விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது. * இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - வில்ஸ் உலகக் கிணண்ம் ( Wills world cup) * 26 மைதானங்களில் மொத்தமாக 37 போட்டிகளில் * 12 அணிகள் கலந்துகொண்டன (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூஸிலாந்து, சிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் தேர்வு அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு எமிரகம்,…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்னாபிரிக்காவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வி May 25, 2019 Cricket – ICC Cricket World Cup Warm-Up Match – Sri Lanka v South Africa – Cardiff Wales Stadium, Cardiff, Britain – May 24, 2019 South Africa players celebrate victory Action Images via Reuters/Andrew Boyers தென்னாபிரிக்காவுக்திரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது. நேற்றையதினம் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். இதனையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய …
-
- 0 replies
- 419 views
-
-
நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (நெவில் அந்தனி ) கத்தார் - 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் எண்ணத்தை கால்பந்தாட்ட சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் (பீபா) கைவிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின்போது 32 இலிருந்து 48 ஆக அதிகரிக்கவுள்ளதாக பீபா தலைவர் ஜியான்னி இன்பென்டீனோ கடந்த தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்தத் திட்டத்தை மாற்றி 2022 இல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில் நாடுகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட…
-
- 0 replies
- 448 views
-
-
கிந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே “காவி” உடை..! தேர்தல் “முடிவு”க்குப் பின் வெளியே வந்த பூனைக்குட்டி..! லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதிக ஆரஞ்சு நிறம் கலந்த ஆடை அணிந்து விளையாட உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ( ஆரஞ்சுன்னா இப்போதைக்கு அது அந்த நிறம் தானேப்பா ? ) சரியாக தேர்தல் முடிவு வரும் வரை மறைத்து வைக்கபட்டு, பின்னர் திட்டமிடப்பட்டு இந்த செய்தி வெளியாகி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது இந்த ஆடை விவகாரம். நம்பிய ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடை என எப்போதும் இந்தியா அணியும் நீல நிற ஆடை ஒன்றை ஐபிஎல் தொடருக்கு முன் அறிமுகம் செய்தனர். எல்லா இந்திய ரசிகர்களும் அதுதான் இந்திய அணியின் ஆடை என நம்பி இருந்தனர். …
-
- 0 replies
- 959 views
-
-
1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது. * அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup) * 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன. * 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை ம…
-
- 0 replies
- 621 views
-
-
24 தடவை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை காத்மாண்டு இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 24 முறை ஏறி நேபாள வீரர் காமி ரிடா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரமாகும்.கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரிடா ஷெர்பா 50. இவர் ஏற்கனவே 22 முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். 23வது முறையாக கடந்த 15ல் எவரஸ்ட் சிகரத்தில் ஏறினார். இந்நிலையில் இந்திய காவல்துறையை சேர்ந்த மலையேறும் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஷெர்பா மீண்டும் புறப்பட்டார். நேற்று காலை 6:38 மணிக்கு இந்திய குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தார். …
-
- 0 replies
- 989 views
-
-
1987 இல் இடம்பெற்ற 4 ஆவது உலகக்கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கியது. * இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பதிவாயின. எனினும் ஐ.சி.சி.யின் ஆதிக்க சக்திகளாக இருந்த இங்கிலாந்து மற்று அவுஸ்திரேலியா ஆசிய கண்டத்தில் உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தின. எனினும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் தொடரை பாகிஸ…
-
- 1 reply
- 950 views
-
-
2019 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ பாடலை வெளியிட்ட ஐ.சி.சி. ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 11 நாட்கள் எஞ்சியியுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. ”ஸ்டான்ட் பை” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகி லோரின் மற்றும் ருடிமென்டல் ஆகியோர் இணைந்து பாடி அசத்தியுள்ளனர். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தூதர் அன்ட்ரூ பிளிண்ட்டொப்…
-
- 0 replies
- 728 views
-
-
1983 - மூன்றாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி கிரிக்கெட் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியது. * இங்கிலாந்தின் 15 மைதானங்களில் 1983 ஜூன் 9 முதல் ஜூன் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது. * முதலாவது, இரண்டாவது உலகக் கிண்ணத்தைப் போலவே இதிலும் 8 அணிகள் கலந்துகொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நிஸிலாந்து மற்றும் இலங்கையும், குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே) * இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. * 16 நாட்கள் இடம்பெற்ற…
-
- 0 replies
- 552 views
-
-
இந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு! உலகக்கிண்ண தொடருக்கான சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை பாகிஸதான் கிரிக்கெட் சபை இன்று (18) வெளியிட்டுள்ளது. 15 பேர் அடங்கிய அணியில் அபிட் அலி பாபர் அசாம், பகீஷ் அஷ்ரஃப், பகர் சமான், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இமாட் வசீம், இமாம்-உல்-ஹக், ஜுனைட் கான், மொஹமட் ஹபீஸ், முகம்மது ஹஸ்னைன், ஷாதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் …
-
- 1 reply
- 781 views
-
-
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள் (நெவில் அன்தனி) கத்தாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கான பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் ஈட்டுபட்டுள்ளனர். இந்த உலகக் கிண்ணப் போட்டி வெற்றிகரமாக நிறைவேறும்போது அது முழு ஆசியாவினதும் வெற்றியாக அமையும் என கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பீபா பேரவை உறுப்பினருமான சவூத் அல் மொஹன்னாதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கத்தாரின் தலைநகர் தோஹா, அல் பிதா கோபுரத்தில் அமைந்துள்ள கத்தார் கால்பந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றல் மற்றும் ம…
-
- 2 replies
- 570 views
-
-
உலகக் கிண்ண தொடரை வெற்றிக் கொள்ளும் அணிக்கு அதிர வைக்கும் பரிசுத் தொகை இங்கிலாந்து மற்றும் வெல்ஸில் இவ் வருடம் நடைபெறவுள்ள பத்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசுத் தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (ஒரு அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி 175.95 ரூபா) சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (வெள்ளி) பணப்பரிசு விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலக சம்பியனாகும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாகக் கிடைக்கும். 46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே சம்பியன் அணிக்கு வழங்கப்…
-
- 0 replies
- 606 views
-
-
1979 - இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி.யின் இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆனது. * இங்கிலாந்தின் 8 மைதானங்களில் 1979 ஜூன் 6 முதல் ஜூன் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது. * முதலாவது உலக கோப்பை போட்டியை போன்றே இந்த போட்டியிலும் 8 அணிகள் கலந்து கொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவும் குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை) * 15 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 15 போட்டிகளில் இடம்பெற்றது. * முதலாவது உலகக் கிண்ணத் தொடரைப் போன்று 60 ஓவர்கள் என்ற அடிப்ப…
-
- 0 replies
- 559 views
-
-
1975 - முதலாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... கிரிக்கெட் அரங்கில் சர்வதேச ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது ஆரம்பமானது. இத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதலாவதாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. * கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் 8 மைதானங்களில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது. * இப் போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் வெள்ளை நிற ஆடையுடன் டெஸ்ட் போட்டியை போன்று களமிறங்கினர். * 8 அணிகள் கலந்து கொண்டது (குழு 'A'யில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியவும், குழு 'B'யில் அவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஐ.பி.எல். ரி-20 தொடர்: அணிகளில் பல மாற்றங்கள்! இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின், அடுத்த கட்டத்துக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இத்தொடர் குறித்த புதிய செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், இத்தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில், மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம், கடந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். ஆனால் தற்போது இருவரும் காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்…
-
- 106 replies
- 11.1k views
- 2 followers
-
-
By லவனிஸ் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய வடக்கின் நாயகன் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டதொடரில் இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது. தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் ஆனைக்கோகோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.
-
- 0 replies
- 604 views
-
-
சாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது! ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே பல்வேறு மைதானங்களில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் (Tottenham) அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியின் 2 வது லெக் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணியை ரொட்டன்ஹேம் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் அஜாக்ஸ் அணி வீரர்கள் 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள். இரண்டாவது பாதியில் ரொட்டன்ஹேம் வீரர் லூகாஸ் மோரா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அணிக்கு பலம் சேர்ந்தார். போட்டியில் வெற்றி பெற மேலும் ஒரு கோல் தேவைப்பட்ட நிலையில், லூகாஸ் மோரா ஒரு கோல் அடித்து…
-
- 0 replies
- 508 views
-
-
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்! ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. 33 விளையாட்டுகளுக்கு டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த இரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் தங்கள் நாட்டிலேயே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். www.ticket.tokyo2020. org என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக விபரங்களை இரசிகர்கள் பார்க்கலாம். … கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்,…
-
- 0 replies
- 675 views
-
-
சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல் ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இத்தொடரில், அரையிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா அணியும் லிவர்பூல் அணி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிலையில், லிவர்பூல் அணி, நட்சத்திர வீரர்களான முகமது சாலா மற்று…
-
- 0 replies
- 674 views
-
-
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார். கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை பிரதேச இளைஞர் அணி சம்பியன் பெற்றது. இதன் இறுதியாட்டம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தெல்லிப்பழைபிரதேச இளைஞர் அணியை எதிர்த்து உடுவில் பிரதேச இளைஞர் அணி மோதியது.https://newuthayan.com/story/11/வலைப்பந்தாட்டத்-தொடரில-2.html
-
- 1 reply
- 637 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் புதிய சாதனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது புதிய சாதனையொன்றை படைத்துள்ளது. அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோன் கேம்பெல் மற்றும் ஷெய் ஹோப் களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை அனைத…
-
- 0 replies
- 562 views
-
-
-
முதல் முறையாக சங்காவுக்கு கிடைத்த வாய்ப்பு லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகுமென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (01) லோட்ஸில் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அற…
-
- 1 reply
- 852 views
-
-
உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந் நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுள்ளது. ஜோசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணிக் குழாமில் பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிரித்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த அணிக் குழாமில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிட…
-
- 0 replies
- 610 views
-