அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இந்தோ- பசுபிக்கில் பட்டுப்பாதையும் ஈழத் தமிழரின் எதிர்காலமும். முன்னாள் யாழ் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு.
-
- 0 replies
- 551 views
-
-
'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலைக்கு வந்துள்ளோம்: விக்னேஸ்வரன் ஆதங்கம்! யாழ்ப்பாணம்: வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன என்றும், “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் சிறப்பு கூட்டத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இன அழிப்பு என சுட்டிக் காட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்கர் விக்னேஸ்வரன், "பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்…
-
- 0 replies
- 550 views
-
-
அகதிகள் நெருக்கடி: யாருடைய பொறுப்பு மக்கள் போரை விரும்புவதில்லை; அவர்கள் அதில் பங்கெடுப்பதும் இல்லை. யாரோ நலன்பெற நடக்கும் போர்களில், பாதிக்கப்படுவதென்னமோ அப்பாவி மக்கள்தான். எதை இழந்தாலும் பரவாயில்லை; உயிரைப் பாதுகாப்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான மக்கள், தத்தம் நாடுகளை விட்டு இடம்பெயர்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. போருக்குக் காரணமானவர்கள் கதவுகளை இறுகமூடி, எல்லைகளின் பாதுகாப்பை அதிகரிக்கிறார்கள். ஒருபுறம் ‘பயங்கரவாத ஆபத்து’ பற்றிப் பேசும் இவர்கள், மறுபுறம் ‘மனித உரிமைகள்’ பற்றியும் ‘மனிதாபிமானம்’ பற்றியும் பேசுகிறார்கள். முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அகதிகள் நெருக்கடி, உலகின் மிகமுக்கியமான நெ…
-
- 0 replies
- 550 views
-
-
சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி விடுவாரா, அல்லது வேறொரு கட்சி அல்லது கூட்டணியில் போட்டியில் குதிப்பாரா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், முதலமைச்சரின் அறிக்கை அமைந்திருக்கிறது. முழுமையாக இல்லாவிடினும், அவரது சில தெளிவான நிலைப்பாடுகளை, இந்த அறிக்கையின் ம…
-
- 0 replies
- 550 views
-
-
மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் – பி.மாணிக்கவாசகம் 32 Views சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி அரசாங்கத்தின் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கச் சூழலில் சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதனால் அவர்கள்பால் காட்டப்பட வேண்டிய அரசின் மனிதாபிமான அணுகுமுறையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது. நாட்டில் பரவலாகத் தொற்றிப் பரவியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. இதற்கென விசேட சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்ட…
-
- 0 replies
- 550 views
-
-
இந்தியாவுக்காக காத்திருத்தல் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் மக்களின் கைகளில் அன்றி, வேறு யாருடைய கைகளிலும் இல்லை என்பதை, இப்போதாவது நாம் உணர்ந்திருக்க வேண்டும். எமது விடுதலையை, யாராவது வாங்கித் தருவார்கள் என்று, இனியும் நம்பி இருப்பது, முட்டாள்தனமன்றி வேறில்லை. “தீபாவளிக்குத் தீர்வு வரும்” என்று சொன்னவர்கள், இப்போது கதையைக் கொஞ்சம் மாற்றி, “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் மெச்சத்தக்க விடயம் யாதெனில், தாங்கள் பிரதமர் மோடியைத் தரிசிப்பதற்காகக் காத்துக் கிடப்பதாக, ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், யாருடைய நலன்களுக்காக வேலை செய்கிறார்கள…
-
- 0 replies
- 550 views
-
-
சமஸ்டிக்காகப் போராடுவது யார்? நிலாந்தன். August 13, 2023 தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்டிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்தியிருக்கிறது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கட்சிகள் தமது தரப்பு யோசனைகளைத் தருமாறு ஜனாதிபதி அண்மையில் கேட்டிருந்தார். அதற்கமைய முன்னணியானது 13ஆவது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேசமயம் கடந்த நான்காம் தேதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த விக்னேஸ்வரன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றினதும் இறுதி இலக்கு கூட்டாட்சிதான் என்ற போதில…
-
- 0 replies
- 550 views
-
-
தென்னிலங்கையின் விசித்திரமான அரசியல் சூழ்நிலை வீ. தனபாலசிங்கம் படம் | AFP, THE BUSINESS TIMES ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையில் அரசி முன்னெடுத்து வருகின்ற 100 நாள் வேலைத்திட்டத்துக்குப் பிறகு இலங்கை அரசியலின் திசைமார்க்கம் எவ்வாறு அமையப் போகிறது என்று சிந்திக்கத் தூண்டுகிற வகையிலான கருத்துகளை கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று கூறியிருக்கும் பிரதமர் விக்கிரமசிங்க அந்தத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றக்கூடிய கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கு கடுமையாகப் பாடுபடவேண்டும் என்று தனது கட்சி உறுப்பினர்கள…
-
- 1 reply
- 550 views
-
-
ஜெனீவாவில் மூளை சலவை செய்யப்பட்ட சர்வதேச சமூகம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்றிய முடிவுகள், கால அவகாசம், சர்வதேச விசாரணை என்ற விவகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய நெருக்கடிகளையும் விரிசல்களையும் முரண்பட்ட போக்குகளையும் உருவாக்கும் நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது போருக்கு பின்னுள்ள நிலைமைகளில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுக்காணப்பட்டு வருகிறது என்பதை நிகழ்காலப் போக்குகளிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக சர்வதேச நாடுகள், சர்வதேச சமூகம் மற்றும் …
-
- 0 replies
- 550 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, மாவீரர்நாளால் உண்டான சலசலப்பு மாத்திரம் இன்னமும் குறையவில்லை. மாவீரர் நாளைப் பயன்படுத்தி எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம்,பெளத்த - சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் என்று தென்னிலங்கை தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் மாவீரர் நாளை வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் இன்னமும் அடங்குவதாயில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னக்கோன், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொடர்ச்சியாக மாவீரர் நாள்…
-
- 0 replies
- 550 views
-
-
ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்? Shanmugan Murugavel / 2020 ஜனவரி 10 , சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது. ஆக, இப்போது உலகம் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபட்டு சுருங்கியுள்ள நிலையில், பெரும்பாலும் குறிப்பிட்ட விடயங்களின் தாக்கங்கள் உலகம் முழுவதும் உணரப்படுபவையாக மாறியுள்ளன. அந்தவகையில், இவ்வாறான குறிப்பிட்ட விடயங்களால் குறிப்பிட்ட தரப்புகளுக்கு கிடைக்கும் அனுகூலங்களே குறித்த விடயங்களுக்கு பின்னால் சத…
-
- 0 replies
- 550 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதித் தேர்தல் கால குதிரை ஓட்டம் சூடு பிடித்திருக்கின்றது. தேர்தல் முடியும் வரையில் யார் எந்தப் பக்கம் தாவுவார்கள் என்பதை கண்காணிப்பதே கட்சிகளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை நோக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் திரட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகளவு நிகழ்ந்து வருகின்றது. ஏற்கனவே, ராஜபக்ஷக்களின் கட்சியான பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலோடு சங்கமித்துவிட்டார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவோடு இருக்க, பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ரணில் பக்கம் சென்றுவிட்டார்கள். இவ்வாறான அச்சுறுத்தலை …
-
- 0 replies
- 550 views
- 1 follower
-
-
ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா ? கடந்தவாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காக எடின்பரோ நகரிற்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்கொற் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம்பற்றிய விபரமறியாத சில தமிழ் இணையதளங்கள் உலகில் அதியுயர் சமஸ்டி நிலவுகிற ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காவே இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. செய்திகளை வெட்டி ஒட்டும் இவ்விணைய தளங்களைப்போலன்றி, அறுபத்தேழு வருடகாலமாக சமஸ்டிக்கோரி…
-
- 0 replies
- 550 views
-
-
தமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்.! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தலை’தான் துரோகம் என தமிழ்ப் பழமொழி சொல்கிறது. தன்னலம் அல்லது சுயநலத்திற்கான துரோகங்கள் சமூகத்திற்கு எதிரான துரோகங்களாகத்தான் உருமாறும். இனத்திற்கு எதிராக துரோகம் செய்யபவர்கள், அடுத்தடுத்த கட்டங்களில் தாம் சார்ந்த அமைப்புக்களுக்கும் துரோகம் செய்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்து கடந்த பத்தாண்டுகளில் தமிழினத்திற்கு எதிரான துரோகத்தை அள்ளி நிறைத்த திருவாளர் சுமந்திரன், இப்போது தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழரசுக் கட்சியை ‘பலி’யிடத் துணிந்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்வில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்திருக்கிறது. வடக்…
-
- 1 reply
- 550 views
-
-
சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 24 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் குழிபறிப்புகளுக்கும் எதிராக நின்று, தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் வெற்றிக்காக ஓடும் எந்தவொரு வேட்பாளரும், இன்னொரு வேட்பாளரை நம்புவதற்குத் தயாராக இல்லை. தோற்பதற்காகவே களமிறக்கப்பட்ட வே…
-
- 0 replies
- 550 views
-
-
வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் சமமான உரிமைபெற்று வாழவேண்டும் "கிழக்கு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் மகன் முதல் அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருப்பதை தமிழர்களாகிய நாம் சந்தோஷமாக வரவேற்கிறோமென்றால் அதற்கு காரணம் தமிழ், முஸ்லிம் உறவு நீடிக்க வேண்டுமென்ற எங்கள் எதிர்கால கனவாகும்.” எங்கள் இரு சமூகமும் இணைந்து ஒரு அரசியல் தீர்மானத்தை எடுப்பதன் மூலமே வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் நாம் சகல உரிமைகளுடனும் பலமாக, பயமின்றி வாழ முடியும். புதிய அரசியல் அமைப்பில் வட கிழக்குக்கு வழங்கப்படும் உரிமையின் மூலம் முஸ்லிம் தமிழ் மக்கள் சமமான உரிமை பெற்று வாழ வேண்டுமென்பதில் நாம் தீர்க்கமான முடிவு …
-
- 3 replies
- 550 views
-
-
ஜெனீவாவில் ஓரங்கட்டப்படும் தமிழர் தரப்பு கபில் இன்று பக்க அமர்வுகள் மிகஅதிகளவில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அவற்றுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கூட பல சமயங்களில், ஊகிக்க முடிவதில்லை. அந்தளவுக்கு ஜெனீவா களத்தில் நிலைமைகள் மாறியிருக்கின்றன. அதிகளவு பக்க அமர்வுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், ஜெனீவாவைக் கையாளும் விடயத்தில் தமிழர் தரப்பு எந்தளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது என்ற கேள்வி உள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிப்படுத்துகின்ற, அநீதிகளுக்கு நியாயம் கோருகின்ற தளமாக மாறியிருந்த ஜெனீவாவில், அந்த வாய்ப்ப…
-
- 1 reply
- 550 views
-
-
-
- 0 replies
- 550 views
- 1 follower
-
-
இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது! குடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம். ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம்? வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு முடங்கிப் போய்க் கிடக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். அமைச்சரவை கூடவில்லை. அமைச்சரவையைத் தனது ஒப்புதலின்றி கூட்டக் கூடாது என முதலமைச்சருக்கு ஆளுநர் கூரே எழுத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்குக் கனதியான காரணம் இருக்கிறது. முதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கை 5 யை மேவக் கூடாது என்பது சட்டம். ஆறுஅமைச்சர்களைக் கொண்ட…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழர் அடையாளத்தை அழிக்கும் முயற்சி திருகோணமலைப் பிரதேசத்தில் தமிழ் மக்களுடைய அடையாளங்களையும் இந்து பூர்வீகங்களையும் அழிப்பதிலும் இல்லாமல் ஆக்குவதிலும் தொல்பொருள் திணைக்களமும் பௌத்த விஹாராதிபதிகளும் காட்டிவருகின்ற அட்டூழியங்களின் ஒருவெளிப்பாடுதான் அண்மையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சூடைக்குடா (மத்தளமலை) திருக்குமரன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவமாகும். போர் மற்றும் சுனாமி காரணமாக சூடைக்குடா கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் மீள் குடியேறிய நிலையில் தங்கள் வரலாற்றுப்புகழ் கொண்ட ஆலயத்தை புனரமைக்கவும் அருகில் குடிநீர்கி கிண றொன்றை நிர்மாணிக்கவும் ஆலய பரி…
-
- 0 replies
- 549 views
-
-
ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்! தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி இப்படி ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று டெலோ இயக்கம் முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக இப்படி ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கடந்த பல மாதங்களாக டெலோ இயக்கம் ஈடுபட்டு வந்தது. அம் முயற்சிகளை முதலில் தொடங்கியது மாவை சேனாதிராசாதான். அம்முயற்சிகளில் அவர் ஒரு கட்டத்தில் மதத்தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்கள் . Covid-19 சூழலுக்குள் மாவை சேனாதிராசாவின் மேற்ப…
-
- 1 reply
- 549 views
-
-
இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள் நிர்மானுசன் பாலசுந்தரம் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய போன்ற நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் கடந்த ஆண்டுகளைப் போல, இம்முறையும் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக விழுமியங்களுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களோடு, சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் அமைச்சர் ஆலோசகராக (பாதுகாப்பு) பணிபுரியும…
-
- 0 replies
- 549 views
-
-
‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’ சங்ககால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலத்துக்கே உரித்தான சகல பண்புகளையும் தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடைய மாவட்டமாக, முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வவுனியா மாவட்டத்தின் பெரும் பகுதியையும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு, 1978ஆம் ஆண்டடில் உருவாக்கப்பட்டதே, இந்த முல்லைத்தீவு மாவட்டமாகும். கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, துணுக்காய், மணலாறு (சிங்கள குடியேற்றத்தால் வெலிஓயா) என ஆறு (06) பிரதேச செயலாளர்கள் பிரிவுகளையும் 136 கிராம சேவையாளர்கள் பிர…
-
- 0 replies
- 549 views
-
-
கல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா? -ரி. ஜெயந்தன் வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும், ஒற்றுமையாக ஓரணியில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வது என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஏகமானதாக ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்து, தமிழர்களின் வாக்கு யாருக்கு என்ற கருத்துகள், வௌிவரத் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை விரைவில் அறிவிக்கும் என்று நம்புவோம். 13 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றிய எதிர்பார்ப்புடன், ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அதனால், விஞ்ஞாபனங்களில் உள்ளவற்…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் -கோ. ஹேமப்பிரகாஷ் LL.B. கொவிட்- 19க்குப் பின்னரான காலப்பகுதியில், உலகளாவிய அரசியல், பொருளாதரம் சார் வெளிகள், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துப் பயணிப்பதை அவதானிக்கலாம். இருப்பினும், இலங்கையின் சமகாலப்போக்கு, கொவிட்-19க்கு மத்தியிலும் சூடுபிடித்தே காணப்படுகின்றது. இதற்கு வித்திடும் காரணிகளாக, நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலையும் அதை ஒட்டிய நிகழ்வுகளையும் குறிப்பிடலாம். இம்முறை நடக்க இருக்கின்ற தேர்தலானது, முன்னர் ஒருபோதும் இல்லாத புதிய கொள்கைகள், எண்ணக்கரு சார் எடுத்தியம்பல்களுடனும் நகர்வதை அவதானிக்கலாம். அந்தவகையில், வாக்கு வங்கியின் ஏறுமுகத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் இடம்சார் அதாவது, புவியிய…
-
- 0 replies
- 549 views
-