விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா…
-
- 1 reply
- 526 views
-
-
புறக்கணிக்கும் தேர்வாளர்கள்: ரஞ்சி தொடரில் இரட்டை சதமடித்து அசத்திய ஜடேஜா! ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஜடேஜா இரட்டை சதமடித்து அசத்தினார். முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர் மற்றும் விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஜடேஜாவுடன், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அஷ்வின் தமிழக அணிக்காகவும், ஜடேஜா ச…
-
- 1 reply
- 443 views
-
-
டி20 அணியில் சிராஜ், ஷ்ரேயஸ்; டெஸ்ட் அணியில் மீண்டும் முரளி விஜய் முரளி விஜய் - முகமது சிராஜ் | கோப்புப் படங்கள் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்திய டி20 அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் புதிய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 வயதான சிராஜ் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். தென் ஆ…
-
- 1 reply
- 485 views
-
-
உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்? by : Anojkiyan உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் முதல் வீரராக, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இருப்பார் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வீரர் பிரட் ஹோக் கூறியுள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், ரி-20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை. அவுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்…
-
- 1 reply
- 712 views
- 1 follower
-
-
விலக்கப்பட்டார் வான் கால் மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தின் முகாமையாளர் லூயிஸ் வான் கால், அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கழகம், உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தது. அவர் நீக்கப்படும் செய்தி, கடந்த சனிக்கிழமையிலிருந்து வெளிவந்த நிலையிலேயே, தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது இடத்துக்கு, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ, நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்.ஏ கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியைச் சம்பியன் ஆக்கிய பின்னரே, வான் கால் பதவி விலக்கப்பட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தெரிவாகாமை உட்பட, கழகத்தின் அண்மைக்காலப் பெறுபேறுகளில் திருப்தியடை…
-
- 1 reply
- 488 views
-
-
உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து: பிரேசில் முன்னிலை; கடும் சிக்கலில் அர்ஜென்டினா வெனிசூலா அணிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் பிரேசில் வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்கப் பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேசில் தொடர்ச்சியாக தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்க மற்றொரு பெரிய அணியான அர்ஜென்டினா பராகுவே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிர்ச்சித் தோல்வி கண்டு 5-வது இடத்தில் உள்ளது. பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து ரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நேரடியாக தகு…
-
- 1 reply
- 277 views
-
-
இது தொடக்கம் மட்டுமே; இன்னும் அதிகம் சாதிக்க விரும்புகிறோம்: விராட் கோலி சென்னையில் வெற்றி பெற்று டிராபியை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரிடமிருந்து பெறும் கேப்டன் விராட் கோலி. | படம்.| பிடிஐ. 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடையாமல் ஆடி வருகிறது. இது ஒரு ‘சிறுதுளியே’ என்கிறார் விராட் கோலி, இன்னமும் நிறைய சாதனைகள் செய்ய விரும்புகிறோம் என்கிறார் கேப்டனும், தொடர் நாயகனுமான கோலி. மேலும் 2016-ம் ஆண்டில் 9-வது டெஸ்ட் போட்டியை சென்னை வெற்றி மூலம் வென்றுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி கூறியதாவது: இரண்டு பின்னடைவுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவில…
-
- 1 reply
- 408 views
-
-
விராட் கோலிக்கு எச்சரிக்கை இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவில் எதிருவரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது . 10 ஆண்டுகளாக ஐசிசி கிண்ணத்தை வெல்லாத இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ணத்திற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் வரும் 30-ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கு வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையி…
-
- 1 reply
- 416 views
-
-
ஸ்பானிஷ் லா லிகா: புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ரியல் மாட்ரிட் இரண்டு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் கரிம் பென்ஸிமா. படம்: கெட்டி இமேஜஸ் மாட்ரிட் முன்னணி 20 கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்துப் போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, 13 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியில் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம், பார்சிலேனாவை, செல்டா 4-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வீழ்த்தி அதிர்ச்சி யளித்தது. ரியல் மாட்ரிட் அணிக்கும் அத்லெடிக் பில்பாவோ அணிக்கும் இடையே நடந்த போட்டியில், 19-வது நிமிடத்தில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமா ரியல்மாட்ரிட் அணிக…
-
- 1 reply
- 356 views
-
-
ஆஷஸ் என்றால் என்ன? - இன்று ஆரம்பமாகிறது டெஸ்ட் சமர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டத்தினால் தோற்கடித்தது. இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 85 ஓட்டங்களை கூட எடுக்க முடியாத இங்கிலாந்து அணி 77 ஓட்டத்துக்குள் சுருண்டு 7 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு வெறுப்படைந்த ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஓவலில் 1882 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்…
-
- 1 reply
- 760 views
-
-
யூரோ 2016 : கோல் லைன் டெக்னாலஜி அறிமுகம்; யூஃபா அறிவிப்பு (வீடியோ) யூரோ 2016 கால்பந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் 'கோல் லைன் டெக்னாலஜி' நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யூஃ பா அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது ஜெர்மனிக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்ட் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டு எல்லைக் கோட்டைத் தாண்டியது. ஆனால் நடுவரால் சரியாக அதனை கணித்து கோல் என்று அறிவிக்க முடியவில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக உக்ரேன் வீரர் ஷிவ்சென்கோ அடித்த கோலும் இதே கோலும் இதே போல் …
-
- 1 reply
- 441 views
-
-
இதற்காகவா பலமுறை சினமுற்றார் சங்கா...? (வீடியோ இணைப்பு) கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நேற்றைய போட்டியில் அதிக சினமுற்றமையை அவதானிக்க முடிந்தது. நேற்றைய தினம் இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஜமைக்கா டலவாஸ் அணி மோதிக்கொண்டன. குறித்த போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணித் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார அணித்தலைவராக செயற்பட்டார். முதலில் துடுப்பெடுத்தாடிய டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களை குவித்தது. 148 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடு…
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
குஜராத்: உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஜடேஜா குஜராத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். புதுடெல்லி: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ளது சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாம்நகர் அணி முதலில் விளையாடியது. ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். …
-
- 1 reply
- 453 views
-
-
தகுதி சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டி இன்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டியின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் முதலிரு இடங்களைப் பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொண்டன. ஸிம்பாப்வே மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் துரதிர்ஷ்டவசமாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. ஒரு குழுவில் தலா 5 அணிகள் வீதமாக ஏ,பீ என இரு குழுக்களும் லீக் சுற்றில் பங்கேற்றன. இதில்…
-
- 1 reply
- 264 views
-
-
யாழ் மத்திய கல்லூரியின் அடையாளம் திரு.போல் பிரகலாதன்
-
- 1 reply
- 1.2k views
-
-
களமிறங்கப்போகும் உலகக் கிண்ண அணி 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அதே இலங்கை கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு அர்ஜுன ரணதுங்க, சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியின் மூலம் சமூக தொண்டாற்றுவதற்கு நிதி சேகரிப்பதே முக்கிய நோக்கம் என்றும் பழைய வீரர்களை மீண்டும் ஒ…
-
- 1 reply
- 447 views
-
-
டோனியின் தந்திரம் அம்பலம்! வெற்றிக் கிண்ணங்களை இளம் வீரர்களிடம் கையளித்ததன் பின்னணியில் உள்ள இரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி வெளியிட்டுள்ளார். பிரபல இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியிலும் தனது செயல்களால் இரசிகர்களையும் இரசிகரல்லாதோரையும் கவர்ந்திருப்பவர் டோனி. அணித் தலைவராகப் பதவியேற்றபின், தாம் விளையாடிய போட்டிகளிலும் போட்டித் தொடர்களிலும் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில், வெற்றிக் கிண்ணத்தை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு, ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டவர் டோனி. “அது ஒரு விளையாட்டுத் தந்திரம்” என்று தனது செயலுக்கு விளக்கமளி…
-
- 1 reply
- 347 views
-
-
தர்சினி சிவலிங்கத்தினால்... ஆசிய கிண்ணத்தை வென்ற, சிங்களம்... அவரை புறக்கணித்தது. சிங்களவன் இப்படத்தை முகநூல்களில் பகிர்கிறான் என்றால் எங்கட தமிழருக்கு எங்கே போய்விட்டது அறிவு ? தர்சினி சிவலிங்கம் இல்லாவிடில் இந்த சிறீலங்கா அணியினால் காலிறுதி போட்டிக்கேனும் சென்றிருக்கமுடியாது . கடந்த தடவையும் ஆசிய கிண்ணத்தை வென்றது தர்சினி சிவலிங்கத்தினாலேயே . இம்முறையும் அவரில்லாமல் கிண்ணத்தை வென்றே இருக்கமுடியாது . நூற்றுக்கு 98 வீதமான கோல்களை அவரே போட்டிருந்தார் . தர்சினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று அவுஸ்ரேலியாவிலுள்ள பிரபல கழகமொன்றுக்கு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் சிறீலங்கா அணி அனைத்துப்போட்டிகளிலும் படுதோல்வியடைந்துகொண்டிருந்தது .இ…
-
- 1 reply
- 575 views
- 1 follower
-
-
இலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல்! நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்! இலங்கை கிரிக்கெட் ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கையின் தேசியக்கொடியைப் பிடித்துக்கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி வந்த காட்சி அனைத்து இலங்கை ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இலங்கை சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது. இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். …
-
- 1 reply
- 565 views
-
-
இங்கிலாந்து அணியில் சங்ககரா ஜனவரி 16, 2015. லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘கவுன்டி’ போட்டிகளில், சர்ரே அணிக்காக விளையாட, இலங்கையின் சங்ககரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் அனுபவ வீரர் சங்ககரா, 37. சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்களை கடந்த இவர், அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளார். இதனையடுத்து இவரை, இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘கவுன்டி’ போட்டிகளில் விளையாட, சர்ரே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட உள்ள இவர், இந்த ஆண்டு நடக்கவுள்ள ‘கவுன்டி’ சீசனில் நிறைய போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர், ‘கவுன்டி’ போட்ட…
-
- 1 reply
- 433 views
-
-
300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் தோனி : ஆசியக் கோப்பை இந்தியாவின் சாதனைகள்! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. அவற்றை பார்ப்போம்... டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் டக்அவுட் ஆன இரண்டாவது கேப்டன் மொர்டஷா. இதற்கு முன் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டியில் போர்ட்டர்ஃபீல்ட் இதே போல் டக் அவுட் ஆகியுள்ளார். இருவருமே முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதும் இதில் விஷேசம். ஆசியக் கோப்பையை இரு முறை வென்ற 3வது கேப்டன் என்ற பெயரை தோனி பெறுகிறார். இதற்கு முன் முகமது அசாருதீன், மகிலா ஜெயவர்த்ததேன ஆகியோர் இரு முற…
-
- 1 reply
- 441 views
-
-
* மனைவி கூறுகிறார் பொப் வூல்மரின் மரணம் இயற்கையானதல்ல, அவர் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி உறுதி கூறியுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியுடன் மேற்கிந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் கடந்த மாதம் 18-ஆம் திகதி ஜமேக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஜமேக்கா பொலிஸார் கூறினர். ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் நிபுணர்கள் தங்களது அறிக்கையில், வூல்மர் இயற்கையான முறையில் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இ…
-
- 1 reply
- 929 views
-
-
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சிட்னியில் நடைபெற்ற குருப் ஏ பிரிவு அணிகள் இடையேயான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீராங்கனை ஆலிசா ஹீலி (Alyssa Healy) 51 ரன்களும், ஆஸ்லிக் கார்ட்னர் (Ashleigh Gardner) 34 ரன்களும் சேர்த்தனர். 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் சாய…
-
- 1 reply
- 376 views
-
-
குயிண்டன் டி கொக் அதிரடியில் உலக சாம்பியன்கள் அவுஸ்ரேலியாவை இலகுவாய் வெற்றிகொண்டது தென் ஆப்பிரிக்கா. குயிண்டன் டி கொக் அதிரடியில் உலக சாம்பியன்கள் அவுஸ்ரேலியாவை இலகுவாய் வெற்றிகொண்டது தென் ஆப்பிரிக்கா. தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும்,தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நிறைவுக்கு வந்துள்ளது. இளம் வீரர் குயிண்டன் டி கொக் அதிரடியில் மிரட்ட உலக சாம்பியன்கள் அவுஸ்திரேலிய அணியை இலகுவாக 6 விக்கெடுக்களால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிகொண்டு அசத்தியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. …
-
- 1 reply
- 393 views
-
-
20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்! 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக். கடந்த 2012-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 200 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடிப்பது சாத்தியமே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், அதைத் தொடங்கி வைத்தார் சச்சின். இதற்குப் பிறகு சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை. இதனிடையே உள்ளூர் போட்டி ஒன்றி…
-
- 1 reply
- 519 views
-