விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
போல் ஒக்டோபஸ்ஸின் ஞாபகார்த்தமாக சிலை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது போல் ஒக்டோபஸ்ஸிற்கு 2 மீற்றர் உயரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சிலை ஜெர்மனியில் Oberhausen என்னுமிடத்திலுள்ள நீர்வாழினக் காட்சியகத்தில் ஞபகார்த்தமாக வைக்கப் பட்டுள்ளது. --- http://www.bbc.co.uk/news/world-europe-12247183 --- Paul the Octopus memorial statue unveiled in Germany A monument to the memory of Paul the Octopus, who correctly predicted the results of matches at the World Cup last summer, has been unveiled at an aquarium in Germany. The Sea Life Centre in Oberhausen, Germany was the home of the psychic octopus who became a global star. The tribute shows a ver…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐபிஎல் 4வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கப்டன் தோனி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கப்டன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது புதிய அணி பற்றியும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு டோணி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான். எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன். வீரர்களின் உடல் நலம் வெற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் வாசகர்களிற்கு இனிய வணக்கங்கள், நீண்ட காலத்தின் பின் உங்களுடன் மீண்டும் உறவாடுவதில் மகிழ்ச்சி. வருகின்ற 19ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் 2011 உலக கோப்பை துடுப்பாட்டம் சம்பந்தமாக 'நண்பர் அரவிந்தன்' யாழ் உறவுகளிடையே வைக்கின்ற சுவாரசியமான போட்டியில் பின்வருமாறும் எழுதினார்கள். மேற்கண்ட போட்டியில் நான் பங்குபற்றவில்லையாயினும், உலககோப்பை துடுப்பாட்ட போட்டி 2011 சம்பந்தமாக ஓர் இரசிகன் எனும் வகையில் எனது சில எதிர்பார்ப்புக்களை, எதிர்வுகூறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகபடுகின்றது. உலககோப்பை துடுப்பாட்டம் பற்றிய கீழ்வரும் தரவுகளை முதலில் பார்வையிடுங்கள்=> தரவு மூலம்: cricinfo.com, நன்றி. விளையாட்டில் எதுவு…
-
- 70 replies
- 5.1k views
-
-
குமார் சங்கக்கார இலங்கை அணித் தலைவர் பதவியை துறக்கத் தீர்மானம்:- அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது:- இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தமது தலைவர் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார். பதவியை இராஜினாமா செய்வது குறித்த தீர்மானத்தை இலங்கை கிரிக்கட் சபை நிர்வாகிகளிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தாம் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து குமார் சங்கக்கார இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். அணித் தலைவர் பதவியை வேறும் ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சிறந்தத் தருணமாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித…
-
- 0 replies
- 882 views
-
-
வரலாறு படைத்தது இந்தியா 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இந்தியா. இந்திய கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். கம்பீர் 97 ரன்கள் எடுத்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜாகீர் கான் முதல் 5 ஓவர்களில் 3-ல் இலங்கை வீரர்கள் ரன் ஏதும் எடுக்…
-
- 6 replies
- 2.4k views
-
-
-
தமிழீழம் காரைநகர் களபூமியை பிறப்பிடமாக கொண்ட திரு. திருமதி. சிறிஸ்கந்தராசா தம்பதிகளின் புதல்வி செல்வி. நிருசா பிரான்சு நாட்டில் பிறந்து இப்பினி சூ சென் என்னும் இடத்தில் வளர்ந்து கல்வி கற்று வரும் இவர் சதுரங்கப்போட்டியில் il du france அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2011 ஆண்டுக்கான சிறந்த சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே champiton de france ஆக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் 2007ம் ஆண்டு இவர் வாழும் இப்பிணி சூ சென் மாநகரசபையாலும், அதன் முதல்வர் Hervé CHEVEAU அவர்களால் Sportif Méritant என்ற மதிப்பளிக்கப்பட்டது. ஐரோப்பிய ரீதியில் 15 வயதிற்குட்பட்டோரின் பிரிவில் சுவிஸ்ல் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் கலந்து க…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..! இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..! மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு..! தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு..! (சரணம் - 1) சச்சின் அடிக்கும் பந்து எல்லாம் ராக்கெட் ஆகும் நொடியில..! ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில..! அடி அடி சச்சின் அடி... ஷேவாக் அடி வாணவெடி..! காம்பீர் அடிக்கும் பந்தை எல்லாம் பிடிக்கத்தான முடியல..! கோஹ்லி விரட்டும் பந்தை எல்லாம் தடுக்க கூட வழியில்ல..! அடி அடி பந்தை அடி... பவுண்டரியை பார்த்து அடி..! யுவராஜ் சிங்கு அடிப்பதெல்லாம் சிக்ஸராகும் கைப்புள்ள..! ரெய்னா வந்தால் சுத்தியடிப்பார் யாரும் பிடிக்க வழியில்ல..! அடி அடி யுவராஜ் அடி... அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இறுதி ஆட்டம் இலங்கைக்கு மாற்றம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இறுதி ஆட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக இந்த இடமாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலங்கை இந்திய வீரர்கள் பிரத்தியேக விமானம் ஒன்றில் இலங்கை நோக்கி பயணமாகக்கொண்டீருக்கிறார்கள் இப்பிடி என்னுடைய நண்பர் தனது சிங்கள நண்பர் சொன்னதாகச் சொன்னார் ஏப்ரல் முதலாம் திகதி கப்சாவாக இருக்கலாம்
-
- 0 replies
- 1.1k views
-
-
முரளிக்காக உலக கிண்ணம்! ஆனால் முரளி அணியில் இல்லை! ஜனாதிபதி இந்தியா செல்கிறார் ஜ வியாழக்கிழமைஇ 31 மார்ச் 2011இ 11:51.14 யுஆ புஆவு ஸ இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இந்த போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கு வழங்கும் கௌரவமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரியவருகிறது. முத்தையா முரளிதரனும் அஞ்சலோ மெத்தியூஸம் காயம் அடைந்துள்ளமையால் அவர்களுக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகக் கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேஸிலைச் சேர்ந்த ரொனால்டோ நசாரியோ மூன்று முறை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர். உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்ற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார். உலகளவில் 18 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர். அதேபோல் வீழ்ச்சிகளையும் கண்டவர். 199697 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார். தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தைக் குறைக்க வேண்…
-
- 0 replies
- 1k views
-
-
நாளை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் இலங்கை அணி, நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துமா நியூஸீலாந்து என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. காரணம் 1. இலங்கை தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. 2. லீக் சுற்றில் நியூஸீலாந்து இலங்கையிடம் தோல்விதழுவியுள்ளது. 3. இலங்கையின் துவக்க வீரர்கள் அபாயகரமாக ஆடி வருகிறார்கள். 4. நியூஸீலாந்தின் பேட்டிங் வரிசை பலவீனமாக்வும் நம்பத்தகுந்த விதத்திலும் விளையாடவில்லை. 5. நியூஸீலாந்து அணியின் சுழற்பந்து வீச்சிற்கு எதிரான கடுமையான பலவீனம். இந்த 5 காரணங்களும் …
-
- 1 reply
- 1k views
-
-
-
அன்பான கனடா (ஈழதமிழ்) வாலிபர்களுக்கு அன்பான வேண்டுகோல் என்ன செய்வியளோ ஏது செய்வியளோ தெரியாது கனடா கிறிக்கட் ரீமில் யாராவது ஒரு ஈழதமிழன் இருக்க வேணும்
-
- 5 replies
- 1.5k views
-
-
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான 3 நாள் கொண்ட கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கூட பழைய மாணவர்கள் படையெடுத்து வந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது. இது 105 வது வடக்கின் பெரும் போராகும். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி சென்ஜோன்ஸ் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் 118 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் சென்ஜோன்ஸ் கல்லூரி இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 2வது இனிங்சில் மீண்டும் சென்ஜோன்ஸ் கல்லூரி 13 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட்டை இழ…
-
- 5 replies
- 2.9k views
-
-
2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி முடிவுகள் ஒரே பார்வையில் இறுதி போட்டி முடிவுகள் 02 Apr 11 Sri Lanka 274 / 6___50 . 0 vs India 277 / 4___48 . 2 Final India beat Sri Lanka by 6 wickets ___________________________________________________________________________________________ அரை இறுதி போட்டி முடிவுகள் 30 Mar 11 Pakistan 231 / 10___49 .5 vs India 260 / 9___50 .0 2nd Semi Final India beat Pakistan by 29 runs PAK-IND-Mar-30-2011 29 Mar 11 New Zealand 217 / 10___48 . 5 vs Sri Lanka 220 / 5__47 . 5 1st Semi Final Sri Lanka beat New Zealand by 5 wickets ______________________________________________…
-
- 0 replies
- 961 views
-
-
அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எதிர்க்கட்சிகள் கண்டனம் இலங்கை கிரிக்கட் அணி மீது அரச தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையின் அணியின் உப தலைவர் மஹெல ஜயவர்தன மற்றும் முன்னணி வீரர் திலான் சமரவீர ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுயாதீன தொலைக்காட்சியில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், குறித்த ஊடகம் கிரிக்கட் வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது…
-
- 1 reply
- 846 views
-
-
http://www.youtube.com/watch?v=a_ncggtRcYg&feature=player_embedded#at=529 http://www.youtube.com/watch?v=rxRYycPrx2U&feature=player_embedded#at=14 http://www.youtube.com/watch?v=5nTlOJgc7mY&feature=player_embedded http://www.youtube.com/watch?v=KhoDKFwPAsw&feature=player_embedded#at=88 http://www.youtube.com/watch?v=IQ8UlmRG4rE&feature=player_embedded#at=52 http://www.youtube.com/watch?v=2j3WYb8RvwM&feature=player_embedded#at=416
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரரான இலங்கைத் தமிழர் ஜெரனுக்கு எதிராக நிறத் துவேசம்! புதன், 20 அக்டோபர் 2010 09:02 . . ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவரான இலங்கைத் தமிழர் ஜெரன் ஜெயபாலன் (வயது14) கறுப்பர் என்கிற காரணத்தால் நையாண்டி செய்யப்பட்டு வருகின்றார். பாடசாலையில் உதைபந்தாட்ட அணி ஒன்றின் தலைவராக ஜெரன் விளங்குகின்றார். வேகமும், விவேகமும் நிறைந்த உதைபந்தாட்ட வீரர். இவர் மைதானத்தில் விளையாடுகின்றார் என்றால் கலகலப்புத்தான். அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட. ஆனால் எதிரணியினர் இவரைப் பலவீனபடுத்தும் வகையில் நிறத் துவேசத்தைக் கக்குகின்றமை வழமையாகி விட்டது. கறுப்பன்.. கறுப்பன் என்று சத்தம் போடு…
-
- 26 replies
- 2.6k views
-
-
பயிற்றுவிப்பாள்ராக முரளி பரிணாமம்! இலங்கை கிறிக்கெற் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக வரும் ஜுன் மாதத்திலிருந்து செயற்படஉள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுடன் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் முரளி ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18064:2011-02-08-04-27-55&catid=59:2009-12-04-18-59-33&Itemid=387
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறந்த கால்பந்து வீரர் யார்? ரொனால்டோவை விட மெஸ்சி சிறந்த கால்பந்து வீரரெனத் தெரிவிக்கப்படுகிறது. கால்பந்து அரங்கில் முன்னணி வீரர்களாக வலம் வருபவர்கள் கிறிஸ்ரியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்), லியோனல் மெஸ்சி (ஆர்ஜென்ரினா), உலகின் தலை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை இருவரும் மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர். ஆனால் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ரொனால்டோவை விட மெஸ்சிக்கு தான் வரவேற்பு அதிகம் உள்ளது. இதற்கு காரணம் மைதானத்துக்கு வெளியே ரொனால்டோவின் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் தான். இது குறித்து பார்சிலோனா கிளப் அணி வீரரான டேனி ஆல்வ்ஸ் (பிரேசில்) கூறுகையில், "கிறிஸ்ரியானோ ரொனால்டோ திறமைமிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்தல்லை. ஆனால் இதன் அடி…
-
- 8 replies
- 1.9k views
-
-
ரஸ்யாவின் அதிர்ச்சி வைத்தியம் http://www.youtube.com/watch?v=iu8GS3unBcY
-
- 0 replies
- 1.5k views
-
-
ஸ்பெய்னின் ஹிஸ்பானியா ஃபோர்மூலா வன் மோட்டார் கார் அணியில் இணைந்த நாராயண் காரத்திகேயன் ஸ்பெய்னின் ஹிஸ்பானியா ஃபோர்மூலா வன் மோட்டார் கார் அணியில் இணைந்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த நாராயண் காரத்திகேயன் அறிவித்தார். போர்மூலா வன் போட்டிகளில் பங்கெடுத்த முதல் இந்திய சாரதி என்ற பெருமையைக் கொண்டுள்ள அவர், 2005 ஆம் ஆண்டு, ஜோர்தான் போர்மூலா வன் அணியில் இணைந்து போட்டிகளில் பங்குபற்றினார். பின்னர், அவர் வேறு போட்டிகளில் பங்குபற்றினார். இந்த நிலையில், தற்போது போர்மூலா வன் அணியொன்றில் மீண்டும் இணைந்துள்ளார். போர்மூலா வன் போட்டிகளில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேகத்தையும், உடல் உறுதியையும் தான் கொண்டுள்ளதாக கார்த்திகேயன் நம்பி;க்கை வெளியிட்டார். அடுத்த மாதம் வெ…
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே… போராட்டம் ஆரம்பிக்கட்டும்… நாம் வெல்வோம்… http://www.eelamwebsite.com/?p=10626 http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011 Muthamizh Chennai
-
- 1 reply
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 2, ஜனவரி 2011 (22:59 IST) 2016 ஒலிம்பிக் போட்டி சின்னம் தயார் பிரெஞ்ச் நாட்டில் வரும் 2016ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். சின்னத்தில் மூன்று வீரர்கள் கைகள் மற்றும் கால்கள் மூலம் ஒருவருடன் ஒருவரை இணைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்குவிஸ் ரோஜ்ஜி கலந்து கொண்டார். சின்னத்தை வடிவமைப்பதில் பிரேசில் நாட்டை சேர்ந்த 139க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியில் பங்குகொண்டன. இருப்பினும் 8 நிறுவனங்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் கலந்து கொண்டன. nakkheeran
-
- 0 replies
- 1.3k views
-