Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. குடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா நாயக் அது 2008ஆம் ஆண்டு. எட்டு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி ஒடிஷாவில் ஒரு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் ஒரு முட்டை வடிவ பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். முதலில் அவர் அது டைனோசர் முட்டைபோல உள்ளது என நினைத்தார். முதன் முதலில் ரக்பி போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமிதான் சுமித்ரா நாயக். தற்போதைய இந்தியாவின் பெண்கள் ரக்பி அணியின் முக்கிய வீராங்கனை. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மைதானத்தில் தன் சிறு வயதில் இந்த விளையாட்டை தொடங்கிய சுமித்ராவின் இளமைக் காலம் சவால்கள் ந…

  2. இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணித் தலைவர் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில…

    • 3 replies
    • 1.2k views
  3. 11 விக்கெட்டுகளை வீழ்த்திய 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன்: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தானை பந்தாடியது நியூஸி. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நியூஸிலாந்து அணியினர் : படம் உதவி ட்விட்டர் கிறிஸ்ட்சர்ச் 6.8அடி உயரமுள்ள கைல் ஜேமிஸனின் வேகப்பந்துவீச்சு, போல்டின் துல்லியப்பந்துவீச்சு ஆகியவற்றால் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இந்த கோடைகால சீசனில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொ…

  4. இந்திய பந்துவீச்சாளரான இவரை தவிர வேறுயாரும் எனக்கு இவ்வளவு தொல்லை கொடுத்ததில்லை – ஸ்மித் பேட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் தற்போதைய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஸ்மித் குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு சதம் விளாசி அவர் இந்திய அணிக்கு பெரும் தொந்தரவு கொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அவர் ஒருநாள் போட்டிகளிலேயே அபாரமான ஃபார்மில் இருந்ததால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய தலைவலியை கொடுப்பார் என்று …

  5. இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங் ரிக்கி பாண்டிங் : கோப்புப்படம் மெல்போர்ன் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிறுத்தினால்தான் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார். அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல…

    • 1 reply
    • 648 views
  6. Ind Vs Aus 2-வது டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி 28 டிசம்பர் 2020 பட மூலாதாரம், QUINN ROONEY/GETTY IMAGES மெல்பர்னில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் இரண்டாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதால் 1-1 எனும் அளவில் இப்போதைக்கு இந்தத் தொடர் சமநிலையை எட்டியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முறை…

  7. ஸ்டார்கள் சொதப்பினால் மேலும் மேலும் வாய்ப்பு, அஸ்வின் சொதப்பினால் உடனே வெளியே- சுனில் கவாஸ்கர் பொருமல் குழந்தைப் பிறப்புக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சென்ற கோலியையும் அதே காரணத்துக்காக விடுப்பு கொடுக்கப்படாத டி.நடராஜனையும் ஒப்பிட்டு இருவருக்கும் தனித்தனி நீதியா என்று கேட்டு பரபரப்பு ஏற்படுத்திய சுனில் கவாஸ்கர் அஸ்வினுக்கு ஒரு நீதி மற்ற ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுனில் கவாஸ்கர் குழந்தைப் பிறப்புக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சென்ற கோலியையும் அதே காரணத்துக்காக விடுப்பு கொடுக்கப்படாத டி.நடராஜனையும் ஒப்பிட்டு இருவருக்கும் தனித்தனி நீதியா என்று கேட்டு பரபரப்பு ஏற்படுத்திய சுனி…

  8. இந்திய அணியின் வீரரான இவரது கேப்டன்சியின் கீழ் நான் விளையாட ஆசைப்படுகிறேன் – மனம்திறந்த வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு விக்கெட் கீப்பராக, பினிஷராக பல ரோல்களில் சிறப்பாக விளையாடிய வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை கூறலாம். அந்த அளவிற்கு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான பங்கை கொடுத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அதிரடியான ஓய்வை அறிவித்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்பான செய்திகளுக்கும், பேச்சுகளுக்கும் இப்பொழுதும் குறையில்லை. அந்த அளவிற்கு அவரது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரு…

  9. ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகள் 2020-12-25 11:34:26 இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு புதிய அணிகள் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011 ஆம் ஆண்டில் இந்த தொடரில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அத்துடன் பி.சி.சி.ஐ.யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்…

    • 10 replies
    • 1.3k views
  10. கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர். வானொலி வர்ணனையால் புகழ் பெற்ற, அப்துல் ஜப்பாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி, ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, புகழ் பெற்ற அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81. சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் வானொலி வர்ணனையால் ஏராளமானோர் ஈர்க்கப்பட்டனர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், தமிழ்நாடு-கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டிக்கு வானொலியில் முதல் வர்ணனை செய்தார். 80-களில் அவரின் வர்ணனை புகழ்பெற்று திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தொலைகாட்சிகளிலும்…

    • 8 replies
    • 1.7k views
  11. விராட் கோலிக்கு ஒரு விதி, டி.நடராஜனுக்கு வேறொரு விதியா?- சுனில் கவாஸ்கர் பாய்ச்சல் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடக்கம் முதலே வெளிவந்த வண்ணம் உள்ளன. சுனில் கவாஸ்கர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடக்கம் முதலே வெளிவந்த வண்ணம் உள்ளன. கபில்தேவ் முன்னதாக இது த…

  12. IND vs AUS டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய டெஸ்ட் இன்னிங்ஸ் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர் 19 டிசம்பர் 2020, 05:56 GMT பட மூலாதாரம், EPA இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான பேட்டிங். இரண்டாம் இன்னிங்சில், 21.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 36 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இரண்டாம் இன்னிங்சை இந்தியா முடித்தபோது ஆஸ்திரேலிய அணியைவிட 89 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. வெறும் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தனது இரண்டா…

    • 6 replies
    • 1.3k views
  13. இவனிடம் எதோ இருக்கிறது - ஆர்.வி. லோஷன் எல்பிஎல் போட்டியில் வியாஸ்காந்தின் பங்களிப்பு பற்றி, இலங்கையின் சிரேஷ்ட வானொலிக் கலைஞர் ஆர்.வி.லோஷன் முகநூலில் எழுதிய குறிப்பை வாசகர்களுக்காக தருகிறது வணக்கம் லண்டன்.. உண்மையில் இவரிடம் ஏதோ இருக்கிறது… “எம்மில் அநேகருக்கு எமக்கு பிடித்த விடயங்களை மட்டுமே வாசிக்க, கேட்கப் பிடிக்கும் கற்பனை உலகத்தில் எமக்குப் பிடித்தவை பிறகு பொய்யாகிவிடும் எனத் தெரிந்தும் அவற்றுள் வாழ்வதில் இப்போதைக்கு சுகம் காணலாம், பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம் என்றிருந்துவிடுவோம். விஜயகாந்த் வியாஸ்காந்த் – ஒரு போட்டியாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருந்து மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டான் இந்த இளம் சுழல். கிடைத்த வாய்ப்புக்களி…

  14. டி20 உலகக் கிண்ணம் – 86 அணிகள் மோதல்! விளையாட்டு 2022- ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க 86 அணிகள் தகுதிச்சுற்றுகளில் மோதவுள்ளன. ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்ட அட்டவணையின்படி, உலகக் கிண்ண போட்டிக்கான 15 இடங்களுக்கு தகுதிபெற அந்த அணிகள் யாவும் 13 மாதங்களில் 225 ஆட்டங்களில் விளையாடுகின்றன. 4 படிநிலைகளாக அணிகளை தேர்வு செய்யும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவதற்காக முதல் முறையாக ஹங்கேரி, ருமேனியா, செர்பியா அணிகள் போட்டியிடுகின்றன. அதேபோல், ஐசிசி போட்டிகளில் முதல் முறையாக அவுஸ…

  15. மலையக மண் பெற்றெடுத்த பிரபல கால் பந்தாட்ட வீரர் மோகன் ராம் https://www.facebook.com/nadarajah.kuruparan.33/videos/451620016240627

  16. இலங்கை வாழ்வியலுக்குள்ளே விளையாட்டையும் விதைத்து விளைவிக்கும் தேசம். இங்கு 'பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி' என்று பாரதி பாடியது போல எம்மவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் பந்தாகவே தெரிவதுண்டு. படிக்கும் புத்தகங்களும் பேப்பர்களும் கூட துடுப்பு மட்டையாகவும் பந்தாகவும் மாறிவிடும் மாயாஜாலங்கள் அடிக்கடி காணக்கிடைப்பதுண்டு. வடக்கின் கரையோரப்பகுதிகளில் சீரான தூரத்தில் இருக்கும் பனைகளை பழைய மீன்வலைகொண்டு இணைத்து உருவாக்கப்பட்ட கரப்பந்தாட்டக்கூடங்கள் ஏராளம் உள்ளன. இன்றளவில் இலங்கை முழுவதும் கிரிக்கெட் பேசப்படுகிறது. ஒரு யாழ் வீரனின் அறிமுகம் சர்வதேசத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் தேசிய விளையாட்டு என்று மார்தட்டப்படும் கரப்பந்தாட்டத்திற்கு…

  17. பேர்ண்லியிடம் தோற்ற ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது. பேர்ண்லிக்கு கிடைக்கப்பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது. இதேவேளை, புல்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பொபி றெய்ட் பெற்றிரு…

  18. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக டி கொக் நியமனம்! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/201210173131-covid-19-vaccinations-live-video-1-720x450.jpg 2020-21ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித்தின் முன்னைய நிலைப்பாட்டின் வெளிப்பாடாக இந்த நியமனம் அமைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளநிலையில், இத்தொடரில் விளையாடும் தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், சரேல் எர்வி…

  19. சோனி சிக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில்... ஒரு கிரிக்கெட் ப்ளேயர் மேட்ச் முடிந்து. மைதானத்தில் நின்று.. தமிழில்... நேரடி பேட்டி தருவான் என்று யாராவது நினைத்திருப்போமா !

  20. நடராஜன் மிகப்பெரிய சொத்து - கோலி! டி20 உலகக் கிண்ண போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து வேகப்பந்து வீச்சாளா் நடராஜன் என்று கேப்டன் கோலி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா். கடைசி ஒருநாள் ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த நடராஜன், மொத்தம் 4 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். அதிலும் டி20 தொடரைக் கைப்பற்றிய 2 ஆவது ஆட்டத்தில் அவா் 3 விக்கெட்டுகளை சாய்த்தது முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில், கடைசி டி20 ஆட்டத்துக்குப் பிறகு கோலி கூறியதாவது: ஷமி, பும்ரா இல்லாத நிலையில் மிகுந்த நெருக்கடியான சூழலில் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசியதை குறிப்பிட்டே ஆக வேண்டும். சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்…

    • 2 replies
    • 714 views
  21. இந்திய அணிக்கு அபராதம்! அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களே எடுத்தது. …

    • 0 replies
    • 593 views
  22. உலகமே இலங்கை கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருந்த காலங்களிலும் சங்கா, மஹேலவின் ஓய்வின் பின் இலங்கை கிரிக்கெட் இல்லாமலேயே போய்விடும் என்று எழுந்த விமர்சனங்களின் போதும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு தமிழ் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதும் இலங்கை அணியின் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஏங்கியது, எப்போது இலங்கை அணியில் ஒரு தமிழ் வீரன் விளையாடப் போகிறான் என்பதாகத்தான் இருக்கும். 110 வருடங்களுக்கும் மேலாக யாழ் மண்ணில் வடக்கின் பெருஞ்சமர் நடைபெற்று வந்தாலும் அங்கிருந்து ஒரு வீரன் இலங்கைக்காக விளையாடுவது வெறும் கனவாகிப்போவதே வழக்கமாயிருந்தது. ஒருபுறம் நாட்டின் அசாதாரண சூழல், மூன்று தசாப்தகாலப்போர் என சில காரணங்களால் ஏ9 வீதியோடு சேர்த்து யாழ் மண்ணின் கிரிக்கெட் வீரர்களின் கனவுகளும் இ…

  23. ஆடப்போறான் தமிழன்? - ஜூட் பிரகாஷ் எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் தமிழன் ஒருவன் ஆடப் போகிறான் என்ற ஆதங்கம், இன்றும் தீராமல் நம்மவர் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கிறது. சில வாரங்களிற்கு முன்னரும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை சேர்த்த மதுஷனும் வியாஸ் காந்தனும், இலங்கை U19 கிரிக்கெட் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்ற செய்தி, மீண்டுமொருமுறை எதிர்பார்ப்பை நம்மவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. நம்பி நம்பி ஏமாந்து போன எங்கட சனத்தின் அரசியல் பயணம் போல், இந்த கிரிக்கெட் பயணமும் நம்பி நம்பி ஏமாந்தும் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. பிரித்தானியாவின் ஆதிக்கத…

  24. பருந்தாகுது ஊர்க்குருவி; யாழ்ப்பாண அணிக்காக விளையாடும் விஜாஸ்காந்த்! லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் 11வது போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய விஜயகாந்த விஜாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார். 2001ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி பிறந்த விஜாஸ்காந்த் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சிறந்த வலது கை சுழல் பந்து வீச்சாளராவார். இந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த் விஜாஸ்காந்த், திசர பெரேரா தலைமையிலான யாழ்ப…

    • 8 replies
    • 1.1k views
  25. ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. இன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன். BATSMEN R B 4s 6s SR TOTAL (5.4 Ov, RR: 4.58) 26/0 Yet to bat: V Kohli (c), SS Iyer, KL Rahul †, HH Pandya, RA Jadeja, SN Thakur, Kuldeep Yadav, JJ Bumrah, T Natarajan S Dhawan …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.