Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Tuesday, 2011-09-13 19:59:59] தலதாமாளிகைக்கு குண்டுவைக்க புலிகளுக்கு உதவிய புலிகளது சர்வதேச முகவர் கேபி அரச மாளிகையில் இருப்பதாகவும் தலதாமாளிகையை பாதுகாத்தவரை அரசாங்கம் தாக்க முயற்சிப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்தால் தோல்வியடையச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:.. "தலதாமாளிக்கைக்கு குண்டுத் தாக்குதல் நடத்தினர். எனது கவலை என்னவென்றால், தேசத்தை நேசிக்கும் அரசாங்கம் தலதா மாளிகையை பாதுகாத்த நெரஞ்சன் விஜயரட்ன முன்னோக்கி வரும்போது தலதா மாளிகைக்கு குண்டு …

  2. ஜெனீவா தீர்மானம் குறித்து சிறிசேன அதிரடி நடவடிக்கை? ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன மார்ச் மாதம் ஐநா அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே சிறிசேன இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தனது இணை அனுசரனையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவேண்டாம் என அவ்வேளை ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதி…

  3. 30 DEC, 2023 | 06:41 PM ஆர்.ராம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து பொதுவேட்பாளரை களமிறக்குவதோ, அல்லது தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய அரசியல் கூட்டணியையும், இன,மத,மொழி வாதற்ற வேட்பாளரையும் அடையாளம் கண்டு அதில் பங்கேற்பதே சிறந்த அரசியல் சாணக்கியமான நடவடிக்கையாக அமையும். அவ்வாறு இல்லாது விட்டால் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்த…

  4. கிழக்கு உதயம் அரசு எதிர்பார்த்தது போன்று மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் இருக்கவில்லை! கொழும்பில் படையினர் முற்றுகையே தொனித்தது கிழக்கு மாகாணத்தை முழுமையா கக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்து பெரும் எடுப்பில் பிரசாரங்கள் செய்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங் கம் விழாவெடுத்துக் கொண்டாடிய போதிலும் எதிர்பார்த்தது போன்று நாட ளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் உற் சாகம் கரைபுரண்டு ஓடவில்லை. அரசு ஏற்பாடு செய்திருந்த விழாக்களில் எதிர் பார்க்கப்பட்ட அளவு உற்சாகத்தைக் காணமுடியவில்லை. தொப்பிகலவில் இராணுவம் பெற்ற வெற்றியைக் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் அரசாங்கம் கொண்டாடி யது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை யில் பிரபல அரசியல் மற்றும் பாது காப்பு நிலைவரங்கள் தொடர்பான விமர் சகர்…

  5. போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. யாழ். டச்சுக் கோட்டையில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வாசஸ்தல நிர்மாணப் பணிகளுக்கு 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இந்த நிதியில் 60 சத வீதத்தை நெதர்லாந்து அரசு வழங்கவுள்ளதுடன் 40 வீதத்தை இலங்கை அரசு செலவிடவுள்ளது. எனத் தெரிய வருகிறது. இந்த வாசஸ்தல நிர்மாணப் பணிகளை இலங்கைக் கட்டடக் கூட்டுத்தாபனம் மேற்கொள்ளவுள்ளது. உல்லாசப் பயண அபிவிருத்தி என்ற பெயரிலேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எந்த வகையான திட்டமாக இருந்தாலும் சிங்களத்தின் இருப்பிடமாக மாறும் அந்த திட்டத்திற்கு நெதர்லாந்து நிதி உதவி அளிப்பதா? இன்று ஜனாதிபதியின் வாசஸ்தலம் என்பார்கள் நாளை …

  6. இவ்வார அமைச்சரவையில் முக்கிய பத்திரம் தாக்கல்! இந்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாகாண சபை கலைப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 9 மாகாண சபைகளில் ஏற்கனவே 6 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், ஏனைய மூன்று மாகாண சபைகளையும் கலைக்கும் வகையில் ஜனாதிபதி இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், ஜனாதிபதி மைத்திரி கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேயடியாக நடத்தும் வகையில் ஜனாதிபதி இத்திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சிக்காலம் நிறைவடைந்த மாகாண சபைகள…

  7. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை நிகழ்ந்து நேற்றுடன் இரண்டு தசாப்தங்கள் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றன. இலங்கைத் தீவின் அயல் தேசமான இந்திய வல்லாதிக்கம், தனது புவியியல், அரசியல் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் வகுத்த உருப்படியற்ற அரைகுறை தீர்வுத்திட்டம் ஒன்றை, இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் முடிவாக இத்தீவின்மீது வலிந்து திணித்த செயற்பாட்டின் இருபது ஆண்டுகளே இப்போது பூர்த்தியாகியிருக்கின்றன. இந்திய மேலாதிக்கத்தின் நெருக்குவாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமது இலட்சியங்களைக் கூடக் கைவிடத் தயாரான ஈழத் தமிழ்த் தலைவர்களின் அரைகுறை ஒப்புதலோடும் கொள்கையிலும், இலட்சியத்திலும் பற்றுறுதி மிக்க ஈழத் தமிழ்த் தலைமையைப்…

    • 0 replies
    • 872 views
  8. . [ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015, 07:30.09 AM GMT ] இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக திருகோணமலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை 17.05.2015 காலை 9.10 மணிக்கு சிவன் கோயிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு முன்னால் இது நிறைவேற்றப்பட்டது.. இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபை திருகோணமலை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்னன், முன்னாள் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா, சி.நந்தகுமர். த.கௌரிமுகுந்தன், வெருகல் பிரதேச சபை முன்னாள் தலைவர் ச.விஜயகாந்த், ஆகி…

    • 16 replies
    • 797 views
  9. 31 ஆம் திகதிக்கு முன், மீள் குடியேற்றப் பதிவுகளை, மேற்கொள்ள வேண்டும்.… January 27, 2019 பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவில், 225.31 ஏக்கர் நிலப்பரப்பில், ஹலோரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. இந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருவதனால் அவ்விடங்களின் காணிகளை கையளிக்கும் நிகழ்வு ஜனவரி மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாகப் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வேம்பொடுகேணியில் ஏ- 9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் பகுதியை அடுத்துள்ள மேலும் 300 மீற்றர் வரையான பகுதி விடுவிக்கப்படவுள்ளது. முகமாலையில் ஏ- 9 வீதிக்குச் சமனான வடக்கு நோக்கி ஏற்கன…

  10. பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன் [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 18:44 ஈழம்] [புதினம் நிருபர்] பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். புதுடில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் வெளியாகும் "த சண்டே இந்தியன்" வார இதழுக்கு (ஓகஸ்ட் 5, 2007) சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்: மகிந்த ராஜபக்சவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்று ராய்ட்டர்ஸ்க்கு அளித்த பேட்டியில்…

  11. யாழ்.குடாநாட்டினில் மீண்டும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதில் இடம்பெற்றதாக கூறப்படும் பல மில்லியன் நிதி மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. குடிசன மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு வழங்கவென ஒதுக்கப்பட்ட பல மில்லியன் நிதியே கையாடல் செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே மூன்று தடவைகள் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் இவற்றினில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருப்தி கொண்டிருக்கவில்லை. இதையடுத்து மீண்டும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குடிசன மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சிப் பாசறை யாழ்.செயலகத்தினில் இடம்பெற்றிருந்தது. அவ்வேளையில் ஏற்கனவ…

  12. தாக்குதலுக்குள்ளான நீதிமன்ற கட்டடதொகுதி இராணுவத்தினால் புனரமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதி இன்று இராணுவத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 20 ஆம் திகதி பொலிஸாரின் கட்டுக்களையும் உடைத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் , பொல்லுகள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் உடனடியாக சேதங்களை திருத்துமாறு கட்டளையிட்டார். இதனையடுத்து இன்றைய தினம் இராணுவத்தினரால் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்…

  13. போருக்குப் பின்னரும் வடக்கு மாகாணம் முரண்பாடுகளுடைய மாகாணமாகவே இருக்கின்றது ; அமைச்சர் சத்தியலிங்கம் ஆயுதப்போராட்டம் முடிவுற்றதே தவிர அதற்குப் பின்னரான காலத்தில் போருக்குக் காரணமான அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.அதனால் போரால் என்ன செய்ய நினைத்தார்களோ அதனை வேறு பல வழிகளால் அந்தந்த அரசுகள் செய்ய முற்படுவது தான் இங்குள்ள வித்தியாசம்.அவற்றில் ஒன்று தான் வடக்கில் புகைப்பொருள் பாவனை என்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் நேற்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு மாகாணம் போருக்குப் பின்னர் அரசியல் தீர்வு எட்…

  14. இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது? ”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார். அண்மையில் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். எவ்வாறு இருப்பினும் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண…

  15. எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தை நடத்திக்கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. யுத்தத்தின் மூலம் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மாறாக இழப்புக்களையே அதிகமாக காணக் கூடியதாக இருக்கும். சமாதானத்தின் வழியை பின்பற்றுவதன் மூலம் அபிவிருத்தியின் இலக்கை அடைய முடியும் ஈடுப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள், கணவனை இழந்த பெண்கள், பிச்சையெடுப்பவர்கள் என அனைவருக்கும் கடன் வழங்கினேன். இந்த கடனை வழங்குவதற்காக, பெரியளவிலான ஆவணங்களையும், பிணையாளர்களையும் நாங்கள் கோரவில்லை. முடிந்தளவுக்கு கேட்போருக்கெல்லாம் கடன் வழங்கினோம். இந்த கடனில் 99 வீதமானவை வட்டியுடன் மீளச் செலுத்தப்பட்டுள்ளது. பிச்சையெடுப்பவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கினோம். அந்த கடனைக்கொண்டு, அவர்கள் தொழில் தொடங்கியுள்ளதால்…

  16. பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையான பதின்ம வயதுச் சிறுமியின் தாயார் கைது… February 14, 2019 2ஆம் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார். கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. …

  17. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத் தரப்பிற்கும் இடையிலான மற்றுமொருச் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு, வட மாகாணத்தில் இடம்பெறும் காணி பதிவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரச தரப்புடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இதுவரை காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது. http://akkinikkunchu.com/new…

  18. விகிதாசார தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் -ரவூப் ஹகீம் (நா.தினுஷா) சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு விகிதாசார தேர்தல் முறையே சிறந்த தெரிவாக அமைவதோடு விகிதாசார தேர்தல் முறைமையில் எதிர்வரும் தேர்தல்களை நடத்த அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நகரத்திட்டமிடல் , நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். தேசிய ரீதியான சில முக்கிய கட்சிகள் கடந்த காலத்தில் விகிதாசார தேர்தல் முறைக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. அதன் விளைவாகவே கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் புதிய முறையொன்றினம் கீழ் நடத்தப்பட்டது. ஆனால் அந்த புதிய முறையினால் ஏற்பட கூடிய பாதகத்தினை அனைவரும் நன்கு உணர்நதுள்ளனர். இருப்பி…

  19. பட்டறிவுப் பாடத்தை இன்னும் புரியத் தவறியுள்ள தலைவர்கள் 04.08.2007 ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 56 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தற்போதைய வாரிசுகளை சாடைமாடையாகச் சாடினாலும், பண்டாரநாயக்கா புகழ் பாடத் தவறவில்லை. தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்து, பௌத்த சிங்களப் பேரினவாதத்தை இலங்கைத் தீவில் ஸ்திரமாக நிலைநிறுத்தி, இந்த நாட்டில் இன்று இவ்வளவு மோசமாக இரத்த ஆறு ஓடுவதற்கு வித்திட்ட அமரர் பண்டாரநாயக்காவை, அதே கொள்கையை இப்போதும் முழு அளவில் கைக்கொள்ளும் இந்த அரசுத் தலைமையும் புகழ்ந்து ஏத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தச் சமயத்தில், இந்து சமுத்திரப் பிராந்த…

  20. ரவீந்திரநாத் தாகூரின் 154 ஆவது பிறந்த நாளையும், 1934 ஆம் ஆண்டு ஆனிமாதம் அவர் யாழ்ப்பாணம் வருகை தந்த நாளையும் நினைவுகூரும் வகையில் இந்தியத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்றினை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. பலருக்கும் வலிந்து அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையினில் நிகழ்வின் ஈற்றில் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு குறுந்திரைப்படம் காட்டப்பட்டது. நாலுபேர் மட்டும் குறும்படம் பார்த்தனர். நால்வருள் ஒருவராய் இருந்து அக்குறுந்திரைப்படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். எனினும் இன்று வரை நுழைவு விசா அனுமதி மறுக்கப்பட்டவர்களுள் சிவாஜிலிங்கமும் ஒருவராவார். இந்திய தூ…

    • 3 replies
    • 467 views
  21. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று திங்கட்கிழமை தாம் திருகோணமலை மூதூர் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து மன்னார் நீதிபதியை சந்திக்க வந்துள்ளதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து மன்னார் நீதவான் ரீ.சரவணராஜவின் மெய்ப்பாதுகாவலருடன் உரையாடியுள்ளனர். இதன் போது குறித்த இருவரும் நீதவா…

  22. மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளனர். சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மனிதஉரிமைகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒருவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தொடக்கம் 1974 தமிழ்மக்கள் சிறிலங்காப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதற்குள் அடங்குகின்றனர். படுகொலை செய்யப்பட்டவர்களுள் 69பேர் சிறுவர்களாவர் 1வயது…

    • 2 replies
    • 1.1k views
  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித் இரத்தக் கறைகளோடு அறுபது ஆண்டுகள் கடந்து போயின. தென்னாசியாவின் பேசப்படாத மூலையில் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் பேரினவாத இரத்தப்பசிக்கு இரையான வரலாறு கடந்துபோன ஆறு தசாப்தங்களின் கறைபடிந்த வரலாறு. தமிழ்ப் பேசும் மக்கள் மீது திணிக்கப்பட்ட இரணுவ ஒடுக்கு முறையை பேரினவாத்தோடும் அதன் எஜமானர்களோடும் பேசித் தீர்த்துகொள்ள முடியாது என்பதற்கு தமிழ்ப் பேசும் மக்களுக்கு நீண்ட அரசியல் பாடம் தேவைப்பட்டிருக்கவில்லை. இன்றைக்கு வரைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும், பாசிசத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்கள் போராடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்க…

    • 12 replies
    • 2.6k views
  24. Posted on : Mon Sep 17 10:30:00 2007 கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவி 45 நாடுகளிடம் கோருகிறது அரசு விடுதலைப் புலிகளின் பிடியிலி ருந்து கிழக்கை முற்றாக மீட்டுவிட்ட தாகக் கூறும் இலங்கை அரசு, அதை அபிவிருத்தி செய்வதற்காகவும் அப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் 45 நாடுகளி டமிருந்து நிதி உள்ளிட்ட பல உதவி களைப் பெறவும் தீர்மானித்திருக்கின்றது. அந்த நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "கொன்சியுலர்' பிரதிநிதிகளின் ஊடாக இந்த உதவிகளைத் திரட்ட இலங்கை வெளி விவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்பிரதிநிதிகளின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளவுள்ள அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகள் போன்றவற்றை அந்தந்த நாடுகளுக்குத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.