Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள் - யதீந்திரா இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் நம்புகின்றோம். அதன் உள் விவகாரங்களை கையாளும் திறன் …

  2. தமிழ் மக்களுக்கெதிரான சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் எதிர்கால வழிமுறைகளும் – கணநாதன் 135 Views இலங்கைத் தீவில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள், மனிதநேயச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு, நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்புக்கூறல், ஒரு தசாப்தம் தாண்டியும் எதுவித முன்னேற்றமுமின்றி தேக்க நிலையை அடைந்துள்ளது. இன்று சர்வதேச உறவுகளில் சர்வதேச சட்டங்களானது பெரும்பாலும் வலுமிக்க அரசுகளின் பூகோள நலன்களின் அடிப்படையில் தமக்குச் சாதகமாக தேர்ந்து பிரயோகிக்கும் முறைமையையே பின்பற்றி வருகின்றன. இவ்வரசுகளின் ஆதிக்கத்தின் …

  3. //தமிழீழத் தேசியக் கொடி. (image:.eelamweb.com)// சிறீலங்கா என்ற நாமம் 1972ம் ஆண்டு வரை உலக வரைபடத்தில் இருக்கவில்லை. அதுவரை அது சிலோன் அல்லது இலங்கை என்றே இருந்தது. 1948 இல் சிலோன் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற உழைத்தவர்களில் சேர் பொன் இராமநாதன்,பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சோல்பரி என்ற ஆங்கிலேயப் பிரபுவின் முன் சிலோனுக்கு சுதந்திரம் அளிக்க முதல் 50:50 என்ற அரசியலமைப்புத் திட்டம் முன் மொழியப்பட்டது. அதில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தோர் 50% அரசாங்கத்தில் இடம்பெற வாய்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அப்போதைய சில தமிழர்கள் தலைமைகள் அதை ஏற்க மறுத்து சிங்களவர்களும் நாமும் சகோதரர்களாக வாழ்வோம் என்று சொல்லி ஆங்கிலேயர்கள் தர முன்வந்ததைய…

    • 4 replies
    • 1.3k views
  4. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம…

  5. நன்றி மறக்கும் அரசியலில் நின்று நிலைக்கும் குழிபறிப்பு Posted on July 18, 2021 by தென்னவள் 15 0 1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு 2001ல் புதுவாழ்வு வழங்கினர் விடுதலைப் புலிகள். இவைகளுக்குக் கிடைத்த பிரதியுபகாரம்…… இலங்கைத் தீவின் அரசியல் பாதை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியம் என இரண்டாகத் தனித்தனி வழியில் நீள்கிறது. சிங்களத் தேசியம் என்பது பௌத்தமும் இணைந்ததாக, கட்சிகளின் வேறுபாடுகளுக்குள்ளும் வளர்ச்சி பெற்றே செல்கிறது. ஆனால், தமிழ்த் தேசியம் 2009ம் ஆண்டு…

    • 0 replies
    • 287 views
  6. நவிப்பிள்ளையும் தமிழர்களும் - நிலாந்தன் 08 செப்டம்பர் 2013 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழர்களின் கூட்டு உளவியலின் பெரும் போக்கெனப்படுவது ஒருவித கொதி நிலையிலேயே காணப்படுகின்றது. கொதிப்பான இக்கூட்டு உளவியலானது பின்வரும் மூலக் கூறுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. 01. பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும். 02. தோல்வியினால் ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமும் பழிவாங்கும் உணர்ச்சியும் 03. அப்படிப் பழிவாங்க முடியாதபோது ஏற்படும் அதாவது பிரயோகிக்கப்பட்டவியலாத கோபத்தின் பாற்பட்ட சலிப்பு, விரக்தி, சுயபச்சாதாபம், கையாலாகாத்தனம். 04. தோல்விக்குத் தங்களுடைய சுயநலமும் கோழைத்தனமும் ஒரு காரணம் என…

  7. தமிழர் அரசியலில், மூலோபாய கூட்டு ஒன்றின் தேவை?- யதீந்திரா இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்திலாவது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. நீங்கள் சில அப்படையான விடயங்களில் ஒன்றுபடாவிட்டால், இந்தியாவினால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது என்பதுதான் இதன் பொருள். இந்திய வெளியுறவுச் செயலரின் விஜயத்தை தொடர்ந்து, மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தலை வைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்துவருவதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவைய…

    • 1 reply
    • 332 views
  8. ‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு… நன்றி : அவந்த ஆட்டிகல வன்னிப் படுகொலைகளை நடத்திய வேளையில் அழிக்கும் ஆயுதங்களைச் ’சட்டரீதியான’ மூலங்களூடாகவே மகிந்த பாசிச அரசு பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் பயன்படுத்திய பொஸ்பரஸ் கொத்துக்குண்டுகளிலிருந்து இரசாயன ஆயுதங்கள் வரை இலங்கை அரசு எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.இது வெறுமனே தமிழின் வாதம் தமிழின உணர்வு என்ற எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட மக்களை நோக்கிச் செல்லவேண்டும். கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்கள் மக்கள் மத்தியில் நடமாடுவதே மனித குலத்திற்கு ஆபத்…

    • 8 replies
    • 1.5k views
  9. வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஜனநாயகமும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan வாரிசு அரசியல் என்பதை, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழையடி வாழையாக அரசியல் கட்சிகளின் தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும் அதன்வாயிலாக நாட்டின் ஆட்சியில் உயர்பதவிகளையும், தம்மகத்தே கொண்டுள்ளமை என்று வரையறுக்கலாம். சுருங்கக்கூறின், தகப்பன், தகப்பனுக்குப் பின்னர் மகன்; மகனுக்குப் பின்னர் பேரன் என, வாரிசுகள் அந்தப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகும். இதில் நேரடி வாரிசு அல்லாது, நெருங்கிய உறவுகள் அந்தப் பதவிகளை அடுத்ததாகப் பெற்றுக்கொள்வதையும் வாரிசு அரசியல் எனலாம். குடும்ப அரசியல் அல்லது குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை, ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார…

  10. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்; சுமந்திரன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத் …

    • 0 replies
    • 166 views
  11. ஆபத்தில், இந்திய.. தென் பிராந்தியம்? இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் சுதந்திரமான இந்துசமுத்திரத்தின் ஊடான கடற்பிராந்தியமும் தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றது. ஆம், சீனாவின் யுவான் வாங் – 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘சீனக் கப்பலுக்கு அ…

  12. பாம்பையும், பார்ப்பனனையும் ஒரே இடத்தில் கண்டால், முதலில் பார்ப்பனனை அடி, அதன் பின்னர் பாம்பை அடி என்று பெரியார் சொன்னார். அதற்கான அர்த்தத்தை நாம் எங்கள் நாட்களில் வெகுவாகவே உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழர்கள் மத்தியிலேயே, தீர்க்க முடியாத பெரு வியாதியாக... அகற்ற முடியாத பெரு வினையாக... தவிர்க்க முடியாத பெரும் வலியாக பார்ப்பனீயம் கறையான் புற்றாகப் புரையெடுத்து நிலை கொண்டுள்ளது. தமிழ் மக்களின் பேரவலங்களுக்கும், பேரிழப்பிற்கும் பார்ப்பனிய சதி வலையும் ஒரு முக்கிய காரணமாகவே தொடர்கின்றது. ஒரு மதம் என்ற வகையில் இந்து மதம் தமது மக்களான தமிழர்களைக் காப்பாற்றவும், வழி நடாத்தவும் தவறியுள்ளது. தமிழர்கள் அவலங்களைச் சந்தித்த எந்தக் காலத்திலும், தமிழர்கள் அழிவுகளைச் சந…

  13. இஸ்‌ரேலின் அண்மைக்காலக் கொடூரத்தனங்கள் இஸ்‌ரேல் எனும் நாடு மீது, உலகளவில் பரவலான விமர்சனங்கள் இருப்பதை நாமனைவரும் அறிவோம். உலகில், யூதர்களுக்கென இருக்கின்ற ஒரு நாடாக இருந்தாலும் கூட, பலஸ்தீனர்களுக்கும் இஸ்‌ரேலியர்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள், பலம்பொருந்திய நாடான இஸ்‌ரேல் மீதான கடுமையான விமர்சனங்களாகவே வந்து சேர்கின்றன. இஸ்‌ரேல் மீதான இந்த விமர்சனங்களை, இஸ்‌ரேல் மீதான வெறுப்பு என வாதிடுவோரும் உள்ளனர். அதன் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இஸ்‌ரேலுக்கான அனுதாபங்களும் கூட காணப்பட்டே வந்துள்ளன. ஆனால், அந்நாட்டில் கடந்த வாரமும் இந்த வாரமும் இடம்பெற்ற இருவேறான சம்பவங்கள், அந்நா…

    • 1 reply
    • 610 views
  14. ஈழ விடுதலைப் போரும், புலிகளின் தாக்கமும்.-கை.அறிவழகன் வரலாற்றின் பாதையில் தமிழினம் என்கிற முந்தைய கட்டுரைக்கு எதிர்பார்த்ததைப் போலவே முதல் மூன்று பகுதிக்கு கணிசமான ஆதரவும், கடைசிப் பகுதிக்குக் கணிசமான எதிர்ப்பும் நண்பர்களிடம் இருந்து கிடைத்தது, புலிகளின் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும் மனநிலையிலோ அல்லது துதி பாடும் மனநிலையிலோ அந்தக் கட்டுரை எழுதப்படவில்லை, எல்லா நிலைகளிலும் புலிகளின் சில முரண்பாடுகளை எனது கட்டுரைகளில் நான் சுட்டிக் காட்டியே வந்திருக்கிறேன், மேலும் புலிகளின் இயக்கம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு என்றில்லாமல், புலிகள் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டி வந்த காலகட்டங்களிலும் அவர்களின் சில குறிப்பிட்ட தவறுகளை நான் சுட்டிக் காட்டி எழுதி இருப…

    • 1 reply
    • 1.2k views
  15. தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்! கிட்…

  16. ‘மெல்ல’ வரும் கபளீகரம் Menaka Mookandi / நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்ட…

  17. இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா? இலங்­கை­யில் மீண்­டும் போர் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­க­மாட்­டா­தெ­ன­வும், தாம் எப்­போ­தும் தமி­ழர்­க­ளுக்கே ஆத­ர­வாக இருக்­கப் போவ­தா­க­வும் இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, கூட்ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் உறு­தி­ய­ளித்­த­தா­கச் ­­செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இத்­த­கைய உறு­தி­மொ­ழி­கள் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்குப் புதி­தா­ன­வை­யல்ல. இந்­தி­யத் தலை­வர்­கள் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தும் பின்­னர் அவற்றை மறந்து விடு­வ­தும் வழக்­க­மாகி விட்­டது. தமி­ழர்­களை அவர்­கள் குறை­வாக மதிப்­பி­டு­வ­தையே இது எடுத்­துக் காட்­டு­கி…

  18. தமிழர் அரசியலும் சர்வதேச அழுத்தங்களும். -வ.ஐ.ச.ஜெயபாலன் கேள்வியும் பதிலும். . Segudawood Nazeer தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விகரக் சிங்ஹ அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரும் சர்வதேச சமூகம் தமிழர்களின் இறுதி யுத்த கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆதரவு போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. . Jaya Palan Segudawood Nazeer நண்பா, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு பேரழிவுக்கு பின்னர் மூன்றாம் உலகின் எந்த சிறுபான்மையினமும் இத்தனை விரைவாக நிமிர்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக சொந்த சின்னத்தில் தேர்தல் வென்று குறிப்பிடத்தக்க நிலத்தையும் மீட்டு அரசியலிலும் தாக்…

    • 0 replies
    • 478 views
  19. பாவம் தமிழ் மக்கள்! August 8, 2024 — கருணாகரன் — “தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்ப…

  20. 37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் மாபெரும் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்(dr.s.jaishakar) தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட தி இந்தியா வே(The India way ) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாத்ஃபைண்டர் அறக்கட்டளையால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 'இந்திய மாவத்தை' ('Indian Mawatha')என்ற புத்தகம் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சில சிறப்புக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது சாதாரணமான நடவடிக்கையல்ல ஆரம்பம் முதலே இலங்கை(sri lanka) இந்தியாவுக்கு(india) சவாலாக இருந்தது. நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை க…

  21. தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன் adminDecember 22, 2024 தமிழரசுக் கட்சிக்கு 75 வயது. கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழரசுக் கட்சி சாதித்தவை எவை? சாதிக்காதவை எவை ? இப்பொழுதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளில் பெரிய கட்சி அது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கும் கட்சியும் அது. ஒரு விதத்தில் தாங்களே தலைமை சக்தி என்ற பொருள்பட சுமந்திரன் கூறிக்கொள்வார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் பொறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.