நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம். அன்னாரின் பூதவுடல் பெப்பிரவரி 28, மார்ச் 01 வெள்ளி, சனி இரு நாட்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை Warden/Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Homeஇல் (3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3) இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Woodbine/Kingston சந்திப்பிலுள்ள St. John’s Norway Cemetery & Crematorium இல்(256 Kingston Rd, Toronto, ON M4L 1S7) தகனம் செய்யப்படும். - See more at: http://www.canadamirror.com/canada/22449.html#sthash.ofvVEo0p.dpuf
-
- 5 replies
- 1.1k views
-
-
மஹா சிவராத்திரி விரதம் இந்துக்களால் இன்று (27) அனுஸ்டிக்கப்படுகிறது. சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி என்ற தொடர்மொழி ‘பெருமை மிக்க சிவனுக்கு உரிய இரவு’ எனப் பொருள்படும். இது ஆண்டு தோறும் மாசி மாதத்தின் தேய்பிறை பதினான்காம் திகதியில் அதாவது கிருஷ்ணபக்ஷ்த்துச் சதுர்த்தசியில் வரும் விரதம் ஆகும். மஹா சிவராத்திரி விரதம், பூஜைகள் யாவும் இன்று வியாழக்கிழமை (27) சூரிய உதயத்துடன் ஆரம்பமாகி நாளை (28) வெள்ளிக்கிழமை காலை வரையான காலமாக கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் வாழும் இந்து மக்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு விரதமிருந்து விடிய விடிய இறை சிந்தனையுடன் மனதை ஒரு நிலையப்படுத்துவது போல மஹா சிவராத்திரி தினத்திலும் சிவ ஸ்தலத்தி…
-
- 3 replies
- 696 views
-
-
செந்தளிர் Singer 2014 – திரையிசைப் பாடற் போட்டி [saturday, 2014-02-15 12:19:57] யேர்மனி செந்தளிர் இசைக்குழுவின் அனுசரணையில் „செந்தளிர் Singer – திரையிசைப் பாடற் போட்டி“ எனும் மாபெரும் பாடல் போட்டி யேர்மனி தழுவிய ரீதியில் நடைபெற உள்ளதென்பதை மகிழ்வோடு அறியத்தருவதில் செந்தளிர் கலையகம் பெருமை கொள்கின்றது. முதற் சுற்று யேர்மனியில் இரு இடங்களில் (Nordrhein-Westfahlen & Hessen)ல் குரல் தெரிவுப்போட்டியாக நடைபெறும். இரண்டாம், மூன்றாம் சுற்று போட்டிக்கான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும். உங்களது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பங்களை 10.04.2014க்கு …
-
- 4 replies
- 677 views
-
-
ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் 25வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் எமது மக்களின் விடிவிற்காக நீதிகேட்டு ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம். இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. http://www.sankathi24.com/news/37385/64//d,fullart.aspx
-
- 0 replies
- 497 views
-
-
`தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி' - 10.03.2014. இன்றைய காலத்தின் தேவை கருதி இது கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்ல நாம் - கைகோர்த்து நீதிகேட்போம் வாரீர்.......! ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபை முன்றல் வரை.... எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கம் வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வாருங்கள் முகப்புப் புத்தகங்களின் ஊடக உலகம் முழுவதும் பகிர்ந்துகொண்டு. மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் . நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வி.ரகுபதி
-
- 0 replies
- 834 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக பிரித்தானிய பாராளுமன்றில் நீண்டகாலமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், ஈழத்தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொள்பவருமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரேந்திர சர்மா எம்.பி. அவர்களின் சகோதரனின் இழப்பை முன்னிட்டு அவரின் ஆத்ம சாந்தி வேண்டி நாளை (15-12-13) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள ஈலிங் அம்மன் ஆலத்தில் மதியம் 12:00 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழில் கலந்து கொண்டு இயற்கை எய்திய அமரர் திரு. சுரிந்தர் சர்மா அவர்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கும் அதே வேளை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பது மட…
-
- 0 replies
- 721 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு http://tamil24news.com/news/archives/122182
-
- 0 replies
- 529 views
-
-
யாழில் இரு நூல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும் மரணம் இழப்பு மலர்தல் & பிரக்ஞை ஒரு அறிமுகம் தலைமை - யாழ் பல்கலைக்கழ நூலகர் - சிறிஅருள் உரையாற்றுபவர்கள் படைப்பாளரும் விமர்சகரும் - தமிழ் கவி எழுத்தாளரும் விமர்சகரும் - கருணாகரன் --------------------------------------------- - நிலாந்தன் மனநல வைத்திய நிபுணர் - சிவயோகன் இடம் - தியாகி அறக்கட்டளை மண்டபம் (TCT) (நாவலர் மண்டபத்திற்கு முன்பாக) நாவலர் வீதி - யாழ்ப்பாணம் திகதி - 08.12.2013 நாள் - ஞாயிற்றுக் கிழமை நேரம் - மாலை 4.00 மணி வழமையாக தாமதாமாக வருகின்றவர்களுக்கு மாலை 4.00 மணி வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 4.30 மணி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
-
- 4 replies
- 1.1k views
-
-
மரணம் இழப்பு மலர்தல் - அறிமுக வெளியீட்டு நிகழ்வு கருத்துரைகளும் கலந்துரையாடலும் தலைமை - வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன். உரைகள் - - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் - வைத்திய கலாநிதி சிவதாஸ் - ஊடக விரிவூரையாளர் தேவகௌரி. மேலும் சிலர் உரையாற்ற உள்ளனர்.. விபரங்கள் விரைவில் கொழும்பு தமிழ் சங்கம் - வெள்ளவத்தை சனிக்கிழமை 05:00 PM முதல் 08:00 PM வரை வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு மாலை 5 மணி வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 5.00மணி
-
- 2 replies
- 664 views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு அணிந்துரைகளிலிருந்து.........
-
- 2 replies
- 997 views
-
-
எம்தேச விடியலுக்காய் உயிரீய்ந்த மாவீரத் தெய்வங்களை உள்ளுணர்வோடு வணங்கும் நாள் மாவீரர் நாள். இந்த புனித நாளில், யேர்மனியில் வதியும் மாவீரர்களுடைய நெருங்கிய உறவுகளாகிய, தாய், தகப்பன், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, பிள்ளைகளை உறவுகளாக கொண்டு, அவர்களுக்குரிய மாவீரத் திருவுருவப் படங்களை வைத்து வணக்க நிகழ்வுகளை நிகழ்த்துவதில் யேர்மனி மாவீரர் பணியகம் செயற்பட்டு வருகின்றது. அத்தோடு அனைத்து மாவீரத்தெய்வங்களையும் வணங்கும் முகமாக பொது ஈகச்சுடரேற்றி நமது உணர்வு வணக்கத்தை செலுத்துவது எமது வீரவணக்கமாகும். இந்த புனிதவேளையில் மாவீரர் குடும்பத்தினராகிய தங்களை, மாவீரத்தெய்வங்களின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி வணங்க மேன்மையுடன் அழைக்கின்றோம். அத்துடன் 27.11.2013 அன்று மாவீரர்நாள் …
-
- 3 replies
- 917 views
-
-
மாவீரன் பிரபாகரன் பற்றிப் பேசுவது ஈழம் பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும். வரலாறு நெடுகிலும் இழப்பையும் இடப்பெயர்வையும் ஈகையையும் தன்னகத்தே கொண்ட தமிழீழ மண்ணின் அடையாளம், திருஉரு, தலைவர் பிரபாகரன். தமிழர் எழுச்சியின் பொருண்மை ‘வடிவம்’ பற்றி, அந்த மாபெரும் மனிதரைப் பற்றி இந்நூல் பேசுகிறது. உலகமயச் சூழலில் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளும் நியாயங்களும் கூட சரக்குகளாக்கப்பட்டு, பரிவர்த்தனை சந்தையில் விற்கப்படும் கூச்சலில் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலத்தின் ஓலம் உறைந்தே போனது. நாற்பது ஆயிரம் பிணங்களின் மேலே நின்று கொண்டு எல்லாம் முடிந்து விட்டது என்ற தங்களின் கவித்துவ நீதியை நடுநிலையாளர்கள் கதைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அத்தனைக்கும் நடுவே, துரோகத்தால் சிதைந்துபோன ஒரு தேசத்தின்…
-
- 0 replies
- 640 views
-
-
சுவிற்சர்லாந்தின் TRX தமிழ்காற்று வானொலி சேவையினால் ஈழத்தமிழர்களின் கலைப் படைப்புக்களின் பிரசவகளமாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்காத்து நிகழ்வில் அடுத்த ஆண்டு முதல் எம்மவர் பாடல்களுக்கான (தாயக. புலம்பெயர் ஈழக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்கள்) போட்டியொன்று நடாத்த ஆலோசிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், ஆதரவு என்பவற்றை நாடி நிற்கின்றோம். முடிந்தால் அனைவரும் இப்பகுதிக்குச் சென்று இந் நிகழ்வுக்கான உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். https://www.facebook.com/groups/235341499864727/permalink/564309780301229/
-
- 1 reply
- 618 views
-
-
தமிழ்நாடு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழாவினை வருகிற 2013ஆம் ஆண்டு நவம்பர் 9 10 11 ஆகிய தேதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது . திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழறிஞர்கள் கவிஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கள் வருகை தருகின்றனர். http://www.sankathi24.com/news/33980/64/9-10-11/d,fullart.aspx
-
- 1 reply
- 679 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் வகையில் கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டி நடாத்தப்படுகின்றது. இம்முறை தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் 29.09.2013 அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு அகவணக்க விளக்கேற்றளும் நடைபெறவுள்ளது. டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கி…
-
- 0 replies
- 534 views
-
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2013ஐ முன்னிட்டு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்தும் கலைத்திறன் போட்டி தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 12.10.2013. விண்ணப்பப்படிவம் கீழே உண்டு .. http://irruppu.com/?p=36393
-
- 0 replies
- 645 views
-
-
இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போர் புரிந்து விதையாகிப்போன தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் சிறீலங்கா இந்திய அரசுகளின் கூட்டுத் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்,கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் முதல் களப்பலியான பெண்போராளி 2வது லெப். மாலதி ஆகியோரின் நினைவுதாங்கிய 26 வது ஆண்டு http://www.sankathi24.com/news/33288/64//d,fullart.aspx
-
- 0 replies
- 505 views
-
-
-
30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். 16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா எமது அன்புக்குரிய மக்களே...! "போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது…
-
- 2 replies
- 571 views
-
-
தேசிய மாவீரர் நாள் 2013 தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கும் புனித நாள்...! 27.11.2013 புதன், நண்பகல் 12:30 மணி Forum Fribourg, Route du Lac 12, 1763 Granges-Paccot எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதி எடுக்க அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்...! — Forum Fribourg இல்
-
- 0 replies
- 767 views
-
-
தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி விழா...! 29.09.2013 ஞாயிறு, பிற்பகல் 14:00 மணி Homberger Haus, Ebnatstrasse 86, 8200 Schaffhausen வீரத்தின் வித்துக்களிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்..
-
- 0 replies
- 671 views
-
-
சூரிச் அடிஸ்வீல் முருகன் ஆலயத் தேர்த் திருவிழா 17.09.2013 இடம்பெற்றது. சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கு நிகராக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் பலபேர் காவடி ஆடியும் வர தேர் சூரிச் அடிஸ்வீல் வீதியில் பவனிவருவதை வீடியோவில் காண்கின்றீர்கள். http://www.ilankainet.com/2013/08/blog-post_5340.html
-
- 0 replies
- 769 views
-
-
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்...! 14.09.2013 சனி காலை 08:30 மணி முதல்... Unterallmend மைதானம் Holzplatz 2, 6037 Root (LU)(swiss) அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்...!
-
- 1 reply
- 550 views
-
-
-
- 0 replies
- 693 views
-