச கொடிதுவக்கு, நிபுண ரணவக்க, மர்ஜான் பலீல், ஜானக பண்டார தென்னகோன், ட்ரிரன் அலெஸ் ஆகியோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கு.திலீபன்,முஸ்லிம் தேசிய கூட்டணி சார்பில் அலி சப்பிர் ரஹீம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் சி.சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் ஆகியோர் இந்த 10 பேரில் காணப்படுகின்றனர். குறைந்த செயற்திறன் கொண்ட எம்பிகள் பட்டியலில் தமிழர் மூவர்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 5 replies
- 776 views
-
-
ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்: இதை மறைக்க பாடசாலை நிர்வாகத்தினர் செய்த காரியம்- யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில் மாணவனின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு வணக்கம் சொல்லவில்லையெனக் கூறியே ஆசிரியர் அடித்துள்ள நிலையில், கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை மறைப்பதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் மேற்கொண்ட செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கணவனிடம் இருந்து பிரிந்துள்ள நிலையில் ஊர்காவற்துறையில் வசிக்கும் பெண்ணொருவர், இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில், தனது பிள்ளையை ஊர்காவற்று…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-