விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
யூனிஸ் கான் சாதனை சதம் அக்டோபர் 22, 2014. துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சதம் அடித்தார். இதையடுத்து, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (3), முகமது ஹபீஸ் (0) சொதப்பல் துவக்கம் தந்தனர். பின் இணைந்த அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசார் அலி டெஸ்ட் அரங்கில் 16வது அரை சதம் கடந்தார். மூன்றாவ…
-
- 14 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (10) உறுதி செய்தது. இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அவரிடம் விளக்கம் கோரி குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண…
-
- 0 replies
- 237 views
-
-
சச்சின் மகனின் முதல் சர்வதேச விக்கெட்: ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டிய வினோத் காம்ப்ளி முதல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் - படம் உதவி: ட்விட்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்திய முதல் சர்வதேச விக்கெட்டைக் கண்டு சச்சினின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டு தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இலங்கையில் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கொழும்பில் உள்ள நான்ட் ஸ்…
-
- 1 reply
- 568 views
-
-
தொடரிலிருந்து வெளியேறுகிறார் டூப்பிளஸ்ஸி தென்னாபிரிக்க அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியின் வலது தோள் பட்டையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான இறுதி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மெஹமட் முசாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது தென்னாபிரிக்க அணி வீசிய 10 ஓவரில் பிடியெடுப்பு ஒன்றுக்கான முயற்சியொன்றை மேற்கொண்டபோது அவர் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வலது தோல்பட்டை பாதிப்புக்குள்ளானதில். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைக்களுக்குப் பின்னர் மரு…
-
- 0 replies
- 413 views
-
-
2015: எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது? உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்னும் கேள்வியும் ஏக்கமும் இந்திய ரசிகர்கள் மனங்களில் உள்ளன. இந்தியாவின் அதி தீவிர ஆதர வாளர்கூட இந்தியா வெல்லும் என்று சொல்லும் நிலையில் இன்றைய இந்திய அணி இல்லை என்பதே கசப்பான யதார்த்தம். இந்திய அணியைப் பீடித்தி ருக்கும் பிரச்சினைகளில் முதன்மை யானது உடல் தகுதி. ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் காய மடையலாம் என்ற நிலையே உள்ளது. இரண்டாவதாக, இந்திய பவுலிங். உயர் தரத்திலான போட்டி களுக்கு ஏற்ற பந்து வீச்சு இந்தியா விடத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அதுவும் வேகப்பந்துக்கு உகந்த ஆஸ்திரேலிய நியூஸிலாந்து …
-
- 0 replies
- 740 views
-
-
20 ஓவர் போட்டி அணியில் டோனி இடம்பெறாதது ஏன்? - கேப்டன் கோலி பதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன்? என்பதற்கு பதில் அளித்த கேப்டன் கோலி, ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கவே அவர் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார். #ViratKohli #T20Cricket #Dhoni திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:- இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தபோது, ஆச்சரியம் அடைந…
-
- 0 replies
- 304 views
-
-
இங்கிலாந்தின் கிரிக்கெட் கலாசாரத்தில் மாற்றம் வேண்டும் - ரவி பொப்பாரா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து மிளிரவேண்டுமானால் இங்கிலாந்தின் கிரிக்கெட் கலாசாரத்தில் மாற்றம் அவசியம் என ரவி பொப்பாரா கூறியுள்ளார். தமது அணி அச்சத்துடன் விளையாடியதாகவும் கிரிக்கெட்டில் முன்னேற வேண்டுமானால் ஆங்கிலேய கிரிக்கெட் முறைமையைக் கைவிடவேண்டும் எனவும் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் குழுநிலைப் போட்டிகளுடன் வெளியேறிய இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற ரவி பொப்பாரா கூறினார். தற்கால மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு ஏற்ப இங்கிலாந்து வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாமல் தடுமாறியதாகவும் ஐ பி எல் போன்ற இருபதுக்…
-
- 4 replies
- 458 views
-
-
கனேடிய குரோன் ப்றீயிலும் லூயிஸ் ஹமில்டன் வெற்றி 19 கட்டங்களைக் கொண்ட ஃபோர்மியூலா 1 குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தின் ஏழாவது கட்டமான கனேடிய குரோன் ப்றீ போட்டியில் லூயிஸ் ஹமில்டன் வெற்றிபெற்று, ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்திற்கான தனது வாய்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளார். மேர்சிடெஸ் அணி சார்பாக போட்டியிடும் லூயிஸ் ஹமில்டன் தனது சக அணி வீரர் நிக்கோ ரொஸ்பேர்கிடம் எதிர்கொண்ட சவாலை முறியடித்து வெற்றியீட்டினார். 305.775 கிலோ மீற்றர் மொத்த தூரம் கொண்ட விலேநோவ் ஓடுபாதையில் நடைபெற்ற 7ஆவது கட்ட க்ரோன் ப்றீ போட்டி 70 சுற்றுகளைக் கொண்டதாகும். இந்தப் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 31நாடிகளில் நிறைவு செய்த லூயிஸ் ஹமில்டன் முதலாம் இ…
-
- 0 replies
- 366 views
-
-
பதிவு செய்யப்பட்ட.இளைஞர்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான எல்லே இறுதிப்போட்டியில் அளவெட்டி கலைவாணி இளைஞர் கழக பெண்கள் அணி சம்பியனாகியது. மல்லாகம்.ஆர்.டி.எஸ்.மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் அளவெட்டி கலைவாணி இளைஞர் கழக பெண்கள் அணியும், சென்சேவையர் இளைஞர் கழக பெண்கள் அணியும் மோதிக் கொண்டன. https://newuthayan.com/story/16/எல்லேயில்-கலைவாணி-அணிக்க.html
-
- 0 replies
- 342 views
-
-
ஜோஷ் பட்லரை சூட்சுமமாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டு, சட்டம் பேசும் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது நடைபெற்று வரும் இந்திய ஐ. பி. எல் போட்டிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியும் மோதின. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 184 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்த்தான் அணி, 3 விக்கெட்டுகளுக்கு 148 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையின் இருந்தபொழுது, பந்துவீசச் சென்ற இந்திய சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின், கோட்டிற்கு வெளியே ஓடுவதற்கு ஆயத்தமாக நின்றிருந்த ஜோஷ் பட்லரை, மிகவும் சூட்சுமமான முறையில் ரண் அவுட் ஆக்கி, ராஜஸ்த்தான் அணியின் பின்வரிசை ஆட்டக் காரர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்க…
-
- 11 replies
- 1.7k views
-
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர்! இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர், கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. உள்ளூர் அணிகளுக்கு இடையிலான “சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கெட் தொடர்” என அழைக்கப்படும் இத்தொடர், எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இத்தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது இத்தொடரில் பங்கேற்கும் நான்கு அணிகளின் தலைவர்கள், அணிகளின் உரிமையாளர்கள், இத்தொடரின் இயக்குனர், உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான உப தலைவர், மற்றும் இத்தொடரில் விளையாடும் …
-
- 1 reply
- 699 views
-
-
ஸ்டெம்பின் மீது தவறி விழுந்த சங்கக்காரா: மைதானத்தில் ஏற்பட்ட பதற்றம் (வீடியோ இணைப்பு) றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணியின் சங்கக்காரா ஸ்டெம்பின் மீது தவற விழுந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.இங்கிலாந்தில் நடக்கும் றொயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே- நாட்டிங்காம்ஷைர் அணிகள் மோதியது. இதில் முதலில் சர்ரே அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஓட்டங்கள் எடுக்கும் போது குமார் சங்கக்காரா மறுமுனையில் இருந்த ஸ்டெம்ப் மீது தவறி விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் சிரித்தபடியே எழுந்து தொடர்ந்து விளையாடிய சங்கக்காரா, அந்தப் போட்டியில் 166 ஓட்டங்கள் குவித்தார். இதனால் அவரது அணி 4 ஓட்டங…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார்.சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிகளில் சுவிஸ் அணிக்காக விளையாடி சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். - See more at: h…
-
- 0 replies
- 270 views
-
-
அயூப், ஷக்கீல் குவித்த அரைச் சதங்கள் பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டன Published By: VISHNU 21 AUG, 2024 | 11:07 PM (நெவில் அன்தனி) பங்களதேஷுக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று காலை பெய்த மழை காரணமாக சுமார் நான்கரை மணித்தியாலங்கள் தாமதித்தே போட்டி தொடங்கியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் முதல் 3 விக்கெட்களை 16 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் தடுமாற்றத்…
-
-
- 11 replies
- 742 views
- 1 follower
-
-
இந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே ! பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை குவித்தது. 315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்…
-
- 2 replies
- 884 views
-
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் தனுஸ்க குணதிலக்க அதிகூடுதலாக 30 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும், லஹிரு மதுசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. போட்டியில் இலங்கை அணியின் இருபதுக்கு 20…
-
- 2 replies
- 519 views
-
-
தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை..! தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிக இடம்பெறவுள்ளளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா ஆரமமாகவுள்ளதாகவும், இதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிக, தனது 13 ஆவது வயதில் பளு தூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுவிற்பாளராக செயற்பட்டு வருகின்றார். 2014 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த…
-
- 1 reply
- 413 views
-
-
தென்னாபிரிக்காவுக்குச் சிறப்பான வெற்றி தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. செஞ்சூரியனில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 125 (113), அலெக்ஸ் ஹேல்ஸ் 65 (73), பென் ஸ்டோக்ஸ் 53 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், கஜிஸ்கோ றபடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். …
-
- 0 replies
- 276 views
-
-
மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது 23 Feb, 2026 | 04:26 PM (நெவில் அன்தனி) ஹொங்கொங் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண எழுச்சி நட்சத்திரங்கள் (ரைசிங் ஸ்டார்ஸ்) கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனானது. பாங்கொக் தேர்ட்தாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய இந்தியா 46 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது. தேஜல் ஹசாப்னிஸ், அணித் தலைவர் ராதா யாதவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 69 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அத்துடன் ப்ரேமா ராவத், தனுஜா கன்வார் ஆகிய…
-
- 0 replies
- 52 views
- 1 follower
-
-
உலகின் அதிவேக வீரரென மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட் உலகின் மின்னல் வேக வீரரென ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் நிரூபித்தார். ரியோவில் இன்று இடம்பெற்ற ஆடவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் 19.78 செக்கனில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் உசைன் போல்ட் பெறும் 3 ஆவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது Virakesari
-
- 3 replies
- 573 views
-
-
308வது வெற்றியுடன் பெடரரை முந்தினார் செரீனா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கஜகஸ்தானின் ஷ்வெடோவாவை வீழ்த்திய செரீனா, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் தனது 308வது வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தார். ஏற்கனவே முன்னாள் நட்சத்திரம் மார்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை (306 வெற்றி) முறியடித்த செரீனா, ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் 307 வெற்றிகள் பெற்று படைத்த சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது, 308வது வெற்றியுடன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பதிவு செய்தவராக மகத்தான சாதனை படைத்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243929
-
- 1 reply
- 455 views
-
-
தேசிய மட்டத்தில் சம்பியனானது சென்.பற்றிக்ஸ் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கால்பந்தாட்டப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது. இந்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை இளவாலை சென் .ஹென்றிஸ் கல்லூரியும், வெண்கலப்பதக்கத்தை மன்னார் சென் . லூசியஸ் கல்லூரியும் தாமதாக்கிக்கொண்டன. அநுராதபுரத்தில் இடம்பெற்றுவரும் இத் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. இந்நிலையில், கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி ஆட்டம். இரண்டாம் பாதியின் 33 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸின் முதல் கோலைப் பதிவு செய்தார் …
-
- 0 replies
- 575 views
-
-
கோலியும் அனுஷ்காவும் இணைந்து இலங்கையில் முன்னெடுத்த காரியம் ( படங்கள் இணைப்பு ) இந்திய அணித் தலைவர் விராட் கோலியும் அவரது பெண் தோழியுடான அனுஷ்கா சர்மாவும் இணைந்து இலங்கையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த புகைப்படங்கள் இணையங்களில் உலாவி வருகின்றது. மரக்கன்றுகளை அவர்கள் தங்கியிருந்த ரிசோர்ட் ஒன்றில் நாட்டி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கோலி தலைமையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிளைக் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந் நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, ஒரு போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 போட்டியிலு…
-
- 4 replies
- 635 views
-
-
1 12/06 17:00 Sao Paulo Brazil - Croatia Group A 2 13/06 13:00 Natal Mexico - Cameroon Group A 3 13/06 16:00 Salvador Spain - Netherlands Group B 4 13/06 18:00 Cuiaba Chile - Australia Group B 5 14/06 13:00 Belo Horizonte Colombia - Greece Group C 6 14/06 22:00 Recife Côte d'Ivoire - Japan Group C 7 14/06 16:00 …
-
- 6 replies
- 1.2k views
-
-
ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டனில் விளையாடத் தடை (என்.வீ.ஏ.) ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீர, வீராங்கனைகளுக்கு விம்பிள்டனில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் மீதான படையெடுப்புக்கு ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் அந்த இரண்டு நாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது. ஆண்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்ய வீரர் டெனில் மெட்வடேவ், பெண்களுக்கான தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா ஆகியோர் பாதிக்கப்படும் உயரிய நிலை வீர, வீராங்கனையாவர். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சகலவிதமான புல்தரை டென்னிஸ் போட்டிகளிலும் அந்த நாடுகளின் வீர, வீர…
-
- 0 replies
- 386 views
-