Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனீவா தீர்மானத்தின் ஒரு சில விடயங்களுக்கு உள்ளக பொறிமுறையின் கீழ் தீர்வு - சரத் வீரசேகர (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 30 வருட கால சிவில் யுத்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காகவே முன்னெடுக்கப்பட்டது. விடுதலை புலிகளின் போராளிகள் குறித்து மாத்திரம் கவனம் கொள்ளும் மேற்குலகம் யுத்தத்தில் உயிரிழந்த 29 ஆயிரம் படைவீரர்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் விடுதலை புலிகளின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலைக்குரியது. …

  2. உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் 2021 – இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கை 129ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து முடி சூடியுள்ளது. இதற்கடுத்து, டென்மார்க் (2), சுவிற்சர்லாந்து (3), ஐஸ்லாந்து (4), நெதர்லாந்து (5), நோர்வே (6), சுவீடன் (7), லக்சம்பேர்க் (8), நியூசிலாந்து (9) மற்றும் ஆஸ்திரியா (10) ஆகிய நாடுகள் முறைய இரண்டு முதல் 10 இடங்களில் உள்ளன. மே…

    • 1 reply
    • 405 views
  3. அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய த.தே.கூட்டமைப்பும் நல்லாட்சி அரசும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளது!- பிள்ளையான் By கிருசாயிதன் அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றஞ்சாட்டினார். அதேவேளை, பெரும்பான்மையின மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். களுதாவள…

  4. யாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு யாழ்ப்பாண காவல்நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையில் இடம் பெற்ற காவல்துறை வீரர்கள் தின நிகழ்வில், யாழ்ப்பாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் காவல்துறைக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு கடமையின் போது உயிரிழந்தகாவல்துறையினருக்கு 2 நிமிட அகவணக்கம் இடம்பெற்று உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் நினைவாக மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரிவு க்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் யாழ்ப்பாண உதவி காவல்துறை அத்தியட்சகர்கள்.ஓய…

  5. 38 வருடங்களாக வாழ்ந்த வீடு... பிக்குகளால் அழிப்பு! கண்ணீர் மல்க வாக்குமூலம்! சிறிலங்காவில் பெளத்த இனவாத அரச ஆதரவுடன்... பிக்குகளால் நிர்மூலமாக்கப்பட்ட குடியிருப்பு உரிமையாளரின் வாக்குமூலம்... சிறிலங்காவில் அரச ஆதரவுடன் இடம்பெறும்... சிங்கள பெளத்த பயங்கரவாதம்! பிக்குகளால் நிர்மூலமாக்கப்படும் தமிழரின் குடியிருப்பு!

  6. முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (20.03.2021) மாலை இடம்பெற்றது. அந்தவகையில், நாயாறு பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டுவரும் சிலாபம் கறுக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் கருக்குப்பனை மீனவர் பிரதிநிதிகளும் இணைந்த குழு ஒன்றினை அமைத்து, அனுமதிக்கப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது எனவும் பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நாயா…

  7. சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவடிஓடை அணைக்கட் சேவிஸ் வீதி மற்றும் வாவிச்சேனை அணுகு வீதி – கொடுவாமடு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, இருவரும் நேற்றைய தினம் குறித்த பகுதிகளுக்கு சென்றிருந்தனர். இதன்போது குறித்த இருவரையும் அச்சுறுத்தும் வகையில் சிலரின் செயற்பாடு அமைந்திருந்தது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமை…

  8. (நா.தனுஜா) இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலக்கு வைக்கப்படும் இலங்கையின் முஸ்லிம் சமூகமும் அதிகரித்துவரும் ஓரங்கட்டப்படலும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்ப…

    • 1 reply
    • 315 views
  9. பதுளை மாவட்டத்தில் பேருந்து விபத்து – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு 40 Views இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்து, 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக காவல்துறையினரின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. லுணுகல பகுதியிலிருந்து தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலைய…

  10. பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு ரத்து லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்படி, அந்த நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்பட்டு மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ குறித்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் முன்னால் விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினருக்க…

    • 0 replies
    • 557 views
  11. மலையக மக்கள் முன்னணியில் இருந்து அரவிந்தகுமார் எம்.பி நீக்கம் டி.ஷங்கீதன் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றில் இருந்தும் வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் முன்னணியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் முன்னணியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னியின் மத்தியக் குழுக் கூட்டம், நேற்று மாலை ந…

    • 0 replies
    • 354 views
  12. ஜஹ்ரானிற்கு சம்பளம் வழங்கியமை குறித்து மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் – ஜேவிபி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிமிற்கு சம்பளம் வழ ங்கியமை குறித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜேவிபியின் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையை தேசியப்பட்டியலிற்கு நியமித்தமை குறித்து உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு ஜேவிபியிடமிருந்து எந்த வாக்குமூலத்தையும் பெறவில்லை என தெரிவித்துள்ள அவர் தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிம் உட்பட 21 பேருக்கு சம்பளம் வழங்கியமைக்காக மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த …

    • 0 replies
    • 411 views
  13. உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் 2021 – இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? Twitter உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கை 129ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து முடி சூடியுள்ளது. இதற்கடுத்து, டென்மார்க் (2), சுவிற்சர்லாந்து (3), ஐஸ்லாந்து (4), நெதர்லாந்து (5), நோர்வே (6), சுவீடன் (7), லக்சம்பேர்க் (8), நியூசிலா…

    • 0 replies
    • 373 views
  14. ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தி ஹிந்துவிற்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வாக்களிப்பதா அல்லது விலகுவதா என தீர்மானிப்பது இந்தியாவின் விடயம் ஆனால் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என கூறினார். 2020 …

    • 0 replies
    • 306 views
  15. காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளை சந்திக்கும் முயற்சி மாயை! அரசாங்கம், தங்கள் கைவசம் இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவித்து விட்டு மக்களுடன் பேசுவதற்கு வர வேண்டும் என தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திக்க அழைத்தமை தொடர்பாக இன்று (19) கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “யுத்தம் முடிந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் சர்வதேச நீதியை நாடி நிற்கின்றனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதுவும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்ற நிலையில் தற்போத…

  16. தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாடு - அனைவரையும் பங்குபற்ற அழைப்பு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு - கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தமிழர் தாயகத்தை இழத்தல் : தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம் காணுதலும்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை) சூம் (Zoom) தொழிநுட்பம் மூலம் இந்த மாநாடு நடைபெறும். Zoom Video Webin…

    • 1 reply
    • 482 views
  17. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் வகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் …

  18. “HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு! March 20, 2021 இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தாம் நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். HRC இன் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிப்பதா அல்லது விலகுவதா என்பது “அவர்கள் தீர்மானிக்கும் ஒரு விடயம்”, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள், தீர்மானத்தை இந்தியா “தெளிவாக” ஆதரிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும் என, வரவிருக்கும் HRC இ…

  19. அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு 19 மார்ச் 2021 இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இலங்கையின் நுவரெலியா நகரை அண்மித்து அமைந்துள்ள சீதா-எலிய கோயிலிருந்தே இந்த கல் கொண்டு செல்லப்படுகிறது. சீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல் நேற்றைய தினம் அலுவல்பூர்வமாக கையளிக்கப்பட்டது. கொழும்பு மயூரா பிளே…

    • 9 replies
    • 815 views
  20. பசறை விபத்தில் பஸ் சாரதி உட்பட 9 ஆண்களும் 6 பெண்களும் பலி;இருவர் கவலைக்கிடம் பதுளை- செங்கலடி வீதி 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பசறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி கே.எம். சமரபந்து தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்ப…

  21. முல்லைத்தீவில் மீன் பிடிக்க தென்னிலங்கை மீனவர்களுக்கு அனுமதி 29 Views முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதில் நாயாறு பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டுவரும் சிலாபம் கருக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் கருக்குப்பனை மீனவர் பிரதிநிதிகளும் இணைந்த குழு ஒன்றினை அ…

  22. பொலிஸ், இராணுவத்தின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமிழர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25 பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. குறிப்பாக காந்தி பூங்கா, மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடத்துதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழு…

  23. உதயன் பத்திரிகையில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கில் இருந்து சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், செய்தி ஆசிரியர் திலீப் அமுதன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குறித்த வழக்கும் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம், குறித்த இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத் தரணிகளாகிய கே.வி. தவராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகளாகிய திருக்குமரன், ஆனோல்ட் பிரியந்தன், கணதீபன், ரிசிகேஷன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். இதேவேளை குறித்த வழக்கை தாக்கல் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் சட்…

  24. 'வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள பிரதான வழி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உலக சந்தை சக்திகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. வரிகளை குறைப்பதன் மூலமே அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த முடியும். உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான 17 வகையான பயிரினங்களை இனங்கண்டு அவற்றின் இறக்குமதியை மட்டுப்படுத்தினோம். தற்போது அவற்றை உள்நாட்டில் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எமது விவசாயிகளுக்கும் எமது கிராமங்களுக்குமே கிடைக்கின்றது.' என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஒரு கிலோ நெல்லுக்கு முன்னர் வழங்கிய 32 ரூபாவை 50 ரூபாவாக அதிகரித்ததன் பின்னர் உற…

  25. சீனாவின் பெல்ட் மற்றும் சாலை இனிஷியேட்டிவ் (பிஆர்ஐ) பல சந்தர்ப்பங்களில் அதன் செயல்பாடுகளுக்காக சர்வதேச நாடுகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இலங்கையிலுள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை அது கையில் எடுத்து புயல் வேகத்தில் மேம்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இப்போது இந்த துறைமுகத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த துறைமுகம் சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (சி.எம்.போர்ட்) க்கு இலங்கை அரசாங்கத்தால் 99 ஆண்டு குத்தகைக்கு 1.12 பில்லியன் அமெரிக்க டாலருக்காக ஒப்படைக்கப்பட்டது. சீனா வணிக துறைமுக ஹோல்டிங்ஸ் நிறுவனம் (சி.எம்.போர்ட்) மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் (எஸ்.எல்.பி.ஏ) ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தை நியாயமற்ற ஒப்பந்தமாகவே பலரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.