அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
அரசியல் களம்_ இரா. துரைரட்ணம்_முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்..
-
- 0 replies
- 237 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய் சூரியதீபன் “இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில். இறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார். போராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம். விடுதலையே மற்றவர்கள் உன்னிடம் நம்பிக்கை இழந்தாலும் என்றென்றைக்கும் நான் மட்டும் நம்…
-
- 1 reply
- 857 views
-
-
ஜெனீவா -2018 – என்ன காத்திருக்கிறது? நிலாந்தன்…. ஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events) தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய நிகழ்வில் பெரியளவு முக்கியத்துவம் கிடைக்காதுதான். பதிலாக பக்க நிகழ்வுகளில்தான் தமிழ் மக்கள் தமது குரலை வலிமையாகவும், உரத்தும் ஒலிக்க முடியும். பக்க நிகழ்வுகள்,நிழல் அறிக்கைகள்(shadow reports) போன்றவை அரசற்ற தரப்புக்கள் தமது நியாயத்தை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள்தான். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் தமது பயங்களையும், சந்தேகங்களையும், நியாயங்களையும் மேற்படி …
-
- 0 replies
- 362 views
-
-
ராஜபக்ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது. கோட்டாவுக்கு முதலே மஹிந்த, பசில், சமல், நாமல், சசீந்திர என மற்றைய ராஜபக்ஷர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். கோட்டா நாட்டை விட்டு ஓடியதிலிருந்தே, பொதுவௌியில் பெருமளவுக்கு அமைதிகாத்த ராஜபக்ஷர்கள் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கூட்டங்களை நடத்தி, தமது இருப்பைத் தக்க வைப்பதற்கான அடுத்தகட்ட காய்நகர்த்தலுக்காக களநிலைவரத்தை பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பெயர் …
-
- 0 replies
- 715 views
-
-
ரணில் வகுக்கும் வியூகத்தில் விழாமலிருப்பது எப்படி? - நிலாந்தன் ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம்.எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும் தந்திரமாக யோசிக்க வேண்டும். ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாராக வேண்டும். கஜேந்திரக்குமார் கூறுகிறார்,ரணில் கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயார் என்று அறிவித்தால் தாங்களும் பேசத்தயார் என்று. ரணில் அதைச் செய்ய மாட்டார். அதை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. எனவே பேச்சுவார்த்தைகளை அவர் அங்கிருந்து தொடங்கப் போவதில்லை. அந்த நிபந்தனையை …
-
- 5 replies
- 2.2k views
- 1 follower
-
-
#தமிழ்தேசியம்: தீர்வுக்குத் தடை பிராந்திய அரசியலா, இந்திய தேசியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித…
-
- 0 replies
- 704 views
-
-
புன்னகை இராஜதந்திரத்தின் வெற்றி வடகொரிய அதிபர் கிம் இவ்வருட பிறப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வாழ்த்தொன்றை தெரிவித்து உலகை திடுக்கிட வைத்தார். அணு குண்டுகளை அழுத்தும் கருவி எனது மேசைமேல் உள்ளது. அழுத்தினால் அமெரிக்கா அழிந்துவிடும் என்றார். இதற்கு முன்னதாக வடகொரிய அதிபர் அணுஆயுத பரிசோதனைகளை தொடர்ச்சியாக பரீட்சித்துப் பார்ப்பதுவுமாக உலக சமாதானத்துக்கு ஊறுவிளைவிப்பவராக தென்பட்டார்.அமெரிக்க அதிபரும் கொரிய தீபகற்பப் பிரதேசத்தில் தாட் ஏவுகணை தாங்கி கப்பல்களை தயார் நிலையில் வைத்திருந்தார்.அமெரிக்க அதிபரும் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தார்.ஐ.நா. சபை மூலம் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் ஏற்படுத்தியிருந்தார். கொரிய…
-
- 1 reply
- 775 views
-
-
மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேற்றம்: ‘இருந்தென்ன போயென்ன’ உலக அரசியல் அரங்கில், ‘மனித உரிமை’ என்ற சொல்லாடல், பல பொருள்கோடல்களுக்கு உள்ளாகியுள்ளது. மனித உரிமைக்கான வரைவிலக்கணங்கள் ஒருபுறம் இருந்தாலும். மீறப்படுவது யாருடைய உரிமைகள் என்பதும், மீறுவது யார் என்பதுமே, மீறப்படுவது மனித உரிமைகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றன. மனித உரிமையின் அரசியல், அதிகம் பேசப்படாத விடயமாக உள்ளது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை, தனக்கான மனித உரிமைப் பேரவையை நிறுவியது முதல், மனித உரிமையின் உலகளாவிய அரசியலைப் பொது வெளிக்குக் கொணர்ந்துள்ளது. ஆனாலும், மனித உரிமைகள் இன்னமும் எல்லோருக்கும் …
-
- 0 replies
- 338 views
-
-
மகிந்த கொல்லாத நாய்கள் - நிலாந்தன் கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார். நாய்களில் மோதிப் படுகாயம் அடைந்தவர்கள் மட்டுமல்ல, கோமாநிலைக்கு சென்றவர்களும் உண்டு என்று போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தின் சிறிய ஒழுங்கைகளில் கட்டாக்காலி நாய்கள் பெருகிவிட்டன. காலை வேளைகளில் எல்லாச் சிறிய தெருக்களிலும் நாயின் கழிவுகளைக் காணலாம். எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை திருநெல்வேலி பகுதியி…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
உண்மையில் எமது நாட்டில், இனப்பிரச்சினை என்ற ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டினால், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டலாம் எனத் திடமாக நம்பலாம். இதையே, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா பின்வருமாறு தெரிவித்துள்ளார். “பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, நாம் மனம் திறந்தால், அதன் மூலம் இயல்பாகவே அறிவு திறக்கும். நாட்டில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவதற்கு, அனைத்துச் சமூகத்தினரும் மனம் திறக்க வேண்டும்”. அந்நியப் படையெடுப்புகளுக்கு முன்னர், தமிழ் மக்கள், தங்களது மண்ணில் தனித்துவமாகவும் கௌரவமாகவும் சிறப்பாகவும் தம்மைத்தாமே ஆட்சிசெய்து வாழ்ந்தார்கள். அந்நியப் படையெடுப்பின் மூலம், இழந்த சுதந்திரத்…
-
- 0 replies
- 420 views
-
-
இரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசித்துவிட்டு இதைப்படிப்பது சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். இணைந்த இணைப்பில் சென்று வாசிக்கவும்: இரணைமடு நீர்வழங்கல் திட்டம் இனி விடையத்திற்கு வருவோம். சுண்ணாக பிரதேச நிலத்தடி நீர் ஏறத்தாள முழுவது எண்ணை கலக்கபட்டுவிட்டது என்பது உலகறிந்த விடையம். இந்த எண்ணைக் கலப்பானது சுண்ணாகத்தை மட்டுமின்றி அண்டிய ஏனைய நிலங்களுக்கும் பரவும் என்பது புரிந்து கொள்ள முடியாத விடையமல்ல. சுண்ணாக மின்நிலையத்தினூடாக நிலத்தடி நீர் மாசுபடுத்தபட்டதற்கு பின்னணியில் பெரும் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத மக்கள்…
-
- 1 reply
- 3.9k views
-
-
எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். . இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
-
- 15 replies
- 1.8k views
-
-
மோடியின் இலங்கை விஜயம்? யதீந்திரா சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார். இந்தியாவின் உடனடி அயல்நாடாக இலங்கை இருந்த போதும், கடந்த காலத்தில் நிலவிய ஸ்திரமற்ற அரசியல் சூழலின் காரணமாக, எந்தவொரு இந்திய பிரதமரும் இலங்கை வருவதற்கு விரும்பியிருக்கவில்லை. 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைக்குள் ஒரு சக்தியாக இயங்க முடியாதளவிற்கு அழிக்கப்பட்டு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்புலத்தில், இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை முற்றுப்பெற்றது. புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலிருந்த இந்தியா அவ்யுத்தத்திற்கு உதவியதாக பரவலான அபிப்பிராயங்கள் உண்டு. தன்னுடைய உடனடி அயல்நாடான இலங்கைக்குள் …
-
- 1 reply
- 449 views
-
-
ஆள் பாதி ஆடை பாதி! அரசியலில் அதுவே நீதி - ஜெசிக்கா சுப்பர் சிங்கரில் பாடிய பாடல் புலிகளால் தடை செய்யப்பட்ட பாடல்? ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் இது அனுபவபூர்வமான வார்த்தை அரசியலிலும் இது மிக முக்கியமானது.' இவர் எங்களுடையவர் " என்ற ஈர்ப்பை ஆடைகளால் உருவாக்க முடியும் தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஜி.ஜி. தந்தை செல்வா, தொண்டமான், அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம், ராஜதுரை விக்னேஸ்வரன் போன்ற எவரைக் குறிப்பிட்டாலும் உடனே நினைவுக்கு வருவது தேசிய உடையிலான தோற்றம் தான். பிறநாட்டவர்களுடனான சந்திப்பு அல்லது வெளிநாட்டுப் பயணம் என்றால் மட்டுமே இவர்கள் பொதுவாக கோர்ட் ரை எனக் காட்சியளிப்பர். இதனையே டக்ளசும் பின்பற்றுகிறார். ஆனால் முதலமைச்சர் பதவியேற்ற புதிதில் கோர்ட் ரைக்கு…
-
- 1 reply
- 540 views
-
-
இவர்களை எப்படி மன்னிக்க முடியும்? - புகழேந்தி தங்கராஜ். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிந்ததும், உடுக்கை இழந்தவன் கைபோல நீண்டிருக்கவேண்டும் பாரதத்தின் கை. ஆனால், கொல்லப்பட்ட எம் உறவுகளைக் காப்பாற்ற நீளாமல், கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுக்க இந்த தேசத்தின் கை நீண்டது. 'வெல்க தமிழ்' என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்கிறவர்கள் மட்டுமே தமிழனின் முதுகில் குத்துவதில்லையாம்.....! அப்படியெல்லாம் எழுதி ஒட்டிக்கொள்ளாதவர்களும் இதைத்தான் செய்கிறார்களாம்...! 'அவர்களையெல்லாம் கண்டித்திருக்கிறீர்களா' - என்கிற புதிய கேள்வியோடு புறப்பட்டிருக்கிறார்கள் என் பழைய நண்பர்கள். 'தமிழக அரசியலில்' இந்த ஊடக அதர்மத்தைப் பற்றி, பாரபட்சம் இல்லாமல், அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.…
-
- 0 replies
- 367 views
-
-
மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்! November 11, 2023 —- எம். எல். எம். மன்சூர் —- ”புத்தரின் போதனைகளில் புனிதப் போர் என்ற கருத்தாக்கம் இல்லை; புத்த தர்மத்தையும், அதைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட போர் புரிவதற்கு அதில் அனுமதியில்லை. இந்தப் பின்னணியில், புத்த தர்மத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கென ஆட்களை கொலை செய்வதனை நியாயப்படுத்த வேண்டுமானால், புத்தரின் போதனைகளுக்கு வெளியில் ஒரு வலுவான புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்டகைமுனுவுக்கும், (இந்து) எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற போரை, சிங்கள அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கென முன்னெடுக்கப்பட்ட ஒரு புனிதப் போராக சி…
-
- 0 replies
- 472 views
-
-
கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம் சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர். அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நி…
-
- 0 replies
- 455 views
-
-
முள்ளிவாய்காலில் ஈழத்தமிழினம் பேரழிவைச் சந்தித்தன் பின்னர், தமிழினத்தின் இருப்பையும் வாழ்வையும் உறுதிப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதனைதான் தமிழரல்லாத கல்விமான்களும், அரசியல் தலைமைகளும், ஏன் தேர்ந்த தமிழர் தேசிய செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அரசியல் பார்வையாளர்கள் என்ற நிலையில் இருந்து பங்காளிகள், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற நிலையை அடைதல். தாயகத்தில் தேர்தல் களங்களில் இருந்து தம்மை விளக்கிக் கொண்டவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இனக்குழுமமாக தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை. அதனுடன் சேர்த்து பொருளாதாரத்…
-
- 0 replies
- 528 views
-
-
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி Maatram Translation on May 9, 2019 பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள் தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள். “எனக்கு எதிராக முன்னர் மதநிந்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது; அந்த நிலையில், ஒன்று நான் கொல்லப்ப…
-
- 0 replies
- 578 views
-
-
-
-
- 3 replies
- 914 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் மத்தியில் அனுர அலை தணியத்தொடங்கி விட்டதா? நிலாந்தன். மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் பகுதிகளில் அனுர அலை தணியத் தொடங்கி விட்டதா? அண்மை வாரங்களில் இடம்பெற்று வரும் சில விடயங்கள் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் மத்தியில் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. முதலாவதாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள். இரண்டாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான நிலைப்பாடு. மூன்றாவது,முட்டை விலை ஏறி இறங்குவது;தேங்காய் விலை அதிகரித்திருப்பது. நாலாவது,தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜேவிபி வேட்பாளர்களுக்கு வெகுசனக் கவர்ச்சி குறைவு என்பது. தென்னிலங்கை அர…
-
- 0 replies
- 333 views
-
-
சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 07 மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம், உச்சத்தை எட்டியுள்ள இக்காலப்பகுதியிலும், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசுகளை ஆட்டங்காண வைக்கிறார்கள். இத்தகைய போராட்டங்கள், உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு, மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கின்றன. கடந்த சில வாரங்களில், உலகின் பல ப…
-
- 0 replies
- 543 views
-
-
பாடசாலை மாணவர்களின் விவாத மேடையும் தமிழ் அரசியலும் – நிலாந்தன். பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை கிழித்துத் தொங்க விட்டார்கள் என்று கூறிச் செய்திகளும் காணொளிகளும் நேற்றிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.யுடியுப்பர்களுக்கு சூடான, உணர்ச்சிகரமான விடயங்கள் கிடைத்திருக்கின்றன. அவர்கள் வழமைபோல தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இல்லாத காணொளித் துண்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மேலெழுந்து வருகின்ற ஒரு போக்கு இது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான விவாதப் போட்டிக் களத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளே அவை. அந்த விவாதப் போட்டிகளின் தலைப்புகள் பெரும்பாலும் அரசியல் பரிமாணத்தைக் கொண்டவை. அதனால் மாணவர்கள் அரச…
-
- 0 replies
- 415 views
-
-
ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! ஷோபாசக்தி இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உ…
-
- 0 replies
- 280 views
-
-
கொரோனாவும் தேசபரிபாலனமும் நியூசிலாந்து சிற்சபேசன் இன்றைய காலகட்டத்தில் அசாதாரணமான ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. ஒருவகையில் கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு அஞ்ச வேண்டியிருக்கின்றது. காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பது பழமொழி. கண்ணுக்குத் தெரியாத சூனியமெல்லாம் கொரோனா என்பது புதுமொழி. யுத்தமொன்றில் எதிரி கண்ணுக்குத் தெரியும். தாக்குதல் தொடுக்கப்படுகின்ற திசை வழியாக, எதிரி வருகின்ற திசையை அடையாளம் காணலாம். அதன்மூலமாக, எதிரியை எதிர்கொள்ளலாம். சிலவேளைகளில், எதிரியை நேருக்கு நேராகவும் சந்திக்கலாம். கொரோனா கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் எங்கும், எதிலும், எப்போதும் கொரோனாவே தெரிகின்றது. கொரோனாத் தொற்றின் வெளிச்சத்தில் தெரியத் தொடங்கிய மிகப்பெரிய ஓட்டை தேச…
-
- 0 replies
- 454 views
-