அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல. இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார். இதனால் ராஜீவ் காந்தியை எதிர்த்தேன். எனவே, எனது நாட்டை பாதுகாப்பதற்காகவே ராஜீவை பழிவாங்கும் எண்ணம் என் மனதுக்குள் உருவானது. இதன் காரணமாகவே கடற்படை அணிவக…
-
- 4 replies
- 679 views
-
-
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தமிழர்களே தீர்மானித்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொண்டுள்ளார். உண்மையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர் என்பதே யதார்த்தமானதாகும். கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும், அதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே தீர்மானித்திருந்தார். குறிப்பாக 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிகுந்த ஆதரவு இருந்தபோதும் அப்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த ந…
-
- 2 replies
- 679 views
-
-
கொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன? Getty Images தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர். ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப் பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள் சொ…
-
- 0 replies
- 679 views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 679 views
-
-
கொழும்பில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம், அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உயர்மட்டத்துக்குக் கொண்டு சென்றிருந்தது சுவிட்ஸர்லாந்து. அதேபோலவே, இந்த விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் – குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று நிரூபிப்பதில் இலங்கை அரசாங்கமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின், 2005–-2014 ஆட்சிக்காலகட்டத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான பல குற்றச்செயல்கள் தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்த…
-
- 0 replies
- 679 views
-
-
மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி, நடந்து வருகின்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய போதுதான், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கொடுக்கப…
-
- 0 replies
- 679 views
-
-
இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு? கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:26 Comments - 0 ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். “அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து விட்டுப் போய்விட்டார்” என்று புலம்புகின்ற நிலை, அரசியல் கட்சிகளிடத்தில் மாத்திரமன்றி, அவருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது. அதுபோல, சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதிக்கும், அந்தக் கவலையும் அதிர்ச்சியும் இருக்கின்றன. மைத்திரிபால சிறிசேன இந்த முடிவைத் திடீரென அறிவிக்க…
-
- 0 replies
- 679 views
-
-
மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி வட கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என பகல் கனவு கண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தார்கள் மைத்திரியும் ரணிலும்... தற்போது யாழ், கிளிநொச்சி,வன்னி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதலமைச்சர் தமிழர் விஐயகலா தமிழர் அங்கயன் தமிழன் பறவாய் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மூன்று அதில் இரண்டு பேர் பிரதி அமைச்சர்கள் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் ஊருக்கு ஒரு எம்.பி, ஓட்டமாவடிக்கு அமிரலி, ஏறாவூருக்கு மௌலானா, காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா, இவர்களுடன் மாவட்ட இணைத்தலைவராக முதலமைச்சர் ஹாபிர் நஸீர் நான்கு பேர் இஸ்லாமியர்கள் 75 வீதம…
-
- 0 replies
- 679 views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
#தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…
-
- 0 replies
- 678 views
-
-
தீர்ப்புக்கு மூன்று வாய்ப்புகள் கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 07 வெள்ளிக்கிழமை, மு.ப. 03:20 Comments - 0 ஒக்டோபர் 26ஆம் திகதி - ஒரு வெள்ளிக்கிழமை; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த ஒரு பெரும் குழப்பத்துக்கு, இன்றைய நாள் - வெள்ளிக்கிழமை, முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பரவலாகக் காணப்படுகிறது. அரசமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்தடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும், சிக்கல்களாகவே மாறின. மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக, நியமித்ததன் மூலம், ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நெருக்கடி, அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை முடக்குவதிலும் பின்னர், அதைக் கலைப்பதிலும் போய் முடிந்தது. இந்தநிலையில் தான், நாடாளுமன…
-
- 0 replies
- 678 views
-
-
இராணுவ மயமாக்கலுக்குள் அகப்பட்ட இலங்கைத் தீவு இரண்டாம் உலகப் போர் காலத்துக்குப் பின்னர், அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான பாதுகாப்புச் செலவினமாக அமையப் போகும், 2019ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டு அங்கீகாரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்டிருந்தார். இதற்கமைய, 681.1 பில்லியன் டொலர், 2019ஆம் ஆண்டில் பாதுகாப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் போட்டியாக, அமெரிக்காவின் படைபலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. இந்த நிதி ஒத…
-
- 0 replies
- 678 views
-
-
புதிய அரசியலமைப்பா.? தமிழீழமா.? - கவிஞர் தீபச்செல்வன். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்ற கதை தற்போதைய ஆட்சியிலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிகள் தாம் ஆட்சியை பிடிக்கும் போதேல்லாம் அரசியலமைப்பை தத்தமது தேவைகளுக்கும் பேரினவாத விரிவாக்கத்திற்குமாக ஸ்ரீலங்கா அரசியல் யாப்பை திருத்தி வருகின்றன. கடந்த 2010களில் பேரினவாத சிந்தனையை நிறைவேற்று அதிகாரம் மூலம் பலப்படுத்தி, சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த முற்பட்ட ராஜபக்ச தரப்பினர் இப்போது மீண்டும் அரசியலமைப்பை மாற்றப் போவதாக கூறுகின்றனர். இங்கே ஒரு சொல்லாட்சியை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டி இருக்கிறது. அன்பிற்குரிய ஆட்சியாளர்களே, ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றுவதாக சொ…
-
- 0 replies
- 678 views
-
-
கல்முனை தொடர்பாக ON KALMUNAI Latter from Ashroffali Fareed கல்முனையில் மாநகர சபையில் ஒன்றிணைந்து இருக்கவே அங்குள்ள தமிழர்கள் விரும்பவில்லை என்பதே நிதர்சனம். அதன் காரணமாகவே ஹென்றி மகேந்திரன் காரியப்பர் வீதிக்கான பெயர்ப்பலகையை உடைத்து நொறுக்கினார். இப்படி எத்தனையோ சம்பவங்களை வரிசைப்படுத்தலாம். அதன் பின்னர் தான் ஹென்றி மகேந்திரனின் செல்வாக்கு அதிகரித்தது. அடுத்தவர் கோடீஸ்வரன். நாளுக்கு நாள் இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் மாறமாட்டார்கள்- Ashroffali Fareed * Reply of V.I.S.Jayapalan. * அன்புக்குரிய Ashroffali Fareed அவர்களுக்கு, ஆம் நண்பா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. . தமிழர்கள் 1948ல் இருந்தே தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்காத அரசிய…
-
- 0 replies
- 678 views
-
-
பொறுப்பு கூறலின் அவசியம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மன்றத்தின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைமைகள் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது இலங்கையின் எதிர்காலம் பற்றிய பாரதூரமான விடயமாக நோக்கப்படுகின்றது. பொறுப்புக்கூறலின் முக்கிய அம்சமாக நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மோசமான நீண்…
-
- 0 replies
- 678 views
-
-
சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள் இதயச்சந்திரன் உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது. சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையான ஒப்பந்தங்களின் நோக்கம். அதிலும் ஒரு பிராந்திய அளவில், நேற்றுவரை ஒன்றுக்கொன்று சந்தேகக்கண் கொண்டு பார்த்த, அணிமாறி நின்ற பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன. நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப்போர் என்று விரிந்து சென்ற அமெரிக்க -சீன நவீன ஏகாதிபத்தியப்போர், இனி வேறு வடிவில் நகரப்போவதை இந்த கூட்டு வர்த்தக ஒப்பந்தம் புலப்படுத்துகிறது. 10 ஆசியான் நாடுகளுடன் , சீனா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து போன்ற …
-
- 0 replies
- 678 views
-
-
‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை அரசியலோடு ஒப்பிடும் போது, இந்திய அரசியல், மிகவும் சுவாரசியம் மிக்கது. அதிலும் தமிழ்நாட்டு அரசியல், இன்னுமின்னும் சுவாரசியம் வாய்ந்தது. அதுவும் அண்மைக்கால அரசியல், இன்னமும் சுவாரசியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா ஜெயராம் காலமானதைத் தொடர்ந்து, அவரின் நெருங்கிய தோழியாகப் பல ஆண்டுகள் காணப்பட்ட சசிகலா, புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி, தமிழக அரசியலை மேலும் குழப்பத்துக்கும் புதிய நாடகங்களுக்கும் வித்திட்டுள்ளது. இலங்கையின் தமிழ் அரசியலைப் போன்றே, தமிழ்நாட்டு அரசியலிலும் ஜெயலலிதாவ…
-
- 0 replies
- 678 views
-
-
ரஷ்யாவின் புதிய காய் நகர்த்தல் -ஜனகன் முத்துக்குமார் ரஷ்யாவைத் தவிர்த்து, மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும். மேற்கத்தேய நாடுகள், தொடர்ச்சியாக ரஷ்யாவை ஆக்கபூர்வமானதொரு செயற்பாட்டாளராகக் கருதாவிட்டாலும், ரஷ்யாவின் பங்கு, குறித்த விவகாரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். குறிப்பாக சவூதி அரேபியா, தனது பிராந்திய வல்லரசாண்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், துருக்கி, குர்திஸ் இன மக்களுக்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கா உதவியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதிலிருந்து, ரஷ்யாவைப் புதியதொரு பங்காளராகப் பார்க்கும் மனப்பாங்கு, மத்திய கிழக்கில் உருவானது எ…
-
- 0 replies
- 678 views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
[size=6]முஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை[/size] [size=3][size=4]Innocence of Muslims என்ற தலைப்பில் ஒரு படத்தின் டிரெய்லர் காட்சி யூட்யூபில் வந்தது. அதனால் உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது மக்கள் தாக்குதல் தொடுத்து அமெரிக்கத் தூதரைக் கொன்றுவிட்டனர். நேற்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. நிலைமைக் கட்டுக்குள் வைக்க, ராணுவம் அழைக்கப்படவேண்டியிருந்தது. [/size] [size=4]சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் உள்ள பகுதியில் தினமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையின் காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அடக்குமுறையை வெற்றிகரமா…
-
- 0 replies
- 677 views
-
-
உலக வல்லாதிக்க நாடுகளின் கண்களில் பல தலைமுறைகளாக பல்வேறு காரணங்களால் உறுத்திக்கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சுகந்திரத்தோடு ஆரம்பிக்கும் இனவாத வரலாற்றை நோக்கினால், உள்ளெரியும் இனமுரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டு கொழுந்துவிட்டுப் பரவும் காலப்பகுதியாகவும், முழு இலங்கைத்தீவும் பதற்றத்துடன் அணுகும் காலமாகவும் யூன் யூலை ஆகஸ்ட் மாதங்களே தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். இனமுரண்பாடு கூர்மையடையக் காரணமான தனிச் சிங்களச்சட்டமும் (02.06.1956)சரி முழு இலங்கையையும் கலங்கவைத்த வெலிக்கடைப் படுகொலைகளும் சரி அண்மைய தர்க்கா நகர் அளுத்தகம மத வன்முறைகளும் சரி இந்தக் காலப்பகுதியில் தான் நடந்தேறியிருக்கிறது. மற்றைய காலங்களில் ஓரளவு இனமுரண்பாடுகள் நிகழ்ந்தாலும், இந்த மாதங்…
-
- 1 reply
- 677 views
-
-
வடகிழக்கு மாகாணங்களில் தமிழரும் முஸ்லிம்களும் விறகு பொறுக்கினாலே கைது செய்ய ஓடி வரும் வனத்துறையும் பொலிசாரும் எங்கே போனார்கள்?, எம்முன்னோர் பாதுகாத்து எமக்கு அளித்த தேசிய வனபொக்கிசங்கள் பல ஏற்கனவே அழிந்துவிட்டது. அழிப்பவர்கள் ஆயுதப் படைகளோடு தொடர்புள்ள சிங்கள உல்லாசப் பயணிகள் என்பதால் காவல்துறை கண்டுகொள்வதில்லை. . நெடுந்தீவில் மட்டுமே அருமருந்தும் அழியும் ஆபத்தை நோக்கியுள்ள தாவரமுமான செங்கற்றாளைகள் நிறைய இருந்தது. ஆனால் சிங்கள பயணிகள் -அவர்களுட் பலர் சிங்கள படையினரதோ கடல் படையினரதோ பொலிசாரதோ உறவுகள்- வேரோடு பறித்து சென்றுவிட்டதால் இன்று நெடுந்தீவில் செங்கற்றாளை இனமே அழிந்துவிட்டது. அவற்றைவிட இயங்கு கீழாநெல்லி போன்ற பல அரிய மூலிகைகள் வேரோடு பறித்துச் செல்லபட்டு …
-
- 1 reply
- 677 views
- 1 follower
-
-
[size=5]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்சண்டை- கொள்கைக்காகவா? கதிரைக்காகவா?[/size] முத்துக்குமார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பிரச்சினை இன்று சந்திக்கு வந்துவிட்டது. கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் இது சந்திக்கு வருமென்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழரசுக்கட்சி அல்லாத ஏனைய கட்சி உறுப்பினர்கள் பலர் அதனை ஏற்கனவே கூறியிருந்தனர். தங்களினால் தேர்தலுக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அவர்கள் பொறுமை காத்தனர். தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும்போது ஏனைய கட்சிகளின் சுயமரியாதையைக்கூட கவனத்தில் எடுக்காமல் தமிழரசுக்கட்சி உதாசீனம் செய்தமை, சகித்துக் கொள்ள முடியாததே! இதனால் இந்தப் பிரச்சினையை சந்திக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு தெரிவு ஏனைய கட்சிகளுக்கு இர…
-
- 0 replies
- 677 views
-
-
கொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள் - நிலாந்தன் 17 நவம்பர் 2013 கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும், கூட்டமைப்பினரும் நம்புகின்றார்கள். உள்நாட்டில் அவர்களால் இதைத்தான் இப்போதைக்குச் செய்ய முடியும். அதாவது, அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது. இதற்குமப்பால் போக அவர்களால் முடியாமலிருக்கிறது என்பதே கள யதார்த்தம். வலி வடக்குத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தகையதொரு பின்னணியில் இப்போராட்டங்களை இரண்டு தளங்களில் வைத்துப்…
-
- 0 replies
- 677 views
-
-
இன்று பொப்பி தினம். மனித வரலாற்றின் படிநிலைகளில் உலக வரலாற்றினை மாற்றியமைத்து புதிய உலக ஒழுங்கிற்கு வித்திட்ட நாள். மனித இனம் தோன்றியதிலிருந்து குழுக்களாகவும், பிரதேசங்களாகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலைமை மாறி முழு உலகமுமே சண்டையிட்டு மிகப்பெரும் அழிவைச் சந்தித்து இனிமேல் இப்படியொரு யுத்தம் தேவையில்லை என முடிவெடுத்தநாள். மனித நாகரிகத்தின் உயர் விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கவேண்டும், கடைப்பிடிக்கவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்திய நாள். ஏன் இவைகள் எல்லாவற்றிற்கும் மோலாக உலகப் போரையே நிறுத்திய நாள். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதற்காக யுத்த பூமியில் விழுந்த வீரர்களை நினைவு கூரும் நூறாவது ஆண்டு நாளாகவும் அமைகிறது. …
-
- 0 replies
- 676 views
-