Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அறிமுகம் நிலவன் – ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் அறிவுச் சோலையில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள், ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் நடனம் மற்றும் நாடகங்கள் ஊடகவும் கட்டுரைகளின் வாயிலாக தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்ற போராளிக் கலைஞர். 2000 மேல் அரங்கம் கண்ட “சங்கநாதம் “ புகழ் பேபி ஆசிரியரின் மாணவர்கள் இவரும் ஒருவர் தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவர். சேயோன்:- தமிழனின் மரபுதழுவிய கலை பண்பாடு பற்றி உங்கள் பார்வை ? நிலவன் :- தமிழர்கள் மிகவும் தொ…

  2. "உயிர் காக்கும் கடவுள்கள்” முல்லைத்தீவில் ஒரு இரத்தச் சிவப்பு நிறம் கொண்ட அடிவானத்தின் பின்னால், சூரியன் அன்று மூழ்கியது. தொலைத்தூர எறிகணையிலிருந்து எழும் புகையால் மாலைக் கதிரவனின் ஒளி மறைக்கப் பட்டிருந்தது. காடுகளை அண்டிய ஒரு சிறிய, தற்காலிக மருத்துவமனையில், அண்மையில் திருமணம் செய்த கணவன் மனைவியான, மருத்துவர் மேன்மன் மற்றும் மருத்துவர் தாரகை அருகருகே வேலை செய்தனர். அவர்கள் தங்கள் இளமைக் குடும்ப வாழ்வை மற்றும் அதில் புதைந்து இருக்கும் இன்பத் துளிகளை அனுபவிக்காமல், தம் மக்கள் படும் வேதனைக்கும் துன்பத்துக்கும் ஆதரவாகக் கைகொடுத்து, மருத்துவ உதவிகளை தன்னலமற்று, தங்களால் இயன்றவரை செய்ய முடிவெடுத்து, இன்று அங்கு கடமையாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை எல்லோருக்…

  3. 06 JAN, 2025 | 10:24 PM இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/art…

  4. "ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 01 "நீரின்றி அமையாது உலகு " -- வள்ளுவர் வாக்கு (குறள் -20 ) முன்னைய நாகரிகங்களான டைகரிஸ், யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட - மெசொப்பொத்தேமியா, நைல் நதியின் ஓரத்தில் அமைந்த - எகிப்பது, சரஸ்வதி, சிந்து நதிகளுக்கு இடைப் பட்ட - சிந்து சம வெளி, மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு பகுதிகளில் அமைந்த - சீனா போன்றவை எல்லாம் ஆறுகளின் ஓரமாக அல்லது பெரிய ஆறுகளின் வெள்ளச் சமவெளியில் [rivers/ flood plains] அமைந்து இருந்தன. மேலும் அந்த இடங்கள் எல்லாம் நன்னீரின் தோற்று வாயாக அமைந்து இருந்தன. அது மட்டும் அல்ல, நாம் அறிவது என்னவென்றால், இந்த நாகரிகங்கள் எல்லாம் நீர்பாசனத்தை முழுமையாக அங்கீகரி…

  5. "உறங்காத உணர்வுகள்" வலவன் ஒரு காலத்தில் வளமான வன்னிப் பிரதேசத்தின் மையப் பகுதியில், ஒரு பெருமைமிக்க விவசாயக் குடும்பத்தின் தலைவராக இருந்தவர். அவரது பண்ணை ஏக்கர் பரப்பளவில் இருந்தது, அங்கு அவர் தென்றலில் நடனமாடும் நெல் வயல்களையும், ஏராளமாக காய்க்கும் பழத்தோட்டங்களையும் பயிரிட்டார். அவருடைய செல்வம், அவரது கிராமத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவருக்கு வழங்கியது - வராந்தாவுடன் [முன்தாழ்வாரம்] கூடிய ஓடு வேயப்பட்ட பெரிய கல்வீடு, வறண்டு போகாத தோண்டப்பட்ட கிணறு மற்றும் அறுவடையால் நிரம்பி வழியும் தானியக் கிணறு எனப் பல வசதிகளைக் கொண்டிருந்தது. அவருடைய பிள்ளைகளான அருண் மற்றும் மீரா, அழகான சமீபத்திய வடிவமைப்பு செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள சிறந்த பள்ளிகளில் …

  6. இலங்கை தமிழன் நெல் உற்பத்தியில் சாதனை 🔥| Climate action challenge | Safe food | Srilanka🇱🇰 நெற்பயிர்செய்கை தொடர்பான காணொளி. தேய்வடைந்துசெல்லும் துறையாக கமம் செய்தல் மாறிவரும் சூழலில் இளைய தலைமுறை இப்படிவருவதை அறிவோம். வரவேற்போம். நன்றி- யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

    • 0 replies
    • 305 views
  7. போர் ஓய்வுக் காலப்பகுதியிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்தவர் கள மருத்துவர் உயற்சி அவர்கள். 16.05.2009 இரவு வரை இவரது பொறுப்பின் கீழ் முள்ளிவாய்க்காவில் மருத்துவமனை ஒன்று இயங்கியது. இவரது தந்தையாரான மாவீரர் கேணல் எயிற்றர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஆவார். முள்ளிவாய்க்காலில் இறுதி வரை களமாடி 16.05.2009 அன்று இரவு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வரும் கள மருத்துவர் உயற்சி அவர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், மக்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பணிகள் குறித்தும் பல அரிய தகவல்களை எம்முடன் பகிர்ந்…

  8. விடுதலை புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்… எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை…. பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது சில ஞாபகங்கள் வரலாம் …. அப்படியாக ஓர் சம்பவத்தை பகிர்கிறேன்…. இம்ரான் பாண்டியன் படையணியில் ( பாதுகாப்பு பிரிவில் ) இருந்து கடற்புலி பாசறைக்கு சில பயிற்சிகளுக்காக சில போராளிகள் அதில் கணணிப்பிரிவிற்கு…

  9. “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க” “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க நாலா பக்கமும் தெரியும் வயல்வெளிகள் நாவூற குழைச்ச சாதகம் உண்ணலாம் நாணிக் கோணும் விறலியும் காணலாம்!" "கற்றாழை முள்ளும் காலில் குத்தும் கருவாட்டு குழம்பும் மூக்கை இழுக்கும் கள்ளம் இல்லா வெள்ளந்தி அவர்கள் கருப்பு சாமியின் பக்தர்கள் இவர்கள்!" "விற கொடிக்கப் காட்டுக்கும் போவாள் விதைப்புக் காலத்தில் மண்ணையும் கிளறுவாள் விரிச்ச நெற்றி இவள் வீராப்புக்காரி வித்தைகள் காட்டிடும் குறும்பு பொண்ணு!" "கிராமம் எங்கும் பண்பாடு அழைக்கும் கிணற்று நீரும் ஒற்றுமை காட்டும் கிளுகிளு தரும் தண்ணீர் குடங்கள் கிண்கிணி இசைக்கும் உலக்கை குத்து!" [கந்தை…

  10. இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்.. டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏

  11. தமிழீழத் திரைக் காவியம் "கடலோரக் காற்று" – திரை விமர்சனம் - துஷி - உலகில் கடற்படையைக் கொண்ட ஒரேயொரு விடுதலைப்படையாக விடுதலைப்புலிகள் மிளிர்ந்துள்ள யதார்த்தம் இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் ஏற்படும். இது உண்மையில் தமிழர்கள் பெருமைப்படக்கூடிய விடயம் என்ற ஓர் மனோநிலை திரைப்பட முடிவில் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் நிச்சயம் ஏற்படும். கடலோரக்காற்றுத் திரைப்படத்துக்கு மெருகூட்டுவது கிருபாவின் ஒளிப்பதிவுதான். மிக அழகான முல்லைத்தீவு கடலோரக்கிராமம் ஒன்றை தனது கமெரா மூலம் நேர்த்தியாகவும் பிரமிப்பூட்டும் வகையிலும் உள்வாங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருபா. அழகிய கடற்கரை, கடற்கரையின் வெண்மணல், கரையோரக்கிராமம், மீனவர்களின் வாழ்வு என மிகத் தத்ரூபமா…

  12. 1997/05 - 1998/05 இதற்குள் "ஜெயசிக்குறுயி எதிர்ச்சமர் நடவடிக்கைத் தளபதி" கருணா (கேணல் தரநிலையுடையவர். பின்னாளில் தேசத் துரோகி ஆனார்.) மற்றும் "ஜெயசிக்குறுயி எதிர்ச்சமர் நடவடிக்கை துணை தளபதி" பிரிகேடியர் தீபன் (அக்காலத்தில் கேணல் தரநிலையுடையவர்) ஆகியோர் உள்ளிட்ட கட்டளையாளர்களின் பேச்சுகள், சமர்க்கள காட்சிப் பதிவுகள் என்பன உள்ளடங்கிய 2.30 மணிநேரமான காணொளி இதுவாகும். இக்காணொளி மூலம் ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் தேசத்துரோகி ஆகுவதற்கு முன்னர் கருணா ஆற்றிய பல விடையங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக தேசத்துரோகி கருணா ஜெயசிக்குறு சமரில் கட்டளையாளராக பணியாற்றவில்லை என்பது போன்ற பல தவறுத்தகவல்களை இதன் மூலம் நீக்கலாம். https://eelam.tv/watch/ஜ-யச-க…

  13. Started by kandiah Thillaivinayagalingam,

    "கனகம்மா" அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது. கி…

  14. கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் ப…

  15. ஓயாத அலைகள் இரண்டு – கிளிநொச்சி சமர் ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும். பின்னணி 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் க…

  16. இன்றைய நாட்கள் ஒரு கடுமையான நாட்களாகவே நகர்கின்றது. எப்போது? யாருக்கு ? என்ன ஆகும் என்ற உண்மை நிலை புரியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது இந்தப் பூமிப்பந்து. சீனாவில் தொடங்கி இன்று அநேகமான நாடுகளைத் தொட்டு நிற்கும் கொரோனா வைரஸ்தான் இன்றைய பேசு பொருள். இந்த உண்மையை யாராலும் மறுதலிக்க முடியாது. இந்த நிலையில் தான் இன்று கியூபா நாட்டினை அதிசயமாக நோக்குகிறது இந்த உலகம். கியூபா நாடு ஒரு மருத்துவ வல்லரசு என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. தனது மருத்துவ அணிகளை பல நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் மனித நேய செயற்பாட்டை கியூபா மேற்கொள்வதாக கியூபா மீது மருத்துவ வல்லரசு முத்திரை குத்தப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தான் தமிழீழத்தில் கியூபாவின் …

  17. சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். 

இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்த…

  18. இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி ப…

  19. Barefoot Doctors of China and Thileepan Memorial Hospitals of Our Homeland மானுடத்தின் வேதனைகளை வெல்வதைவிட உயர்ந்த மானுட இலட்சியம் வேறு ஏதும் இருக்கமுடியாது. மருத்துவ சேவைகளை இலகுவில் எடுத்துச் செல்லமுடியாத மிகவும் பின் தங்கியகிராமங்கள்,மலைப்பிரதேசங்ள் போன்ற இடங்களில் அடிப்படைச் சுகாதார சேவைகளைத் தரமுயர்த்தும் நோக்கில் சீனமக்கள் குடியரசு வினைத்திறன் மிக்கதோர் சேவையை அமுல்படுத்தியது. 1960களில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தவர் சீன தேசத்தின் சிற்பி என வருணிக்கப்படும் மா ஓ சேதுங் ஆவார். “Barefoot Doctors” என அழைக்கப்படும் அவர்களின் அதியுன்னத சேவையால் சீனதேசத்தில் ஓர் புரட்சிகரத்திருப்புமுனையை ஏற்பட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது. குக்கிராமங்களில…

  20. எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்ன…

  21. நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுத…

  22. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  23. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 01 உலகில் எந்த ஒரு பெண்ணும் அல்லது தாயும் ஒரு கோழையைப் பெற ஒரு போதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள். உதாரணமாக, கி.மு 1700 க்கும் கி.மு 1100 க்கும் இடைப் பட்ட காலத்தில் தொகுக்கப் பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 [Holy Rig Veda: Book 10, hymn 85, verse 44] இல் "Not evil-eyed, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentlehearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த…

  24. "சிறு துளிகள்" ஒரு காலத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏங்கும் பச்சைபசேலென இயற்கை அன்னையின் கொடையை அதிகமாகவே பெற்றும், சலசலுக்கும் அருவியின் ஓசையும், ஓயாமல் கூவிக்கொண்டு இருக்கும் குயிலின் ஓசையும் அபூர்வமான தூய காற்றையும் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும் நெற்கதிரையும் பெற்று, காண காண திகட்டாத மண்ணுலக சொர்க்கமாக திகழ்ந்த அவளின் கிராமத்தின் அழகை காணும் போதெல்லாம் அன்று தன் இதயத்தில் தோன்றும் வலியை மறந்துவிடும் அருள்விழி, தன் குடும்பத்தின் நெற்பயிர்களுக்கு அன்று உயிர் கொடுத்த அந்த மண், இன்று விரிசல் அடைந்தும் காய்ந்தும் கிடப்பதை தனது வயலின் ஓரத்தில் நின்று பார்த்தாள். ஆனால் இன்று, அந்த முன்னைய பசுமையான நிலப்பரப்பு, இராணுவத்தால் தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமா…

  25. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ----------------------- நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.