விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
சர்ச்சையில் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பை போட்டி குறித்த சர்ச்சைகள் அதற்குள்ளாகவே தொடங்கிவிட்டன. பதினோராவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நடத்தவுள்ளன. அந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் 10 நாடுகள் மட்டுமே பங்கு பெற முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலான ஐ சி சி எடுத்துள்ள முடிவுக்கு, அந்த அமைப்பில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் விளையாடாத ஐ.சி.சியின், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையி…
-
- 0 replies
- 1.1k views
-
-
10,000 ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்தார் டிராவிட் [31 - March - 2008] இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 6 ஆவது சர்வதேச வீரர் என்ற சிறப்பை நேற்று முன்தினம் பெற்றார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் 80 ஓட்டங்கள் எடுத்த போது 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டார். தனது 120 ஆவது டெஸ்டில் புதிய மைல்கல்லை அவர் எட்டியிருக்கிறார். டிராவிட் இறுதியில் 111 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் டெண்டுல்கர், லாராவுக்கு அடுத்ததாக 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தவர் என்ற பெருமையும் டிராவிட்டுக்குக் கிடைத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
The Hundred இங்கிலாந்தில் முதன்மைக் கழகங்களுக்கிடையே தற்போது பிரசித்தி பெற்ற கிரிக்கெட்டாக உருவெடுத்திருக்கிறது 100 கிரிக்கெட். இந்த கிரிக்கெட்டில் ஒரு போட்டில் விளையாடும் இரண்டு அணிகளுக்கும் தலா 100 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்படும். இதில் அதிகூடிய ஓட்டமெடுக்கும் அணி வென்றதாகக் கருதப்படும். இந்தப் போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் 5 அல்லது 10 பந்துப் பரிமாற்றங்களை தொடர்ந்து செய்யலாம். மொத்தம் ஒரு பந்து வீச்சாளர் 25 பந்துப் பரிமாற்றங்களே செய்ய முடியும். ரி20 க்கு போட்டியாக உருவான இந்த 100 கிரிக்கெட்.. தற்போது மெதுமெதுவாக பிரசித்தம் பெற்று வருவதோடு நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக்கான அணிகள்.. பெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
புதிய சாதனைக்கு காத்திருக்கும் சச்சின் [27 - January - 2007] [Font Size - A - A - A] ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திவரும் சச்சின் டெண்டுல்கர் விரைவில் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனை தான் அதுவாகும். 376 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். (ஓட்டம் ஏதும் எடுக்காமல்) இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஷ்ரீநாத் 19 முறையும், கும்பிளே 18 முறையும் `டக் அவுட்' ஆகியுள்ளனர். தற்போது சச்சின் 3 ஆம் இடத்தில் உள்ளார். டக் அவுட் சாதனை படைப்பாரா அல்லது சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சதம் அடிப்பாரா என்று பொறுத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இந்த சூழலில், இவர் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும், டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டிதான் இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஃபேல் நடால் பேசியதாவது, “நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. அனைவரும் ஒரு நாள் இந்த முட…
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
விராட் தலைமையிலான படையின் 72 ஆண்டுகால சாதனை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியதனூடாக 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிய, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டத்தினாலும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்டத்தினாலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓய்வுபெற்றார் றிச்சி மக்கோ நியூசிலாந்து றக்பி அணியின் தலைவர் றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். வெலிங்டனில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, இந்த அறிவிப்பை அவர் விடுத்தார். 34 வயதான றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் ஓய்வுபெற விரும்புவதான கருத்தை, அவர் வெளியிட்டிருந்தார். அத்தோடு, 2016ஆம் ஆண்டின் சுப்பர் றக்பி தொடருக்கான கிறசடேர்ஸ் அணியிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையிலேயே, தனது ஓய்வை அவர் உறுதிப்படுத்தினார். உலக றக்பி வரலாற்றில், அதிக சர்வதேசப் போட்டிகளில் பங்குப…
-
- 0 replies
- 1.1k views
-
-
மிதாலி ராஜ்னா எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஆண்களுக்கு மட்டுமே என்னமோ உரியது ஒன்றாகி.. என்னமோ அவர்கள்தான் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்கள்போல் தென்னாசியாவில் உருவான ஒரு பிம்பத்தை உடைத்தவ/உதைத்தவ... மித்தாலி.’ இது 58 அரை சதம் மிதாலிக்கு ஆண்களே ஹீரோவாக புகழபடும் கிரிக்கெட் உலகத்தில், மிதாலி ஒரு பொம்பள விராத்கோலி. இங்கிலாந்து உடனான தொடரில் ஆறுதல் வெற்றியாவது இந்தியா பெற்றிருந்தாலும், அந்த தொடர் முழுவதும் பொம்பள சிங்கமா முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்கினா மிதாலி... ஆறுதல் வெற்றிக்கு அவங்களே பெரிய பங்களிப்பு வழங்கினா... அரசியல், எல்லைகள், பொம்பள, ஆம்பள வேறு பாடுகளுக்கப்பால் இந்த மாபெரும் திறமைசாலிய , எனக்கு மிகவும் பிடிக்கும்.
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்ட்டிங் பெயர் : ரிக்கி பாண்ட்டிங் பிறந்த தேதி : 19 - 12 - 1974 பிறந்த இடம் : தாஸ்மனியா டெஸ்ட் போட்டி போட்டிகள் - 110 சதம் - 33 ரன்கள் - 9,368 விக்கெட் - 05 ஒரு நாள் போட்டி போட்டிகள் - 280 சதம் - 23 ரன்கள் - 10,395 விக்கெட் - 03
-
- 0 replies
- 1.1k views
-
-
மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்! பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, உலகின் டாப் மோஸ்ட் கால்பந்து க்ளப்புகள் கலந்துகொள்ளும் 2017-18 சீஸனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனா, ஃபிரான்சின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஜெர்மனியின் பேயர்ன் முனிச், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ அணிகள் தொடக்க ஆட்டத்திலேயே பட்டையைக் கிளப்பின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் யுவெண்டஸ் அணி, பார்சிலோனாவிடம் மண்ணைக் கவ்வியது.ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோமா அணிகளுக்கிடையான ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, தன் கரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட்டாலும் இந்திய இளைஞர்கள் மட்டும் இந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த இளைஞர்களின் முகங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக களையிழந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து எ…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் சென்னை சிறுவன் ஆர். பிரக்னாநந்தா - படம்உதவி: பேஸ்புக் செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-1 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரைப் போல் டி20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செ…
-
- 16 replies
- 1.1k views
-
-
உலக கோப்பை கிரிக்கெட் 'நாயகன்' 6 வருடத்துக்கு பிறகு சிறையில் இருந்து ரிலீஸ்! லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலக கோப்பை நாயகன் கிறிஸ் லீவிஸ், 6 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலையடைந்தார். 1992ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த உலக கோப்பையின் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின. 13 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை பெய்தது. எனவே டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அமலுக்கு வந்து ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டது. பெரும் சர்ச்சைக்குறிய இந்த விதிமுறையால், தென் ஆப்பிரிக்கா தோற்றது. ஆனால், இங்கிலாந்துக்கோ அது கொண்டாட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக் 18 SEP, 2024 | 12:34 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்…
-
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
புதுடில்லி: "" தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு உலககோப்பை தொடரை வெல்லும்,'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார், தோனியின் இளமை கால பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி. இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. இவர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் படித்தவர். இந்தப் பள்ளியின் விளையாட்டு பயிற்சியாளராக இருந்தவர், கேசவ் ரஞ்சன் பானர்ஜி. தோனி குறித்து இவர் கூறியது: எங்கள் பள்ளியில் படித்த போது, தோனி பாட்மின்டன் மற்றும் கால்பந்து விளையாட்டில் விருப்பம் உள்ளவராக திகழ்ந்தார். பள்ளி கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டார். இவரது கோல்கீப்பிங் திறமையை பார்த்த நான், கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொண்டேன். அதற்குப் பின் கிரிக்கெட் மீது அவரது ஆர்வம் திரும்பியது. கிடைத்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி By Mohamed Azarudeen - கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட். பங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன. இது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்! இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 215 ரன்களை சேர்த்தது. இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நேற்றுதான். 215 ரன்கள் குவித்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, நேற்று இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. இன்று முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து அடுத்தடுத்த ஓவர்களிலேயே…
-
- 1 reply
- 1.1k views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது. கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
மொத்த பணப்பரிசு 28.1 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பம் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தூய்மையின் அடையாளமாக விளங்குவதும் வருடத்தின் மூன்றாவது மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் போட்டியாக அமைவதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் ஜூலை 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் இவ்வருடம் 130ஆவது அத்தியாயமாக நடைபெறும் போட்டிகளில் 28.1 மில்லியன் யூரோக்கள் மொத்த பணப் பரிசாக வழங்கப்படவுள்ளது. இவ் வருடம் முதல் தடவையாக ஒற்றையருக்கான சக்கர இருக்கை டென்னிஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா…
-
- 16 replies
- 1.1k views
-
-
கடந்த காலங்களில் இந்திய அணியில் தமிழர்கள் இடம்பெறுவது மிக குறைவாகவே இருந்தது . 80௦களில் ஸ்ரீகாந்த் ஆரம்ப ஆட்ட காரராக கலக்கிய பின் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இடம்பெறவில்லை. இப்போது அதே ஸ்ரீகாந்த், இந்திய அணி தெரிவு குழுவின் தலைவாராக இருக்கிறார் . மீண்டும் பல தமிழர்கள் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர் . குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு முக்கிய பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். சுப்பிரமணியம் பத்ரிநாத் நம்பிக்கைக்குரிய நடு வரிசை துடுப்பாட்ட வீரராக இடம்பெற்றுள்ளார். முரளி விஜய் ஆரம்ப துடுப்பாளராக டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். அபினாவ் முகுந்த் என்ற தமிழ்நாடு இளம் வீரரும் டெஸ்ட் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர் விஜயுடன் சேர்ந்து ஆரம்ப துடுப்பாளராக இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இறுதி ஆட்டம் இலங்கைக்கு மாற்றம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இறுதி ஆட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக இந்த இடமாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலங்கை இந்திய வீரர்கள் பிரத்தியேக விமானம் ஒன்றில் இலங்கை நோக்கி பயணமாகக்கொண்டீருக்கிறார்கள் இப்பிடி என்னுடைய நண்பர் தனது சிங்கள நண்பர் சொன்னதாகச் சொன்னார் ஏப்ரல் முதலாம் திகதி கப்சாவாக இருக்கலாம்
-
- 0 replies
- 1.1k views
-
-
கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கும் எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் எல்.பி.டபிள்யூ., கேட்ச் ஆகியவற்றை துல்லியமாக அறிய தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது! கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் அறிவிப்பு இது. சமீப காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடுவர்கள் வழங்கிய நேரடித் தீர்ப்புகள் பல சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. நடுவர்கள் மனிதர்களுக்கே உரித்தான "தவறும் தன்மையினால்" கிரிக்கெட் ஆட்டம் மிகவும் தடுமாறியது. பல சிறந்த ஆட்டக்காரர்கள் நடுவர்களின் தவறான முடிவுகளால் வெறுத்துப்போய் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்து த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது 2020 ஜூலை 07 , பி.ப. 10:40 இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, செளதாம்டனில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கிறது. அந்தவகையில் கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர் இப்போட்டியுடன் கிரிக்கெட் மீளத் திரும்புகின்ற நிலையில், போட்டி முடிவுக்கப்பால் போட்டி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது உற்று நோக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவின் பிரபல டெனிஸ் வீராங்கனையான யூஜீன் பூஷார்ட் (Eugine Bouchard) 2014ம் ஆண்டுக்கான சிறந்த பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார். இந்தப் பெருமையின் மூலமாக பொபி றோசென்ஃபெல்ட் (Bobbie Rosenfeld) விருது குபெக்கைச் சேர்ந்த யூஜீனுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அவர் இந்த விருதைப் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில், விளையாட்டுச் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் நடத்திய வாக்களிப்பில், 74 வாக்குகளைப் பெற்று யூஜீன் இந்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்டார். 20 வயதான பூஷார்ட், உலக டெனிஸ் வரிழைசயில் 32வது இடத்திலிருந்து, பின்னர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, வருட இறுதியில் ஏழாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்…
-
- 12 replies
- 1.1k views
-