Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல் ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இத்தொடரில், அரையிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா அணியும் லிவர்பூல் அணி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிலையில், லிவர்பூல் அணி, நட்சத்திர வீரர்களான முகமது சாலா மற்று…

  2. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார். கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர்…

  3. யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை பிரதேச இளைஞர் அணி சம்பியன் பெற்றது. இதன் இறுதியாட்டம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தெல்லிப்பழைபிரதேச இளைஞர் அணியை எதிர்த்து உடுவில் பிரதேச இளைஞர் அணி மோதியது.https://newuthayan.com/story/11/வலைப்பந்தாட்டத்-தொடரில-2.html

    • 1 reply
    • 629 views
  4. ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் புதிய சாதனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது புதிய சாதனையொன்றை படைத்துள்ளது. அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோன் கேம்பெல் மற்றும் ஷெய் ஹோப் களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை அனைத…

  5. முதல் முறையாக சங்காவுக்கு கிடைத்த வாய்ப்பு லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகுமென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (01) லோட்ஸில் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அற…

    • 1 reply
    • 848 views
  6. உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந் நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுள்ளது. ஜோசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணிக் குழாமில் பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிரித்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த அணிக் குழாமில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிட…

  7. Dhoni CSK-வில் இப்படி தான் சேர்ந்தார் ! - Former CSK Chief Selector V.B. Chandrasekhar

    • 0 replies
    • 1k views
  8. உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் ? 12 ஆவது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாம் இந்திய கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாமிற்கு தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரோகித் சர்மா, சிகர் தவான், கீதர் யாதேவ், மகேந்திரசிங் தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, குல்தீப் யாதேவ், ஷால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், விஜேய் சங்கர், கே. எல். ராகுல், தினேஸ் கார்த்திக் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படடுள்ளர். இதேவேளை,போட்டி…

    • 2 replies
    • 1.9k views
  9. உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி விபரம் வெளியிடும் தினம் அறிவிப்பு இம்முறை உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் எதிர்வரும் 18ம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். நேற்று நிறைவடைந்த மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் சுற்றுத்தொடரில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகள் மற்றும் அனுபவத்தை கருத்திற்கொண்டு இம்முறை உலகக்கிண்ணத்துக்கான அணி தெரிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அணி விபரம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அணித்தலைவர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் அணிக்கான தலைவர் பதவிக்காக பல வீரர்கள் தொடர்பில் கவனம் செல…

  10. உலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான கிரிக்கெட் அணிகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் : பாஃப் டூ பிளசிஸ் (அணித்தலைவர்) ஹாசிம் அம்லா குயின்றன் டி ஹொக் (விக்கெட் காப்பாளர்) ஜெ.பி. டுமினி ஐடென் மார்க்ராம் டேவிட் மில்லர் லுங்கி நிகிடி அன்ரிச் நோர்ட்ச் அன்டைல் பெஹ்லுக்வாயோ டிவைன் பிரிடோரியஸ் …

  11. ஆண்கள் அணி வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது. வவுனியா முஸ்லிம் மகா வித்தியலாய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணியை எதிர்த்து வவுனியா பிரதேசசெயலக அணி மோதியது. பெண்கள் அணி வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான எல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதே…

  12. சம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்! ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான காலிறுதி இரண்டாவது லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம், ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், மென்செஸ்டர் யுனைடெட் அணியும், பார்சிலோனா அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய முதலாவது லெக் போட்டியில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆகையால் இப்போட்டியில், இரு அணிகளுமே மிகப்பெரிய வெற்றியினை நோ…

  13. நியூட்டன் அணியைத் தோற்கடித்து கரவெட்டி பிரதேச சம்பியனாகியது நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம். யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிக்கிடையிலான கால்ப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகமும் மோதின. https://newuthayan.com/story/16/நவிண்டில்-கலைமதி-சாதனை.html

  14. யாழ்ப்பாணக் கல்லூரியை சென். பற்றிக்ஸ் 187 ஓட்டங்களால் வென்றது April 12, 2019 யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டிலக்சன் 96 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் டிகாஸ் 4 இலக்குகளையும், சிந்துயன் 3 இலக்குகளையும், கேசவன் 2 இலக்குகளையு…

  15. உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி. Published by J Anojan on 2019-04-11 12:04:45 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந் நிலையில் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள 10 அணிகளுக்கிடையேயான பயிற்சிப் போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையின் விபரம் பின்வருமாறு : http://www.virakesari.lk/article/53831

  16. சம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக் போட்டிகளின் முடிவுகள் ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான காலிறுதி முதல் லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம், இங்கிலாந்தில் உள்ள டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல் போட்டியில், டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணியும், மென்செஸ்டர் சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இரு அணி வீரர்களும்…

  17. கனடா திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் தழிழ் மாணவர்கள் சாதனை கனடாவின் டெரன்டோ நகரில் நடைபெற்ற சிவா பைட்டர்ஸ் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் ஜி.கே.எம்.ஓ (எஸ்.கே.ஏ.ஜ மற்றும் கே.ஓ.ஜே.எவ்) கழக மாணவர்கள் காட்டா போட்டியில் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் குமித்தே போட்டியில் 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களாக 12 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இதில் பயிற்றுனர் சென்செய்.சுகந்தன் காட்டாபோட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இவர்களுக்கான ஆரம்ப பயிற்சிகளை சென்செய்.ஜெயதாஸ், சென்செய்.ரெஜினோல்ட் ஆகியோரும் சுற்றுப்போட்டிக்கான சிறப்பு பயிற்சிகளை சிகான்டாய்.எஸ்.மனோகரனும் வழங்கியிருந்தார். ஜி.கே.எம்.ஓ கனடா கழக நிர்வாகக்குழு கடந்த மாதம் தங்களுக்கான சிறப…

  18. அல்ஜாரி ஜோசப் : 22 வயதில் அறிமுக ஐபிஎல் போட்டியில் அசத்தல் சாதனை - யார் இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்? 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSWAPAN MAHAPATRA ஐபிஎல் போட்டியொன்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அல்ஜாரி ஜோசப் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்…

  19. ஐபிஎல் 2019: ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்கள்! நேற்று, ரஸ்ஸல் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தீர்கள் தானே! அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும் ஏதாவது ஒரு விலை வைக்கமுடியுமா? விலைமதிப்பில்லாத ஆட்டமல்லவா அவை! இந்தமுறை கொல்கத்தா அணியில் ரஸ்ஸலுக்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ. 8.50 கோடி. ஆனால் இந்தத் தொகையை விடவும் அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. முதல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வென்றதற்குக் காரணம் ரஸ்ஸல்தான். 19 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ப…

    • 0 replies
    • 669 views
  20. 24 மணி நேரம்.. 2 நாடுகள்... 10 விக்கெட்டுகள்: மலிங்காவின் அயராதப் பந்து வீச்சு Published : 04 Apr 2019 18:36 IST Updated : 04 Apr 2019 18:36 IST ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு அனுப்புங்கள் என்ற பிசிசிஐ கோரிக்கைக்கு அடிபணிந்து மலிங்காவை மும்பை இந்தியன்சுக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் ரிலீஸ் செய்தது. மலிங்கா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் உடனடியாக இலங்கை புறப்பட்டார். ஏனெனில் அங்கு உலகக்கோப்பை இலங்கை அணியைத் தேர்வு செய்வதற்கான முன்னோட்ட சூப்பர் ஃபோர் புராவன்ஷியல் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது, இது முடிந்துதான் அவர் ஐபிஎ…

  21. திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. மதுபோதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முச்சக்கரண்டிச் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக, தி…

  22. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர்! இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர், கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. உள்ளூர் அணிகளுக்கு இடையிலான “சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கெட் தொடர்” என அழைக்கப்படும் இத்தொடர், எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இத்தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது இத்தொடரில் பங்கேற்கும் நான்கு அணிகளின் தலைவர்கள், அணிகளின் உரிமையாளர்கள், இத்தொடரின் இயக்குனர், உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான உப தலைவர், மற்றும் இத்தொடரில் விளையாடும் …

  23. டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கதாயுதத்தை ஏந்தியது இந்தியா! டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட் அணிகளுக்கு மிக முக்கியமான தரவரிசைப் பட்டியலாக பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிடும். இந்த பட்டியலில், முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு சம்பியன்ஷிப் பட்டத்தோடு, ஐசிசி.யின் கதாயுதமும் வழங்கப்…

  24. பாகிஸ்தானை வெள்ளையடித்தது அவுஸ்திரேலியா FacebookTwitter Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, மு.ப. 04:06Comments - 0Views - 10 பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 5-0 என பாகிஸ்தானை அவுஸ்திரேலியா வெள்ளையடித்துள்ளது. இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, 5-0 என பாகிஸ்தானை வெள்ளையடித்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் அவுஸ்திரேலியா: 327/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 98 (111), …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.