ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள்: அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- ஞானசார தேரர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தொடர்பாக அரசாங்கம், தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தினார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாட்டுக்குள் அதிக பேசுபொருளாக கொரோனா விவகாரம் மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதா- புதைப்பதா எனும் வாதமும் இடம்பெற்று வருகிறது. அத்த…
-
- 8 replies
- 1.1k views
-
-
“இலங்கையில் ஜனநாயகம் இல்லை“ – கொளத்தூர் மணி 23 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது. அவ்வாறான…
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கையில்... 5 இறப்புகள் மாத்திரமே, கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி. இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை எனவும் ஏனைய அனைத்தும் நாட்பட்ட நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார். நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையா…
-
- 5 replies
- 730 views
-
-
யாழ். பல்கலையில் கலைப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கையளிப்பு Bharati November 13, 2020யாழ். பல்கலையில் கலைப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கையளிப்பு2020-11-13T05:17:31+05:30 LinkedInFacebookMore யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற…
-
- 0 replies
- 430 views
-
-
ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில்- பிரிட்டனின் சன் November 11, 2020 ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரிட்டனின் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐஎஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சன் தெரிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்படும் நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள சன் இலங்கையும் அதிலொன்று என குறிப்பிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது ,சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என சன் தெரிவித்துள்ளது. மொ…
-
- 5 replies
- 722 views
-
-
கொரோனா முடிந்ததும் முதலாவது வேலை கல்முனையை தரமுயர்த்துவது தான் என்கின்றார் கருணா Published: November 11, 2020 Thuyavan Mathi நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் எனவும் இந்த தேர்தலில் நான் தோற்கவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி பகுதியில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை இன்று(11) காலை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்…
-
- 5 replies
- 965 views
-
-
இலங்கையில்... முதலாவது, ட்ரோன் படையணி! இலங்கை இராணுவத்தில் ட்ரோன் படையணி ஒன்று ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நிலத்தை கண்காணிக்கும் விடயத்தில், இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை இராணுவத்தினர் பெற்றுக்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறைவு செய்த நாடு என்ற ரீதியில்,நாட்டில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளைக் கண்காணிப்பதற்காகவும் எதிர்காலத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவத்தினரை சகல விடயங்களிலும் பலப்படுத்துவது அவசியம் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார். h…
-
- 5 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று காலை விழுந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பதிவாகியுள்ளது. தாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்த சிறுவன் உணவருந்திக்கொண்டிருந்துள்ளான் இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழ…
-
- 3 replies
- 897 views
-
-
உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளரும், ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பது தொடர்பில் இலங்கையில் தற்போது பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஹனா சிங்கர் இக்கடிதத்தை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பவவுவதைத் தடுக்க, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிருபணமாகவில்லை. அதற்கு பதிலாக தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகள…
-
- 0 replies
- 422 views
-
-
தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுங்கள். இந்த கொடிய கொரோனாநோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார்கள். http://cdn.virakesari.lk/uploads/medium/file/138450/deepali.jpg இன்று மாலை யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அழைப்பு விட்டுள்ளார்கள். உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அது மட்டுமன்றி இந்துக்களின் விரதநாட்கள் வரு…
-
- 1 reply
- 901 views
-
-
அடுத்த வருடம் முதல், அரச ஊழியர்கள்... உள்நாட்டு ஆடையை அணிய வேண்டும் – தயாசிறி ஜயசேகர அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்யப் போவதாக அவர் கூறினார். …
-
- 6 replies
- 955 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து 1 பில்லியன் டொலர்களையும், சீனாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இவ்வாறான குறுகிய கால கடன்களினால் வெகு விரைவில் நாடே கடன் பொறிக்குள் சிக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சகல துறைகளும் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது, சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது, ஆனால் நாடு மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக்க…
-
- 0 replies
- 529 views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த சுகாதார நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தவறான முன்னுதாரணத்தையே வழங்குகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார். இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைக்கக்கூடாது என்றும் அவர் மேலும் ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கிறார். அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொரோனா…
-
- 18 replies
- 1.3k views
-
-
பிரதமரின் தலைமையில் தீகவாவி தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்! ‘சொலொஸ்மஸ்தான’விற்குரிய கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள முக்கியத்துவத்திலும், அளவிலும் முன்னுரிமை பெறும் தீகவாவி புனித பூமியிலுள்ள தாதுகோபுரத்தை புனரமைக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டார். முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அதனை தொடர்ந்து பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தாதுகோபுர புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு அடிக்கல் நாட்டி வைத்தார். குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தீகவாவி ரஜமஹா விகாராதிபதி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிகளுக்கான துணை பிரதான நீதித்துறை சங்கநாயக்கர் சங்க கீர்த்தி ஸ்ரீ புத்தரக்கித சாம ஸ்ரீ…
-
- 6 replies
- 748 views
-
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது – பிரித்தானியாவிடம் இந்தியா கோரிக்கை? பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000ஆம் ஆண்டளவில் பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்தது. யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த நிலையில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாக…
-
- 3 replies
- 781 views
- 1 follower
-
-
2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது – மஹிந்த 2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020 முதல் இலங்கை 4200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்த…
-
- 1 reply
- 486 views
-
-
தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்வதை இலக்காகக் கொண்டே தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரா? - இரா.சாணக்கியன் Published: November 11, 2020 Thuyavan Mathi பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷ போன்ற இந்த நாட்டில் சில முக்கிய குழப்பங்களை உருவாக்கிய அரசியற் தலைவர்களினால் சாதிக்க முடியாத தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்யும் முயற்சியை ஒரு சவாலாக எடுத்து தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரோ என்று சந்திதேகிக்கத் தோணுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபையில் வரவுசெலவுத் திட்ட சபை அமர்வில் கலந்த…
-
- 1 reply
- 449 views
-
-
யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது! யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்று (புதன்கிழமை), வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்க தொலைபேசியும் பறித்து சென்றது. கொரோனோ தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது ஒரு அமைப்பு உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முகநூலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பதிவொன்றினை இட்டிருந்தார். பதிவினை நீக்க கோரி க…
-
- 0 replies
- 380 views
-
-
பிள்ளையானுக்கு ஒரு நீதி; அரசியல் கைதிகளுக்கு மற்றொரு நீதியா? கேள்வி எழுப்பகின்றார் சிவாஜி 29 Views பிள்ளையான் சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு அபிவிருத்திக்குழுத் தலைவர் அலுவலகத்தை திறக்க முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு; “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலி…
-
- 1 reply
- 484 views
-
-
“கார்த்திகை வீரர்கள் தினம் நினைவு கூரும் போது, தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்தத் தடை” 32 Views கடந்த காலங்களில் சலுகைகளாக வழங்கப்பட்ட, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவு கூரல் அனுமதிகள், தற்போது அடக்குமுறைக்கு துணைபோகும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீளக்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தடையுத்தரவுகள் விதித்து வருகிறது இலங்கை அரசாங்கம். இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அடிப்படை உரிமை மீறல் குறித்து இலங்கை தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரி…
-
- 0 replies
- 474 views
-
-
பா.உ சிவநேசதுரை சந்திரகாந்தனால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது BATTINEWS MAIN மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரின் காரியாலயம் மட்டக்களப்பு கச்சேரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது . மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் , சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் கட்சி முக்கிய உறுப்பின…
-
- 2 replies
- 473 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் சுரேன் ராகவன் ஈடுபட வேண்டாம் – சிவாஜிலிங்கம் சுரேன் ராகவன் எம்பி தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் எம்பியுமான சுரேன் ராகவன் தன் வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும், தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார். நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற …
-
- 2 replies
- 376 views
-
-
மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான் November 10, 2020 (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்போம் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார். அதேவேளை காத்திகை 27ஆம் திகதி மாவீரர் தினத்தையும் அவர் நினைவுபடுத்தினார். மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வழக்கிற்கு வருகைதந்த பிள்ளையானை வழக்கு முடிவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வி…
-
- 16 replies
- 1.5k views
-
-
யாழில் பண்டிகைக்கால அங்காடி வியாபாரத்துக்குத் தடை: யாழ்.மாநகர முதல்வர் November 11, 2020 யாழ்ப்பாணம் மாநகருக்குள் பண்டிகைக்கால அங்காடி வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இம்மானுவேல் ஆர்னல்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழமையாக யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அனுமதிக்கப்படும் ‘பண்டிகைக் கால அங்காடி’ வியாபாரத்திற்கு இவ்வருடம் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது என முதல்வரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள…
-
- 2 replies
- 590 views
-
-
தமிழர் தாயகத்தை இல்லாமல் செய்வதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றாரா-இரா.சாணக்கியன் 22 Views பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமா, மஹிந்த போன்ற இந்த நாட்டில் சில முக்கிய குழப்பங்களை உருவாக்கிய அரசியற் தலைவர்களினால் சாதிக்க முடியாத “தமிழர் தாயகம்” என்ற ஒன்றை இல்லாமல் செய்யும் முயற்சியை ஒரு சவாலாக எடுத்து தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரோ என்று சந்திதேகிக்கத் தோணுகின்றது என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “இனி வரும் காலங்கள் உண்மையில் மிகவும் சவாலான ஒரு காலப்பகுதி. தமிழர…
-
- 1 reply
- 496 views
-