Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நீதி மறுத்து நீள்கின்ற காலமும்- நினைவழியாத சாட்சியங்களும்!! பிரம்படிப் படுகொலை – ஒக்.11 பதிவேற்றிய காலம்: Oct 10, 2018 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் பத்தாம் திகதி ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட் டத்தில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த நாளாக அறியப்பட்டது. ‘இந்திய அமைதிப் படை’ எனும் பெயரில் ஈழத்தில் வந்திறங்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடுகிறோம் என்ற பெயரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் கொன்று குவித்து, இங்கு இனப்படுகொலை யைத் திட்டமிட்டு அரங்கேற்றியமை உண ரப்பட்ட நாள் இது. இந்தியாவின் கபடத்த னத்தைத் தமிழ் மக்கள் வேதனையுடன் அறிந்து கொண்ட நாளாகும். இந்த நாளின் பிற்பகல் வேளை யில் இந்திய அமைதிப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்…

  2. இருண்ட யுகம் மீளத் திரும்புகிறதா? கே. சஞ்சயன் / 2020 மே 23 கொரோனா வைரஸ் தொற்றுச் சூழலையும் அதைத் தடுப்பதற்காகக் கையாளப்படும் தனிமைப்படுத்தல் சட்டத்தையும், இராணுவ, பொலிஸ் அதிகாரங்களைவலுப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் பயன்படுத்துவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதில், படைத்தரப்பும் பொலிஸாரும் காட்டிய ஆர்வம், வடக்கில் கொந்தளிப்பை ஏற்பத்தியது. கூடவே, அவர்கள் சட்டரீதியாகச் செயற்படுகிறார்களா என்ற விவாதத்தையும் கிளப்பி விட்டிருக்கிறது. தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், யாருடைய கையில் இருக்கிறது; அதை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், யாருக்கு இருக்…

  3. ‘சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறது’ Dec 16, 2014 | 13:26 by நித்தியபாரதி கிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட ‘Stars and Stripes’ ஊடகத்தில் Wyatt Olson எழுதியுள்ள ஆய்வுக்கட்டு…

  4. [size=4]இலங்கையில் மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களின் தியாகத்தாலும் துயர்நிறைந்த போராட்டத்தாலும் உருவானபோதும் இன்று வரைக்கும் அதன் பலாபலன்களை தமிழ் மக்கள் பெருமளவிற்கு அனுபவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். மாகாணசபைக்கான அதிகாரங்கள் எந்தளவுக்குப் போதுமானவை என்ற கேள்வி தமிழ் மக்களிடமிருந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுந்து கொண்டிருக்கையில் வடக்கு கிழக்குப் பிரிப்பு நடந்தேறியது. வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கூட பறித்தெடுக்கும் கைங்கரியங்களும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் 13வது அரசியற் திருத்தச் சட்டம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் அவற்றினை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்னும் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியாக நடந்தேறுகின்றன. முக்கியமாக வட மாக…

  5. சிங்கள தேசத்தின் ஜனாதிபதி, தமிழ்த் தேசத்தினதும் ஜனாதிபதியாவாரா? பகுதி 1- December 30, 2019 ராஜா பரமேஸ்வரி… யுத்தம், கொலைகள், காணாமல் போதல்கள், வெள்ளைவான் கடத்தல்கள் போர் குற்றம் என பல நூறு குற்றச்சாட்டுக்களை தாண்டி தனிச் சிங்கள வாக்கில் இலங்கையின் முதலாவது ஆட்சியாளராக ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவாகி உள்ளார். அரசியல்வாதியாக, கட்சிப் பிரமுகராக அல்லாத முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற இலங்கையின் அரச அதிகாரி ஒருவர் வரலாற்றில் முதலாவது தேர்தலிலேயே பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வாரிசு, யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் தம்பி என்ற க…

  6. வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன் வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான். சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு க…

  7. மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 07 புதன்கிழமை, மு.ப. 03:18 கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், “இடுப்பில் தைரியமற்றவர்” (ஆண்மையற்றவர்) எனும் அரசியல் நாகரிகமற்ற, இழிவார்த்தைகளை மேடை தோறும் பேசி வந்தனர். சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அதே மாதிரியான நாகரிகமற்ற இழிவார்த்தைகளைப் பேசிக் கொண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு மேடையில் ஏறியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நாட்டு மக்களின் ஆணைபெற்ற தலைவராக, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாரிய பொறுப்புண்டு. வார்த்தைகளில் கண்ணியத்தைப் பேண வேண்டிய கடப்பா…

  8. விக்னேஸ்வரனும் மாற்று தலைமைக்கான வெளியும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 05 சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பி ரீம்’ (B Team) போல செயற்படுவதாக, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கட்சி, தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்பு எடுத்த முடிவை எதிர்த்து, டெலோவில் இருந்து பிரிந்து சென்ற சிறிகாந்தாவும் என்.கே.சிவாஜிலிங்கமும் புதிய கட்சியை ஆரம்பித்து, விக்னேஸ்வரனோடு இணக்கமாக இருந்தனர். கூட்டமைப்புக்கு எதிரான மாற…

  9. கைகொடுக்கத் தயங்குவது நியாயமா? DEC 14, 2015 சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. அதேவேளை, இன்னும் சிலரின் மனங்களில் உள்ள வக்கிரங்களையும் இந்தப் பெருந்துயர் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவுமில்லை. சில மணிநேரத்துக்குள் கொட்டித் தீர்த்த பெருமழையின் பாதிப்பு இலட்சக்கணக்கான மக்களை சூனிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த மழைக்கான காரணம் என்ன, இந்தப் பேரழிவுக்கான பொறுப்பு யார், ஏனிந்த அழிவை எதிர்கொள்ள நேரிட்டது என்று எல்லா ஊடகங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன, விவாதங்கள் தொடர்கின்றன. அவரவர் அறி…

  10. நன்றி : தம்பி மயூரன் https://www.facebook.com/R.P.Mayuran?hc_ref=NEWSFEED&fref=nf

    • 1 reply
    • 688 views
  11. இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு? கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:55 - 0 - 45 நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம், அரசாங்கத்துக்குக் கிடையாது என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூற வேண்டிய நிலை, ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன. முதலாவது, அரசியலில் ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம்; ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளில் ராஜபக்‌ஷவினரே இருக்கிறார்கள். இரண்டாவது, நாட்டின் நி…

    • 0 replies
    • 688 views
  12. தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம் தமிழீழ விடுதலைக்கான புதிய மனப்பாங்கையும் புதிய சிந்தனையையும் மீள்கட்டமைப்பையும் வரலாறு கோரி நிற்கிறது. எங்களுக்கு நாங்களே எஜமானர்களாய் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் நடந்து வந்த பாதையை நாங்களே திரும்பிப் பார்ப்பதுடன் எங்கள் தவறுகளை நாங்களே திருத்திக் கொள்ளவும், எங்களை நாங்களே புதுப்பிக்கவும், எங்களை நாங்களே மீள்கட்டமைப்புச் செய்யவும் தயாராக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவோமேயானால் நாங்கள் எதிரிகளின் சேவகர்களாகவே இருக்க நேரும். சேவல் கூவி சூரியன் உதிப்பதில்லை. ஆனால் சூரியனின் வரவை சேவலால் முன்னறிவிப்புச் செய்யமுடியும். சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்ல ஒரு பண்டிதர் தேவையில்லை. ஆனால் சூரியன் ஏன் கிழக்கே உதிக…

  13. தமிழில் ரஜீபன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ,ஜனநாயகம் பொருளாதாரம், நல்லிணக்கம் ஆகியவற்றை தோற்கடித்துள்ளது. இலங்கையின் கிளர்ச்சியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஏதேச்சதிகார அரசாங்கம்( கோத்தபாய இதில் முக்கிய பங்காற்றினார்)ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தின் உற்சாகமற்ற செயற்பாடுகளை கருத்தில் கொள்ளும்போது ஐந்துவருடத்திற்கு பின்னர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ஆச்சரியம் அளிக்கும் விடயமல்ல.இம்முறை கோத்தாவை தோற்கடிப்பதற்கான பாரிய கூட்டணியிருக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான தமிழ் முஸ்…

    • 0 replies
    • 687 views
  14. தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின் அவசியம் பற்றி பேசியிருந்தார். இந்தக் கால காலகட்டத்தில் மாற்று அணிகள் உருவாக்கப்படக் கூடாது. நாங்கள் எவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியில் போகச் சொல்லவில்லை. அனைவரையும் கூட்டமைப்போடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தனது பேச்சில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். எதிர்வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்தான் சுமந்திரனுக்கு திடிரென்று ஒற்றுமையின் ஞாபகம் வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் கடந்த ஜந்துவருட கால முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியடைந்திருக்கின்ற…

  15. இம்முறையும் ஐ.நாவில் எதுவும் நடக்கப்போவதில்லை அதிகார பரவலில் அரசுக்கு அதிக நாட்டமில்லை தேசிய கட்சிகளின் ஒற்றுமையை நிரந்தரமாக பார்க்க முடியாது ஐ நா வரைபு உடனடியாக பயன் தராது. ஐ.நாவுக்கு எத்தனை வரைபு சென்றாலும் நன்மை தான்.

    • 0 replies
    • 687 views
  16. அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் இலங்கை! - நா.யோகேந்திரநாதன்.! இரண்டாவது உலகயுத்தம் முடிவுக்கு வந்த பின்பு அமெரிக்கா உலக மேலாதிக்கத்தைத் தனது இராணுவ, பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை லாவகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் படை நடவடிக்கை, இராணுவ சதிப் புரட்சி, நாடுகளின் நிலவும் உள்நாட்டு அரசியல், இன, மத முரண்பாடுகளைக் கையாளுதல், இராஜதந்திர நகர்த்தல்கள் எனப் பல்வேறு வழிமுறைகள் உள்ளடங்கும். தமது கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் அரசுத் தலைவர்களின் ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கும் அரசுத் தலைவர்களைக் கொல்வதற்கும் தயங்குவதில்லை. கொங்கோவின் லுமும்மா, சிலி நாட்டின் அலண்டே, சிம்பாவின ரொபேட் முகாபே, ஈராக்கின் சதாம் ஹூசைன், லிபிய…

  17. இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? நிதின் ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர், கொழும்பில் இருந்து 19 ஜூலை 2022, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகையை பார்க்க குவிந்த கூட்டம் இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் 'கோட்டா போனார்' மற்றும் 'ராஜபக்ஷ இல்லாத இலங்கை' என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த வாயில்களுக்குள் இருக்கும் பிரமாண்டமான அதிபர் …

  18. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர், இரா.சம்பந்தன் வெளியிட்டிருந்த புதுவருடச் செய்தியில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சிறிலங்கா அரசின் அடிவருடிகளால் மேற்கொள்ளப்படும் சதி வேலைகளுக்குள் எமது மக்கள் சிக்கிவிடக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கின்றார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்னும் கோரிக்கைகள் வலுவடைந்திருக்கின்ற சூழலிலேயே இரா.சம்பந்தன் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இப்படியொரு வைரஸ் வாதம் நீண்டகாலமாகவே தமிழ் சூழலில் உயிர்வாழ்ந்து வருகிறது. தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதி…

  19. சந்திரிகாவிற்கு பாவமன்னிப்பு வழங்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முத்துக்குமார் தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பேருரையினை நிகழ்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினை அழைத்திருக்கின்றது. அவர் 'யுத்ததத்தின் முடிவு சமாதானமாகாது' என்ற தலைப்பில் தனது நினைவுப் பேருரையை ஆற்றியிருக்கின்றார். தந்தை செல்வா தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு காலகட்டத்தை நகர்த்திய பெருமைக்குரியவர். 1949 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்றுவித்ததன் மூலம் தமிழ் இன அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் என்ற கட்டத்திற்கு வளர்த்துச் சென்றார். மக்களை இணைத்த வெகுஜனப் போராட்டம் என்ற அரசியல் அணுகுமுறையினை ஆரம்பித்து வைத்தார். தந்தை செல்…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரிய அதிகார உரிமை தங்களுக்கே இருப்பதால் அப் பெயரைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுத் தருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகப் பத்திரிகைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது. குறித்த கோரிக்கைக் கடிதத்தின் உள்ளடக்கத்தை வாசித்த போது நாற்பதாண்டு காலத்திற்கு முந்திய உண்மை வரலாற்றை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படுத்தாது விடுவது சமுதாயத்திற்குச் செய்யும் துரோகம் என்றாலும் அது தவறல்ல. பல்வேறு வழிகளில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து விட்ட தவறுகளைச் சீர்செய்து,ஏற்படுத்தப்பட்ட தடைகள் இனியும் ஏற்படாமல் இருக்க வழி காண்பதே…

    • 0 replies
    • 687 views
  21. அப்டேட் செய்யப்படாத தமிழ் வாக்குகள்? நிலாந்தன்… November 16, 2019 இக்கட்டுரை வாசிக்கப்படுகையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிடும். அம் முடிவுகள் தொடர்பில் இக்கட்டுரை விவாதிக்காது. ஆனால் அம்முடிவுகளின் மீது தமிழ் வாக்காளர்கள் புத்தி பூர்வமாகத் தாக்கம் செலுத்தியிருக்க முடியும், செலுத்தியிருக்க வேண்டும் என்ற நோக்குக் கோணத்திலிருந்து இக்கட்டுரை எழுதப்படுகிறது. 2005 இல் புலிகள் இயக்கம் ஜனாதிபதித் தேர்தல் மீது அவ்வாறான ஒரு தலையீட்டைச் செய்தது. அதன் விளைவுகளே இன்று வரையிலும் இலங்கைத் தீவின் ஜனாதிபதித் தேர்தல்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தலைப் புறக்கணித்தது. அதன்மூலம் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜ…

  22. ஆணைக்குழு ‘உத்தி’ (ஆர்.ராம்) ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று’ நியமிக்கப்படும் என்று கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார். சரியாக 72 மணிநேர இடைவெளியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ‘அதியுத்தமனாரின்’ ஆணைப்படி மூவர் அடங்கிய ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை’ வர்த்தமானி அறித்தலை வெளியிட்டு நியமித்திருக்கின்றார் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர. உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரே அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்’ உறுப்பினர்கள் ஆவர். இந்த ஜனாதிபதி…

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்தல், சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக உயர்மட்டக்குழு நியமனம் என்று கூட்டமைப்பின் திடீர் ஞானோதயத்தின் தொடராக கூட்டமைப்பு அலுவலகங்கள் திறக்கும் நிகழ்வுகளும் தொடங்கியுள்ளதன் பின்னால் உள்ள சூத்திரத்தன்மைகள் தொடர்பில் மக்களைத் தெளிவுறுத்தவேண்டிய கடப்பாடு உணரப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத் தலைமைகளாகச் சொல்லப்படுகின்ற இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், தேசியப்பட்டியல் சுமந்திரன் ஆகியோரைத் தமிழ் மக்களின் தலைமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு தமிழ் மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ சிங்கள இனவாத அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே குறித்த அரசியல்வாதிகள் மூவரும் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றனர். இந் நிலைய…

    • 0 replies
    • 686 views
  24. கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக ஜுன் 2019 - அ.ராமசாமி · கட்டுரை ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக்கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக்கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100-ஆவது படம். 100ஆவது படம் தனது பேர்சொல்லும் படமாக, -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம். ராஜபார்வையை எடுப்பதற்காகவே ஹாசன் ப்ரதர்ஸ் என்றொரு கம்பெனியை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலவிதமாக அந்தப் படத்தில் பங்களிப்புச் செய்தனர். கமலின் அண்ணன் சாருஹாசன் நடித்திருந்தார். கமல்ஹாசனும் நடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.