ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும் சுரேன் ராகவனுக்குமிடையில் சந்திப்பு January 7, 2021 அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதிகள் கலாநிதி சுரேன் ராகவனை சந்திப்பதற்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இச்சந்திப்பு இடப்பெற்றதுடன், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் பிரதிநிதிகள், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரும் காவல்துறை…
-
- 0 replies
- 319 views
-
-
யாழ். பல்கலை மாணவனுக்கு கொரோனா தொற்று: உணவகத்துக்குப் பூட்டு! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று வந்துள்ளார். தப்புள்ளயிலிருந்து கடந்த 26ஆம் திகதி பேருந்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், க…
-
- 0 replies
- 294 views
-
-
விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் – இரா.சாணக்கியன் தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையமாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஏன் யாழ்ப்பாண விமான நிலையம் தெரிவு செய்யப்படவில்லை? இதனோடு சார்ந்தவர்கள் இதற்கான விளக்கத்தை எனது உரை முடிந்ததும் தெரிவியுங்கள். புலைமைசார் சொத்து என்பதனை எடுத்துக்கொள்வோமாயின் அவை தரவுத்தளமாகவோ அல்லது வன் மற…
-
- 0 replies
- 541 views
-
-
ஜெனிவாவில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவது தொடர்பில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்
-
- 0 replies
- 331 views
-
-
முககவசங்கள் இன்றி தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் அட்டகாசம்- குடி நீரை துண்டித்ததால் மக்கள் அவதி 51 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எந்த வித முன் அறிவிப்பும் இல்லாது முக கவசங்கள் இன்றி வீட்டு வளாகத்திற்குள் நுழையும் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொரோனா வைரஸ் தாக்கம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக தினம் தினம் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் எந்த வித மனிதாபி…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் கோட்பாடு அதிகாரம் பொருந்திய சிலருக்கு பொருந்தவில்லை என்கிறார் ஹரின் பெர்னாண்டோ
-
- 0 replies
- 266 views
-
-
முஸ்லிம் விவாக சட்டம் திருத்தப்பட்டு, குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், பெண்ணுக்கான திருமண வயது 12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை திருத்தம் செய்ய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு சில முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், சட்டத்தை திருத்த முஸ்லிம் எம்பிகளினால் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் திருமண வயது 18 ஆக மாற்றப்படும் – அலி சப்ரி – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 3 replies
- 574 views
-
-
Share on PinterestShare on FacebookShare on Twitter காங்கேசன்துறைக் கடற்பரப்பில் சுமார் 170 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்க இடமான படகொன்றை வழிமறித்த கடற்படையினர், படகைச் சோதனையிட்டுள்ளனர். படல் இருந்து கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர் வல்வெட்டித்துறை வாசிகள் கே.கே.எஸ…
-
- 1 reply
- 649 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யாழ்ப்பாணம் 'பலாலி' விமான நிலையத்தை புனரமைப்பது குறித்து புதிய உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ளவுள்ளதாகவும் அதற்காக இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார். கடந்த பத்து மாதங்களில் விமான நிலையங்கள் திறக்கப்படாததனால் ஏற்பட்ட நட்டமானது 2.4 பில்லியன் ரூபாவாவெனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி சட்டத்தின் கீழான கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து தி…
-
- 0 replies
- 500 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கொழும்பு கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க நல்லாட்சியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோதிலும் அதனை நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம், கொழும்பு கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவில் கூட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க எமது அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். இலங்கையின் கையை மீறி வேறு எவருக்கும் துறைமுகத்தை கொடுக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில், கொழும்பு துறைமுகம் தொடர்பிலும், துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்ப…
-
- 0 replies
- 621 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு இன்று கொழும்பு இந்தியா இல்லத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி யின் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதன்போது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கடந்த ஒருவருடமாக மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் வாக்குறுதி, அறிவிப்பு என்ற அளவுகளில் மட்டுமே நிற்கிறது, ஆகவே இந்திய தோட்டத்துறை வீட…
-
- 1 reply
- 738 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 30 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் நோக்கத்துடன், 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக 236 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு (…
-
- 0 replies
- 317 views
-
-
அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/ali-sabry.jpg அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர் என்றும் எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வ…
-
- 0 replies
- 914 views
-
-
தடுப்பூசியை வழங்கத் தயார்’ – கோட்டாவிடம் ஜெய்ஷங்கர் உறுதி! கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இந்தியா தயார் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், இன்று காலை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த ஜனாதிபதி, இந்தியாவால் …
-
- 2 replies
- 425 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் எனவும், அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்வைத்துள்ள கருத்துகளுக்காக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திர…
-
- 2 replies
- 939 views
-
-
நூருல் ஹுதா உமர்- நம் நாட்டின் வரலாற்று நெடுகிலும் அன்றுதொட்டு இன்றுவரை நாட்டின் இறைமைக்கு பங்கம் இல்லாமல் வாழ்ந்து வரும் ஓர் இனமாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தலாம். இலங்கையில் நடந்த கொடூர யுத்தத்தின் போது கூட முஸ்லிம்கள் தேசப்பற்றோடு அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தார்கள். இதனால் அவர்கள் உயிர்களை காவுகொடுத்தும், பொருளாதார ரீதியாகவும் யுத்தத்தில் இழந்தவை ஏராளம். மாத்திரமல்லாமல், ஏவல்நாய்களைக் கொண்டு சஹரான் என்கின்ற கொடூரன் செய்த இழி செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நின்றதும், அவனுடைய குழுவை காட்டிக்கொடுத்ததும், அவர்களுடைய உடலைக் கூட முஸ்லிம் மையவாடிகளில் அடக்கம் செய்ய முடியாதென இஸ்லாமிய மக்கள் தீ…
-
- 3 replies
- 757 views
-
-
ஒன்ராறியோ பாராளுமன்ற தமிழினப்படுகொலை சட்ட வரைவு பற்றி சுரேன் ராகவன் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்குத் தயாராகவிருக்கும், உறுப்பினர் விஜே தணிகாசலம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக் கல்வி தொடர்பான சட்ட வரைவு பற்றி, இலங்கைப் பாராளுமன்றத்தில் நியமன பா.உ. சுரேன் ராகவன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியையும் அருவருப்பையும் ஏற்படுத்திவருவதாகக் கூறப்படும் இப் பேச்சு பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இவ்வுரை குறித்து பா.உ. மனோ கணேசன் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசும்போது “இவ்வரசாங்கம் நல்லிணக்கம் தொடர்ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்குமிடையில் கலந்துடையாடல் SayanolipavanJanuary 7, 2021 இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்றைய தினம் உத்தியோக பூர்வ விஜயமென்றினூடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற பிரதி நிதிகளையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.இதன் போது பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மே…
-
- 0 replies
- 479 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42,000 பேரின் பெயர்கள் நீக்கம்!! 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 42 ஆயிரத்து 234 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகள் இம்முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். அதிலிருந்து 42 ஆயிரத்து 234 பேர் நீக்கப்படவுள்ளனர். 33 ஆயிரத்து 211 பேர் சேர்க்கப்படவுள்ளனர். போரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்காளர் பட்டியல் ஒவ்வ…
-
- 0 replies
- 496 views
-
-
ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிப்பது குறித்து இணக்கப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இதுகுறித்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. முன்மொழிவு வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழுவும் இதன்போது நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்ப…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை தமிழர் உரிமைகளை உறுதிப்படுத்த மீண்டும் வலியுறுத்திய இந்தியா 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRILANKA EAM இலங்கை தமிழர்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வு அவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை அமல்படுத்…
-
- 3 replies
- 820 views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அந்த அமைப்பு அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொவிட் வைரசினை பயன்படுத்துகின்றது. யுத்தகுற்றச்சாட்டுகளில் ஈடுபட்டார் என ஐநாவால் குற்றம்சாட்டப்பட்ட –பாரிய மனித உரிமை மீறல்களிற்காக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஜெனரல் இலங்கையின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளிற்கான தேசிய மத்திய நிலையத்திற்கு பொறுப்பாகயிருப்பது மாத்திரமல்ல. கடந்த மாதம், 2…
-
- 0 replies
- 398 views
-
-
இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது -லீலாதேவி ஆனந்தநடராஜா வலியுறுத்தல் 55 Views எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கூடகவியலாளர் சந்திப்பிலேயே அவ்வமைப்பின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் வடக்கு,கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம்…
-
- 0 replies
- 588 views
-
-
வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் திடீர் முடக்கம்-இராணுவம் குவிப்பு 39 Views வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரனொ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை…
-
- 0 replies
- 332 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் மலையக மக்களுக்கு வாக்குறுதியளித்து வருகின்றனர். எனினும் இழுபறி நிலைக்குள்ளாகி வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மீண்டும் ஒரு ஏமாற்றத்தைப் பெற்றுக்கொடுக்காது இதிலுள்ள தெளிவுத்தன்மைகளை மக்களிடத்தில் பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பசறை, லுணுகலை மற்றும் கோணக்கலை ஆகிய பெருந்தோட்ட புறங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாம் இவ்விடயத்தில…
-
- 3 replies
- 832 views
-