ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்.. During the 1980s KMS trained the Special Task Force, an elite unit of the Sri Lankan police, and also taught the country’s air force (JDS LANKA) இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படையினர் தொடர்புபட்ட போர்க்குற்றங்கள் குறித்து பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரித்து வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் தனிநாடு கோரி போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்காக, 1980 களில் விசேட அதிரடிப்படை (STF) என்று அழைக்கப்படும் இலங்கை காவல்துறையின் ஒரு உயர் படைப் பிரிவுக்கு, பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான…
-
- 0 replies
- 779 views
-
-
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். …
-
- 19 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று திங்கட்கிழமை தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் பாலமுரளி தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/116759/jaffna.jpg இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி மீளத்திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்…
-
- 0 replies
- 335 views
-
-
’ ஜனாஸா’ எரிப்புக்கு எதிரான மனுவில் மருமகன் ஆஜராவதில்லை’ கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் தனது மருமகன் சட்டத்தரணி மில்ஹான் முஹம்மத் ஆஜராவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இடையீட்டு மனுதாரர் ஒருவரின் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி, சன்ஜீவ ஜயவர்தனவுடன் வழமையாக உதவியாளராகப் பணியாற்றும் நிலையில், சன்ஜீவ ஜயவர்தன,சுயதனிமைப்படுத்தலில் இருப்பது பற்றி அறிவிப்பதற்காகச் சென்ற சக சட்டத்தரணி யொருவரோடு, கடந்த வியாழக்கிழமை அவர் நீதிமன்றத…
-
- 0 replies
- 751 views
-
-
வெவண்டனுக்குச் சென்ற தீயணைப்பு படை ஏன் நிவ்வெளிக்கு வரவில்லை – உறுப்பினர் ராம் கேள்வி இராஜாங்க அமைச்சரின் வெவண்டன் வீட்டுக்குச் சென்ற தீயணைப்புப் படை ஏன் நிவ்வெளி தோட்டத்துக்கு வரவில்லை என தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 27 ஆம் திகதி இரவு நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட நிவ்வெளி – தொழிற்சாலைப் பிரிவில் லயன் குடியிருப்பொன்று தீ விபத்துக்குள்ளானதில் 12 குடியிருப்புகளும் முற்றாக எரிந்து நாசமாகின.இதனால் உடைமைகளை இழந்து 50 பேர் வரையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலையகத்தில் மக்கள் வாழும் குறிப்பாக லய…
-
- 0 replies
- 312 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சான்றிதழை விமான நிலையத்தில் ஏற்க மறுப்பு November 30, 2020 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் பிசிஆர் பரிசோதனையின் பெறுபேறு செல்லாது என்றும், கொழும்பு நவலோகாவில் புதிய பரிசோதனை மேற்கொண்டு வருமாறும் விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்து நின்றவர்கள் உட்பட வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் அனைவரும் விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணித்தியாலங்களுக்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைச் சான்றிதழை சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இந்த நடைமுறைக்கு அமைய ஆரம்பத்தில் வடக்கிலிருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில…
-
- 0 replies
- 653 views
-
-
திவிநெகும மோசடி வழக்கு : பசில் உட்பட நால்வர் விடுதலை ! திவிநெகும மோசடி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேரும் நிரபராதிகள் என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ தரப்பு சமர்ப்பிப்புகளை முன்வைத்தது. இந்த சாட்சியங்களை ஆராய்ந்த பின்னர் அரசு…
-
- 0 replies
- 342 views
-
-
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம் தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வடக்கிலுள்ள தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஸ்டித்தபோது, இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஸ்டானங்களை செய்யவிடாது தடுத்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் ம…
-
- 0 replies
- 568 views
-
-
மாவீரர் தின எதிரொலி - சுமந்திரன் ஓர் இனவாதி! நாடாளுமன்றில் கடுமையான கூச்சல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடி உயிர்நீத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நினைவு கூர்ந்தமையால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை குறுக்கீடு செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்…
-
- 7 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ். மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, கலாசார மண்டபத்தின் அதிகாரிகள் அங்கு அமைந்துள்ள கட்டடங்கள், அரங்குகள் பற்றி விளக்கமளித்ததோடு, அங்குள்ள சகல பகுதிகளையப் பற்றியும் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர். கலாசார மண்டபத் தொகுதியினுள் அமைந்துள்ள மூன்று கட்டடத…
-
- 53 replies
- 5.4k views
-
-
http://newjaffna.com/wp-content/uploads/2020/11/rathana_thero-800x445.jpg உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ். ரதனதேரர் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், எங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு நான் அன்போடு எழுதுகின்றேன், உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லை ஏனென்றால் நீங்களும் உங்கள் இறந்த மக்களும் இந்த நாட்டில் பிறந்த எங்கள் சகோதர சகோதரிகள் போல தான். சிங்கள மக்களைப் போலவே நீங்களும் இந்த நாட்டையும் நேசிக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் இத…
-
- 1 reply
- 854 views
-
-
புதுக் கட்சி தொடங்கினார் அனுஷா சந்திரசேகரன் மலையக அரசியலுக்கு புது இரத்தம் பாய்ச்சும் நோக்கில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் மறைந்த முன்னாள் எம்பியுமான பெ.சந்திரசேகரன் எம்பியின் மகளும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் புதுக் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி என்ற தொழில் சங்கத்தையும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியையும் பதிவு செய்து தனது புதிய கட்சி பணியை ஆரம்பிக்க உள்ளதாக அனுஷா நேற்று(28) தெரிவித்துள்ளார். மேலும், “என் தந்தை வழியில் எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய 17 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அடுத்தகட்ட சமூக செயல்பாடுகளுக்கான அடித்தளமாக…
-
- 1 reply
- 400 views
-
-
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் கைது- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு 56 Views மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வாழைச்சேனை பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த முருகுப்பிள்ளை கோகுலதாசன் (37) என்ற ஊடகவியலாளரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஊடகவியலாளரை வாழைச்சேனை பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மீது பயங்கரவாதச் தடைச் சட்டத்…
-
- 0 replies
- 343 views
-
-
மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது. யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று (27) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார். அருட்தந்தை தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது! | NewUthayan
-
- 28 replies
- 2.9k views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை மீள இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுங்க திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 62 மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை, மீள இந்தியாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தியாவிலிமிருந்து அபராதத் தொகையை அறவிட்டு, அதனை இந்தியாவுக்கே மீள் ஏற்றுமதி செய்யவுள்ளோம். மேலும், கைப்பற்றப்பட்டுள்ள கொள்கலன்களில் 1 மில்லியன் கிலோ கிராம் மஞ்சள் காணப்படுகின்றது. அத்துடன் இந்…
-
- 4 replies
- 677 views
-
-
200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசா…
-
- 18 replies
- 2k views
-
-
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கக்கோரி பிள்ளையானின் தம்பியால் வழங்கப்பட்ட பணம்! வாழைச்சேனை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற பயத்தின் நிமிர்த்தமே பிரதேச சபையின் தவிசாளரால் நாளை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரணை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக தவிசாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதேச சபையின் தவிசாளர் நாளை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரனையினை ஒத்தி வைப்பதாக ஊடகவாயிலான அறிக்கை விட்டுள்ளதை கண்டித்து பதினைந்து சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடக சந்திப்பொன்றினை ஓட்டமாவடி நாவலடியில் நடாத்தினர். குறித்த ஊடக சந்திப்பின் போது சபை உ…
-
- 0 replies
- 457 views
-
-
யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 386 views
-
-
இந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020 இந்திய கடல் வலயம் தொடர்பில் கவனம் செலுத்தி சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக் கொண்ட முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று (28.11.20) நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு ஆகிய மூன்று நாடுகளினதும் பாதுகாப்புத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மாரியா தீதி மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இந்த மாநாட்டில் பங்குபற்றினர். மொரிஷியஸ், சீசெல்சு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்புப…
-
- 2 replies
- 429 views
-
-
யாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன! வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட 40 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் படி இந்த நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் …
-
- 2 replies
- 1k views
-
-
ட்டக்களப்பு பல்கலைக்கழகம் பயங்கரவாதத்தை கற்றுகொடுக்குமிடமல்ல : உலமா கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமான கேள்விக்கு மிகவும் அறிவுபூர்வமாகவும் யதார்த்தபூர்வமாகவும் பதில் கொடுத்த உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸிற்கு நன்றி தெரிவிக்கின்றோம் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்பது நாட்டில் பயங்கரவாதத்தை படித்துக்கொடுக்கும் ஷரீயா வித்தியாலயம் என்றும் அதை அரசு கையகப்படுத்துமா என்றும் காவிந்த ஜ…
-
- 3 replies
- 700 views
-
-
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் குழு மோதல் – பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான எம். நடராஜசுந்தரம் பேரவையினால் நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் கடந்த 21 ஆம் திகதி முதல் தனது விசாரணைகளை நடாத்தி, சம்பவம் தொடர்பில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்பித்திருந்தார்.இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்த…
-
- 2 replies
- 837 views
-
-
தடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன் https://www.facebook.com/NewsfirstTamilSL/videos/774715566411775
-
- 2 replies
- 562 views
-
-
மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன் November 25, 202011:23 a ஏரூர் தில்லை விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். இன்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். மேலும் தெரிவிக்கையில்… அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை -2020 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2020 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் சொந்த மண்ணையும் மீட்டெடுத்து, எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை, எமது அகமனதில் தரிசித்து வணக்கம் செலுத்தும் தேசிய நாள். தமிழீழ மக்களின் சுதந்திரப்போராட்டத்தை, இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுந…
-
- 0 replies
- 1.4k views
-