விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மைக்கேல் கிளார்க்கின் டாப்-5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ர…
-
- 0 replies
- 253 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில், “பெப்ரவரி 15 ஆம் திகதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவர…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
அப்துல் கலாம் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! சென்னை:குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுனஅஞ்சலி செலுத்தினர். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் இந்திய -ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அதோடு இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டையை கையில் அணிந்தவாறு விளையாடினர். இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வ…
-
- 0 replies
- 345 views
-
-
1987 இல் இடம்பெற்ற 4 ஆவது உலகக்கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கியது. * இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பதிவாயின. எனினும் ஐ.சி.சி.யின் ஆதிக்க சக்திகளாக இருந்த இங்கிலாந்து மற்று அவுஸ்திரேலியா ஆசிய கண்டத்தில் உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தின. எனினும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் தொடரை பாகிஸ…
-
- 1 reply
- 950 views
-
-
சோபர்ஸ் இல்லையென்றால் ..... : மனம் திறந்த அர்ஜுன ரணதுங்க சேர் கார்பீல்ட் சோபர்ஸ் மட்டும் இல்லையென்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்று, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கை வந்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளராகப் பங்குபற்றிய சேர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சில், அமைச்சர் அர்ஜுன ரண…
-
- 0 replies
- 295 views
-
-
ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கும் தோனி ஜார்கண்ட் அணி வீர்ர்களுடன் இணைந்த தோனி. | படம்: ஜி.சம்பத்குமார். நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்காக ஜார்கண்ட் அணிக்குக் களமிறங்குகிறார் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி. தோனி கடைசியாக 2007-ல் ஜார்கண்ட் அணிக்காக உள்நாட்டுப் போட்டியில் ஆடினார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வருண் ஆரோன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட ஜார்கண்ட் அணியில் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக ஜார்கண்ட் தனது முதல் போட்டியில் மோதுகிறது. பிரிவு பி-யில் ஜார்கண்ட் அணியுடன் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ரயில்வேஸ், கேரளா, ஹரி…
-
- 2 replies
- 801 views
-
-
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் இந்திய வீரர் December 18, 2015 ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டவர் மனோஜ் பிரபாகர். வேகப்பந்துவீச்சாளரான இவர், ஒருநாள் ஆட்டத்தில் 96 விக்கெட்டுகளும் டெஸ்டில் 157 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார், மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 385 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ள இவரை தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டின் கிரிக…
-
- 0 replies
- 607 views
-
-
நம்பவே முடியாமல் chelsea ஐரோப்பிய கிளப்புகளுக்கைடையிலான உதைபந்தாட்டத்தில் bayern munich ஐ பனால்ட்டியில் தோற்கடித்தது . முதல் 90 ஆவது நிமிடமாகும் நேரம் ஒரு கோல்,பின்னர் கடைசி பனால்டியும் அடித்த drogba வின் அதிரடி ஆட்டம் கலங்க வைத்தது .
-
- 22 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 742 views
-
-
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார் Published By: Digital Desk 3 30 Dec, 2025 | 01:16 PM (என்.வீ.ஏ.) South Asians & Diaspora இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி ஆகியோரின் அனுபவம் தேவை ; அரவிந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார். “ எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி ” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 355 views
-
-
ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை ஒரு யுத்தமாக பார்க்கிறது என்றால் அதற்கு இணையானது தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும். அதாவது எல்லா வருடமும் எதாவது ஒரு அணியுடன் ஆஸ்திரேலிய அணி டிசம்பர் 26-ம் தேதி மெல்பெர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும். அதனை வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு முறையும் ஆக்ரோஷமாக ஆஸி அணி களமிறங்கும். பாக்ஸிங் டே வரலாறு! விக்டோரியா அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி கிறிஸ்துமஸ் சமயத்தில் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் பாக்ஸிங் டேயும் அடக்கம். நியூ சவுத் வேல்ஸ் வீரர்கள் கி…
-
- 0 replies
- 346 views
-
-
4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் உலக சாதனையை முறியடித்தது அமெரிக்கா அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் அணி, 4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நான்கு வகையான நீச்சல் போட்டிகளை (பேக்ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை, ஃப்ரீஸ்டைல்) உள்ளடக்கிய மெட்லி போட்டிக்கான தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான கலப்பு மெட்லி பிரிவில் அமெரிக்காவின் ரியான் மர்பி, கெவின் கார்டஸ், கெல்சி…
-
- 0 replies
- 315 views
-
-
-
IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்தபின் தமது அணியுடன் கொண்டாடும் ஷாகிப் அல் ஹசன் 4 டிசம்பர் 2022 வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டா…
-
- 1 reply
- 315 views
- 1 follower
-
-
ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை" - இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தை…
-
- 0 replies
- 746 views
- 1 follower
-
-
"மீசைக்கார" தவனுடன் சண்டை போட்ட "ரோஷக்கார" கோஹ்லி.. அமைதிப்படுத்திய "டைரக்டர்" ரவி சாஸ்திரி! பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா உடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதால் ரசிகர்கள் கடுப்பாக உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்குள் ஒரு குடுமி பிடி சண்டை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சண்டையை ஆரம்பித்து வைத்தவர் துணை கேப்டனான விராத் கோஹ்லி. அவர் போய் சண்டை போட்டது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனுடன். காரணம் - 2வது இன்னிங்ஸில் 4வது நாள் ஆட்டத்தின்போது காயம் காரணமாக கடைசி நேரத்தில் தவன் ஆட முன்வராததால். தவன் காயத்தை கடைசி நேரம் வரை சொல்லாமல் இருந்து கடைசியில் சொன்னதால் ஏற்பட்ட குழப்பத்தால் கோஹ்லியை திடீரென களம் இறக்க நேரிட்டு விட்டதாக கேப்டன் டோணி கூறியிருந்தார். ஆனால் அ…
-
- 0 replies
- 298 views
-
-
ஸ்பெயின் நாட்டின் கால் பந்தாட்டத் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ்(46) தான் பதவி விலகப் போவதில்லை என்று ஒரு பக்கம் அடம் பிடித்துக் கொண்டிருக்க மறு புறம் அவரது தாயார், தனது மகனுக்கு எதிரான ‘இரத்த வேட்டையை நிறுத்துங்கள், நடந்த சம்பவத்தின் உண்மையைச் சொல்ல ஜெனிபர் ஹெர்மோசோவை அழைத்து வாருங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்து தேவாலயத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். மகளிருக்கான உலகக் கால் பந்து விளையாட்டுப் போட்டியில் (20.08.2023) ஸ்பெயின் அணி, இங்கிலாந்து அணியை 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டின் கால் பந்தாட்டத் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ், ஆட்ட வீராங்கனையான ஜெனிபர் ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டிருந…
-
- 3 replies
- 766 views
-
-
கிரிக்கெட்டை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கிரிக்கெட்டை நாம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். கிரிக்கெட்டை மட்டுமல்ல, நமது விளையாட்டையே கிராமத்திலிருந்து ஆரம்பித்தால் சிறந்ததொரு பெறுபேற்றை நாம் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி. இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கிராமத்திலிருந்துதான் சிறந்த வீரர்கள் வருகிறார்கள். ஆனால் நாங்களோ தலைநகரத்தில்தான் விளையாட்டுக்கான அனைத்து வளங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது மாறவேண்டும். …
-
- 0 replies
- 288 views
-
-
சம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக் போட்டிகளின் முடிவுகள் ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான காலிறுதி முதல் லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம், இங்கிலாந்தில் உள்ள டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல் போட்டியில், டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணியும், மென்செஸ்டர் சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இரு அணி வீரர்களும்…
-
- 1 reply
- 885 views
-
-
எங்களுக்கு என்று தமிழீழம் கிடைச்சு , தமிழீழ கிரிகெட் அணி மற்ற நாடுகலுடன் விளையாடும் போது பார்க்க எப்படி இருக்கும் / எவளவு காலத்துக்கு மாற்றான் விளையாட பார்க்கிறது , இத வாசித்து விட்டு கற்பன கூட என்று நினைச்சு போடாதைங்கோ , கனவு ஒரு நாள் பலிக்கும் என்ர நம்பிக்கை எனக்கு இருக்கு 🙏/ பையன்26
-
- 0 replies
- 759 views
- 1 follower
-
-
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் நடி…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிவர்தன சிறந்ததொரு தெரிவு : மெத்தியூஸ் இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறிவர்தன சிறந்ததொரு தெரிவென்று பாராட்டியுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ். மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றுமுடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்திருந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பது விசேட அம்சமாகும். இந்தத் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி கொழும்பு பி.சரா கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப்போ…
-
- 1 reply
- 371 views
-
-
புனேயின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் December 18, 2015 ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த போட்டியில் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் தெரிவு செய்யப்பட்டன, இதில் புனே அணியில் டோனியுடம், ராஜ்கோட் அணியில் ரெய்னாவும் விளையாடவுள்ளனர். இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து…
-
- 0 replies
- 560 views
-
-
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைராக கங்குலியை, தேர்வு செய்ய பெரும்பான…
-
- 0 replies
- 389 views
-