Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்கு…

    • 11 replies
    • 1.4k views
  2. எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் - சிறிதரன்.! இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி இந்த அரசு ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சம் எங்களிடம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மறைந்த பாடகர் எஸ்.பி.பி…

    • 6 replies
    • 1.1k views
  3. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி -கனகராசா சரவணன்- மட்டக்களப்பு பொலிசாரால்; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இது தவறான செயல் என நீதிபதி தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். …

    • 2 replies
    • 883 views
  4. புங்குடுதீவில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த கும்பல் யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார…

  5. 13வது திருத்தம் பற்றிய அனுபவங்கள் – கருத்துக்களை பகிர்வது எனது கடமை - விக்னேஸ்வரன் October 2, 2020 கேள்வி: ‘இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய வெளிநாட்டு சேவைகள் அதிகாரி நடராஜன் ஆகியோருடன் காணொளி உரையாடல் ஒன்றில் வரும் ஞாயிரன்று நீங்கள் ஈடுபடப் போவதாக அறிந்தோம். இந்த உரையாடலில் நீங்கள் கலந்துகொள்வதன் மூலம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டர்கள் என்பதாகுமா? 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக…

  6. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் October 2, 2020 இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் பதவிவிலகியதனை வெற்றிடமாக காணப்பட்டு வந்த பொதுச்செயலாளா் பதவிக்கே அவா் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளாா். கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத்தலைவர்களாக செயற்பட்டு வந்த ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும…

  7. காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறுசிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர் என்று வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (02) வருகைதந்த அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும், “வடக்கு கிழக்கு மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தம் என்பது சுலபமானது அல்ல. யுத்தகாலத்தின் போது காணாமல் போனவர்கள், மரணித்தவர்கள் பற்றி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகள…

  8. ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர். சமகால அரசாங்கத…

  9. ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரமாண்ட ஊர்வலம்! இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்றுகாலை ஆரம்பமாகியது. இப்பேரணியானது காலை வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மனிக்கூட்டு கோபுரம் சென்று பசார்வீதியூடாக சென்று சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடைந்தது. மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்…

  10. தமிழ் ஊடகவியலாளர்களின் தேவைகளை ஆராய அமைச்சர் வடக்கிற்கு விஜயம் வடக்கில் தமிழ்மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட தேவைகளை ஆராய்வதற்காக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அம்மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை இன்று (02) மேற்கொள்கிறார். விஜயத்தின் போது அமைச்சர் தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களின் தொழில்துறை தேவைகள் குறித்து கலந்துரையாடுகிறார். இதேவேளை, வடக்கில் உள்ள மாணவர்களை கல்வி மற்றும் ஊடகத்துறையில் ஈடுபடுத்துவது குறித்தும் அரசாங்கம் விசேட வேலைத் திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அரசாங்க தகவல் திணைக்களம்) http://tamil.adaderana.lk/news.php?nid=134600

    • 1 reply
    • 436 views
  11. பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் கவனம்; அருந்திக்க பெர்னாண்டோ.! பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் தான் அது தரப்பில் பேசிக் கொள்வதாக உள்நாட்டு சிறுகைத்தொழில் பனை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். பரணி பகுதியில் அமைந்துள்ள பனை தொழிற்சாலை உற்பத்தி நிலையத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், எதிர்காலத்தில் பனம் பொருள் சார் உற்பத்திப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பில் தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார். அத்துடன் மானிய அடிப்படையில் கடன்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரத்தினை மேலும் மேம்ப…

    • 1 reply
    • 434 views
  12. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடு பூராகவும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக குறித்த உத்தியோகத்தர்கள் கடமை புரிவது இல்லை, எனினும் புற்று நோய் இனங்காணப்பட்ட நோயாளிக்கு குறித்த கதிரியக்க சிகிச்சை அளிக்காவிடில் மீண்டும் ப…

  13. நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 27ஆம் திகதி அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அன…

  14. 13::நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது.! ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “15 மில்லியன் டொலர் நிதியையும் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இந்திய பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவத்திற்கு அடிபணியாமல் போராடி உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய அணியில் இருந்து அரச உணவை உண்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. புதி…

  15. ஹட்டனில் கோர விபத்து – 24 மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயம்! ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகிழாக கவிழ்ந்துள்ளதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்போது 24 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் க…

  16. போருக்குப் பின் இலங்கைக்கு சீனாவே உதவியது – கோட்டபாய இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவே முன்வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள் குடியரசு, ஜேர்மன், வத்திக்கான், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதியை சந்தித்தித்தனர். இந்த சந்திப்பில் உரையாற்றிய கோட்டபாய, “2009ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதம் தோல்வியுறச் செய்ததன் பின்னர், நாட்டின் துரித அபிவிருத்தியையே அரசாங்கமும், மக்களும் எதிர்பார்த்தார்கள். போர் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் துரித அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவிகள்…

    • 1 reply
    • 521 views
  17. யாழ்ப்பாணம், நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்று கோ…

    • 1 reply
    • 648 views
  18. விக்கினேஸ்வரனின் கட்சி தேர்தலுக்காக செலவிட்ட தொகை குறித்த கணக்கறிக்கை வெளியானது! தமிழ் மக்கள் கூட்டணியினர் தமது தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்படி அந்தக் கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தல் செலவாகக் குறிப்பிட்டுள்ளது. 14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவியாக கிடைத்துள்ளதாக அந்த கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/விக்கினேஸ்வரனின்-கட்சி-த/

  19. வவுனியாவில் உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த இரண்டு மாணவிகள் மாயம் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை கா ணவில்லை என அவர்களது பெற்றோர் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் உள்ள உயர்தர வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டில் தங்கி நின்று சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கல்வி கற்று வந்தார். குறித்த மாணவியின் தாயார் கடந்த செவ்வாய்க் கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில், பாடசாலையில் இருந்து குறித்த மாணவிகளை பரீட்சைக்கான அனுமதி அட்டையை பெற அனுப்பி வைக்குமாறு தாயாருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்த…

  20. இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “வரவேண்டும்.. வரவேண்டும்.. ஐநா அமைதிப்படை வரவேண்டும்”,”எங்கள் குழந்தைகள் எங்கே இதற்கு பதில் கூற யாரும் இல்லையா?”,…

  21. “என்னிடம் தவறில்லை. எனவே எந்த விசாரணைகளுக்கும் நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அந்த விசாரணை மக்கள் மன்றத்தில் அல்லது அனைவரும் பார்க்கும் விதமாக நடக்க வேண்டும் என்று கட்சிக்கான பதில் கடிதத்தில் குறிப்பிட்டேன்” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பார் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “என்னிடம் 37 சாட்சிய ஆவணங்கள் இருக்கின்றது. விசாரணை நடத்துவதாயின் கட்சிக்கு அப்பால் நீதிபதிகளையோ அல்லது தகுதியான மூன்று பேர் கொண்ட குழுவையோ நியமிக்க வேண்டும் எனக் கோரினேன். ஆனால் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர். என்னில் தவறில்லை என்பதால், எனக்கு எதிராக சாட்சி…

  22. ஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு! ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது என்று சிஐடியினர் இன்று (23) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாதம்-விசா-3/

  23. Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 04:38 - 0 - 51 AddThis Sharing Buttons Share to FacebookFacebookShare to TwitterTwitterShare to WhatsAppWhatsApp பாறுக் ஷிஹான் 2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16 வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் …

  24. வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இ…

  25. இலங்கை குறித்த சிறப்பு நிகழ்வுகளை மனித உரிமைகள் பேரவை நடத்த வேண்டும்: ஜெனீவாவில் கோரிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்த்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்று ஜெனீவாவில் கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.