விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பிரவிண் டாம்பேவை, மற்றொரு மும்பை வீரர் ‘பிக்சிங்கில்’ ஈடுபட அணுகியது அம்பலமாகியுள்ளது. ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவியே பறிபோனது. இதனிடையே எட்டாவது பிரிமியர் தொடரின் போது,‘ ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த வீரர் ஒருவரை, இந்த தொடரில் பங்கேற்காத மற்றொரு மும்பை வீரர் அணுகினார்,’ என, செய்திகள்…
-
- 6 replies
- 835 views
-
-
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்படும் 84ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முதலாம் நாளான நேற்று நிலைநாட்டப்பட்ட சாதனைகளில் ஒரு சாதனை யாழ். மாவட்டத்திலுள்ள அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் என்பவரால் நிலைநாட்டப்பட்டது. ஆண்களுக்கான 18 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் 4.20 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலம் நெப்தலி ஜொய்சன் புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன் மூலம் அவரது கல்லூரியைச் சேர்ந்த பீ. லவணன் 2012இல் நிலைநாட்டிய 3.77 மீற்றர் என்ற சாதனையை நெப்தலி ஜொய்சன் முறியடித்தார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியில் 17 வ…
-
- 6 replies
- 594 views
-
-
மிர்பூர் டெஸ்டில் பங்களாதேஷ் அணியை இனிங்ஸாலும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய வெற்றி வித்தியாசத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. இதற்கு முன் 1997 - 98 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இனிங்ஸாலும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 254 ஓட்டங்கள் தவிர, 3 விக்கெட் மற்றும் 4 கட்சுகளும் சச்சினுக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தன. இது, டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கைப்பற்றும் நான்காவது தொடர் நாயகன் விருது. மிர்பூர் டெஸ்டின் இரண்டு இனிங்ஸிலும் ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
பல் இல்லாத சிங்கம் போல டி வில்லியர்ஸ் இல்லாத தென்ஆப்ரிக்கா திணறல் ! வங்கதேச அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிர்பூரில் நடந்த இந்த போட்டியில் உலகக் கோப்பை தொடரில் விதிக்கப்பட்ட தடை காரணமாக தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் விளையாடவில்லை. ஏற்கனவே அவருக்கு விடுப்பளிக்கப்பட்டு நாடு திரும்பி விட்ட நிலையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேசத்தை மிர்பூரில் எதிர்கொண்டது. பகலிரவு போட்டியான இதில், டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி கேப்டன் ஹாசிம் ஆம்லா பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 2 ரன்னில் அவுட் ஆனார். 22 ரன்னில் ஆம்லா வெளியேறினார். டுப்லெசிஸ் மட்டும் ஓரளவுக்கு சமாளித்து 44 ரன்கள் எடுத்தார். ரூசவ் 4, மில்லர்…
-
- 6 replies
- 569 views
-
-
இத்தருணத்தில் உதைப்பந்தாட்ட ரசிகர்களை கேட்பதில் ஆச்சரியம் இருக்காது என நினைக்கிறேன். ஏனோ தெரியவில்லை பிறேசில் விளையாட்டு வீரர் கவ்வு எனது மனதை கவர்ந்தவர்.எத்தகைய சூழ்நிலையிலும் அவரின் வசீகர சிரிப்பை காணலாம். உங்களுக்கு பிடித்த வீரர்களை கூறுங்களேன். தயவு செய்து விளையாட்டு செய்திக்கு மாற்றுங்கள்.
-
- 6 replies
- 2.4k views
-
-
சர்வதேசக் கிரிக்கெட் சபை விதிமுறைகளை தாண்டி பந்துவீசும் பந்து வீச்சாளர்களை தடைசெய்யும் செயற்பாட்டில் 20 வருடம் தாமதித்துள்ளது என, முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என கூறிய அவுஸ்திரலியா நடுவர் டரில் ஹேர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா பத்திரிகை ஒன்றிற்கே இவாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தலைமுறையாக இவ்வாறான பந்துவீச்சாளர்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். 1995ஆம் ஆண்டே சர்வதேசக் கிரிக்கெட் சபை இந்த சுத்தமாக்கல் நடவடிக்கையை செய்து இருக்க வேண்டும். ஆனால் 19 வருடம் தாமதித்து, விதிமுறைகளை தாண்டி பந்தை வீசி எறிபவர்கள் கிரிக்கெட்டில் இனி வேண்டாம் என கூறி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது மிகப் பிந்திய செயற்பாடு எனவும் கூறியுள்ளார். நடுவர்கள் துணிவற்றவர்கள் எனவும், த…
-
- 6 replies
- 505 views
-
-
படத்தின் காப்புரிமை Twitter/DolphinsCricket இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர். அவரது பெயர் செனூரன் முத்துசாமி. என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா? ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர். தமிழ் தெரியாது 25 வயதாகும் செனூரனின…
-
- 6 replies
- 1.6k views
-
-
ரோயல் - தோமியனின் 138 ஆவது நீலங்களின் சமர் மார்ச்சில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கி ஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கும் இடையிலான நீலங்களின் சமர் என அழைக்கப்படும் 138 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆக்ஷியாட்டா செயற்படுகின்றது. இதற்கான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இரு கல்லூரிகளின் அதிபர்கள், டயலொக் ஆக்ஷியாட்டா கு…
-
- 6 replies
- 906 views
-
-
சதத்தில் மட்டுமல்ல சமையல் கலையிலும் சச்சின் கிங்! http://www.adaderana.lk/tamil/news.php?nid=30800 இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் திறமையானவர் அல்ல. சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர். இதை அவர் கூறும் சில உண்மை சம்பவங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(39). கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிரணி பந்துவீச்சை துவஷம் செய்யும் இவர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்த நிலையில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி, சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர் என்பது அவர் கூறிய சில உண்மை சம்பவங்கள் வெளிப்படுத்தி உள்ளன. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உணவு வகைகள் தொடர்பான புத்தகம் ஒன…
-
- 6 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணியின் தலைவர் உபுல் தரங்க உட்பட பல மூத்த வீரர்களும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவிருக்கும் மூன்றாவது T20 போட்டிக்கு பாகிஸ்தான் செல்வதற்கு தயக்கம் காட்டிய நிலையில், சகலதுறை வீரர் திசர பெரேரா இலங்கை அணி தலைவராக செயற்படவுள்ளார். பெரேரா உலக பதினொருவர் அணியுடன் T20 தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக கடந்த மாதம் பாகிஸ்தான் பயணித்திருந்தார். இந்த தொடர் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகளை ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டி…
-
- 6 replies
- 853 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா By PRIYATHARSHAN 16 SEP, 2022 | 12:11 PM இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில், தற…
-
- 6 replies
- 432 views
- 1 follower
-
-
சச்சினின் 100வது சதம் குறித்த அதீத எதிர்பார்ப்பு இந்தியாவைப் பாதிக்கும்-ஆண்டர்சன் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 14:32 லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் குறித்து இந்திய அணியினரின் அதீத எதிர்பார்ப்பு, இந்திய அணியின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். அதீத எதிர்பார்ப்புகள் காரணமாக சச்சின் கவனமும், அவரது அணியினரின் கவனமும் திசை திரும்பி அவர்களது செயல்பாடுகளை அது பாதிக்கும் என்றும் ஆண்டர்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,99 சதங்களைப் போட்டு விட்டு சச்சின், தனது 100வது சதத்தை லார்ட்ஸ் மைதானத்தி்ல போடுவார் என்ற அதீத எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்களும், அணியினரும் உள்ளனர். அது சச்சின் மற்றும் …
-
- 6 replies
- 953 views
-
-
Kumar Sangakkara has made an extraordinary, scathing attack on the "partisan cronies" at Sri Lanka Cricket (SLC), who have blighted the sport in his country, and who led him to resign the captaincy after only two years in charge, following the World Cup final in April. Sangakkara was delivering the MCC Spirit of Cricket Lecture at Lord's. In an hour-long speech that earned him a standing ovation, Sangakkara charted the unique history of cricket in his country, and called on SLC to root out its corrupt practices and recognise the huge role the sport now needs to play in promoting reconciliation at the end of a 30-year civil war. Sangakkara pinpointed the countr…
-
- 6 replies
- 1.6k views
-
-
வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம் சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம். இவரின் உயரம் ஆறு அடி பத்து அங்கும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவானைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி சிவலிங்கம், ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர். இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் …
-
- 6 replies
- 1.9k views
-
-
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான் 2014-08-23 19:01:13 இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பெண்டரிகள் உட்பட 89ஓட்டங்களைம் மஹேல ஜயவர்தன 66 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர். அஷான் பிரியஞ்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர். …
-
- 6 replies
- 602 views
-
-
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர் டேல் ஸ்டெய்ன், ஏ.பி.டிவிலியர்ஸ். - படம். | ஏ.பி. போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஜிம்பாபவேவுக்கு எதிராக டிசம்பர் 26-ம் தேதி தொடங்கும், உலகின் முதல் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிவில்லியர்ஸ் கடைசியாக ஜனவரி 2016-ல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். டேல் ஸ்டெய்னும் பெர்த்தில் கடந்த ஆண்டு தோள்பட்டைக் காயம் அடைந்து அதன் பிறகு ஆடவில்லை. மோர்னி மோர்கெலும் காயத்திலிருந்து மீண்டுள்ளார். எனவே தென் ஆப்பிரிக்க அணி அதன் அபா…
-
- 6 replies
- 508 views
-
-
”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். குறிப்பாக சைவ உணவு கிடைக்காமல் போனதால் இஷாந்த் சர்மா ரொம்பவே கொந்தளித்துப் போனாராம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னர் 5 டெஸ்ட் போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் பட்டு உயிரிழந்தார். இதனால் போட…
-
- 6 replies
- 815 views
-
-
IND vs AUS டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய டெஸ்ட் இன்னிங்ஸ் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர் 19 டிசம்பர் 2020, 05:56 GMT பட மூலாதாரம், EPA இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான பேட்டிங். இரண்டாம் இன்னிங்சில், 21.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 36 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இரண்டாம் இன்னிங்சை இந்தியா முடித்தபோது ஆஸ்திரேலிய அணியைவிட 89 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. வெறும் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தனது இரண்டா…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் கனடா செல்கின்றது [21 - September - 2008] கனடாவில் நடைபெற இருக்கும் 20 -20 கிரிக்கெட்போட்டியில் பங்குபற்ற இருக்கும் இலங்கை அணி வீரர்களின் பெயர்பட்டியல் கடந்தவாரம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இலங்கை அணியின் முன்னணி மூத்த வீரர்களான முத்தையா முரளீதரன், சமிந்தவாஸ், குமார்சங்கக்கார, சாமர சில்வா ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இவர்களுக்குப் பதிலாக தற்போது முதல்தர கிரிக்கெட்போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் திலின கண்டம்பி, தில்ரா, லொக்கு ஹெட்டிகே, ஜீவன்தகுலதுங்க ஆகியோர் இலங்கை அணியில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக இலங்கை அணியில் இடம்பிடிக்காது இருந்து வந்த சகலதுறை ஆட…
-
- 6 replies
- 2k views
-
-
15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தண்டனை காலம் முடிந்து 15 மாதங்களுக்குப்பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் புதன்கிழமை களமிறங்குகிறார் மரியா ஷரபோவா. ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்திய தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவருக்கு 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால் அவர் மீண்டு…
-
- 6 replies
- 630 views
-
-
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன. லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’க்கு வந்து விட்டது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மிதாலிராஜ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் 5 வெற்றி, 2 த…
-
- 6 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்திரசேகர் லூத்ரா பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித் சர்மாவின் தலைமையில் ஆடிய இந்திய அணியின் ஒருநாள் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. ஆஸ்திரேலியாவிடம் தோற்றபிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 23) நடைபெறும் போட்டியுடன் தொடங்குகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்ற அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். ஹர்திக் பாண்டியா இல்லாததால், அணியின் தலைமை பொறுப்பு சூர்ய குமா…
-
- 6 replies
- 661 views
- 1 follower
-
-
இப்போ நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியில் நியுசிலாந்து அணி சார்பில் ஒரு தமிழர் விளையாடுகின்றார் .பெயர் -லலிதானந்தன் யுகராஜா.(ARNES YUGARAJAH).முக புத்தகத்தில் போய் இவர் பற்றிய விபரங்கள் அறியலாம் . இலங்கை டீமில் ஒரு தமிழருமில்லை.
-
- 6 replies
- 861 views
-
-
இந்திய - மேற்கிந்திய தொடர் இன்று ஆரம்பம் இந்திய – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடைபெறவுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு இருபதுக்கு 20 ஆட்டத்தில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடிய இந்திய அணி லண்டனில் இருந்து அப்படியே மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு சென்றது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிகவும் மோச…
-
- 6 replies
- 832 views
-
-
பகல்- இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 202 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் இன்றைய நாள் மிக முக்கியமானதாகும். இன்றுதான் இளஞ்சிகப்பு பந்தில் விளையாடும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இதில், அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி குப்…
-
- 6 replies
- 992 views
-