அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சங்கடப்படுவாரா கோத்தாபய ? ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியாகியதும் தேர்தலுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு இடமளித்து, வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்ற இறுதித் தருணத்தில் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட களமாக மாற்றம் பெற்றுள்ளது. இந்தத் திருப்பங்கள் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக யார் யார் அதிகாரபூர்வமாக வெளிப்படப் போகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதிலேயே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்படக்கூடும் என்பதே அந்…
-
- 0 replies
- 640 views
-
-
’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை Johnsan Bastiampillai / 2020 ஜூன் 13 ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்.... பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்…
-
- 0 replies
- 640 views
-
-
மாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 27 , ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை, புதிய தலைமை என்பது, இளம் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற விடயம், முன்னிறுத்தப்படுகின்றது. உரிமைப் போராட்டத்தை, வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட சமூகத்தில் புதிய, நம்பிக்கையான, இளம் தலைவர்கள் எழுந்து வருவது, உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்; வரவேற்கப்பட வேண்டியது ஆகும். இது குறித்து, மாற்றுக் கருத்துகள் இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஒரு சமூகமாக, அதுவும் 70 ஆண்டுகளுக்கும…
-
- 2 replies
- 640 views
-
-
விகடன் டீம் – நிலாந்தன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கோத்த…
-
- 0 replies
- 640 views
-
-
வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்? நிலாந்தன்! August 22, 2021 பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந…
-
- 0 replies
- 640 views
-
-
அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்களுக்கு ஆலோசனை வழங்கிய கோட்டபாயவின் சிங்களப் பேராசிரிய நண்பர்: இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா தீவுக்குள் புலிகளைப் போற்றுவோருக்கு புனர்வாழ்வு கொடு, புலம்பெயர் தமிழர்களைப் பட்டியலிடு என்றும் மதியுரை! ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையின…
-
- 0 replies
- 640 views
-
-
இலங்கை - இந்தியா இடையே தரைவழி பாலம் அமைக்கப்பட்டால், இந்திய இராணுவம் ஒரு மணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிக்கும் என அரசியல் ஆய்வாளரும், புலனாய்வு செய்தியாளருமான எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை மீதான சீனாவின் தவிர்க்கமுடியாத காலூன்றலை சமப்படுத்தும் நோக்குடனேயே இந்திய - இலங்கை பால விவகாரம் மோடியினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானதொரு தரைவழி பாலம் அமைக்கப்பட்டால் இந்திய இராணுவம் ஒருமணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்யும். எதிர்காலத்தில் சீனா - இந்தியாவுடன் போர்தொடுக்கு…
-
- 3 replies
- 639 views
- 1 follower
-
-
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரேமதாசாக்களின் போராட்டங்கள் வீ.தனபாலசிங்கம் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். கட்சி நியமனத்தை வழங்குகிறதோ இல்லையோ 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவதென்று முடிவெடுத்த தந்தையார் தனது நீண்டகால அரசியல் விசுவாசியான சிறிசேன குரேயிடம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகுமாறு கூறியது பழைய அரசியல் அவதானிகளுக்கு நன்கு நினைவிருக்கும். அதே போன்றே மகனும் தன்னை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் …
-
- 0 replies
- 639 views
-
-
-
முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச வெற்றிகள் என்று கொள்ளப்படும் அனைத்தும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே பெறப்பட்டவை. அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று போராட்டத்தை வழிநடத்திய முப்பது ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றவை. வடக்கு - கிழக்கின் பெரும் பகுதியில், அரச தலையீடுகள் அற்ற இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை இரண்டு தசாப்த …
-
- 0 replies
- 639 views
-
-
வடக்கிற்கும் பரவும் சீன ஆதிக்கம் -சத்ரியன் இப்போது இந்தத் திட்டமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது, வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பின்னர் தான், இந்த சர்ச்சை தோன்றியிருக்கிறது. இந்தச் சர்ச்சையைக் கிளப்பியிருப்பது இந்திய அரசாங்கம். வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் பணி சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. இது தான் இந்தச் சர்ச்சையின் அடிப்படை வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும், அரசாங்…
-
- 2 replies
- 639 views
-
-
ஜெனீவா 2019 – நிலாந்தன்… March 31, 2019 ‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.’ இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். கலாநிதி பாலித்த கோகன்ன ஒரு புத்திஜீவி. முன்னாள் ராஜதந்த…
-
- 0 replies
- 639 views
-
-
பெரும் தொற்று’ ஜனநாயகத்தையும் விழுங்கி விடுகிறதா? விக்டர் ஐவன் சுதந்திரத்திற்குப் பின்னர் ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்து பின்பற்றிய இரண்டு தெற்காசிய நாடுகளாக இலங்கையும் இந்தியாவும் கருதப்படமுடியும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய தேசிய காங்கிரசிடம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான ஜனநாயக பார்வை இருந்தது. காங்கிரஸின் தலைமையை காந்தி ஏற்றுக்கொண்ட பின்னர் காங்கிரசின் ஜனநாயகக் கண்ணோட்டம் மேலும் மேம்பட்டது என்று கூறலாம். ஜனநாயக விழுமியங்களுக்காக வலுவாக நின்று அவற்றை சமூகமயமாக்குவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு அமைப்பும் இல்லாதபோது, 1936 ஆம் ஆண்டு வரை அதன் சொந்த மனித உரிமைகள் சாசனம் இருந்துவருகின்றத…
-
- 0 replies
- 639 views
-
-
சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்! January 31, 2024 — கருணாகரன் — ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத் தமிழ்த்தரப்பு முன்னெடுக்கவில்லை என்பதேயாகும். போருக்குப் பிறகான அரசியல் எது? எப்படியானது? அதை எப்படி முன்னெடுப்பது என்ற தெளிவில்லாமல் அதை முன்னெடுக்கவே முடியாது. இந்தத் தெளிவைக் கொள்வது மிக முக்கியமானது. அதை விட அந்தத் தெளிவின் அடிப்படையில் துணிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இன்னும் தமிழ் அரசியல் வெளியானது 1960, 1970, 1…
-
- 0 replies
- 638 views
-
-
நடந்து முடிந்த மூன்று கூட்டங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் இங்கு பலர் களமாடியிருந்ததைத் காணக்கூடியதாக இருந்தது. இதை மிகவும் ஆழமாக அழகாக ஊடகவியலாளரும் விரிவுரையாளரும் ஆகிய நிக்ஸன் அமிர்தநாயகம் உரையாடுகிறார்.
-
- 0 replies
- 638 views
- 1 follower
-
-
2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு ரகசியமாக, திடீரென தூக்கிலிடப்பட்டதன் அரசியல் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? மத்திய சிறை எண் 3-இன் கண்காணிப்பாளரால், அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற மொழியில், ஒவ்வொரு பெயரிலும் புண்படுத்தும் பிழைகளுடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் ”திருமதி. தபசும் க/பெ சிறீ அப்ஜல் குரு” வுக்கு எழுதப்பட்டுள்ளது. “சிறீ முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் கருணை மனு கனம் பொருந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. எனவே முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் தூக்கு தண்டனை 09/02/2013-ல் நிறைவேற்றப்படவுள்ளது. இது உங்கள் தகவலுக்கும், தேவையான மேல் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.” இக்கடிதம் தபசுமிற்கு தாமத…
-
- 1 reply
- 638 views
-
-
-
- 0 replies
- 638 views
-
-
பீஜீங்கா- புதுடெல்லியா?: சிறிலங்காவின் தடுமாற்றம் புதினப்பணிமனைNov 01, 2018 | 1:53 by in செய்திகள் அரசியல் கொந்தளிப்பின் மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக, சீன தலைவர் ஷி ஜின்பிங் இடம் பிடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவிநீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக முன்னைநாள் அதிபர், மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிறிலங்காவின் அரசியலில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது அரசமரம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, யாப்புகளாலும் அரசியல் திருத்த சட்டங்கள் என்ற விழுதுகளாலும், …
-
- 0 replies
- 638 views
-
-
தமிழினத் தலைவர் யார்; முதல்வர் ஜெயலலிதா வகுத்த அதிரடி வியூகம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் "யார் தமிழின தலைவர்" என்ற போட்டி கடுமையாக நடக்கிறது. ஒவ்வொரு முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதும், "இது தமிழர்களுக்கு எதிரான ஆட்சி" என்று தி.மு.க. தலைவர் பிரசாரம் மேற்கொள்வார். இதை "தமிழுக்காக பணிகளை மேற்கொண்டது நான்தான்" என்று முதல்வர் பதவியில் இருக்கும் ஜெயலலிதா அறிவிப்பார். அதுவும் குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வரின் நடவடிக்கையில் அதிரடியான மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அத்தமிழருக்காக ஆதரவு கொடுக்கும் தமிழக அமைப்புகளே முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி போஸ்டர் போடுகின்றன. இந்நிலையில் இப்போது தமிழர்களின் புத்தாண்டு சித்திரையா? தை மாதமா?…
-
- 0 replies
- 638 views
-
-
தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? June 12, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? பலவீனப்படுத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் இன்றைய ஈழத்தமிழரின் அரசியலில் முக்கியமானவையாக உள்ளன. ஏனென்றால், தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுக் கொண்டுபோகிறது. அதை எப்படியாவது பலப்படுத்த வேண்டும். காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தோடு பலரும் உள்ளனர். இதில் ஒரு தொகுதியினர், “தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தப்படும்போது சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசிய உணர்வும் திரட்சியடைந்து ஒன்றிணையும். அது தமிழ் மக்களின் கூட்டுணர்வையு…
-
- 0 replies
- 637 views
-
-
புல்வமா தாக்குதல்: தேசபக்தியும் தேசவிரோதமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 01:13Comments - 0 பயங்கரவாதத் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை. ஆயுதப் போராட்டத்தைத் தவிர்க்கவியலாத சூழல்களும் உண்டு. ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரச்சினைக்கான தீர்வல்ல. மக்களைக் குறிவைத்த தாக்குதல்களை, யாருமே நியாயப்படுத்த முடியாது. இவ்வாறான விவகாரங்களில் எது சரி, எது பிழை என்ற தெளிவு, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது என்கிற தெளிவு, மக்களுக்கு அவசியமானது. இல்லாவிடின், தேசபக்தி என்பதன் பேரால் அநியாயங்களுக்கும் அல்லல்களுக்கும் துணைபோக நேரும். கடந்த 14ஆம் திகதி, …
-
- 1 reply
- 637 views
-
-
‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’ காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 24 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:55 யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம். அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்…
-
- 0 replies
- 637 views
-
-
கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன. வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும். மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும். மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்? தங்களுடைய நெர…
-
- 0 replies
- 637 views
-
-
தீர்வு முதல் தேர்தல் தொட்டு பிரபாகரன் வரை: காலத்தை வீணடித்தல் மொஹமட் பாதுஷா இலங்கையில் பொருளாதார பஞ்சம், அரசியல் பஞ்சம், ஜனநாயக பஞ்சம், மனித உரிமைகள் பஞ்சம், இனநல்லிணக்கப் பஞ்சம், நீதி நிலைநாட்டல் பஞ்சம் போன்ற பஞ்ச நிலைமைகள் நிலவிய போதிலும் கூட, நாட்டு மக்களை ஏதேனும் ஒரு விடயத்தின்பால் ‘பராக்குக்காட்டி’, காலத்தை வீணடிக்கின்ற போக்குகளுக்கு, ஒருபோதும் பஞ்சம் இருந்ததில்லை. பொய்க் கற்பிதங்களும் கதை விடுதல்களும் மக்களை முட்டாளாக்கும் பாங்கிலான நகர்வுகளும், நமது அரசியல், ஆளுகை ஒழுங்கை ஆட்கொண்டுள்ளன. இவற்றைவிடுத்து, நாட்டை முன்னேற்றுவதற்கானதும், மக்களது பிரச்சினைகளை குறைப்பதற்கானதும், இதயசுத்தியுடனான உருப்படியான வேலைத்திட்டங்கள் இல்லை. மாறிமாறி அதிகாரத்துக…
-
- 0 replies
- 637 views
-
-
உண்மையின் தரிசனமாக இருக்கத்தக்க.. கருத்துக்களைச் சொல்லும் காணொளிகளை இங்கு இணைப்போம். அந்த வகையில்.. ஈழத்தமிழர்களை பலிகொடுத்த இந்தியா.. நாளை தமிழகத் தமிழர்களையும் பலிகொடுக்கும்..
-
- 0 replies
- 637 views
-