துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
தேசத்தின் குரலின் வீரவணக்க மலர் நிழற்படத் தொகுப்பு:- http://www.sankathi.com/gallery/categories.php?cat_id=36
-
- 0 replies
- 992 views
-
-
லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.
-
- 0 replies
- 138 views
-
-
ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான வாசுதேவர்-நேரு கொரோனாவால் கனடாவில் உயிரிழப்பு.! ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த வாசுதேவர்-நேரு கொரோனாத் தொற்று காரணமாக கனடாவில் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த வாசுதேவர்-நேரு அவர்கள் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்களில் முக்கியமான முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தார். புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்…
-
- 0 replies
- 491 views
-
-
17வது ஆண்டு நினைவுநாள் 07.02.2007 2ம் லெப்டினன் றேகன் (சிவபாலன் காரைநகர்) விடிவிற்காய் புறப்பட்டவீரவேங்கையே முடிவுதான் தமிழீழம் என முன்னேறிச் சென்றனையே பொடியாகும் நொடி வாழ்வு- அதனை பொன்னாக்கி நின்றனையே விடியும் தமிழீழம் அதில் வெற்றிச் சூரியனானாயே. நண்பர்கள்,களத்தில் நிற்கும் உனது சக வீரர்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் December 25, 2021 நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது. 25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில், ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட்டது. நிகழ்வுக்கு முன்…
-
- 0 replies
- 379 views
-
-
மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார் Posted on July 19, 2025 by தென்னவள் ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார். 1951 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவிலில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவராவர். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைப…
-
- 0 replies
- 154 views
-
-
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சண்முகவேல் விக்னேஸ்வரன் காலமானார் தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான லயன் சண்முகவேல் விக்னேஸ்வரன் கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை காலமானார். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பொரல்ல மயானத்தில் நடைபெற்றது. கொழும்பு றோயல் மருத்துவமனையில் கடந்த இரண்டுவரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிற்சை பலனளிக்காமல் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 50. Global Enterprises நிறுவனத்தின் ஸ்தாபகரான விக்னேஸ்வரன் கணனி தொழில்நுட்ப நிபுணராக கொழும்பில் நீண்டகாலம் பணியாற்றி வந்திருந்ததுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் பால் பெரும் பற்று க…
-
- 0 replies
- 561 views
-
-
தோழன் விஜயன் - எமது சிவப்பு அஞ்சலிகள்!! தோழன் விஜயன் இன்று தனது சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் நிறுத்திக் கொண்டான். தோழன் விஜயன் இனவாத இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தனது அரசியல் செயற்பாடுகளை தொடங்கினான். பின்பு இலங்கையின் எல்லாச் சமூகங்களின் விடுதலையும் தமிழ் மக்களின் விடுதலையும் இணைந்து கொள்ளும் போதே நிலையான தீர்வு ஒன்று கிடைக்கும் என்னும் பொதுவுடைமை அரசியல் வழியில் தனது பாதையை வகுத்துக் கொண்டான். சம உரிமை இயக்கம், முன்னிலை சோசலிச கட்சி ஆகிய அமைப்புக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டான். மக்கள் போராட்ட அமைப்பின் பத்திரிகையான "போராட்டம்" இதழை பிரான்ஸ் தமி…
-
- 0 replies
- 313 views
-
-
மொன்றியல் கிய10பெக் மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் களத்தின் தலைமையாளராக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேசப்பற்றாளர் முரளி (துரைரத்தினம் முரளிகரன்) அவர்கள் இந்த மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை இரவு மொன்றியல் வைத்தியசாலையொன்றில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். தமிழீழத் தாயகத்தில் புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட முரளி அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் பழைய மாணவர். 1966ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25ம் திகதி ‘சான்டோ’ என அழைக்கப்பட்ட துரைரத்தினம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முரளி இளமைக் காலத்திலிருந்தே தேசிய விடுதலை உணர்வின்பால் ஈர்க்கப்பட்டு அப்பாதையில் தடம் பதித்தவர். 1992ம் ஆண்டு கனடாவுக்குப் புலம் பெயர…
-
- 0 replies
- 510 views
-
-
-
இரண்டாம் லெப்டினென்ட் மாலதி எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு …
-
- 0 replies
- 1.3k views
-
-
விக்டர் அண்ணா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.8k views
-
-
மணிவண்ணன்... தான் இறந்த பின்பு தன் உடலில், புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார். நினைவு அஞ்சலி. 🙏
-
- 0 replies
- 320 views
-
-
கொழும்பு கொட்டாஞ்சேனை அருள் கல்வி வட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தை வென்ற ஆசானும் அரசின் உயர் அதிகாரியுமான கல்விமான் வே.சிவஞானஜோதி காலமானார். இவரது மரணம் நாட்டிற்கு மட்டுமல்ல அவரிடம கற்ற அனைத்து மாணவர்களுக்கும் பேரிழப்பாகும். கணக்கியல் ஆசிரியரான இவரிடம் கற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று உயர் தொழிலில் இருந்து வருவது குறிப்பிடதக்கது யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி ஐயா பல அமைச்சுக்களின் செயலாளராக திறன்பட பணியாற்றி இருந்தார். குறிப்பாக இந்து கலாச்சார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்கு மாகாண ஜனாதிபதி செயலணி, நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார். …
-
- 0 replies
- 752 views
-
-
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் புதிய புகைப்படங்கள். வல்வை ஒன்றியம் வல்வெட்டித்துறையில் இருந்து இன்று அனுப்பியுள்ள புதிய புகைப்படங்கள். மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 எனது தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவிற்கு இரங்கல் தெரிவித்தவர்கள், நேரில் கலந்து கொண்டவர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோர் உட்பட அனைவருக்கும் எமது குடும்பத்தினரின் சார்பில் நன்றிகளை தெரிவிக்கிறேன். இவ்வண்ணம் மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று வல்வை ஊறணி மயானத்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்க…
-
- 0 replies
- 731 views
-
-
தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். வார்ஸா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர் இவர். தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் து.மூர்த்தி மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் கருத்தாக்கங்களிலும் ஆழமான பற்று கொண்டவர். ’தமிழியல் புதிய தடங்கள்’ என்ற இவரது நூல் தமிழியல் ஆய்வில் முக்கியமான புத்தகம். 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ என்ற இவரது குறுநூல் பெரியார் மீது முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசிய நோக்கிலான விமர்சன…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கை, அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் குறைடனை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிறிதரன் (சிறி) அவர்கள் 13-12-2007 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் செல்லத்துரை ஞானதேவி (புனிதம்) தம்பதியினரின் அன்பு மகனும் செல்வகுமாரி (செல்வி) அவர்களின் அன்புக் கணவரும் சாரசி, கபிலன், சாறோன் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற குணரத்தினம் - ரஞ்சிதமலர் (நீர்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகனும், குணவதி(இந்தியா) அருந்ததி (பிரான்ஸ்), சிவபாலன் (சுவிஸ்) ராகினி (இலங்கை) குமுதினி (லண்டன்) நந்தகுமார் (ராஜன்-கனடா) பிறேமா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும். சிவபாலன் (சிவம் -அளவெட்டி), தேவகுமாரி (சுவிஸ்), அருளம்பலம் (அராலி), பாஸ்கரன்(பாபு லண்டன்), சைலா(வவுனியா) வசந்தகுமா…
-
- 0 replies
- 1.3k views
-
-
வரலாறாகிவிட்ட ஆப்ரகாம் லிங்கன் February 12, 2016 - பி.தயாளன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வீம்ஸ் (Weems) என்பவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டான் அச்சிறுவன். அந்த வரலாற்று நூலைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தபோது, அது ‘கிராஃபோர்டு’ என்கிற விவசாயிடம் இருப்பதாக அறிந்தான். பன்னிரெண்டு மைல் தூரம் நடந்துபோய், ‘கிராஃபோர்டைச்’ சந்தித்தான். அவரிடம்? “வீம்ஸ் எழுதின ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ வாழ்க்கை வரலாற்று நூலைக் கொடுங்கள்; படித்துவிட்டுத் தருகிறேன்” என்று மன்றாடிக் கேட்டு வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்து அடுப்பு வெளிச்சத்தில் ஆர்வத்தோடு அந்நூலைப் படித்து முடித்தான். பின்னர் சுவரின் இடுக்கில் நூலைச் சொருகி வைத்துவிட்டுத் தூ…
-
- 0 replies
- 794 views
-
-
புகழ்பூத்த பொறியியல் பேராசிரியர் எஸ்.மஹாலிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்:- "தனது திறமையால் தனக்கு கிடைக்க இருந்த பெரும் அன்பளிப்பை ஜெற் இன்ஜினாக வாங்கி தனது பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய மாமேதை" குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார். எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார். யாழ்ப்பாணம் அ…
-
- 0 replies
- 828 views
-
-
நாட்டின் பிரபல நடனக் கலைஞரும் நடன ஆசிரியருமான கலாசூரி ரஜினி செல்வநாயகம் காலமானார். உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளார். இராஜகிரிய – களபளுவாவையில் வசித்து வந்த அவர் தனது 71 ஆவது வயதில் காலமானார். உள்நாட்டில் மட்டுமின்றி வௌிநாட்டிலும் புகழ்பெற்ற கலாசூரி ரஜினி செல்வநாயகம், கலா கீர்த்தி மற்றும் விஷ்வ கலா கீர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பலாங்கொடையை சேர்ந்த கிராமமொன்றில் பிறந்து, கலை உலகில் பிரவேசித்த அவர், மாணவர்களுக்கு நடனம் கற்பிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். https://thinakkural.lk/article/278040
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்! இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிர் நீத்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பொன்னாலையில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் மாலை நான்கு மணியளவில் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பொன்ராசா தலைமையில் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் பொன்ராசா, வெண்கரம் படிப்பகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர் ரூபனின் உறவினர்கள், பொன…
-
- 0 replies
- 237 views
-
-
பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் - யாழ். அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இரங்கல் 17 APR, 2024 | 05:33 PM பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் என அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நூற்றாண்டு கடந்த வரலாற்றை கொண்டதும், ஈழத்தின் பழம்பெரும் அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டதும், பல பண்டிதர்களை இத்தமிழுலகுக்கு அளித்ததுமான ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை கடந்த 40 வருடங்களாக போற்றிப் பணியாற்றிய பெருந்தமிழ்மகன். தமிழ் மூச்சே உயிர்மூச்சு என்ற அசையாத நம்பிக்கையோடு சங்க…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
தலைசிறந்த தமிழ் அறிஞரும், இலக்கிய விமர்சகரும், திறனாய்வாளருமான பேராசிரியர் கார்திகேசு விவத்தம்பி அவர்களின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும், முழு நாட்டு மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியி்ட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தழிழ் அறிஞரும், கடல் கடந்த நாடுகளிலும் கூட புகழ் பூத்தவருமான மறைந்த பேராசிரியர் சிவத்தம்பியை நான் நன்கறிவேன். அவரது எளிமையான, பணிவான தோற்றம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இலக்கிய ஆய்வரங்குகளில் அவர் கலந்து கொண்ட பல சந்தர்ப்பங்களில் குறுகிய நேரமே …
-
- 0 replies
- 499 views
-
-
தீபாவளி கண்ணீர் அஞ்சலிகள்! HOSPITAL MASSACRE BY INDIAN ARMY ON DEEPAVALI DAY, OCTOBER 1987 கடமையின் போது உயிர் நீத்த ஊழியர்கள் Dr A. Sivapathasuntheram, Dr M.K. Ganesharatnam, Dr Parimelalahar, Mrs Vadivelu, Matron, Mrs Leelawathie, Nurse, Mrs Sivapakiam, Nurse, Mrs Ramanathan, Nurse, Mr Shanmugalingam, Ambulance Driver, Mr Kanagalingam, Telephone Operator, Mr Krishnarajah, Works Supervisor, Mr Selvarajah, Works Supervisor 21-22 October 1987 "The Indian Army came firing into the Radiology Block and fired indiscriminately at this whole mass of people huddled together. We saw patients dying. We lay there without moving a finger pretending to…
-
- 0 replies
- 1.1k views
-