Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொரோனா சடலம் அடக்கம் செய்தல் விவகாரம்- சுகாதார அமைச்சுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம் 34 Views கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில், “இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்து நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்று…

  2. யாழ். கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்- மணிவண்ணன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே, குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பின்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினைக் கையேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர…

  3. மட்டக்களப்பில் மீண்டும் காணி அபகரிப்பு! ஹிஸ்புல்லாவின் பினாமிகள் கைவரிசை!! மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடக்கரையை அன்டிய பகுதிகளில் உள்ள காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஹிஸ்புல்லாவின் பினாமிகள் மீண்டும் இறங்கியுள்ளனர். 1979 ஆண்டு 56ஏக்கர் காணியை நிலசொந்த காரர்களிடம் இருந்து எல்.ஆர்.சி மூலம் சுவிகரித்து பொதுமக்களுக்கு 115 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்ட இடம். தமிழ் மக்கள் காலம் காலமாக பெரும்பாண்மையாக வாழ்ந்த காணிகளை ஹிஸ்புல்லாவும் பினாமிகளான முந்தாஸ் மௌலவியும், சபீக் ஆகியோர் பல நூறு ஏக்கர் அரச காணிகள், எல் .ஆர்.சிக்கு சொந்தமான காணிகளை போலியான ஆவணங்கள் தயார் செய்து பிடித்து வைத்துள்ளனர் .இது சம்மந்தமான விசார்ணைகள் சி.ஐ.டி.மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு போன…

  4. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு பிரித்தானிய அரசியல்வாதி நேஸ்பி பிரபு கண்டனம் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையை பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியின் அரசியல்வாதி நேஸ்பி பிரபு கண்டித்துள்ளார். இந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தியாகத்தை காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை என்று நேஸ்பி பிரபு குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் – ஆண், பெண் மற்றும் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்து மிகவும் கொடூரமான போர்க்குற்றம் புரிந்துள்ளமையை ஐக…

  5. இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு இளைஞன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தில் சாதனை ஏரூர் தில்லை 2020 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அதியுயர் சேவைகளில் ஒன்றான இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பதுளைவீதி இராஜபுரத்தினைச் சேர்ந்த ராஜேந்திரன் தீபன் மட்டுப்படுத்தப்பட்ட கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றும் தமிழ்பேசும் சமூகத்துக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். மட்டக்களப்பு கித்துள் மற்றும் கரடியனாறு பாடசாலைகளில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியினை கற்ற இவர் மட்டக்களப்…

  6. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.மேலும் முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மனித உரிமை ஆணைாயாளரின் முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இம்முறை 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக ம…

  7. தமிழர்கள் தமது கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் – இரா.சம்பந்தன் தமிழர்கள் தமது கௌரவம், சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். இதனை புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் மிகவும் உறுதியாக வலியுறுத்தியிருக்கின்றோம். குறித்த பிரச்சினை பல வருடக…

  8. போர்க்குற்றங்களில் துணிந்து ஈடுபட சிறிலங்காவை தூண்டும் தீர்மானம் – ஜெனீவா வரைபு குறித்து சி.வி. 5 Views ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் பிரதியை எனக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறான ஒரு அறிக்கையை சமர்ப்பிபதற்கு இணை அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த அறிக்கையை பார்த்த பின்னர் இலங்கை அரசு விருந்துகளிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபடும். இப்படியான அறிக்கைகள், போர்க்குற்றத்தில் துணிந்து ஈடுபடலாமென அரசுகளை உற்சாகப்படுத்தும் என கடுமையாக சாடியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய ட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.ஜெனிவா தூதுக்குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட “சீரோ” வரைவு …

  9. இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா அச்சமடைய தேவையில்லை.! இலங்கையில் சீனா இராணுவக் குவிப்பை செய்யவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இந்தியா அச்சமடையத் தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் சரத் வீரகேசர மேலும் கூறியுள்ளதாவது, “எந்த நாட்டினதும் நேரடி அரசியல் தலையீடுகள் எமக்கில்லை. சீனாவுடன் நாம் நல்லதொரு நட்புறவில் உள்ளோம் என்பதற்காக இந்தியாவுடன் நட்புறவை நாம் முறித்துக்கொள்ளவில்லை. அவர்களுடனும் வர்த்தக, கலாசார ரீதியிலான உறவு கையாளப்படுகின்றது. ஆனால் இந்தியா இலங்கையின் உள்ளக …

    • 1 reply
    • 448 views
  10. நிம்மதியாக வாழவேண்டுமென்று எண்ணுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தவினால் இன்று (20.02.2021) திறந்து வைக்கப்பட்டபோது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியங்காடு உணவு களஞ்சியசாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சுபிட்சத்தின் தொலை நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் புணருத்தாபனம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரச…

    • 2 replies
    • 463 views
  11. (இராஜதுரை ஹஷான்) இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கை நிர்வாகத்தின் கீழ் முழுமையாக வசப்படுத்துவோம் என ஒருபோதும் குறிப்பிடவில்லை. இந்திய நிறுவனத்துடன் கூட்டிணைந்து அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்ட விடயத்தை ஊடகங்கள் திரிபுப்படுத்தியுள்ளன. எண்ணெய் தாங்கிகளை முழுமையாக பெற்றுக் கொள்வது குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை இடம் பெறவில்லை என சக்தி வலு அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார். மேலும், திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பில் 2017 ஆம் ஆண்டு செய்துக் கொண்ட ஒப்பந்தங்களை நீக்கி இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தாங்கிகளை இலங்கை வசமாக்குவதாக குறிப்பிடவில்லை. இந்திய நிறுவனத்துடன் கூட்டிணைந்து அபிவிருத்தி செய்வதாக குறி…

  12. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல மாதங்களாக கனரக இயந்திரங்கள் கொண்டு வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் எல்லைகளையும் தாண்டி காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படுகின்றபோதும் பொலிசாரோ வனவளத்திணைக்களமோ பிரதேச செயலகமோ இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றமை தொடர்பில் ஐயம் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக காடழிப்பு இடம்பெறும் போதும் இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் காடு அழிக்கப்படுகின்றமை …

  13. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தக்கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன்னால் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்காகவா ஜனாதிபதி புதிய குழுவை நியமித்துள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கையொன்றை நான் கோரியுள்ளேன் என தெரிவித்த அவர் ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும…

    • 7 replies
    • 710 views
  14. குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன். முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார். அருவி இணையத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு, குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல…

  15. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’-ஐ.நாவுக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதம் 36 Views வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தினை அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர். ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’ என்ற தலைப்பிடப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “20.02.2021 Hon.Ms.Michelle Bachelet Jeria. The High Commissioner. Human Rights Commission. Geneva. …

  16. யாழ். பல்கலைகக்கழகத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் அமெரிக்க தூதுவர் நேரில் கையளிப்பார்! 14 Views யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்திய ந…

  17. கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை கொரோனா நிலைமை: சுகாதார பிரிவு மௌனம் - பொதுமக்களிடையே குழப்பம் கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுவரை குறித்த ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் 39க்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் தொடர்ச்சியாக ஆடைத்தொழிற்சாலை இயங்கி வருகிறது என தெரிவிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் இருந்தும் ஆடைத் தொழிற்சால…

  18. பணத்துக்காக தாய் நாட்டை விலை பேசும் சமூகமாக மாறாதே : முஸ்லிம் சமூககெக்திற்கு துண்டுபிரசுரம் முஸ்லிம் சமூகமே வெளிநாட்டவரின் பணத்துக்காக தாய் நாட்டை விலை பேசும் சமூகமாக மாறாதே” என நாட்டை நேசிக்கும் முஸ்லிம் அமைப்பு எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! என தலைப்பிட்டு “தாய் நாட்டை நேசிக்கும் முஸ்லிம் அமைப்பு எனும் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. குறித்த பிரசுரத்தில் – நாம் பல வருடகாலமாக இந்த நாட்டில் வாழ்வது நாட்டிற்காக உயிர்நீத்த தேசப்பற்று கொண்டோரின் தியாகத்தினால் ஆகும், தமிழீழவாதிகள் மென்மேலும் முயற்சி செய்வது எம்மை …

  19. புலிகளின் தனி ஈழ இலக்கினை புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து செல்கிறார்கள் – சரத் வீரசேகர தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் தனி ஈழ இலக்கினை இன்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து செல்கிறார்கள்.இதற்கு அவர்கள் வாழும் நாடுகளில் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது.தனி ஈழ கொள்கையினை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றையாட்சி முறைமைக்கு முரணான கருத்துக்களை குறிப்பிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என பொதுமக்கள் பா…

    • 1 reply
    • 454 views
  20. யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரானா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இந்நிலையில், நேற்றைய தினம் மூன்று நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படையில், தற்போது, கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.இந்நிலையில் யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இயல்பு நிலை மீண்டும் ஒரு முடக்க நிலையி…

  21. ஜெனிவா பிரேரணை குறித்த முதன்மை நாடுகள் அறிக்கை – அதிர்ச்சியில் கோட்டாபய அரசு 4 Views ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள மனித உரிமைகள் பேரவையின் 46 வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் சில விபரங்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியா தலைமையிலான முதன்மை நாடுகள் ஐந்து இணைந்து இந்த பிரேரணையை முன்வைக்க உள்ளன. இது தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது. இதில் போர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டுதல் ஆய்வு செய்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி எதிர்கால விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அவற்றை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை…

  22. இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை ரத்தானமைக்கு இந்திய அழுத்தமே காரணம் – ஜே.வி.பி. 1 Views இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் நாடாளுமன்ற உரை அரசாங்கத்தால் இறுதி நேரத்தில் இரத்துச்செய்யப்படுவதற்கு இந்தியாவின் அழுத்தமே பிரதான காரணமாக அமைந்திருக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பின்வருமாறு கூறினார் – “இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரை இறுதிநேரத்தில் இரத்துச்செய்யப்பட்டிருக்கிறது என்று கருதுகிறோம். இதிலிருந்து அரசாங்கத்திற்கெ…

  23. சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலைமை எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது இல்லத்தில் கட்சி உறுப்பினர்களை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலும் 1500 யுவான்களை வழங்கவே சீனா முன்வந்துள்ளது. சீன யுவான்களை இலங்கை பெற்றுக்கொண்டாலும் டொலரிலேயே மீள் செலுத்த வேண்டும்.இதன்போது திறைசேரியின் இருப்பு வீதம் அதிக புள்ளியில் காணப்பட்டாலும் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி இருப்பாக இலங்கையிட…

  24. இலங்கையில் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள் ஆணையாளர்கள் மற்றும் சுயாதீன நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் முன்னாள் ஆணையாளர்கள், கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி யுவன் மனுவல் சன்டோஸ், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பிரதி செயலாளர் ஜன் எலியசன் உட்பட 20 முன்னாள் நிபுணர்களும் சுயாதீன நிபுணர்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும், “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் நாடு முன்னேற்றத்தை காணவில்லை என்பதை அடிக்கோடிட்டு…

  25. (எம்.நியூட்டன் ) வட பகுதி துறைமுக அபிவிருத்தி தென்பகுதி மீனவா்களுக்கே பெரும் வரப்பிரசாதம். வடபகுதி மீனவர்களுக்கு ஆட்கடல் தொழில் மூறையில் வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என கலாநிதி சூசைஆனந்தன் தெரிவித்தார். வடபகுதியில் கடற்றொழில் அபிவிருத்திக்காக பாரிய துறைமுகங்கள் அமைக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதியில் பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் கடற்றொழில் அபிவிருத்திக்காக பாரிய துறைமுகங்கள் அமைக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அபிவிருத்திக்கு குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலின் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.