விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவுக் குழுவினர் வீரர்களைத் நேற்று தெரிவு செய்தனர். ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் அதிரடி துடுப்பாட்ட காரர் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு…
-
- 0 replies
- 502 views
-
-
யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் சகலதுறை வீரர் யுவராஜ் சிங்குக்கு அண்மையில் நுரையீரலில் நீர்கட்டி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நீர்கட்டி அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் யுவராஜ் சிங்கை புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியான தகவல் என்றாலும் ஆரம…
-
- 4 replies
- 1.2k views
-
-
சினிமா நட்சத்திரங்கள் அடங்கிய 6 அணிகள் பங்கேற்றுள்ள செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த அரைஇறுதியில் தமிழக நடிகர்கள் அடங்கிய சென்னை ரைனோஸ் அணியும், தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த வாரியர்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி உள்ளூர் ரசிகர்கள், நடிகர் நடிகைகளின் உற்சாகமான ஆதரவுடன் சென்னை ரைனோஸ் பேட்டிங் செய்தது. விஷ்ணு (45 ரன், 25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜீவா (27 ரன்), விக்ராந்த் (24 ரன்) ஆகியோரின் குறிப்பிடத்தக்க ஆட்டத்தால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. …
-
- 1 reply
- 680 views
-
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் : அசாரெங்கா சாம்பியன் மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அசாரெங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில், மரியா ஷரபோவாவை எதிர்கொண்ட அசாரெங்கா, 6--3, 6-0 என்ற நேர்செட்களில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். இவர் வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.c...-101400455.html
-
- 1 reply
- 611 views
-
-
வரலாறு படைத்தார் பயஸ்: ஆஸி., ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் பயஸ்,39, செக் குடியரசின் ஸ்டெபானெக்,33, ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இப்பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பயஸ். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறியது. இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறியும், ஒரு முறை கோப்பை பயஸ் ஜோடி வென்றதில்லை. இதில் இரு முறை (2006, 2011) அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்களிடம் தோற்றது. நேற்று நடந்த பைனலில் பயஸ் ஜோடி, மீண்டும் "நம்பர்-1' ஜோடி…
-
- 0 replies
- 569 views
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டக்கிண்ணம் 2012 ஐரோப்பிய உதைபந்தாட்ட விசிறிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 2012 ம் ஆண்டு போலந்திலும் உக்ரைனிலும் நடைபெற உள்ளது. நிகழ்வை நடாத்தும் போலந்து , உக்ரைய்னைத் தவிர மேலும் பதினான்கு நாடுகள் இந்த விளையாட்டில் பங்குபெறுகின்றன. ஸ்பெயின் டென்மார்க் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி கிரீஸ் இத்தாலி நெதர்லாந்து ரஷ்யா சுவீடன் ஆகிய நாடுகள் முதற் சுற்றிலும் குராசியா அயர்லாந்து போர்த்துகல் செக்காய் குடியரசு ஆகிய நாடுகள் இரண்டாவது சுற்றிலும் தெரிவாகின. பங்குபற்றும் பதினாறு நாடுகளும் நான்கு பிரிவாக்கப்பட்டு விளையாட்டுக்கள் நடைபெறும். இறுதிச் ச…
-
- 21 replies
- 2k views
-
-
நான்காவது டெஸ்ட் போட்டியிலும் மண்கவ்வி சாதனை படைத்த இந்திய நட்சத்திர மட்டையணி !!! அவுஸ்த்திரேலியாவில் நடைபெற்றுவந்த ஆஸி இந்திய அணிகளுக்கிடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி நான்கு போட்டிகளிலும் படுதோல்வியைத் தழுவியதால் 4-0 என்கிற அடிப்படையில் போடர் - கவஸ்கர் வெற்றிக்கிண்ணத்தை பறிகொடுத்தது. உலகின் முதலாவது டெஸ்ட் அணி என்கிற பட்டத்தை கடந்த வருடம் தனதாக்கிய உலகின் பலமான மட்டையாட்டக்காரர்களைக் கொண்ட அணி என்று கூறிக்கொண்ட இந்திய மட்டையாட்ட அணி தழுவியிருக்கும் தோல்வியானது சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்தில் கடந்த வருட இறுதியில் அது அடைந்த 4-0 என்கிற டெஸ்ட் தொடர் தோல்வியோடு அவுஸ்த்திரேலிய அணியிடம…
-
- 2 replies
- 685 views
-
-
இதை படிச்சிட்டு என்னடா எதோ கிரிக்கட் பற்றி எழுத போறன் என்று நினைத்து வந்தவர்களிற்க்கு ஏமாற்றமே. பலர் அறிந்திருக்க முடியாத அளவிற்க்கு இந்தியாவில் ஒரு பகுதியில் உதைபந்தாட்டம் கிரிக்கெற்றை விடவும் மேலாக நேசிக்கப்படுகின்றது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களிற்க்கே தெரியாமல் கிரிக்கற்றால் பின்தள்ளப்பட்ட இரு கழகங்களின் கதை இது. உதைபந்தாட்டம் பற்றி பேசினால் அது ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா பற்றியதாக தான் இருக்கும். ஆசியா பற்றி யாரும் நினைக்க மாட்டார்கள். அதுவும் இந்தியா பற்றி நினைப்பாரே இல்லை. கல்கத்தா நகரை சேர்ந்த இரு கழகங்களுக்கிடையிலான இந்த ஆட்டமே உலகில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இந்தியாவில் இது சாத்தியமா…
-
- 1 reply
- 793 views
-
-
“El Clásico” என்பது Spain நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நடந்து வரும் இரு கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி என்பதை விட போர் என்றே சொல்லலாம். El Clasico ஆனது Real Madrid மற்றும் FC Barcelona அணிகளிற்கிடையில் நடக்கும் ஆட்டத்தை குறிக்கும். Coca Cola குளிர்பாணத்தில் உலக புகழ் போல் El Clasico உதைபந்தாட்டத்தில் உலகறிந்த ஒரு ஆட்டம். 109 ஆண்டுகளில் 240ற்க்கு மேற்பட்டஆட்டங்களை தாண்டிய இந்த வரலாற்றை வரிசைப்படி பார்ப்போம். 1902 - 1906 இந்த இரு கழகங்களிற்கிடையிலான முதலாவது போட்டி 13. Mai 1902 அன்று நடைபெற்றது. Real Madrid கழகம் உருவாகி ஒரு சில மாதங்களே ஆகி இருந்தது. FC Barcelona கழகம் கடந்த 3 ஆண்டுகளிற்க்கு முன்னமே உருவாகியிருந்தது. உலகையே கவர்ந்திழுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 604/7 இந்தியா 112/5 தென்னாஸ்திரேலிய நகரான அடிலெயிட்டில் நடைபெற்றுவரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 604 ஓட்டங்களைப் பெற்று தனது அட்டத்தினை நிறுத்திக்கொண்டது. இதில் அவ்வணியில் தலைவர் கிளாக் 210 ஓட்டங்களையும் அவ்வணியின் முன்னால்த் தலைவர் பொண்டிங் 220 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களை மட்டுமே இதுவரை பெற்றிருக்கிறது.இதில் இந்தியாவின் நட்சத்திரத் துடுப்பாட்டக்காரரும், தனது நூறாவது சத்தத்தைப் பெற்றுக்கொள்வார் என்று இத்தொடர் ஆரம்பமாகிய நா…
-
- 1 reply
- 813 views
-
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின், மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி நுழைந்துள்ளது. இந்திய ரஷ்ய ஜோடி காலிறுதிப் போட்டியில், 2வது நிலை வீராங்கனைகளான லீஸல் ஹ்யூபர், லிசா ரேமன்ட் ஜோடியை கடுமையாகப் போராடி வென்றது. மூன்று மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில், 6-3, 5-7, 7-6 (6) என்ற செட் கணக்கில் இந்திய, ரஷ்ய ஜோடி வெற்றி பெற்றது. ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதியில் சானியா நுழைவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு அவர் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். அப்போதும் அவர் எலினாவுடன்தான் விளைய…
-
- 0 replies
- 635 views
-
-
ஒலிம்பிக் போட்டி வருகிற ஜுலை 27-ந் திகதி முதல் ஆகஸ்டு 12-ந் திகதி வரை இலண்டனில் இடம்பெறவுள்ளது. இந்திய டென்னிஸ் வீரர்களுக்கு 7 பேருக்கு பயிற்சி மற்றும் பயிற்சியாளர்களுக்கான கட்டணம், போட்டியில் பங்கேற்பது ஆகிய செலவுகளுக்காக இந்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் மொத்தம் ரூ. 1 1/2 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் சோம்தேவ் வர்மன், லியாண்டர் பெயஸ், மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா, ஆகிய முன்னணி வீரர்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட மாத காலத்துக்கு செலவுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 509 views
-
-
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அந்நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறிய பேட்ஸ்மேன்களை உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணியை செயலற்றவர் என்றும் பழித்துள்ளன. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணி செயலற்றவர் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து 'தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிர…
-
- 1 reply
- 602 views
-
-
இந்தியா மூன்றாவது டெஸ்ட்டிலும் ஒரு இன்னிங்ஸ் 43 ஓட்டங்களால் படுதோல்வி பேர்த்தில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 43 ஓட்டங்களினால் படுதோல்வியைத் தழுவிக்கொண்டது. வெறும் இரண்டரை நாட்களில் முடிந்துப்போன இந்தப் போட்டியில் இந்தியா முதலாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் ரெண்டாவது இன்னிங்ஸில் 171 ஓட்டங்களும் பெற்ற நிலையில் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஒரு இன்னிங்ஸ் மட்டுமே துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலியா 369 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வோனர் கொவென் இணைப்பாட்டமாக ஆரம்ப விக்கெட்டுக்காக 214 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் வோனர் 5 சிக்ஸர்கள் 20 பவுண்டரிகள் அடங்களாக வெறும் 159 பந்துகளை மட்டுமே முகங்கொண்டு 180 ஓட்ட…
-
- 3 replies
- 814 views
-
-
அவுஸ்த்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய உலகின் முதலாம் தர டெஸ்ட் அணியான இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரரான விரேந்தர் ஷேவாக் ஓட்டமிழக்காமல் ஆட்டமிழந்தார். உலகின் நட்சத்திரத் துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அணி என்று மார்தட்டும் இந்தியாவின் மிகப்பலமான துடுப்பாட்ட வரிசையை அவுஸ்த்திரேலிய அணியின் இள வயது பந்துவீச்சாளர்கள் துவசம் செய்தனர். இறுதியில் இந்திய அணி அவமானகரமான 161 ஓட்டங்களுக்குச் சுருண்டு கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய ணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வோனர் மற்றும் எட் கொவென் ஆகியோர் முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் ஆட்ட்மிழக்காமல் 148 ஓட்டங்…
-
- 11 replies
- 1.1k views
-
-
In the first ODI between South Africa and Srilanka, South Africa batted first and scored 301/8. In reply Srilanka was 13/6 in 8 overs. Going for the worst defeat in history !!!! Enemies of Tamils, Srilanka and India are facing defeats at the same time!!!!!!
-
- 18 replies
- 1.1k views
-
-
இலங்கை கிரிக்கெட்? தென்னாபிரிக்காவுடன் முதல் ரெஸ்டில் படுதோல்வி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்துள்ளது. இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 180 ஓட்டங்களைப் பெற்றது. அதன் பின் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 411 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இலங்கை அணியைவிட தென்னாபிரிக்கா 231 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. இந்த நிலை…
-
- 5 replies
- 841 views
-
-
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே நாம் சரிவடைந்து விட்டோம். அதில் நமது பேட்டிங் மிக மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டோணி கூறுகையில், முதல் இன்னிங்ஸிலேயே இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் வீசிய சிறந்த பந்துகளில் இந்திய வீரர்கள் விரைவாக விக்கெட்களை பறிகொடுத்து விட்டனர். மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் கிளார்க், பாண்டிங் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்து, ஸ்கோரை உயர்த்தினர். …
-
- 1 reply
- 1.4k views
-
-
100 சதவீதம் துல்லியமாகாத வரை டி.ஆர்.எஸ்.ஸுக்கு இந்தியா ஆதரவளிக்காது: டோனி நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமையானது (டி.ஆர்.எஸ்.) 100 சதவீதம் துல்லியமானது என இந்தியா நம்பும்வரை அம்முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார். இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்த வேண்டுமென அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதற்கு சம்மதிக்கவில்லை. மேல்பேர்னில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களால் சில தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது, டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்துவதற்கு இந்தியா மறுப்பு தெரி…
-
- 0 replies
- 664 views
-
-
புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஷ்வினுக்கு, திலீப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில், முதன் முதலாக வாய்ப்பு பெற்றவர் அஷ்வின், 25. இதில் 22 விக்கெட் கைப்பற்றிய இவர், பேட்டிங்கில் ஒரு சதம் உட்பட 121 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"" வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஷ்வினுக்கு, 2011-12ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் மற்றும் கோப்பை அடங்கிய இந்த விருது, வரும் டிசம்பர் 10ம் தேதி சென்னையில் நடக்கும், பி.சி.சி.ஐ., விருது வழங்கும் விழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
போர்முலா 1 போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. வாகன ஓட்டப் போட்டிகளில் மிகவும் உயர்வானதாகக் கணிக்கப்படும் போர்முலா 1 போட்டிகள் இவ் வருடம் 19 நாடுகளில் நடக்கவுள்ளன (முதலாவது போட்டி Bahrain இல் நடைபெறுவதாக இருந்தது. கலவரங்களினால் அது நடைபெறவில்லை.). 12 கார் நிறுவனங்கள் பங்குகொள்ளும் இப் போட்டிகளில் தலா 2 கார் வீதம் 24 கார்கள் போட்டியிடவுள்ளன. இவ்வருடம் போட்டியிடும் 24 ஓட்டுனர்களில் 5 பேர் வெற்றிவீரர்கள் (World champion) ஆவர். புதிய விதிகளுக்கமைய ஒவ்வொரு நிறுவனமும் தமது கார்களைப் புதிதாக வடிவமைத்துள்ளன. முன்பில்லாதவாறு இப்போதெல்லாம் கார் ஓட்டுனர்களைவிட தொழில்நுட்பத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெரிவுப் போட்டிகளின்போது சுமார் 5 km நீளமுள்ள ஓடுபாதையைச் சுற…
-
- 67 replies
- 6.6k views
-
-
ஸ்பெயினுக்கேதிரான சிநேகிதபூர்வ ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 கோல் வித்தியாசத்தில் வென்றது ,முழுக்க சொதப்பி விளையாடி வென்றது ஆச்சரியம் .
-
- 3 replies
- 1.1k views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்தார் சச்சின் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை புரிந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கள் தனது 28 ஆவது ரன்னை எடுத்தபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அதிக எண்ணிக்கையிலான ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கள் பங்கேற்கும் 182 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவு ரன்களையும், அதிக அளவு சதங்களையும் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே அவர் புரிந்துள்ளார். இது…
-
- 0 replies
- 677 views
-
-
லண்டன் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் ஈடுப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் பட்க்கு 30 மாதங்கள் சிறை தண்டனை சூதாட்டக்காரர் மசார் மஜீத்க்கு 32 மாதங்கள் சிறை தண்டனை மற்ற இரண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகமது ஆசிப்க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் முகமது அமீர்க்கு ஆறு மாதங்களில் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது . malaimalare
-
- 3 replies
- 1.2k views
-
-
பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆ…
-
- 0 replies
- 498 views
-