நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
638 topics in this forum
-
-
- 2 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்! தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளை இன்று நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431661
-
- 0 replies
- 169 views
-
-
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் நிகழ்வு மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் இன்று (03) மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன் அவர்களால் சுவாமியின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண…
-
- 0 replies
- 495 views
-
-
-
- 3 replies
- 859 views
-
-
ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையை நிறுவ பேரழைப்பு.! இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு வலுசேர்க்கும் முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன் இந் நடவடிக்கைக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்த நிலையில் இதன் இன்னொரு முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/world/london/2021/02/103335/
-
- 0 replies
- 468 views
-
-
தமிழியம் தயாரிப்பில் உருவான "வன்னிஎலி" (பெரியார் திரை குறும்படவிழாவில் சிறப்புப்பரிசு பெற்றது) மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய குறும்படக்காட்சிகள் 16.01.2010 சனி மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. நிகழ்வுகள் 18:00 - 18:05 மங்கள விளக்கேற்றல் 18:05 - 18:10 தமிழ்த்தாய் வாழ்த்து 18:10 - 18:15 தமிழியம் ஒரு அறிமுகம் 18:15 - 18:35 "தாங்கும் விழுதுகள்", "வன்னிஎலி" மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய படங்களில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு. 18:35 - 18:45 பிரதமவிருந்தினர் உரை வளக்கறிஞர் திரு. எஸ். ஜே ஜோசெப் (LL.B. Ceylon og LL.B. London), தலைவர் ஈழவர் திரைக்கலை மன்றம். 18:45 - 18:55 பாடல் காட்சிகள் ”Show me…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
இயேசுவை சிலுவையில் அறைந்த நாளானஇன்று பெரிய வெள்ளிக்கிழமை தினமாககிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இயேசு நாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும்,பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். மாலையில் கோவிலில் பிரார்த்தனை முடியும் வரை விரதம் இருப்பார்கள். இந்த பிரார்த்தனையின் போது இயேசு நாதர் சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று `பைபிளில்' கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங…
-
- 4 replies
- 1.3k views
-
-
கள உறவுகளுக்கு வணக்கம் நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி மங்கள விளக்கேற்றல் கொடியேற்றம் அக வண…
-
- 19 replies
- 6.7k views
-
-
சிட்னியில் 5ல் இருந்து 10 நிமிட தெருக்குத்து அல்லது சிறு நாடகம் நடத்த கதை தேவை. நகைச்சுவையுடன் போராட்ட சம்பந்தமான விடயமும் இருக்கவேண்டும். மக்களுக்கு இந்த தெருக்குத்தின் மூலம் போராட்ட சம்பந்தமான விடயங்கள் தெரியவேண்டும். யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?
-
- 6 replies
- 2.1k views
-
-
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று சிறீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்ற…
-
- 0 replies
- 121 views
-
-
தேசிய மாவீரர் நாள் 2013 தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கும் புனித நாள்...! 27.11.2013 புதன், நண்பகல் 12:30 மணி Forum Fribourg, Route du Lac 12, 1763 Granges-Paccot எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதி எடுக்க அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்...! — Forum Fribourg இல்
-
- 0 replies
- 776 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2013ஐ முன்னிட்டு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்தும் கலைத்திறன் போட்டி தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 12.10.2013. விண்ணப்பப்படிவம் கீழே உண்டு .. http://irruppu.com/?p=36393
-
- 0 replies
- 651 views
-
-
-
எதிர்வரும் 14-07-2012 அன்று யேர்மனி டோர்ட்மூண் நகரில் நடைபெற இருந்த தமிழர் விளையாட்டு விழா மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் 18-08-2012 சனிக்கிழமை டோர்ட்மூண்ட் நகரில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். -நன்றி- http://eeladhesam.com
-
- 0 replies
- 786 views
-
-
[size=4]பிரித்தானியாவில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் 2012 இம்முறையும் வழமைபோல் நவம்பர் 27 (27.11.2012) அன்று நடைபெறும் என்பதை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றது.[/size] [size=4]அத்தோடு முழுமையான மாவீரர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் ஈடுபட்டிருப்பதால், பிரித்தானியாவில் வாழும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், உரித்துடையோரையும், எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையுடன் தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக்கொள்கின்றது.[/size] [size=4]இவ் ஆண்டிற்கான தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக கீழ்காணூம் முகவரியில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் (01.…
-
- 1 reply
- 738 views
-
-
வித்தியாரம்பம் செய்வதற்கு எதிர்வரும் 26ஆம் திகதியே சிறந்தநாள் – ஐயப்பதாச குருக்கள்! வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தசமியில் வித்யாரம்பம் செய்வது குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி திதி நிற்பதனால். நவமியில் வித்தியாரம்பம் செய்யக்கூடாது. எனவே, 26ஆம் திகதி திங்கட்கிழமை தசமியிலேயே வித்யாரம்பம் செய்யவேண்டும். அட்டமி மற்றும் நவமி திதியில் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் சுப காரியங்கள் எதையுமே ஆரம்பிக்கமாட…
-
- 0 replies
- 926 views
-
-
http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=22 நான் என்ன சொல்ல வாறன் எண்டா . . . இதுக்கு நானும் போனன். படிக்கிற பெடியங்களின்ட இடத்தில உனக்கு என்ன வேலை எண்டு லூசுத்தனமா எல்லாம் கேள்வி கேக்க கூடாது. எனக்கு கெட்ட கோவம் வரும். படம் காட்டுறதே வாழ்க்கையா போச்சு . . . ம் . . ம் . .ம் . .
-
- 0 replies
- 1.3k views
-
-
33 நாட்கள் உள்ளன ? எதாவது செய்ய வேண்டும் போலாவது உள்ளதா ? இல்லையேல் , “கட்டாயம் செய்யவேண்டும் ஆனா எனக்கு இப்ப கொஞ்சமும் நேரமில்லை “ என்று சொல்லிதப்ப விருப்பமா ? இல்லையேல் , எம் பணி என்ன ? என் பணி என்ன ? என்று ஏதாவது செய்ய விருப்பமா ? எம் உறவே தொடர்பு கொள் ! தோள் கொடு ! ஓன்றாக ஒன்றுபட்டு பல கருமம் ஆற்ற ! Date : Saturday November 13th 2010 Time : 3:00 pm - 4:30 pm Location : Unit # 10 , 5310 Finch Ave E - NCCT Head Office (Finch /Markham ) ============================================================= போர்க்குற்ற ஆதாரங்கள் சமர்ப்பிப்பு இறுதி திகதி மார்கழி, 15, 2010 http://www.yarl.com/forum3/in…
-
- 1 reply
- 848 views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே! உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்! வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில். இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக…
-
- 26 replies
- 6.8k views
-
-
சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய தமிழ்ப் புத்தாண்டு (2038) பொங்கல் விழா! தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எடுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் புத்தாண்டு விழா இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழன் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் பற்றிய கவலை இல்லாமல் இருப்பதுதான் அவனது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும், பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடுதான் தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகும். இம்முறை தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கனடா முருகன் கோயில் அரங்கி…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழில் காண்பியல் கண்காட்சி March 6, 2019 யாழில் காண்பியல் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது. பல்கலைகழக படிப்பை நிறைவு செய்த மாணவர் குழு ஒன்று “சிவன் ஆர்ட்டீஸ்” எனும் தொனிப்பொருளில் குறித்த கண்காட்சியினை நடாத்தி வருகின்றனர். யாழ்.கார்கீல்ஸ் சதுக்கத்தில் 2ஆம் மாடியில் இன்று புதன் கிழமை முதல் குறித்த கண்காட்சி நடைபெறுக்கின்றது. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை விற்பனை செய்யப்படவுள்ளன. காண்பியல் கலையின் பல பரிமாணங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாகவே இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் http://globaltamilnews.net/2019/115310/
-
- 0 replies
- 760 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எட்டாவது தென்னங்கீற்று கலைமாலை - 2011 வரும் சனிக்கிழமை 31-12-2011 அன்று இடம் பெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்
-
- 26 replies
- 3k views
-
-
பிரேம்குமார், பிரேமினி ஆகியோரின் நடன நிகழ்வு இன்று (ஏப்ரல் 14) மாலை 5:00 மணிக்கு ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. இதற்கான கட்டணங்கள் $30, $50. வி.ஐ.பி., வி.வி.ஐ.பி நுழைவுச் சீட்டுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 416- 417 3258. நடைபெறும் இடம்: The Danforth Music Hall, 147 Danforth Ave, Toronto, ON
-
- 8 replies
- 1.1k views
-