விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
வில்லன் வருகிறார் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கடமையாற்ற 25 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக தலா இரண்டு மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பரபரப்பாக்கிய இங்கிலாந்து மத்தியஸ்தர் ஹாவாட் வெப் பின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னும், நெதர்லாந்தும் மோதின. விறுவிறுப்பான அந்தப் போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டிய ஹாவாட் வெப் பரபரப்பாக்கினார். போட்டி முடிவடைந்ததும் நெதர்லாந்து பயிற்சியாளர் பெட்வன் மாவி ஜிக் மத்தியஸ்தரான ஹாவாட் வெப்புடன் தர்க்கம் செய்தார். நெதர்லாந்து ரசிகர்களுக்கு வில்…
-
- 2 replies
- 656 views
-
-
மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி வீரகேசரி இணையம் -மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கிரிஸ் கேல் அணித்தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் உடன்பாட்டுக்கு அவ் அணியின் முன்னாள் தலைவர் கிரிஸ் கேல் உடன்படாமையினால் அணி தலைவர் மற்றும் உபத்தலைவர் பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ,
-
- 0 replies
- 655 views
-
-
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதி போட்டிகளில் ஜப்பான், ஈரான் 02 FEB, 2024 | 11:20 AM (நெவில் அன்தனி) கத்தாரில் நடைபெற்றுவரும் 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு கடைசி இரண்டு அணிகளாக ஜப்பானும் ஈரானும் தகுதிபெற்றன. கத்தாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7ஆவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பஹ்ரெய்னை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பானும் கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் சிரியாவை 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரானும் வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறின. ஜப்பானுக்கு இலகுவான வெற்றி அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல்…
-
- 4 replies
- 655 views
- 1 follower
-
-
19 வயதின்கீழ் இலங்கை குழாமில் சனோகீத் சண்முகநாதன் பத்தொன்பது வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் கண்டி திரித்துவ கல்லூரி சகலதுறை வீரர் ஷனோகீத் சண்முகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். துடுப்பாட்டத்திலும் சுழல்பந்துவீச்சிலும் சிறந்து விளங்கும் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் மும்முனை தொடரை முன்னிட்டு இலங்க…
-
- 0 replies
- 655 views
-
-
Published By: SETHU 23 APR, 2023 | 09:42 AM போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கைது செய்து சவூதி அரேபியாவிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சவூதி அரேபிய சட்டத்தரணி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். மைதானத்தில் அநாகரிகமான முறையில் ரொனால்டோ நடந்துகொண்டாரென்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளா நிலையில் அச்சட்டத்தரணி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 38 வயதான ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்துக்காக விளையாடி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அல் ஹிலால் கழகத்துடனான, சவூதி ப்ரோ லீக் போட்டியில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 2:0 கோல்களால் …
-
- 1 reply
- 655 views
- 1 follower
-
-
சச்சினை முந்தியாச்சு டிசம்பர் 23, 2014. புதுடில்லி: சமூகவலைதளமான ‘டுவிட்டரில்’ அதிக ரசிகர்கள் பின்பற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை இளம் நட்சத்திரம் கோஹ்லி முந்தினார். ‘டுவிட்டரில்’ சச்சினை 48 லட்சத்து 69 ஆயிரத்து 849 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். கோஹ்லியை 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்தப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் தோனி (33,27,033 லட்சம்), சேவக் (31,80,081 லட்சம்) முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர். 5 மற்றும் 6வது இடம் முறையே யுவராஜ் (27,23,090 லட்சம்), ரெய்னா (26,17,828 லட்சம்) வகிக்கின்றனர். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா 7வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களா…
-
- 1 reply
- 655 views
-
-
லண்டன்: ஜூன் 29ம் தேதி லண்டனில் துவங்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பிரிட்டனில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1990களுக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றது. கடைசியாக் இரண்டாம் உலகப் போரின்போது விம்பிள்டன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூன் 29 1945ம் தேதி நடக்க இருந்த கிராண்ட் ஸ்லாம் போட்டி இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டபோது டென்னிஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடு…
-
- 0 replies
- 655 views
-
-
சி.எஸ்.கே ஜெர்ஸியுடன் சேப்பாக்கத்தில் களமிறங்கிய தல தோனி! தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி மோதுகிறது. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், தோனி, மோகித் சர்மா, பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக தோனி சி.எஸ்.கே ஜெர்ஸியில் களமிறங்கினார். அவரது ஜெர்ஸியில் 'தல' என்று எழுதப்பட்டிருந்ததது. தோனி களமிறங்கியதும் ரசிகர்களின் ஆரவாரத்தில் சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது. நடப்புத் தொடரில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நட…
-
- 2 replies
- 655 views
-
-
... சர்வதேச தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹிமா தாஸ்.. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்
-
- 1 reply
- 654 views
-
-
கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா 350 ரன்கள் குவிப்பு முத்தர்ப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் ஜிம்பாவேயிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களைக் குவித்தது. ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாவே கேப்டன் எல்டன் சிகும்பரா ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் பற்றி அறியாமல் முதலில் பேட் செய்ய அழைத்தார். பிராட் ஹேடின், ஆரோன் ஃபின்ச் ஜோடி அதிரடியாகத் தொடங்கி 18 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து அபாரத் தொடக்கம் கண்டனர். பன்யாங்கரா, மற்றும் சடரா என்ற பவுலர்கள் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். 48 ரன்களில் 2 பவுண்டரி …
-
- 10 replies
- 653 views
-
-
ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட்: புஜாராவின் சதத்தின் துணையுடன் வலுவான நிலையில் இந்தியா இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது, ஆட்டநேர முடிவில் புஜாரா 130 ஓட்டங்களுடனும், ஹனுமா விஹாரி 39 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். சிட்னி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, முதல் விக்கெட்டை 10 ஓட்டங்கள் பெற்றிர…
-
- 2 replies
- 652 views
-
-
விராட்கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் - கோலி அனுஸ்கா கடும் சீற்றம் By RAJEEBAN 31 OCT, 2022 | 12:45 PM தங்கள் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து அதனை படமெடுத்து வெளியிட்ட நபரை விராட்கோலியும் அவரது மனைவி அனுஸ்கா சர்மாவும் கடுமையாக சாடியுள்ளனர். தங்கள் அந்தரங்கம் மீறப்பட்டுள்ளது என இருவரும் தெரிவித்துள்ளனர். தங்களிற்கு மிகவும் பிடித்தமான வீரர் குறித்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைவதும் பரபரப்பாவதும் அவர்களை சந்திப்பதற்கு துடிப்பதும் எனக்கு தெரியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு விராட்கோலி சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார். நான் அதனை பாரட்டுவேன் ஆனால் இந்த வீடியோ பயங்கரமானது எனது அந்தரங…
-
- 0 replies
- 652 views
- 1 follower
-
-
மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ண கிரிக்கெட் போரில் வென்றது இந்தியா! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், எங்களை தோற்கடிக்கவே முடியாது என இந்தியக் கிரிக்கெட் அணி, மீண்டுமொரு முறை பாகிஸ்தான் அணிக்கு உணர்த்தியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில், பரம எதிரி நாடுகளான இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. நேற்று மென்செஸ்டர் ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. நீலம் மற்றும் பச்சை வண்ண ஆடைகளால் மைதானத்தில் புடை சூழ்ந்திருந்த இரசிகர்கள் சத்தமிட்டு வீரர்களை உற்சாக படுத்த, பெரும் எதிர்பார்…
-
- 0 replies
- 652 views
-
-
மகேந்திர சிங் தோனியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், அவருக்கு அடுத்ததாக இருக்கும் ரிஷாத் பந்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக தோனியின் துடுப்பாட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார். இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே நடந்துவரும் இருபதுக்கு 20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்…
-
- 0 replies
- 651 views
-
-
றியல் மட்ரிட், சிற்றி வெற்றி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், முக்கியமான போட்டியாக அமைந்த மன்செஸ்டர் போட்டி தவிர ஏனைய போட்டிகளில், றியல் மட்ரிட் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும் வெற்றிபெற்றன. றியல் மட்ரிட் அணிக்கும் மல்மோ அணிக்குமிடையிலான போட்டியில், 8-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில், 12ஆவது, 24ஆவது நிமிடத்தில் கரிம் பென்ஷெமா பெற்றுக் கொண்ட கோல்களின் உதவியோடு, 2-0 என றியல் மட்ரிட் அணி முன்னிலை வகிக்க, 39ஆவது, 47ஆவது, 50ஆவது, 59ஆவது நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். அண்மைக்காலமாக கோல்களைப் பெறத் தடுமாறிவரும் ரொனால்டோ, சிறப்பான திறமையை வெளிப்ப…
-
- 2 replies
- 651 views
-
-
தழிழீழக்கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா எதிர்வரும் ஆவணி மாதம் 8 மற்றும் 9 ம் திகதிகளில் வழமைபோல சூரிச் நகரில் நடைபெறவுள்ளது இப்போட்டிகளில் குறிப்பாக உதைபந்தாட்டப்போட்டிகளில் வழமைபோல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,நீண்ட இடைவெளிக்குப்பிறகு கனடா நாட்டிலிருந்தும் தெரிவு அணி கலந்துகொள்ளவுள்ளது. அந்த வகையில் இங்கே சுவிசிலிருந்தும் 2014/2015 தொடரில் தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப்பெற்ற SC YOUNGSTAR Lyss SC ROYAL Bern YOUNGBIRDS FC Luzern SC THAIMAN Zug SC LIMMATHAL Baden ILLAM SIRUTHAIKAL SC Swiss தெரிவாகியுள்ளன. குழு நிலைத் தெரிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிக்கப்படவுள்ளன. தீபம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. SC Young Stars SC Ro…
-
- 3 replies
- 651 views
-
-
3 தமிழ் வீரர்களுடன் மலேஷியா பயணமாகியது இலங்கை அணி ( படங்கள் இணைப்பு ) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு எமது ஆதரவினையும் உந்துசக்தியையும் வழங்கி அவர்களை தேசிய அணியில் இடம்பெறச் செய்வேண்டும். இந்நிலையில் ஏனைய வீரர்களும் குறிப்பாக தமிழ் வீரர்களும் பல சாதனைகள் புரிந்து எமது தாய்நாட்டை உய…
-
- 0 replies
- 651 views
-
-
இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது பங்களாதேஷ் இளையோர் அணி 1,034 Views தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி உலகக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி முதன்முறையாக கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய இளையோர் அணியுடன் இன்று Potchefstroom மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் 3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியே உலக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி சுவீகரித்துள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல…
-
- 6 replies
- 651 views
- 1 follower
-
-
விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது? விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே மருத்துவமாகும். மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகின்ற இத்துறையின் ஒரு கிளையாக “விளையாட்டு மருத்துவம்“ அமைகின்றது. அந்த வகையில் நவீன விளையாட்டு வீரர்கள் அவர்களது ஆரோக்கியத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொள்ள பிரதானமாக உதவுகின்ற இந்த விளையாட்டு மருத்துவம் பற்றி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வைத்திய அதிகாரி புஹைம் அவர்கள் பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை ThePapare.com இற்கு வழங்கியிருந்தார். அதனை உங்களுடன் எழுத்து வடிவில் பகிர்கின்றோம். கே: விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) என்றால் என்ன? உலகில் பல்லாயிரக்கணக்கான மக்…
-
- 0 replies
- 650 views
-
-
ஒருநாள் போட்டிகளில் அதிக 'டக்' அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம் செஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 சிக்சர்) மற்றும் ரூசோ (132 ரன்கள், 98 பந்துகள், 9 பவுண்டரி 8 சிக்சர்கள்), ஆகியோரின் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவி தொடரை 1-4 என்று இழந்த்து. ஆம்லா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இலக்கைத்…
-
- 0 replies
- 650 views
-
-
மத்தி., சேவியர், பற்றிக்ஸ் முன்னேற்றம் IM பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட கால்பந்தாட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நேற்று நடைபெற்றன. அரையிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு. முதலாவது காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்திhலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோ…
-
- 0 replies
- 650 views
-
-
‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம் ஒருநாள் போட்டியை பேரழிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்தான் 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் இரு புதிய பந்துகள் இரு அணி பேட்டிங்கின்போதும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறை கொண்டு வந்தது. கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைய வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிமுறையைத் திருத்தி அமைத்தது. …
-
- 1 reply
- 650 views
-
-
ஒலிம்பிக் பதக்கம் என்பது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஜஸ்ட் லைக் தட் விஷயம்.எத்தனையோ நாடுகள் பல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற போதிலும், பதக்கப்பட்டியலில் இடம் பெற முடியாமலேயே போய் விடுகின்றன.இந்தியா கூடவும் அப்படித்தானே. ஆனால் கொசோவோ என்ற குட்டிநாடு, பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கில் அதுவும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இரு நாடுகள் புதுமுகங்களாக களம் கண்டன. ஒன்று, ஐரோப்பிய நாடானா கொசோவா; மற்றொன்று தெற்கு சூடான். செர்பியாவின் பிடியில் இருந்த கொசோவா, கடந்த 2008 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. கடந்த இரு வருடங்களுக்கு முன்புதான் கொசோவாவை தனிநாடாக ஏற்று, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகரித்தது. இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் க…
-
- 1 reply
- 649 views
-
-
தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில…
-
- 1 reply
- 649 views
-
-
7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி. இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நேற்றைய ஆட்ட நேர முடிவின் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்திருந்தது. ஆடுகளத்தில் மெஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 2…
-
- 1 reply
- 649 views
-